"ஹலோ தலைவரே, மிக்ஜாம் புயல் தமிழகத்தை விட்டு விலகி, ஆந்திரா பக்கம் சென்றாலும், அது ஏற்படுத்திய தாக்கமும் கனமழையும் ரொம்பவே மிரட்டியிருக்குதே?''”
"ஆமாம்பா இயற்கைச் சீற்றத் துக்கு யாரால் பிரேக் போடமுடியும்? ஆனாலும் இந்த இக்கட்டான நிலையை ஸ்டாலின் தலைமையி லான தி.மு.க. அரசு சிறப்பாகவே மேனேஜ் பண்ணிக்கிட்டு இருக்குது.''”
"உண்மைதாங்க தலைவரே, தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கடந்த ஒரு மாதமாகவே கடும் மழை அடிக்கடி பெய்துவருகிறது. சென்னையில் கடும் மழை பெய்தபோதும், அதை நகரில் தேங்கவிடாதபடி உடனுக்குடன் அதிரடி நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. இந்த நிலையில், கடந்த 3-ஆம் தேதி வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை வலுவடைந்து மிக்ஜாம் புயலாக உருவெடுத்து சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை மிரட்ட ஆரம்பித்தது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் முன்ன தாகவே எச்சரிக்கை செய்ததால், உஷாரான முதல்வர் ஸ்டாலின், இந்த இயற்கை இடர் காரணமாக மக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்றும், அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் தடை ஏற்பட்டு விடக்கூடாது என்றும், பெரிய அளவில் உயிரிழப்புகள் நிகழ்ந்துவிடக்கூடாது என்றும், தனது அரசு எந்திரத்தையும் அமைச்சர் களையும் முடுக்கிவிட ஆரம்பிச்சிட்டார். அதே போல் மக்களுக்கும் எச்சரிக்கைக் குறிப்புகளை வெளியிட்டு, அவர்களையும் அதிகம் வெளியில் உலவாதபடி செய்து, விபரீதங்களின் வாசலை சாதுர்யமாக தவிர்த்துவிட்டார்.''”
"ஆமாம்பா, எந்தெந்த வகையிலெல்லாம் பாதிப்பு ஏற்படலாம்னு யோசிச்சி, யோசிச்சி பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கே?''”
"உண்மைதாங்க தலைவரே, புயல் ஆபத்து நீங்கும் வரையில், அரசுத்துறைகள் அனைத்தும் தீவிரமாக இயங்கவேண்டும் என்றும், ஒவ்வொரு விசயத்துக்கும் தன்னிடமிருந்து ஆலோசனை எதிர்பார்த்துக்கொண்டு நிற்காமல், சமயோஜிதமான முடிவுகளை அவரவரும் சுதந்திரமாக எடுத்துச் செயல்படவேண்டும் என்றும் முதல்வர் தெளிவு படுத்தியிருந்தார். மேலும், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள், தண்ணீரை வெளியேற்றும் பம்புசெட்டுகள் உள்ளிட்ட கருவிகளைத் தேவையான அளவுக்கு கையிருப்பில் வைத்திருங்கள் என்றெல்லாம் முதல்வர் உத்தரவிட்டதோடு, பேரிடர் மேலாண் மைத் துறையினரையும் அலர்ட் செய்திருந்தார். அமைச்சர்கள் சகிதம் முத
"ஹலோ தலைவரே, மிக்ஜாம் புயல் தமிழகத்தை விட்டு விலகி, ஆந்திரா பக்கம் சென்றாலும், அது ஏற்படுத்திய தாக்கமும் கனமழையும் ரொம்பவே மிரட்டியிருக்குதே?''”
"ஆமாம்பா இயற்கைச் சீற்றத் துக்கு யாரால் பிரேக் போடமுடியும்? ஆனாலும் இந்த இக்கட்டான நிலையை ஸ்டாலின் தலைமையி லான தி.மு.க. அரசு சிறப்பாகவே மேனேஜ் பண்ணிக்கிட்டு இருக்குது.''”
"உண்மைதாங்க தலைவரே, தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கடந்த ஒரு மாதமாகவே கடும் மழை அடிக்கடி பெய்துவருகிறது. சென்னையில் கடும் மழை பெய்தபோதும், அதை நகரில் தேங்கவிடாதபடி உடனுக்குடன் அதிரடி நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. இந்த நிலையில், கடந்த 3-ஆம் தேதி வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை வலுவடைந்து மிக்ஜாம் புயலாக உருவெடுத்து சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை மிரட்ட ஆரம்பித்தது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் முன்ன தாகவே எச்சரிக்கை செய்ததால், உஷாரான முதல்வர் ஸ்டாலின், இந்த இயற்கை இடர் காரணமாக மக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்றும், அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் தடை ஏற்பட்டு விடக்கூடாது என்றும், பெரிய அளவில் உயிரிழப்புகள் நிகழ்ந்துவிடக்கூடாது என்றும், தனது அரசு எந்திரத்தையும் அமைச்சர் களையும் முடுக்கிவிட ஆரம்பிச்சிட்டார். அதே போல் மக்களுக்கும் எச்சரிக்கைக் குறிப்புகளை வெளியிட்டு, அவர்களையும் அதிகம் வெளியில் உலவாதபடி செய்து, விபரீதங்களின் வாசலை சாதுர்யமாக தவிர்த்துவிட்டார்.''”
"ஆமாம்பா, எந்தெந்த வகையிலெல்லாம் பாதிப்பு ஏற்படலாம்னு யோசிச்சி, யோசிச்சி பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கே?''”
"உண்மைதாங்க தலைவரே, புயல் ஆபத்து நீங்கும் வரையில், அரசுத்துறைகள் அனைத்தும் தீவிரமாக இயங்கவேண்டும் என்றும், ஒவ்வொரு விசயத்துக்கும் தன்னிடமிருந்து ஆலோசனை எதிர்பார்த்துக்கொண்டு நிற்காமல், சமயோஜிதமான முடிவுகளை அவரவரும் சுதந்திரமாக எடுத்துச் செயல்படவேண்டும் என்றும் முதல்வர் தெளிவு படுத்தியிருந்தார். மேலும், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள், தண்ணீரை வெளியேற்றும் பம்புசெட்டுகள் உள்ளிட்ட கருவிகளைத் தேவையான அளவுக்கு கையிருப்பில் வைத்திருங்கள் என்றெல்லாம் முதல்வர் உத்தரவிட்டதோடு, பேரிடர் மேலாண் மைத் துறையினரையும் அலர்ட் செய்திருந்தார். அமைச்சர்கள் சகிதம் முதல்வரும் நேரடியாகக் களப் பணிகளில் இறங்கியதால், பாதுகாப்புப் பணிகள் விறுவிறுப்பாகவே நடந்தது. இருப்பினும் சென்னையில் யாரும் எதிர்பாராத அளவுக்கு கனமழையும் அதைத் தொடர்ந்து எல்லாப்பக்கம் இருந்தும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டதால், சென்னை தத்தளிப்பதை யாராலும் தடுக்க முடியவில்லை. ஏனென்றால் தண்ணீரை வடியவைக்க வேண்டிய ஆறுகளும் ஏரிகளும்கூட பொங்கிப் பிரவாகம் எடுத்துவிட்டன.''
"வாங்குற சம்பளத்துக்கு வேலை செய்றதில்லைனு சிலரால் அடிக்கடி விமர்சனம் செய்யப்படும் அரசு ஊழியர்கள், மாநகராட்சிப் பணியாளர்களோடு இந்த கனமழையில் இறங்கி வேலை பார்த்து, அடைப்புகளை நீக்கி, நீர் தேங்கிய இடத்தில் எல்லாம் அசுர வேலையில் இறங்கி மக்களின் பாராட்டைப் பெற்றிருக்காங்க. அதுமட்டுமில்லை தலைவரே! மின்துறை, தீயணைப்புத் துறை, காவல்துறை, போக்குவரத்துத் துறை ஊழியர்களும் சேர்ந்து மக்களின் சிரமத்தைத் குறைப்பதில் தங்களின் பங்கையளித்து பாராட்டுக்கு உரியவங்களா மாறியிருக்காங்க.''”
"சரியா சொன்ன. உடன்பிறவா சகோதரி சசி கலாவும் வெள்ள நிவாரணப் பணிகளைக் கண்டிச்சு அறிக்கை விட்டிருக்கிறதைக் கவனிச்சியா?''”
"2015 புயல் வெள்ளத்தின்போது அவங்க ளோட அக்கா தூங்கிக்கிட்டிருந்தப்ப, தலைமைச் செயலாளர் உள்பட அதிகாரிகள் எல்லாம் ஏரி நீரைத் திறந்துவிட அனுமதி கேட்க முடியாம திணறிக்கிட்டிருக்க, இரவோட இரவா தண்ணியைத் திறந்துவிட்டு, நூற்றுக்கணக்கான ஆட்களையும் உடைமைகளையும் நீர் அள்ளிட்டுப் போனதை மறந்துட்டாங்கபோல. இப்ப அது மாதிரியில்லாம புயலுக்கு முன்பிருந்தே மக்களோட பாதுகாப்பைத் திட்டமிட்டுச் செயல்படறாங்க. பழசையெல்லாம் மறந்துட்டு அந்தம்மா பேசக்கூடாது.''”
"இந்தப் புயலுக்கு நடுவே வடமாநிலத் தேர்தல்கள் வந்து அரசியலிலும் பெரும்புயலை ஏற்படுத்தியிருக்கே?''”
"உண்மைதாங்க தலைவரே, மிஜோரம் மக்களின் வேண்டுகோளின்படி, அதன் வாக்கு எண்ணிக்கையை 4-ஆம் தேதிக்குத் தள்ளி வைத்துவிட்டு, 3-ஆம் தேதி, தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு, அன்றே அவற்றின் முடிவுகள் வெளியாகி, ஒட்டுமொத்த இந்தியாவையும் பரபரப்பாக்கியது. இவற்றில் தெலுங்கானா தவிர ஏனைய மூன்று மாநிலங்களையும் பா.ஜ.க. கைப்பற்றியிருப்பதால், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி ரொம்பவே கவலையடைந்தது. இந்தக் கடும் தோல்விக்குக் காரணம், கூட்டணிக் கட்சிகளைக் அலட்சியப்படுத்திவிட்டு, காங்கிரஸ் தனித்துத் தேர்தலை சந்தித்ததுதான் என்று, இந்தியா கூட்டணியில் இருக்கும் அத்தனை கட்சிகளும் ஆதங் கத்தைத் தெரிவிக்கத் தொடங்கிவிட்டன. 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்ட மிசோ ரத்தின் 40 தொகுதி களில், 27 தொகுதி களைக் கைப்பற்றி ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியைப் பிடித்திருக் கிறது. இங்கும், நம் பிக்கையோடு இருந்த காங்கிரஸுக்கு அடி விழுந்திருக்கிறது.''”
"காங்கிரஸ் கட்சி யின் தேசியத் தலை மையும் இந்த தேர்தல் கள் குறித்து ஆராய்ந்துகொண்டிருக்கிறதே?''”
"ஆமாங்க தலைவரே, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கானாவை, காங்கிரஸ் கைப்பற்றியிருக்கும் நிலையில், ராஜஸ்தான் அதன் கைவிட்டுப்போயிருக்கிறது. இதுகுறித்து, காங்கிரஸ் தலைமை பல்வேறு ஆலோசனைகளைத் தங்களுக்குள் நடத்திக் கொண்டு இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே சத்தீஷ்கரில் காங்கிரசும், பா.ஜ.க.வும் மாறி மாறி முன்னிலைக்கு வந்தாலும், அதிகமுறை பா.ஜ.க.வே முன்னிலையில் இருந்தது. ஒரு கட்டத்தில் சத்தீஸ்கரிலும் பா.ஜ.க.வின் கை ஓங்கிவிட, காங்கிரஸின் கைவிட்டு அந்த மாநிலமும் நழுவியது. சத்தீஷ்கரில் என்ன மாதிரியான பிழை ஏற்பட்டது என்பது குறித்தும் காங்கிரஸ் சீனியர் தலைவர்கள் தேர்தல் கணக்குகளைப் போட்டுப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதேபோல் ராஜஸ்தான் படுதோல்வியும் காங்கிரஸ் தரப்பைக் கைபிசைய வைத்திருக்கிறது.”கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.''”
"காங்கிரஸின் தேர்தல் ஆலோசகர்கள், அக்கட்சியின் தோல்விகளுக்கு தி.மு.க.வும் ஒரு காரணம் என்று சொல்கிறார்களே?''”
"ஆமாங்க தலைவரே, ராஜஸ்தான், சத்தீஷ்கரில் ஆட்சி அதிகாரம் கைவிட்டுப் போனதற்கும், தான் குறிவைத்திருந்த மத்தியப் பிரதேசத்தில் வெற்றிக்கனியைப் பறிக்க முடியாமல் ஆனதற்கும், காங்கிரசிடம் சில காரணங்கள் இருந்தாலும், தி.மு.க.வின் சனாதன எதிர்ப்புக் குரல்களும் ஒரு அழுத்தமான காரணம் என்று காங்கிரஸின் அரசியல் ஆலோசகர்கள் ஒரு கருத்தை ராகுல்காந்தியிடம் எடுத்து வைத்தார் களாம். இதனை ஏற்காத ராகுல்காந்தி, தி.மு.க. ஒரு மாநில கட்சிதானே? அப்படியிருக்க, அதன் குரல் வடஇந்திய மக்களை அதிக அளவு பாதிக்கும் என நான் நினைக்கவில்லை என்று சொல்லியிருக்கிறார். ஆனாலும் அரசியல் ஆலோசகர்களோ, தி.மு.க. ஒரு மாநிலக் கட்சியாக இருந்தாலும் பா.ஜ.க.வுக்கு எதிரான இந்தியா கூட்டணியில், அது முக்கியத்துவம் பெற்ற ஒரு பலமான கட்சியாக இருக்கிறது. எனவே தி.மு.க.வையும் அதன் தலைவர் ஸ்டாலினையும் ஒட்டுமொத்த இந்திய மக்களும் கூர்ந்து கவனிக்கிறார்கள். எனவே, தி.மு.க. தரப்பில் இருந்து சனாதன எதிர்ப்புக் குரல்கள் வராதபடி பார்த்துக்கொள்ளுங்கள் என்றும் ராகுலிடம் அவர்கள் சொன்னார்களாம். இதற்கு ராகுல் எந்த ரியாக்சனையும் காட்டவில்லையாம்.''”
"அத்தோட நம்ம பக்கத்து மாநிலமான தெலுங்கானாவில் காங்கிரஸ் ஜெயிச்சிருக் கிறது. அங்கே சனாதனப் பேச்சு பாதிப்பு ஏற்படுத்தவில்லையா? வடமாநில வெற்றிகளுக்கும் சனாதனத்துக்கும் முடிச்சுப் போடுவது வெறும் வாய்ச்சவடால் என்ற குரல்களும் கேட்கத் தொடங்கியிருக்கு.''”
’"ஆருத்ரா விவகாரத்தில் பா.ஜ.க. அண்ணாமலையை நோக்கி ஒரு சூறாவளி நெருங்கி வருகிறது என்கிறார்களே?''”
"உண்மைதாங்க தலைவரே, ரூபாய் 2,438 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், தலைமறைவாக இருந்த ஆருத்ரா நிதி நிறுவன இயக்குநரான ராஜசேகரை, பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார், அபுதாபியில் வைத்து கைது செய்திருக்கிறார்கள். வசமாக சிக்கிய அவரை சென்னைக்கு கொண்டுவரவிருக்கிறார்கள். இந்த நிலையில் இதே விவகாரத்தில் சிக்கி, வெளிநாட்டுக்கு எஸ்கேப் ஆன நடிகர் ஆர்.கே.சுரேஷும், டிசம்பர் முதல்வாரத்தில் சென்னைக்கு வந்து, விசாரணையில் ஆஜராவதாகத் தகவல் கொடுத்திருக்கிறார். இவர்கள் வந்ததும் பா.ஜ.க.வில் ஒரு பெரும் சூறாவளி கிளம்பும் என்கிறார்கள். காரணம், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் அக்கட்சியின் பிரமுக ரான அமர்பிரசாத் ரெட்டி ஆகிய இருவரும் இந்த ஆருத்ரா மோசடி விவகாரத்தில் சிக்கியிருப்ப தால், அந்த இருவரிடமும் பெறவிருக்கும் வாக்குமூலம், இந்த இருவருக்கும் பெரும் நெருக்கடியை உருவாக்கும் என்கிற எதிர்பார்ப்பு பா.ஜ.க. தரப்பிலேயே இருக்கிறது.''”
"நானும் என் காதுக்கு வந்த ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணை இயக்குந ராக இருந்த தமிழினியன் மீது, அவர் சரியாக வேலை பார்ப்பதில்லை என்பது தொடங்கி பல்வேறு புகார்கள் எழுந்தபடியே இருந்தன. இது உதயநிதியின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. கூடவே, அவர், முன்னாள் எம்.எல்.ஏ.வும் தி.மு.க. மீனவர் அணி மாநிலச் செயலாளருமான பெர்னார்டின் மகன் என்ற தகவலும் அவரிடம் சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு கணம் நிதானித்த உதயநிதி, கட்சிக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இத்தனை புகார்கள் வருகிறது என்றால், அவர் மீது உடனே நடவடிக்கை எடுத்தாகவேண் டும் என்று சொல்ல, இதன் அடிப்படையில் தமிழினியனை அங்கிருந்து அதிரடியாக மாற்றி விட்டு, அவருக்கு பதில், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் இணை இயக்குநராக இருந்த கலைநேசனை அமர்த்தியிருக்கிறார்கள். இவர், தி.நகர் முன்னாள் எம்.எல்.ஏ. கலைராஜனின் சொந்த தம்பியாம். இவரும் சர்ச்சைகளில் சிக்கியவர்தான் என்கிறார்கள்.''
________________
அம்பத்தூரில் வடிநீர்க்குழாய் அமைப்பின் தவறால் நேர்ந்த பாதிப்பு!
அம்பத்தூர் புயல்வெள்ள பாதிப்பு குறித்து அம்பத்தூர் எய்மா முன்னாள் தலைவரான ராஜு, "நார்த் பேஸ்ல, ஐம்பது வருஷமா சின்ன மழைக்கும்கூட தண்ணீர் வந்துடும். இந்த அரசு வந்ததும் நார்த் பேஸ்ல எல்லா ரோடுக்கும் வெள்ள நீர் வடிகால் இணைப்பு கொடுத்தாங்க. அப்படி இணைக்கும்போது நான் அவங்களுக்குச் சொன்னது, ரயில்வே கெனால்ல இந்தத் தண்ணி போகாது. அதோட இணைக்காதீங்க. நேரா ஆவின் ரோடுல இணைங்க. ஏன்னா, அம்பத்தூர் ஏரியில வர்ற தண்ணீர், வெள்ள நீரோட உயரமா போகும். அதனால நார்த் பேஸ்ல தண்ணி போகாம சுத்திக்கிட்டே இருக்கும்னேன். கேட்காம பண்ணினாங்க. இன்னைக்கு மாட்டிக்கிச்சு. இன்னும் தண்ணி இறங்குன பாடா இல்லை. பொதுப்பணித்துறைல கட் அண்ட் கவர் ஸ்லாப் கொண்டுவரும்போது, கெனால் வரை அந்த தண்ணியை அப்படியே கட் அண்ட் கவர் ஸ்லாப்புக்குள்ளே கொண்டு வர்றேன்னாங்க. அவங்க கொண்டு வந்த தண்ணியோட அளவைவிட, கனெக்ட் பண்ண கால்வாயோட அளவு சிறுசு. இந்த அரசாங்கத்துல கொரட்டூர் வரைக்கும் கட் அண்ட் கவர் ஸ்லாப் கொண்டுவந்துடுவோம் னாங்க. ஆனா செய்யல. இவங்க செய்யாதத னால எனக்கு மட்டுமே 18 மெஷின் தண்ணிக்குள்ள இருக்கு. ஒவ்வொரு மெஷினும் 40, 50 லட்ச ரூபாய், இதற்கு எப்படி காப்பீடு தருவாங்க? மின்சாரம் வர்றதுக்கும் தாமதமாவதால் வாரம் முழுக்க எந்த வேலையும் நடக்காது. இப்படி என்னை மாதிரியே பல பேர் பாதிக்கப் பட்டிருக்காங்க. மொத்தத்துல தவறான அணுகுமுறையால 500 கோடி ரூபாய் எந்திரங்கள், அதனுடன் சம்பந்தப்பட்ட மெட்டீரியல்கள் பாழாயிடுச்சு. 1000 கோடி ரூபாய்க்கு உண்டான புரொடக்ஷன் லாஸ். 50,000’பேருக்கு வேலையிழப்பு''’ என்று வருந்தினார்.
-கீரன்