2024 நாடாளு மன்றத் தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கி விட்டது பாரதிய ஜனதா கட்சி.
தென்னிந்திய மாநிலங்களைக் குறிவைத்து தனியாக தேர்தல் வியூகங்கள் வகுத்து வருகிறது. குறிப்பாக, தமிழ்நாடு மீது தீவிர கவனம் செலுத்தி தங்களது கட்சியின் முக்கிய மாநில, தேசிய நிர்வாகிகள், அணி நிர்வாகிகளிடம் தேர்தலை எதிர்கொள்வது எப்படி என்கிற ஆலோசனைகளை தலைமை கேட்டுவருகிறது. ஒருதரப்பு, வாக்குச் சாவடிகளை நமக்கு சாதகமாக மாற்றவேண்டும், வாக்குச்சாவடி அலுவலர்கள் நமக்கு சாதகமானவர்களாக இருக்க வேண்டும் என்கிற கருத்தை முன்வைத்துள்ளதாகத் தெரிகிறது.
இதுபற்றி நம்மிடம் பேசிய பா.ஜ.க.வின் முக்கிய மாநில நிர்வாகியொருவர், “"தமிழ்நாட்டில் கடந்த தேர்தல்களில் நாங்கள் அதிக வாக்கு வாங்கிய தொகுதிகள், கடந்த சட்டமன்ற தேர்தலி−ல் வெற்றிபெற்ற தொகுதிகள் அடங்கிய நாடாளுமன்றத் தொகுதிகளோடு கன்னியாகுமரி, திருச்சி, கோவை, ஈரோடு, வேலூர் உட்பட 10 நாடாளுமன்ற தொகுதிகளைக் குறிவைத்துள்ளோம். இந்தத் தொகுதிகளில் தீ
2024 நாடாளு மன்றத் தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கி விட்டது பாரதிய ஜனதா கட்சி.
தென்னிந்திய மாநிலங்களைக் குறிவைத்து தனியாக தேர்தல் வியூகங்கள் வகுத்து வருகிறது. குறிப்பாக, தமிழ்நாடு மீது தீவிர கவனம் செலுத்தி தங்களது கட்சியின் முக்கிய மாநில, தேசிய நிர்வாகிகள், அணி நிர்வாகிகளிடம் தேர்தலை எதிர்கொள்வது எப்படி என்கிற ஆலோசனைகளை தலைமை கேட்டுவருகிறது. ஒருதரப்பு, வாக்குச் சாவடிகளை நமக்கு சாதகமாக மாற்றவேண்டும், வாக்குச்சாவடி அலுவலர்கள் நமக்கு சாதகமானவர்களாக இருக்க வேண்டும் என்கிற கருத்தை முன்வைத்துள்ளதாகத் தெரிகிறது.
இதுபற்றி நம்மிடம் பேசிய பா.ஜ.க.வின் முக்கிய மாநில நிர்வாகியொருவர், “"தமிழ்நாட்டில் கடந்த தேர்தல்களில் நாங்கள் அதிக வாக்கு வாங்கிய தொகுதிகள், கடந்த சட்டமன்ற தேர்தலி−ல் வெற்றிபெற்ற தொகுதிகள் அடங்கிய நாடாளுமன்றத் தொகுதிகளோடு கன்னியாகுமரி, திருச்சி, கோவை, ஈரோடு, வேலூர் உட்பட 10 நாடாளுமன்ற தொகுதிகளைக் குறிவைத்துள்ளோம். இந்தத் தொகுதிகளில் தீவிர களப்பணியில் இறங்கியுள்ளோம். பூத் கமிட்டியிலும் தீவிர கவனம் செலுத்துகிறோம். பூத் கமிட்டியில் முன்புபோல் ஏனோதானோ என ஆட்களை நியமிக்காமல் பூத்தில் உறுதியாக அமரும் 10 பேரை தேர்வுசெய்து நியமித்து தி.மு.க. செய்யும் தில்லுமுல்லுகளை தைரியமாக எதிர்கொள்வதற்கான பயிற்சிகளை வழங்கத் துவங்கியுள்ளோம். வாக்குச்சாவடியில் நியமிக்கப்படும் அரசு அலுவலர்கள் விவகாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்துள்ளோம். காரணம், மாநில அரசு ஊழியர்கள் தி.மு.க.வுக்கு சாதகமாகவே உள்ளார்கள். இவர்களால்தான் எங்களுக்கு வாக்கு விழுவதில்லை.
டெல்−லி முதலமைச்சர் கெஜ்ரிவாலை யாருக்கும் தெரியாது. ஊழலுக்கு எதிராகப் போராடிய அன்னாஹசாரே மூலமாகவே கெஜ்ரிவாலை மக்கள் அறிந்திருந்தார்கள். பூத் ஏஜென்ட்கூட இல்லாத ஆம்ஆத்மி கட்சி டெல்லி− தேர்தலி−ல் எப்படி ஜெயிக்கமுடியும் என நினைத்தார்கள். ஆனால் ஆம் ஆத்மி வெற்றிபெற்று, கெஜ்ரிவால் முதல்வராகி ஆட்சி செய்துகொண்டுள்ளார். ஆம்ஆத்மி வெற்றி பெற்றதற்கான காரணம், கெஜ்ரிவால் முகத்துக்கான வாக்கு.
தமிழகத்தில் எங்கள் கட்சி சார்பில் பூத் கமிட்டியில் உட்கார வைப்பதற்கான ஆட்கள் பற்றாக்குறை இருக்கலாம். ஆனால், பிரதமர் மோடிக்கு ஓட்டுப்போட தமிழக மக்கள் தயாராகவுள்ளார்கள். ஆனால் அதனைத் தடுப்பது வாக்குச்சாவடியில் உள்ள மாநில அரசு அதிகாரி கள்தான். தமிழ் நாட்டில் தி.மு.க.வின் பெரும்பலம் அரசு ஊழியர்கள். குறிப்பாக ஆசிரியர்கள். இவர்கள்தான் வாக்குச்சாவடி அலுவலர்களாக இருக்கி றார்கள். இவர்களுக்கு பதில் மத்திய அரசுப் பணியாளர்களான வங்கி ஊழியர்கள், அஞ்சலக ஊழியர்கள், பி.எஸ்.என்.எல். அதிகாரிகள், நேரு யுவகேந்திரா பணியாளர்கள் போன்றவர்களை நியமிக்கவேண்டும் என கட்சித் தலைமைக்குக் கூறியுள்ளோம். இதுபற்றி டெல்−லியில் தேர்தல் ஆணையத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது''’என்றார்.
இதுகுறித்து ஆளும்கட்சி செய்தித் தொடர்பு இணைச்செயலாளர் சிவ.ஜெயராஜிடம் கேட்ட போது, "ஆடத் தெரியாதவன் தெரு கோணல்னு சொன்ன மாதிரி இருக்கு. காலம்காலமாக தமிழகத் தில் புறக்கணிக்கப்பட்ட ஒரு கட்சி பா.ஜ.க. இப்போதைய மாநில தலைவர் அண்ணாமலை உட்பட முக்கிய தலைவர்களே சில லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தேர்தலி−ல் தோற்றவங்க. அரவக் குறிச்சியில் 150 வாக்குச்சாவடிகளில் சிங்கிள் டிஜிட் ஓட்டு வாங்கியவர் அண்ணாமலை. இவுங் களுக்கு விழவேண்டிய ஓட்டுக்களை ஆசிரியர்கள் தடுக்கிறார்கள் எனச் சொல்வது அவர்களை கொச்சைப் படுத்துவதாகும். பூத்தில் ஒவ்வொரு கட்சி, சுயேட்சை ஏஜென்ட்கள் இருக்கி றார்கள். இவர்களை மீறி அரசு ஊழியர் கள் செயல்பட்டுவிட முடியுமா?'' என்றார்.
தமிழ்நாட்டில் நடக்கும் தேர்தலில் வாக்குச்சாவடி அதிகாரிகளாக ஒன்றிய அரசுப் பணியாளர்களை நியமிக்க முடியுமா என தேர்தல் ஆணைய வட்டாரங்களில் விசாரித்தபோது, “மாவட்ட தேர்தல் அலுவலர், ஆர்.ஓ. (ரிட்டனிங் ஆபிஸர்), ஏ.ஆர்.ஓ. இவர்களுக்குக் கீழ் பி.எல்.ஓ. (பூத் லெவல் ஆபீஸர்) இவர்களுக்கு கீழ் பி1, பி2, பி3, பி4 என நியமிக்கப்படுவார்கள். பி.எல்.ஓ. முதல் பி4 வரை என, ஒரு வாக்குச்சாவடியில் குறைந்தது 5 பேர், சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கையைப் பொருத்து அது 6 அல்லது 7 பேராகவும் உயரும்.
பி.எல்.ஓ.வாக மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்படுகி றார்கள். இவர்கள்தான் அந்த வாக்குச்சாவடிக்கான ஹெட். இவர் சொல்படிதான் வாக்குச்சாவடி இயங்கும். தமிழ்நாட்டில் 2021 சட்டமன்றத் தேர்தலி−ன்போது 67,775 வாக்குசாவடிகள் இருந்தன. இப்போது 68,019 வாக்குச்சாவடிகள் உள்ளன. வரும் நாடாளுமன்றத் தேர்தலி−ன்போது சில ஆயிரம் பூத்கள் உருவாக்கப்படும். இவ்வளவு பூத்களுக்கான அலுவலர்கள் மத்திய அரசுத் துறைகளிலிருந்து வரமாட்டார்கள். அவ்வளவு பணியாளர்கள் தமிழ்நாட்டில் இல்லை.
அதோடு அரசியல் சட்ட விதிப்படி மத்திய அரசுப் பணியாளர்களை தேர்தல் பணியில் மாநிலங்களில் ஈடுபடுத்த முடியாது. தேர்தல் சட்டம் மற்றும் விதிகளில் மாற்றம் கொண்டுவந்தால் மட்டுமே தேர்தல் பணியில் அவர்களை ஈடுபடுத்த முடியும். அதற்கான வாய்ப்புகள் குறைவு''’ என்கிறார்கள்.