"ஹலோ தலைவரே, ஆன்மீகத்தின் பேரால் மக்களிடையே சமத்துவத்தை யும் சமாதானத்தையும் ஏற்படுத்தி வந்த மடங்கள்கூட இப்ப நேரெதிர் நடவடிக்கைகளில் இறங்கி அதிர்ச்சி தருது.''”

"உன் கவலைக்குக் காரணம் என்னன்னு புரியு துப்பா. பழம்பெருமை வாய்ந்த மதுரை ஆதீன மடத்தில், மன்மத சாமியார் நித்தி 2012-ல் கால் வச்சிட்டுப் போனதில் இருந்தே, அது சர்ச்சைக்குரியதா மாறிடிச்சி.''”

"உண்மைதாங்க தலைவரே, மதுரை ஆதீன மடத்தில் இப்ப இருக்கும் 293ஆவது மடாதிபதியான அரிஹர ஞானசம்பந்த தேசிகர், கடந்த 2ஆம் தேதி, தன்னைக் கொலை செய்ய முயற்சி நடந்ததாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அவருக்கு முன்பாகவே, அவரது கார் ஓட்டுநரான செல்வ குமார், பத்திரிகையாளர்கள் இடம்பெற்றி ருக்கும் ஒரு வாட்ஸ்ஆப் குரூப்பில், ’சென்னை யில் நடந்தந் சைவ சித்தாந்த மாநாட்டுக்குச் சென்றபோது, உளுந்தூர்ப்பேட்டை ரவுண்டானா அருகில் எங்கள் காரை ஒரு கார் பின்பக்கம் மோதிவிட்டுச் சென்றது. காரில் தூங்கிக்கொண்டிருந்த ஆதீனம் எவ்வித காயமும் இன்றித் தப்பினார். இது தன்னைக் கொல்ல நடந்த சதியாக இருக்கலாம் என்று ஆதீனம் சந்தேகப்படுகிறார்’என்று குறிப்பிட்டி ருந்தார். நாம் அந்த செல்வகுமாரைத் தொடர்பு கொண்டபோது, மோதிச் சென்ற காரில் நம்பர் பிளேட் கூட இல்லை. மற்றபடி எதையும் நான் பார்க்கவில்லை என்றார். மேற்கொண்டு நாம் கேட்ட கேள்விகளுக்கு அவர் மழுப்பலாகவே பதில் சொன்னார்.''”

ss

"அதே சமயம் தன் காரை மோதியவர்கள்னு ஆதீனம் சொன்ன அடையாளங்கள், முதல்ல பதட்டத்தை உருவாக் குச்சே?''”

"ஆமாங்க தலைவரே, சென்னை சைவ சமய மாநாட்டில் பத்திரிகையாளர்களிடம் பேசிய ஆதீனம்,’என்னை மோதிய காரில் இருந்தவர்கள் தொப்பியும், தாடியும் வைத்திருந்தார்கள்... அவ்வளவுதான் சொல்வேன்’ என்றும் பூடகமாகக் குற்றம்சாட்டினார். அந்த மாநாட்டில் மைக் பிடித்தவர், பா.ஜ.க.வில் தேசபக்தி மிக்கவர்கள் உள்ளனர். எத்தனையோ பேர் ஆண்டாலும், சிறந்த ஆளுமையாக இருப் பவர் பிரதமர் மோடிதான். அதேபோல் கவர்னர் ஆர்.என்.ரவி மிகவும் துணிச்சலான வர்’என்றெல்லாம் அரசியல் கருத்துக்களை அள்ளி வைத்தார். அவரது புகார் பற்றி சந்தேகம் எழுப்புகிறவர்கள், "கார் ஓட்டுநர் எதையும் கவனிக்கவில்லை என்கிறார். தூங்கிக்கொண்டிருந்த ஆதீனமோ, அந்த காரில் இருந்தவர்கள் தொப்பி, தாடி சகிதம் இருந்ததாகச் சொல்கிறார். அவரது புகாரில் ஒரு டேஞ்சரஸ் உள்நோக்கம் இருப்பது தெரிகிறது'’ என்கிறார்கள். இதற்கிடையே, காவல்துறை அந்த மோதல் குறித்த வீடியோ காட்சியை வெளியிட்டிருக்கிறது. அதில் ரவுண்டானா அருகில் நிதானிக்கும் காரை, பக்கவாட்டில் இருந்து ஆதீனத்தின் கார் உரசிச்செல்வது தெரிய வந்திருக்கிறது. அந்தப் பதட்டப் புகாரில் உண்மையில்லை என்பதை காவல்துறை தெளிவுபடுத்திவிட்டது.''”

Advertisment

"ஆதீன அரசியலை விடப்பா, சட்டப் போராட்டம் மூலம் மாநில உரிமைகளை நிலை நிறுத்திக்கொண்டிருக்கும் முதல்வருக்கு பாராட்டு விழா நடந்திருக்கிறதே?''”

"தமிழகத்திலுள்ள அரசு மற்றும் தனியார், சுயநிதி உள்ளிட்ட பல்கலைக்கழகங்களின் சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு, 3ஆம் தேதி, தி.க. தலைவர் கி.வீரமணி தலைமையில் பாராட்டு விழா எடுக்கப்பட்டது. அமைச்சர் கள், உயரதிகாரிகள், சட்டமன்ற, நாடாளு மன்ற உறுப்பினர்கள், துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் எனப் பல்வேறு தரப்பினர் இதில் கலந்துகொண்டனர். தொடக்கத்தில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அரங்க ஏற்பாடுகளை அமைச்சர் எ.வ.வேலு வும், அதற்கு வெளியே நடந்த வரவேற்பு ஏற்பாடுகளை அமைச்சர் சேகர்பாபுவும் கவனித்துக்கொண்டனர். பல்கலைக்கழக வேந்தர் என்ற பொறுப்பில் இருந்துகொண்டு, நிர்வாகக் குழறுபடிகளுக்கும் தேக்கத்திற்கும் காரணமாக இருந்த கவர்னரை எதிர்த்து, தி.மு.க. அரசு தொடர்ந்த வழக்கில், உச்சநீதி மன்றம் அவருக்கு செக் வைத்து, மாநில அரசின் அதிகாரத்தை நிலைநிறுத்தியது. இதன்மூலம் மாநில உரிமைப் போரில் வெற்றிபெற்றவர் என்பதால்தான் முதல்வருக்கு இப்படியொரு பாராட்டுவிழா எடுத்திருக் கிறார்கள்.''”

"அங்கே உரையாற்றிய முதல்வர், மத்திய அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறாரே?''

Advertisment

"உண்மைதாங்க தலைவரே, இந்த விழாவில் தலைமையுரையாற்றிய ஸ்டாலின், "என்னை மாநில சுயாட்சி நாயகர் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால், தி.மு.க.விற்கு வாக்களித்தால் சமூக நீதி ஆட்சிக்காக, மாநில சுயாட்சிக்காக போராடுவேன் என என்னை நம்பி வாக்களித்த மக்கள்தான் உண்மையான மாநில சுயாட்சி நாயகர்கள். உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பால், தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல; அனைத்து இந்திய மாநிலங்களுக்கும் வெற்றி கிடைத்திருக்கிறது. மக்களுக்காக மாநில அரசு தீட்டும் திட்டங்களை, மத்திய அரசின் ஏஜெண்டான ஆளுநர் தடுக்க முடியும் என்றால், மக்கள் போடும் ஓட்டுக்கு என்ன மரியாதை? ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுப்பதும், மாணவர்களுக்கு வசதிகள் செய்துதருவதும் மாநில அரசு. ஆனால் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மட்டும் ஆளுநருக்கு என்றால் அது எந்தவிதத்தில் சரி?'’என்றெல்லாம் குரல் கொடுத்தவர், ’"கல்வி நிலையங்களில் அறிவியல் கருத்துகள் மட்டுமே கற்பிக்கப்பட வேண்டும். அங்கே மூட நம்பிக்கைகளை பரப்பக்கூடாது. இதற்கு எதிராக ஏதாவது நடந்தால் தமிழக அரசின் ரியாக்ஷன் கடுமை யாக இருக்கும்'’ என்று மத்திய அரசுக்கும், ஒருசேர எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார் ஸ்டாலின்.''

rr

"நடிகர் விஜய்யையும் அந்த விழாவில் ஸ்டாலின் மறைமுகமாக அட்டாக் செய்திருக்கிறாரே?''

"அந்தப் பாராட்டு விழாவில் கவர்னரை யும், டெல்லியையும் நேரடியாகத் தாக்கிய ஸ்டாலின், த.வெ.க. தலைவரான நடிகர் விஜய்யை மறைமுகமாக அட்டாக் செய்தார். சமீபத்தில் கோவையில் த.வெ.க.வின் பூத் கமிட்டி கூட்டத்தில் பேசிய விஜய், ‘"நீங்கள் விர்ச்சுவல் வாரியர்ஸ்’ என்று வர்ணித்ததோடு, "இங்க வந்திருக்கும் ஒவ்வொருவரும் ஒரு போர்வீரனுக்கு சமம். களம் ரெடியா இருக்கு... போய் கலக்குங்க'’என்றும் உசுப்பிவிட்டார். அதாவது, தொழில்நுட்ப உலகில் விர்ச்சுவல் என்ற தொழில்நுட்பம் இளைஞர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது. அதைத்தான் நடிகர் விஜய் சுட்டிக்காட்டிப் பேசி னார். இதற்கு பதி லடி கொடுக்க நினைத்த ஸ்டாலின், ’"உங்கள் ரோல் மாட லை சமூக ஊடகங்களில் தேடாதீர்கள்; அது பொழுது போக்குக்கான தளம் மட்டுமே. கல்வி முக்கியம் இல்லை எனக் கூறுவோரை உங்கள் வாழ்க்கையில் இருந்து சைலண்டாக அகற்றிவிடுங்கள் என்றார்.''

"காங்கிரஸ் சொத்துப் பாதுகாப்புக் கமிட் டிக் கூட்டம் காரசாரமாக நடந்திருக்கே?''”

"ஆமாங்க தலைவரே, கடந்த 4ஆம் தேதி காலை 11 மணிக்கு, காங்கிரஸின் சொத்துப் பாதுகாப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் பங்கேற்க இந்தக் கமிட்டியின் அகில இந்திய தலைவரான விஜய்இந்தர்சிங் காலா வந்தார். எனினும் கூட்டத்தை உரிய நேரத்தில் தொடங்காமல், கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகையும், மாநில சொத்துப் பாதுகாப்புக் கமிட்டித் தலைவர் தங்கபாலுவும், இந்தர்சிங்காலாவுடன் ரகசிய ஆலோசனை நடத்தினர். இதில் கடுப்பான கமிட்டியின் சீனியர் உறுப்பினர்கள், அங்கிருந்து கோபமாய் வெளியேற... அவர்களை சமாதானப்படுத்தி அழைத்துவந்தனர். பின்னர் மதியம் 2 மணிக்குதான் கமிட்டி கூடியது. அதில் பேசிய விஜய்இந்தர்சிங் காலா, "தமிழகம் முழுதும் காங்கிரஸுக்கு இருக்கும் பெரும்பாலான சொத்துக்கள் ஆக்கிரமிப்பில் இருக்கின்றன. அவற்றை மீட்டாகவேண்டும்'’என்றார். அப்போது ஒருவர் எழுந்து, "அதையெல்லாம் நம்ம கட்சிக்காரங்கதான் ஆக்கிரமிச்சி வச்சு ருக்காங்க' என்று சொல்ல...’"யாராயிருந்தாலும் தயவு தாட்சண்யம் இல்லாமல் அதையெல்லாம் மீட்டாகணும்' என்று பரபரப்பை ஏற்படுத்தி னார் சிங்காலா. அன்று பாசிச பா.ஜ.க.வை எதிர்த்து காங்கிரஸ் நடத்திய பொதுக்கூட்டத்திற்கு எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை என்கிறார்கள்.''

"உள்துறை அமைச்சர் அமித்ஷாவே என் தோஸ்துதான்னு புதுக்கோட்டை நபர் ஒருவர் மோசடியில் ஈடுபட்டுவருவதாகவும் செய்தி வருதே?''”

"புதுக்கோட்டை மச்சுவாடிப் பகுதியைச் சேர்ந்தவர் நித்யானந்தா. இவர், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றியவராம். இவர் மத்திய, மாநில அமைச்சர்களின் பெயர் களைச் சொல்லி, பெருமளவில் மோசடிகளை செய்துவருவதாகப் புகார்கள் எழுந்துவருகின் றன. இவர், 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரியுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டாராம். அவர் மத்திய அரசுப் பணிக்குச் சென்றதும், அவரைச் சந்திக்க அடிக்கடி டெல்லி சென்றுவரத் தொடங்கினாராம். அந்த காலகட்டத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு பல உபகரணங்களை இவர் வாங்கிக்கொடுத்த தில் முறைகேடு என்று, திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத் துறையினர், வழக்கைப் பதிவு செய்து ரெய்டுகளையும் நடத்தியுள்ளனர். பின்னர் மத்திய அரசில் அவர் ஒரு வாரிய உறுப்பினராக்கப்பட, தன் காரில் கவர்ன்மென்ட் ஆஃப் இந்தியா என்ற ஸ்டிக் கரை ஒட்டிக்கொண்டு பவனி வந்துள்ளார். டெல்லியில் வேலை வாய்ப்பு உட்பட அனைத்து காரியத்தை யும் சாதித்துத் தரு கிறேன் என்று தொழி லதிபர்கள் உள்ளிட்ட பலரிடமும் பெரிய அளவில் வசூல் நடத்தி யிருக்கிறாராம். காரியம் ஆகவில்லை என்று பணம் கொடுத்த வர்கள் திருப்பிக் கேட்டால், அமித்ஷாவே எனக்கு தோஸ்துதான், உங்களை எல்லாம் கம்பி எண்ண வச்சிடுவேன் என்று மிரட்டி உருட்டு கிறாராம். இவர் மீது இனியாவது நடவடிக்கை பாயுமாங்கிற எதிர்பார்ப்பு அங்கே நிலவுது.''”

seeman

"பிரபல அமைச்சரின் பி.ஏ. பற்றியும், கட்டுமான நிறுவனம் ஒன்றினைப் பற்றியும் பரபரப்பான செய்திகள் அடிபடுகிறதே...''

"ஆமாங்க தலைவரே... தமிழ்நாடு ப.ப. துறையில் கடந்த 4 ஆண்டுகளில் லஞ்சஒழிப்புத் துறை யினர் நடத்திய சோத னையில் பதிவு செய் யப்பட்ட வழக்குகள் அனைத்தையும் தற் போது அமலாக்கத்துறை கையில் எடுத்து விசா ரணையை தொடங்கி யுள்ளது. ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத் துறையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் அந்தத் துறையின் அமைச்சரின் பி.ஏ. பெயர் இடம் பெற்றிருப்பதால் அந்த வழக்கை தூசி தட்டி அமலாக்கத்துறை விசா ரித்து வருகிறது. இதனால் பி.ஏ. பயன்படுத்தி வந்த விலையுயர்ந்த செல் போன்களை தரையில் அடித்து உடைத்துள்ளார். மேலும் அவர் பயன்படுத் திய செல்போன் எண் ணையும் மாற்றியுள்ளார். இதேபோல பாஷ்யம் கட்டுமான நிறுவனத் தினர், தங்களிடமுள்ள கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்குகளை உடைத்து விட்டார்கள். சமீபகால மாக பேப்பரில்தான் தகவல்களை சேகரித்து வைக்கிறார்கள். காரணம், அமலாக்கத்துறையின் ரெய்டு பயமே!''

"நானும் ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். அண்மையில் நடந்த அ.தி.மு.க. மா.செ.க்கள் கூட்டத்தில், பலருக்கும் பா.ஜ.க. கூட்டணி பற்றிய அதிருப்தி இருப்பதை உணர்ந்த எடப்பாடி, ’"தேர்தல் கூட்டணியைக் கொள்கைக் கூட்டணின்னு நினைச்சிக்காதீங்க. தி.மு.க. ஆட்சியை வீழ்த்த வேண்டுமானால், அ.தி.மு.க. தலைமையில் வலிமையான கூட்டணி உருவாகணும். அதற்காகத்தான் பா.ஜ.க.வை நாம் இணைத்துக்கொண்டி ருக்கிறோம். தி.மு.க.வை வீழ்த்தத் துடிக்கும் ஒத்த சிந்தனையுள்ள கட்சிகளை ஓரணியில் இணைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. அதனால் சீமானையும் விஜய்யையும் விமர்சிக்காதீர்கள்'’என்று அழுத்தம் கொடுத்துச் சொல்லியிருக்கிறார். இதன் மூலம் விஜய்க்கு எடப்பாடி ரூட்விடுவது தெரி யுது.''

_________________

இறுதிச் சுற்று!

"உயிருக்கு அச்சுறுத்தல்'' -சகாயம் ஐ.ஏ.எஸ்!

ssமுந்தைய ஆட்சி யில், கிரானைட் கனிம வளக் கொள்ளையையும் அதிலுள்ள ஊழலையும் கண்டறிவதற்காக அமைக் கப்பட்ட குழுவின் சட்ட ஆணையராக நியமிக்கப் பட்ட முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம், இதன் ஊழல்களை அம்பலப்படுத்தினார். இது தொடர்பான வழக்கு நடந்துவந்தது. அவருக்கு காவல்துறை பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், சமீபமாக இவ்வழக்கில் கோர்ட்டில் ஆஜராவதை தவிர்த்துவந்தார் சகாயம். அதேசமயம், "தமிழக அரசு வழங்கி வந்த பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப் பட்டதால், "என் உயிருக்கு அச்சுறுத்தல் இருக் கிறது. அதனால், மதுரை கோர்ட்டில் ஆஜராக வில்லை'' என கடிதம் மூலம் அரசு வழக்கறிஞருக்கு தெரிவித்திருந்தார். இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இவ்வழக்கு மே 5ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சாட்சியம் அளிக்க சகாயம் ஆஜராகவில்லை. இதனால், அதிருப்தியடைந்த நீதிமன்றம், "உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறும் முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்திற்கு ஏன் போலீஸ் பாதுகாப்பு வழங்கவில்லை? உரிய பாதுகாப்பை வழங்காவிட்டால், அவருக்கு மத்திய பாதுகாப்புப் படையின் பாதுகாப்பை வழங்க உத்தரவிட நேரிடும்'' என்று சொல்லியிருக்கிறது, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை.

-இளையர்

விசாரணை நடத்தவில்லை!

கடந்த இரண்டு இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளில், "அமலாக்கத்துறை விசாரணையில் நான் சிக்கியதாகவும், ஒப்பந்தங்கள் தொடர்பான நடவடிக்கைகளில் பணம் பெற்றதாகவும், இறுதியாக வந்த இதழில் அமலாக்கத் துறையின் குஜராத்தை சேர்ந்த அதிகாரிகள் நகராட்சி நிர்வாகத் துறையில் ஒப்பந்தம் எடுப்பதற்காக வந்ததாகவும், அந்த ஒப்பந்த விவகாரத்தில் கருப்பையா என்கிற நான் அவர்களிடம் சிக்கியதாகவும்' என்னுடைய பெயரும் இடம்பெற்றிருந்தது.

ஒருவேளை அமலாக்கத்துறை என்னிடம் விசாரணை நடத்தியிருந் தால், நிச்சயமாக அவர்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பில் என்னுடைய பெயரும் இடம்பெற்றிருக்கும். அவர்கள் என்னை கைது செய்திருப்பார்கள். ஆனால் இதுவரை என்னிடம் அமலாக்கத்துறை எந்த விசாரணையும் நடத்தவில்லை. கடந்த இரண்டு இதழ்களில் தங்களுடைய செய்தியாளர் எனக்கும், அமலாக்கத்துறைக்கும் இணைப்பை ஏற்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளார். எனக்கு எந்த சவுக்கார்பேட்டையை சேர்ந்த சேட்டையும் தெரியாது. நான் பொதுப்பணித்துறை, நகராட்சி நிர்வாகத் துறை உள்ளிட்டவற்றில் குரூப் 1 ஒப்பந்ததாரராக செயல்பட்டு வருகிறேன். ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம் பெறப்பட்டால் அதற்கு 18 சதவீதம் உரிய ஜி.எஸ்.டி. வரியை கட்டி ஒப்பந்தத்தை பெற்றுவருகிறேன்.

இப்படிக்கு

மாத்தூர் கருப்பையா

தி.மு.க. ஒன்றிய செயலாளர், மணிகண்டம் ஒன்றியம், திருச்சி