"ஹலோ தலைவரே, குடும்ப துக்கத்தால் முதல்வர் ஸ்டாலின் கொஞ்சம் உடைஞ்சி போயிட்டார்.''”

"ஆமாம்பா..''

"முதல்வர் ஸ்டாலினின் மைத்துனியும், துர்கா ஸ்டாலினின் சகோதரியுமான சாருமதி உடல்நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையின் சேர்க்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவர் திடீர்னு மரணம் அடைய, அது முதல்வர் குடும்பத்தையே பெரும் துயரத்தில் ஆழ்த்திவிட்டது. முதல்வரின் துணைவியாரால் தன் சகோதரி இழப்பைத் தாங்க முடியலை. முதல்வரால் அவரைத் தேற்ற முடியலை. இந்த சூழலில் திரைப்பட இயக்குநரும், நடிகரும், முதல்வர் ஸ்டாலினின் மிக நெருங்கிய கல்லூரித் தோழருமான டி.பி.கஜேந்திரனும் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். அது முதல்வரை மேலும் சோகத்தில் ஆழ்த்திவிட்டது. குடும்ப துக்கத்துக்கு நடுவிலும், தன் அன்பிற்குரிய கல்லூரித் தோழருக்கும், மறைந்த பிரபல பின்னணிப் பாடகி வாணி ஜெயராமின் உடலுக்கும் சென்று ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். இது அனைவரையும் நெகிழ வைப்பதாக இருந்தது.''”

Advertisment

ff

"முதல்வர் அலுவலகத்திலேயே பா.ஜ.க. குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், உதவி மக்கள் தொடர்புத்துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டி ருக்கிறாரே. அதை என்னன்னு சொல்றது?''”

Advertisment

"உண்மைதாங்க தலைவரே, ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் பினாமியாக இருந்தவர்களில் ஒருவர் நீலாங்கரை முனுசாமி. அவர் இப்போது தமிழக பா.ஜ.க.வில் மீனவர் அணி செயலாளராக இருந்து வருகிறார். இவரது மகன் பரத்குமார், வேலூர் மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவ லராக பணி புரிந்துவந்த நிலையில், அவரை சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல் வரின் அலுவலகத்திலேயே உதவி மக்கள் தொடர்பு அலுவலராக கடந்த 23ஆம் தேதி நியமித்திருக் கிறார்கள். செய்தித்துறையில் மாற்றங்கள் நிகழ்ந்த நிலையிலேயே, இது அரங்கேறிவிட்டதாம். ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டிய முதல்வர் அலுவலகத்திலேயே பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒருவரின் மகனை பணியில் நியமிக்கலாமா? என்கிற புகைச்சல், கோட்டைப் பக்கம் தெரியுது.''”

"இது முதல்வர் கவனத்துக்குப் போகலையா?''”

"கொஞ்சம் தாமதமாகத்தான் முதல்வர் கவனத்துக்கு இது போயிருக் கிறது. பரத்குமாரின் பின்னணிகளை அறிந்த முதல்வர் எரிச்சலாகி இருக்கிறார். இதையடுத்து, பரத்குமாரின் நியமன உத்தரவை நிறுத்தி வைக்க உத்தரவிட்டி ருக்கிறார். இந்த டிரான்ஸ்பர் உத்தரவு வருவதற்கு சற்று முன்னதாக, செய்தித் துறை அமைச்சர் சாமிநாதனுக்கும், துறையின் செயலாளர் செல்வராஜுக்கும் தெரியாமல் செய்திப் பிரிவில் உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் 6 பேருக்கு இட மாறுதல் கோப்புகளைக் கையெழுத்திட்டு, பதவியிலும் உட்கார வைத்த இன்னொரு அதிர்ச்சி நிகழ்வும் நடந்திருக்கு.''”

"ம்..''”

dd"இன்னொரு அதிர்ச்சித் தகவலையும் சொல்றேன். விருதுநகர் மாவட்டத்தில், ஏ.பி.ஆர்.ஓ.வாக இருந்தவர், தி.மு.க. இலக்கிய அணிச் செயலாளராக இருந்த அமுதனின் மகன் கதிரவன். அவரை திடீர்னு ராமநாதபுரத்துக்கு மாற்றிவிட்டு, விருதுநகர் ஏ.பி.ஆர்.ஓ.வாக இருந்த, செய்தித்துறை கூடுதல் இயக்குநர் சரவணனின் உறவினரான வினோத்தை நியமித்திருக்கிறார்கள். மாவட்ட அமைச்சர்களான தங்கம் தென்னரசு, கே.கே.எஸ். எஸ்.ஆர். ஆகிய இருவருக்கும் தெரியாமலேயே இப்படி பந்தாடப்பட்டிருக்கிறார். பல மாவட்டங் களிலும் இப்படித்தானாம். வினோத் தவிர மற்ற 5 ஏ.பி.ஆர்.ஓ.க்களும் அ.தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப் பட்டவர்களாம். இவர்களின் இடமாற்றப் பின் னணியில் பேரம் நடந்திருக்கிறது என்கிறார்கள் பலரும்.''”

"அடுத்த தலைமைச் செயலாளருக்கான பரிசீலனைப் பட்டியலில் சிவதாஸ் மீனா பெயரும் இடம்பிடிச்சிருக்கே?''””

"1986 பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரியும் தற்போது தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனருமான ஹன்ஸ்ராஜ் வர்மாதான் தலைமைச் செயலாளராக நியமிக்கப் பட வாய்ப்புன்னு சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது திடீரென சிவதாஸ் மீனாவின் பெயரும் பரிசீலனைப் பட்டியலில் நுழைந்திருக்கிறது. 1989ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பேட்சை சேர்ந்த சிவதாஸ் மீனா, ஜெ.வின் 4 செயலாளர்களில் ஒருவராக இருந்தவர். அவருக்குத் தீவிர அபிமானி. ஜெ.வின்’ மறைவுக்குப் பிறகு ஒன்றிய அரசுப் பணிக்குச் சென்ற அவர், ஸ்டாலின் தலைமையி லான தி.மு.க. அரசு பதவியேற்ற நிலையில், மீண்டும் மாநில பணிக்குத் திரும்பினார்..''

"இந்த சிவதாஸ் மீனா, ஒன்றிய அரசின் அபிமானின்னு சொல்லப்படுதே?''

"ஆமாங்க தலைவரே, பா.ஜ.க. ஆட்சி இல்லாத மாநிலங்களில் தங்களுக்கு விசுவாசமான அதிகாரிகளை உயர் பதவிகள்ல உட்காரவைப்பதில் ஒன்றிய அரசு முனைப்பு காட்டுது. கவர்னராக ஆர்.என்.ரவியை நியமித்தது போல, தலைமைச் செயலாளர் பதவிக்கு சிவதாஸ் மீனா என காய் நகர்த்தி, ஒன்றிய அரசு கேம் ஆடுகிறதாம். ஒன்றிய அரசின் மூத்த அமைச்சர் ஒருவர் மூலம் அவருக் கான காய் நகர்த்தல்கள் நடக்குதுன்னு கோட்டை வட்டாரம் சொல்லுது.''

"ஓ.பி.எஸ். அணியில் சலசலப்பு ஏற்பட்டிருக்கே?''

"உச்சநீதிமன்றத் தீர்ப்பு இப்படி அமையும்னு ஓ.பி.எஸ். எதிர்பார்க்கவில்லை. அதோடு இடைத் தேர்தல் வேட்பாளரை வாபஸ் பெறச்சொல்லி பா.ஜ.க.விடம் இருந்து நிர்பந்தமும் நெருக்கடியும் வரும் என்றும் அவர் எதிர்பார்க்கவில்லையாம். அதனால் பதட்டமான அவர், தங்கள் தரப்பில் யாரிடமும் ஆலோசிக்காமல் இடைத்தேர்தல் வேட்பாளைரை திடீரென்று வாபஸ் பெறுவதாக அறிவித்துவிட்டார். இதுபற்றி அவரது வீட்டில் நடந்த ஆலோசனையில் வைத்திலிங்கமும், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகரன் மூவரும் அதிருப்தியை வெளிப்படுத்தி, வெளியேறிட் டாங்களாம். பிறகு சமாதானப்படலம் மேற் கொள்ளப்பட்டது.''’

rr

"இந்நிலையில்... ஜெ.தீபாவின் குடும்ப விழாவில் ஓ.பி.எஸ்.ஸின் குடும்பத்திலிருந்து கலந்துக்கிட்டது பரபரப்பாகியிருக்கே?

"ஆமாங்க தலைவரே. ஜெ.தீபா-மாதவன் தம்பதியோட குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா, போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் நடந்திருக்கு. இவ்விழாவில் கலந்துக்க ஓ.பி.எஸ்.ஸுக்கு தீபா அழைப்பு கொடுத்திருந்தார். இப்போதுள்ள அரசியல் சூழலில், தான் கலந்துக்கிட்டா நல்லா யிருக்காதுன்னு தன்னோட மகன் ஜெயபிரதீப்பை அனுப்பி, தங்கநகையை பரிசளிச்சிருக்கார்.''

"கர்நாடக தேர்தல் களத்தில் வேலை செய்யும்படி அண்ணாமலையை பா.ஜ.க. அங்கே அனுப்பி வைத்திருக்கிறதே?''”

annamalai

"ஆமாங்க தலைவரே, கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடக்க இருக்கிறது. ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளத் துடிக்கும் பா.ஜ.க. தலைமை, அந்த மாநிலத்தின் தேர்தல் பொறுப்பாளராக ஒன்றிய அமைச்சரான தர்மேந்திர பிரதானையும், அவருக்குக் கீழே அண்ணாமலையையும் நியமித் திருக்கிறது. தமிழகத்தில் இருந்து விரைவில் அண்ணாமலையை நகர்த்துவதற்கான அறிகுறி யாகவே இது பா.ஜ.க.வினரால் பார்க்கப்படுகிறது. அதே நேரம், அரசியல் நுட்பம் தெரியாத முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான ’ஷார்ட் டெம்பர்’ அண்ணாமலையை இங்கே எதற்கு நியமிக்கிறீர்கள் என்று கர்நாடக பா.ஜ.க.வினர் எதிர்ப்புக்குரல் குரல் எழுப்ப, இவர் ஒப்புக்குச் சப்பாணிதான் என்று அவர்களை சமாதானப் படுத்தி, மாநில அமைச்சர் ஒருவரையும் அங்கே களமிறக்கி இருக்கிறது பா.ஜ.க. தமிழக அரசியலில் தன்னை பரபரப்பானவராகக் காட்டிக் கொண்டிருந்த அண்ணாமலையும், தன்னை கர்நாடகாவுக்கு அனுப்பியதில் குழம்பிப் போயிருக்கிறாராம்.''”

"அறப்போர் இயக்கம் அதானி குழுமத்தின் மீது ஒரு புகார்க் குண்டை வீசி இருக்கிறதே?''”

"அதாவது அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தமிழக மின்வாரியத்திற்கு, சிங்கப்பூரை தலைமை இடமாகக் கொண்ட அதானி குழுமத்திடம் இருந்து நிலக்கரி கொள்முதல் செய்யப்பட்டது. இதில் ரூபாய் 6,066 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் முறைகேடு நடந்திருப்பதாக ஆதாரங்களுடன் அறப்போர் இயக்கம் ஊழல் தடுப்புத்துறை தொடங்கி முதல்வர் வரை புகார் கொடுத்திருக் கிறது. இந்த விவகாரத்தில் எடப்பாடிக்கும், மின்துறை அமைச்சராக இருந்த தங்கமணி உள்ளிட்டவர்களுக்கும் முக்கிய பங்கு இருப்பதாகவும் அந்தப் புகாரில் பரபரப்பாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதை தி.மு.க. அரசு எப்படிக் கையாளப்போகிறது என்கிற கேள்வி அதிகாரிகள் தரப்பிலேயே எழுந்திருக்கிறது.''”

"தி.மு.க.வின் துணை அமைப்புகளான அணிகளுக்கு மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட இருக்காங்களே?''”

"தி.மு.க.வில் உள்ள இளைஞர் அணி, மாணவர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி... உள்ளிட்ட அனைத்து அணிகளுக்கும் மாவட்ட அளவிலான பொறுப்பாளர்களை நியமிக்க அந்தந்த அணிகளின் செயலாளர்கள் நேர்காணல் நடத்திக்கிட்டிருக் காங்க. தகவல் தொழில்நுட்ப அணிதான் ஜனவரி முதல் வாரத்திலேயே அறிவாலயத்தில் நேர் காணல் நடத்தியது. அதைத் தொடர்ந்து மற்ற அணிகளும் நடத்துது. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி அன்பகத்தில் நேர்காணலை நடத்தினார். கட்சி நடத்திய போராட்டங்கள், நிகழ்ச்சிகளில் பங்கேற்றுக்கொண்ட படங்கள், பேப்பர் செய்தி கட்டிங்குகளோடு வந்து பலரும் அசத்தியிருக்காங்க. மாணவர் அணி நேர்காணலில் திராவிட இயக்க வரலாறு பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டிருக்கு. தகவல் தொழில்நுட்ப அணியின் விண்ணப்ப படிவத்தைப் பார்த்த தலைமைக்கழக நிர்வாகிகள், ஐ.ஏ.எஸ். எக்ஸாம் மாதிரி இருக்கேன்னு சொல்லியிருக்காங்க. பல அணிகளின் நேர் காணலிலும் தி.மு.க.வினர் ஆர்வத்தோடு கலந்துக்கிட்டாங்க. யார் தேர்வு செய்யப்படுவாங்க என்பதில் ஆர்வம், பதற்றம், அதிருப்தி எல்லாமும் இருக்கு.''”

"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம், நென்மேலி ஊராட்சி மன்ற தலைவியாக இருக்கும் தி.மு.க.வைச் சேர்ந்த கலாவதி, அண்மையில் தி.மு.க.விலிருந்து விலகி, விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்து விட்டார். இந்த சம்பவம், மாவட்ட தி.மு.க.வில் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் மாவட்டத்திலுள்ள தி.மு.க.வினர் பலரையும் வி.சி.க.வும், பா.ஜ.க.வும் தங்கள் கட்சிக்கு இழுக்க ரகசிய பேச்சுவார்த்தை நடத்திவருகிறதாம். ஆளும் கட்சியான தி.மு.க.வில் இருந்து விலகி, மாற்றுக் கட்சியில் இணைகிறார்கள் என்றால், இது தலைமை சீரியசாக கவனிக்கவேண்டிய சங்கதி என்கிறார்கள் கட்சியின் சீனியர்கள்.''