ராங்கால் : நிதி நிறுவன மோசடியில் தமிழக பா.ஜ.க.! ராஜ்பவன் ஷாக்! தமிழக காங்கிரசுக்கு பெண் தலைவர் விறுவிறு ரேஸ்!

tt

"ஹலோ தலைவரே, மோசடி நிதி நிறுவனங்கள் இப்போது புற்றீசல் போல பெருகிவருகிறது.''”

"ஆமாம்பா, அதன் பின்னணியில் அரசியல் பிரபலங்களும் பவர் புள்ளிகளும் இருப்பதாகச் சொல்லப்படுதே?''”

rang

"உண்மைதாங்க தலைவரே, தங்கத்தில் முதலீடு செய்வதாகக் கூறியும், 30 சதவீதம்வரை வட்டி தருவதாக ஆசைகாட்டியும் பொதுமக்களுக்கு நாமம் போட்ட ’ஆருத்ரா கோல்ட் டிரேடிங்’ என்ற நிறுவனம், அண்மையில் பிடிபட்டது. அதன்மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில், இந்த விவகாரத்தைத் தீவிரமாக விசாரித்து வந்த பொருளாதாரக் குற்றப் பிரிவைச் சேர்ந்த கண்ணன், சம்பத் மற்றும் சுரேஷ் ஆகிய 3 டி.எஸ்.பி-க்கள், திடீர்னு அந்த விசாரணையில் இருந்து விடுவிக்கப்பட்டார்கள். இதன் பின்னணியில் ராஜ்பவன் இருப்பதாக அப்போதே தகவல் அடிபட்டது. இப்போது இந்த மாதிரியான விவகாரங்களில் பா.ஜ.க. பிரமுகர்களின் பெயர்களும் அடிபட்டு பரபரப்பை ஏற்படுத்துது.''”

"விடுகதை போடாமல், நேரடியா விசயத்துக்கு வாப்பா?''”

"இந்த ஆருத்ரா விவகாரத்தில் தன் பெயர் பகிரங்கமாக அடிபட ஆரம்பித்ததில் ராஜ்பவன் அப்செட் ஆகி இருந்தது. இந்த நிலையில் அந்த நிதி நிறுவன விவகாரத்தைக் கண்காணிக்கும் படி, பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் நட்பு ரீதியில் கேட்டுக்கொண்டதாம் ராஜ்பவன். அண்ணாமலையோ பா.ஜ.க.வின் மற்றொரு பிரமுகரான அமர்பிரசாத் ரெட்டியுடன் சேர்ந்துகொண்டு, அந்த ஆருத்ராவிடம் பெரும் பயனைப் பெற்றுக்கொண்டு, அதற்கு ஆபத்பாந்தவனாக மாறிவிட்டாராம். இதேபோல் தமிழகத்தில் புற்றீசலாய் முளைத்திருக்கும் மோசடி நிதி நிறுவனங்களைப் பட்டியல் எடுத்துக்கொண்டு, அவர்களையும் காப்பாற்றுவதாகச் சொல்லி, இந்த இரட்டையர்கள் லம்பாக லாபம் பார்க்க ஆரம்பித்து விட்டார்களாம். நிலைமை எல்லை மீறிப்போவதைப் பார்த்த ராஜ்பவன், அவர்களுக்கு லகான்போட முயல்கிறதாம். இப்படியொரு தகவல் ராஜ்பவன் தரப்பில் இருந்தே கசியுது.''”

"மணிப்பூர் மற்றும் மேற்கு வங்க மாநில கவர்னராக இருக்கும் தமிழக பா.ஜ.க.வின் மூத்த தலைவர் இல.கணேசன் வீட்டு விசேசத்தை பா.ஜ.க. அண்ணாமலை புறக்கணிச்சிட்டாரே?''”

"ஆமாங்க தலைவரே, இல.கணேசனின் சகோதரர் இல.கோபாலனின் சதாபிஷேகம் அண்மையில் சென்னையில் விமர்சையாக நடந்தது. முதல்வர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா, நடிகர் ரஜினி உள்ளிட்டோர் நேரில் சென்று கோபாலனை வாழ்த்தினாங்க. இந்த நிகழ்ச்சிக்கு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஆகிய இருவரையும் முக்கியத்துவம் கொடுத்து இல.கணேசன் அழைத்த

"ஹலோ தலைவரே, மோசடி நிதி நிறுவனங்கள் இப்போது புற்றீசல் போல பெருகிவருகிறது.''”

"ஆமாம்பா, அதன் பின்னணியில் அரசியல் பிரபலங்களும் பவர் புள்ளிகளும் இருப்பதாகச் சொல்லப்படுதே?''”

rang

"உண்மைதாங்க தலைவரே, தங்கத்தில் முதலீடு செய்வதாகக் கூறியும், 30 சதவீதம்வரை வட்டி தருவதாக ஆசைகாட்டியும் பொதுமக்களுக்கு நாமம் போட்ட ’ஆருத்ரா கோல்ட் டிரேடிங்’ என்ற நிறுவனம், அண்மையில் பிடிபட்டது. அதன்மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில், இந்த விவகாரத்தைத் தீவிரமாக விசாரித்து வந்த பொருளாதாரக் குற்றப் பிரிவைச் சேர்ந்த கண்ணன், சம்பத் மற்றும் சுரேஷ் ஆகிய 3 டி.எஸ்.பி-க்கள், திடீர்னு அந்த விசாரணையில் இருந்து விடுவிக்கப்பட்டார்கள். இதன் பின்னணியில் ராஜ்பவன் இருப்பதாக அப்போதே தகவல் அடிபட்டது. இப்போது இந்த மாதிரியான விவகாரங்களில் பா.ஜ.க. பிரமுகர்களின் பெயர்களும் அடிபட்டு பரபரப்பை ஏற்படுத்துது.''”

"விடுகதை போடாமல், நேரடியா விசயத்துக்கு வாப்பா?''”

"இந்த ஆருத்ரா விவகாரத்தில் தன் பெயர் பகிரங்கமாக அடிபட ஆரம்பித்ததில் ராஜ்பவன் அப்செட் ஆகி இருந்தது. இந்த நிலையில் அந்த நிதி நிறுவன விவகாரத்தைக் கண்காணிக்கும் படி, பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் நட்பு ரீதியில் கேட்டுக்கொண்டதாம் ராஜ்பவன். அண்ணாமலையோ பா.ஜ.க.வின் மற்றொரு பிரமுகரான அமர்பிரசாத் ரெட்டியுடன் சேர்ந்துகொண்டு, அந்த ஆருத்ராவிடம் பெரும் பயனைப் பெற்றுக்கொண்டு, அதற்கு ஆபத்பாந்தவனாக மாறிவிட்டாராம். இதேபோல் தமிழகத்தில் புற்றீசலாய் முளைத்திருக்கும் மோசடி நிதி நிறுவனங்களைப் பட்டியல் எடுத்துக்கொண்டு, அவர்களையும் காப்பாற்றுவதாகச் சொல்லி, இந்த இரட்டையர்கள் லம்பாக லாபம் பார்க்க ஆரம்பித்து விட்டார்களாம். நிலைமை எல்லை மீறிப்போவதைப் பார்த்த ராஜ்பவன், அவர்களுக்கு லகான்போட முயல்கிறதாம். இப்படியொரு தகவல் ராஜ்பவன் தரப்பில் இருந்தே கசியுது.''”

"மணிப்பூர் மற்றும் மேற்கு வங்க மாநில கவர்னராக இருக்கும் தமிழக பா.ஜ.க.வின் மூத்த தலைவர் இல.கணேசன் வீட்டு விசேசத்தை பா.ஜ.க. அண்ணாமலை புறக்கணிச்சிட்டாரே?''”

"ஆமாங்க தலைவரே, இல.கணேசனின் சகோதரர் இல.கோபாலனின் சதாபிஷேகம் அண்மையில் சென்னையில் விமர்சையாக நடந்தது. முதல்வர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா, நடிகர் ரஜினி உள்ளிட்டோர் நேரில் சென்று கோபாலனை வாழ்த்தினாங்க. இந்த நிகழ்ச்சிக்கு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஆகிய இருவரையும் முக்கியத்துவம் கொடுத்து இல.கணேசன் அழைத்தும் கூட அவர்கள் இருவரும் இந்த நிகழ்ச்சியில் தலையைக் காட்டலை. இதற்காக அதேநாளில் அண்ணாமலை பெங்களுருக்கும், கவர்னர் ரவி டெல்லிக்கும் சென்று விட்டார்களாம்.''”

"சரிப்பா, கவர்னர் ரவிக்கும் பா.ஜ.க. அண்ணாமலைக்கும் அப்படியென்ன இல.கணேசன் மீது கோபம்?''”.

"இல.கணேசன் கவர்னரானதற்கு பிறகு அவரைச் சந்திக்க அண்ணாமலை ஓரிரு முறை முயற்சி செய்திருக்கிறார். ஆனால், அவரைச் சந்திக்க இல.கணேசன் ஆர்வம் காட்டலையாம். இதனால் அவர் மீது அண்ணாமலைக்கு வருத்தம் உண்டு. அதனை வெளிப்படுத்தவே இல.கணேசனின் அழைப்பை புறக்கணித்தார்னு சொல்லப்படுது. அதேபோல, தமிழக அரசோடு ஆர்.என்.ரவி மோதல் போக்கைக் கடைப்பிடித்து வரும் நிலையில், இல.கணேசன், தி.மு.க.வுக்கு சாதகமாகவும், ரவிக்கு எதிராகவும் டெல்லியிடம் பேசினாராம். இதை அறிந்ததால்தான் கவர்னர் ரவி, கணேசனின் அழைப்பை நிராகரித்தாராம். அதேசமயம், டெல்லி சென்ற கவர்னர் ரவியிடம், நீங்கள் இல.கணேசன் நிகழ்ச்சிக்குப் போயிருக்க வேண்டும் என்று கவர்னருக்கு அட்வைஸ் செய்யப்பட்டதாம்.''”

"ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி, பிரதமர் மோடியிடம் பா.ஜ.க.வினரை விடவும் அதிகம் குழைந்தாராமே?''”

"தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, தனது செயல்பாட்டால் அகில இந்திய அளவில் மூன்றாம் இடத்தைப் பிடித்திருக்கிறது. இதற்கான விருதளிப்பு விழா குஜராத்தில் நடக்க, நகர்ப்புற வளர்ச்சி வாரிய மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் இருக்கும் தா.மோ.அன்பரசன், வீட்டுவசதி மற்றும் குடிசை மாற்றுத் துறைச் செயலாளரான ஹிதேஷ்குமார் மக்வானாவுடன் அதற்குச் சென்றிருந்தார். அந்த விழாவில் பிரதமர் மோடி விருதுகளை வழங்கியபோது, அரசியல்வாதிகளை விடவும் ஐ.ஏ.எஸ். அதிகாரியான மக்வானா, ஒருவித பக்திப் பரவசத்துடன் நெகிழ்ந்து மகிழ்ந்து மோடிக்குக் கும்பிடு போட்டாராம். விறைப்பான அதிகாரி என்று பெயரெடுத்த மக்வானாவிற்கு என்ன ஆச்சுன்னு அமைச்சரே ஆச்சரியப்பட்டிருக்கிறார். இதன் பின்னணி குறித்து விசாரித்த போது, மக்வானா, பா.ஜ.க.வில் சேரத் துடிக்கிறார் என்றும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எம்.பி.யாகி, ஒன்றிய அமைச்சராகிவிட வேண்டும் என்பதுதான் அவர் ஆசை என்றும் அவர் நண்பர்களே தெரிவிக்கிறார்கள்.''’

"அகில இந்திய காங்கிரஸ் அடுத்த கட்டத்தேர்தலுக்குத் தயாராயிடுச்சே?''”

rr

"ஆமாங்க தலைவரே, காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வானதால், அதுவரை இருந்துவந்த பழைய காரியக் கமிட்டி உறுப் பினர்கள் பதவி இழக்கறாங்க.. அவர்களுக்குப் பதிலாகப் புதிய உறுப்பினர்கள் 12 பேரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை விரைவில் நடத்த கார்கே திட்டமிட்டி ருக்கார். அதோடு, 12 நியமன உறுப்பினர்களையும் அவர் தேர்ந்தெடுக்கப் போகிறார். இந்த நியமன உறுப்பினர்கள் பட்டியலில் யார் யாரைச் சேர்ப்பதுன்னு இதற்காக அவர், சோனியா காந்தியிடம் ஆலோசித்து வருகிறாராம். அதிகாரம் மிக்க இந்தப் பதவியில் அமர கட்சியின் சீனியர் தலைவர்களிடம் போட்டி அதிகம் இருக்கிறதாம். அதேபோல் இளம்வயதினர் இந்தப் பதவியில் அதிகம் இருக்கணும்னு ராகுல் காந்தி சொல்லிவருவதால், அவரைப் பிடிக்க, அவர் நடத்திவரும் பாத யாத்திரையிலேயே அவரைச் சிலர் துரத்தறாங்களாம்.''”

"புதிய தலைவரான மல்லிகார்ஜுன கார்கே, மாநில நிர்வாகிகளையும் புதிதாக நியமிக்க நினைக்கிறாராமே?''”

"தலைவரே நீங்க எங்க வர்றீங்கன்னு புரியுது தமிழக காங்கிரஸ் தலைவரான கே.எஸ்.அழகிரியின் பதவி பறிபோகுமா? இல்லை அவரே தொடர்வாரான்னுதானே கேட்கறீங்க? தமிழக காங்கிரஸ் தலைவரான அழகிரியை, நடாளுமன்றத் தேர்தல்வரை மாற்றத் தேவையில்லைன்னு ராகுல்காந்தியே சொன்னதாக ஒரு தகவல் சொல்லப்பட்டு வந்த நிலையில், அழகிரியை மாற்றியே ஆகணும்னு அந்தக் கட்சியில் இருக்கும் கோஷ்டித் தலைவர்களால் கார்கேவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறதாம். இந்த நிலையில் தமிழக காங்கிரஸுக்கு பெண் ஒருவரைத் தலைவராக நியமிக்கலாமா? என்கிற விவாதமும் டெல்லியில் நடக்குது.''”

rr

"எதுக்காகப் பெண் தலைவர் பற்றிய ஆலோசனை?''”

"தமிழகத்தில் இருக்கும் பெண்களின் வாக்குகளைக் கவரும் வகையில், கட்சித் தலைவராக மகளிர் ஒருவரை நியமிக்கணும் என்கிற குரல் ஒருபக்கம் ஒலித்துக்கொண்டே இருக்குது. ஜெயலலிதா இருந்த வரை தமிழக பெண்களின் அதிகபட்ச ஆதரவு அ.தி.மு.க.வுக்கு இருந்தது. அதேபோல, பா.ஜ.க. தலைவராக தமிழிசை சௌந்திரராஜன் இருந்த போது, பா.ஜ.க. பற்றி பெண்கள் மத்தியில் அவர் பேச வைத்தார். அதுபோல, தமிழக காங்கிரஸில் ஒரு பெண் தலைவர் இருக்கணும்னு நினைக்கிறாங்க. அதனால்தான், மகளிர் ஒருவரை நியமித்தால் என்னன்னு டெல்லித் தலைமை யோசிக்கிதாம். அதனால் அதற்குத் தகுதியானவர்கள் குறித்த பட்டியலும் ஒரு பக்கம் எடுக்கப்பட்டு வருகிறது.'' ”

"அந்தப் பட்டியல்ல யார் யார் பெயரெல்லாம் இருக்குதாம்?''”

"பட்டியலில் கட்சியின் சீனியர்கள் பரிந்துரைத்த பெண்களின் பெயர்கள் நிறையவே இருக்கிறதாம். அவர்களில், மூன்று முறை எம்.எல்.ஏ. வாக இருக்கும் விஜயதாரணி, எம்.பி.யாக இருக்கும் ஜோதிமணி ஆகிய இருவரின் பெயர்கள் மட்டுமே இறுதிப் பட்டியலில் வைக்கப்பட்டி ருக்கிறது. ஆனால், சமீபகாலமாக, காங்கிரஸ் தலைவராக வேண்டும் என் கிற விருப்பத்தை ஓரங்கட்டி விட்டாராம் ஜோதிமணி. வருகிற நாடாளு மன்றத் தேர்தலிலும் மீண்டும் எம்.பி.யாகி, காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் பட்சத்தில் ஒன்றிய அமைச்சராக வேண்டும் என்ற எண்ணத் தில் இருக்கிறாராம் ஜோதிமணி. அதனால், விஜயதாரணி பெயரை மட்டுமே கட்சித் தலைமை டிக் அடித்து வைத்திருக்கிறதாம். தமிழக காங்கிரஸுக்கு மகளிரை தலைவராக்க முடிவெடுக்கப்பட்டால், விஜய தாரணிக்கே வாய்ப்பு அதிகம் என்கிறது சத்தியமூர்த்திபவன் தரப்பு.''”

"கொங்கு மண்டல அ.தி.மு.க. கூடாரம் வேகமாக சரிந்துவருகிறதே?''”

rr

"உண்மைதாங்க தலைவரே, கொங்கு மண்டலத்தில் உள்ள அதி.மு.க.வினரை சைலண்டாக தி.மு.க. பக்கம் கொண்டுவரும் வேலையை வெகு தீவிரமாகச் செய்துவருகிறாராம் அமைச்சர் செந்தில்பாலாஜி. இதைக்கண்டு பதறிப்போன அ.தி.மு.க. மாஜி மந்திரிகளான தங்கமணியும் வேலுமணியும், இந்தத் தகவலை எடப்பாடியின் கவனத்துக்குக் கவலையோடு கொண்டு செல்ல, இது குறித்து அலட்டிக் கொள்ளாத எடப்பாடி, ’போறவங்க போகட்டும். அவங்களைப் பிடிச்சித் தொங்கிக்கிட்டா இருக்கமுடியும். விடுங்க. யார் போனாலும் கவலையில்லை. கட்சியும் கட்சியின் சொத்துக்களும் நம்ம கைலதான் இருக்கும்’ என்று சொல்லி அவர்களையும் அப்செட் ஆக்கியதோடு, ’கட்சியை விட்டு விலக்கப்பட்ட யாரையும் கட்சியில் சேர்த்துக்கொள்ள மாட்டோம்’ என்று தொடர்ந்து பேசி, அ.தி.மு.க. ஒன்றுபடவேண்டும் என்று நிர்ப்பந்தித்துவரும் பா.ஜ.க. தரப்பின் எரிச்சலையும் சம்பாதித்து வருகிறார்.''”

"மாநகராட்சி மக்கள் பிரதிநிதிகளின் அதி காரத்தை தி.மு.க. அரசு அதிரடியாகப் பறித்திருக்கிறதே?''

"தமிழகத்தில் 21 மாநகராட்சிகள் உள்ளன. இதில் சென்னை பெருநகர மாநகராட்சியைத் தவிர மற்ற 20 மாநகராட்சிகளிலும், மேயர்கள், நிதி நிலைக் குழுத் தலைவர்கள், மண்டல குழுத் தலைவர்கள் ஆகியோரிடத்தில் இருந்த நிதி கையாளும் அதிகாரத்தை தி.மு.க. அரசு பறித்திருக்கிறது. இதற்காக அரசாணையும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. தமிழக நகராட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச் செய லாளர் சிவ்தாஸ்மீனா இதைப் பிறப்பித்திருக்கிறார். இதன்மூலம் மக்கள் பிரதி நிதிகளிடமிருந்த அதிகாரங் களைப் பறித்து மாநகராட்சி அதிகாரியிடம் கொடுத்திருக் கிறது அரசு. இது, சம்பந்தப் பட்ட மேயர்கள், கவுன் சிலர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்குச் சில முக்கியமான காரணங்களும் இருப்பதாக மேல்மட்டத்தில் கிசுகிசுக்கப்படுது.''”

"சமூக நலத்துறையிலும் அதிர்ச்சி நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறதே?''”

"தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறையின் இயக்குநராக இருக்கிறார் அமுதவல்லி ஐ.ஏ.எஸ். இந்தத் துறையின் கீழ், தேசிய ஊட்டச்சத்துக் குழுமம் இயங்கி வருகிறது. இதன் கீழ், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அலுவலகங்களில் வட்டார திட்ட உதவியாளர்கள் பணி புரிகிறார்கள். இவர்கள் அனைவரையும் 31.10.2022 முதல் நிரந்தர பணி நீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறார் அமுதவல்லி. இந்த உத்தரவு சமூக நலத்துறையில் கடும் விமர்சனத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.''”

"ம்''

"கோட்டை தகவல் ஒண்ணு சொல்றேன்.. அரசு விளம்பரங்களைப் பத்திரிகைகளுக்கு வினியோகிக் கும் 40க்கும் மேற்பட்ட விளம்பர ஏஜென்ஸிகளில் 15 ஏஜென்சி களைத்தான் அரசுத் தரப்பு கண்டுக்கு தாம். அதில் அதிக விளம்பரம் பெறும் விப்ராஸ் நிறுவனம், அ.தி.மு.க. ஆட்சியில் செய்தித்துறை அமைச்சராக இருந்த கடம்பூர் ராஜுவின் மருமகனும், அரசு கலைக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருக்கும் ரவி என்பவரும் இணைந்து நடத்தும் நிறுவனமாம். அடுத்து, ’இவோக்’ என்ற ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறு வனத்துக்கு அதிகமான விளம்பரமும், விழா ஏற்பாடுகளும் கொடுக்கப்படுது. இதன் உரிமையாளரான செல்வின், அ.தி.மு.க. மாஜி மந்திரி விஜயபாஸ்கரின் பினாமியாம். அதுமட்டுமில்லாமல், பொ.ப.து., நெடுஞ் சாலைத்துறை, போக்குவரத்துத் துறைன்னு, அரசின் மற்ற துறைகள் சார்பில் நடக்கும் அரசு விழாக்களும் இவோக் ஈவென்ட் மேனேஜ் மெண்டிடம்தான் ஒப்படைக்கப்படுது. அதுபோல தி.மு.க. அரசின் சாதனைகளை சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தும் 2 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டரை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலு மணியின் அண்ணன் மகன்களுடைய கே.எஸ்.மார்ட் நிறுவனத்துக்கு தரப் போறாங்களாம். கோட்டை அதிகாரிகள் குமுறுறாங்க.''”

"நானும் என் காதுக்கு வந்த ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். நடிகை நயன்தாரா பாணியில், ஜெ.வின் அண்ணன் மகளான தீபாவும், ரகசியமாக ஒரு வாடகைத் தாய் மூலம் ஒரு குழந்தையைப் பெற்றுக்கொண்டிருக்கிறார். அது அப்படியே ஜெயலலிதாவை உரித்துவைத்தது போல் இருக்கிறது... என்று ஒரு தகவல் விறுவிறுப்பாகப் பரவிக்கொண்டிருக்கிறது. இதுகுறித்து தீபா தரப்பில் விசாரித்தும் கூட எந்தவித பதிலையும் அவர்கள் தரவில்லை.''’

nkn091122
இதையும் படியுங்கள்
Subscribe