பா.ஜ.க. தோற்றால் அமித்ஷா ஜெயிலுக்குப் போவார்! எடப்பாடியார் ஆவேசம்!

dd

மித்ஷாவின் விசிட்டின்போது அவரைச் சந்திக்க எடப்பாடியை பா.ஜ.க. அழைக்கவில்லை. அதற்காக எந்த முயற்சியும் பா.ஜ.க. தரப்பிலிருந்து எடுக்கப்படவில்லை. இந்தியா முழுவதும் 350 தொகுதிகளை பா.ஜ.க. குறிவைத்துள்ளது. அதில் தமிழ்நாட்டில் பத்து தொகுதிகள் வருகிறது.

தென் சென்னை, வேலூர், சிவகங்கை, கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி, கோவை, ராமநாத புரம், நெல்லை, திருச்சி ஆகியவை இந்த பத்து தொகுதிகள். இதைக் குறி வைத்துதான் இந்தியா முழுவதும் சு

மித்ஷாவின் விசிட்டின்போது அவரைச் சந்திக்க எடப்பாடியை பா.ஜ.க. அழைக்கவில்லை. அதற்காக எந்த முயற்சியும் பா.ஜ.க. தரப்பிலிருந்து எடுக்கப்படவில்லை. இந்தியா முழுவதும் 350 தொகுதிகளை பா.ஜ.க. குறிவைத்துள்ளது. அதில் தமிழ்நாட்டில் பத்து தொகுதிகள் வருகிறது.

தென் சென்னை, வேலூர், சிவகங்கை, கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி, கோவை, ராமநாத புரம், நெல்லை, திருச்சி ஆகியவை இந்த பத்து தொகுதிகள். இதைக் குறி வைத்துதான் இந்தியா முழுவதும் சுற்றிவரும் அமித்ஷா, அந்த 350 தொகுதிகளில் வரும் தமி ழகத் தொகுதிகளை குறி வைத்து சென்னைக்கும், வேலூருக்கும் சென்றுள் ளார்.

வேலூர் பொதுக் கூட்டத்தில் பேசும்போது, “தமிழகத்தில் கிராமங்களுக்கு எல்லாம் பா.ஜ.க.வை அண்ணாமலை கொண்டு சென்றுள்ளார் என புகழ்ந்ததோடு, 25 தொகுதிகளில் பா.ஜ.க. போட்டியிட்டு வெல் லும்” என பொத்தாம்பொதுவாக அறிவித்தார். இது எடப்பாடி தரப்பை பெரிய அளவிற்கு டென்சன் ஆக்கியது.

eps

“அமித்ஷாவின் வேலூர் பொதுக்கூட்டத்தில் அழைத்து வரப்பட்ட பொதுமக்கள் பாதியிலேயே வெளியேறினர். அமித்ஷா வரும்போதே ஏர் போர்ட்டில் மின்தடை ஏற் பட்டது. கிராமங்களில் பா.ஜ.க. வளர்ந்துள்ளது என அமித்ஷா கூறினாலும் ஆளே இல்லாத சேர்களைப் பார்த்து அமித்ஷா பா.ஜ.க. வளர்கிறது என்று கூறுகிறார்” என அ.தி.மு.க. தரப் பில் நக்கலடிக்கப்பட்டது.

வேலூரில் அமித்ஷா... "அ.தி.மு.க., தி.மு.க. இரண்டு ஆட்சிகளிலும் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டுவரவில்லை' என தி.மு.க.வைக் குறை சொல்லிப் பேசியதை மொழி பெயர்ப்பாளர் தவறாக மொழிபெயர்த்தார். இப்படி அமித்ஷா விசிட் முழுக்க அ.தி.மு.க.வுக்கு எதிராக வே அமைந்தது. தென் சென்னையில் தமிழிசை, வேலூரில் ஏ.சி.சண் முகம், சிவகங்கை எச்.ராஜா அல் லது டி.டி.வி.தினகரன், நாகர்கோவில் பொன்னார், தென்காசி ஸ்ரீதர் வேம்பு, நீலகிரி முருகன், கோவை அல்லது திருப்பூர் அண்ணா மலை, ராமநாதபுரம் கருப்பு முருகானந்தம் என தொகுதி வாரியாக வேட்பாளர்களைக் கூட பா.ஜ.க. முடிவு செய்துவிட் டது என வந்த தகவல் எடப் பாடியை டென்ஷன் ஆக்கியது.

"எத்தனை தொகுதிகள், அதில் எந்த தொகுதி என்பதையெல்லாம் முடிவு செய்ய இவர்கள் யார்? 2024-ல் பா.ஜ.க. ஜெயித்தால் தானே தமிழகத்திலிருந்து மத்திய மந்திரியாவார்கள். தோற்றுவிட்டால் அமித்ஷா ஜெயிலுக்குதானே போவார்'’என கட்சிக்காரர் களிடம் கிண்டலடித்த எடப்பாடி, ஜெயக்குமாரை கூப்பிட்டு, "அமித்ஷாவின் பேச்சுக்கு ‘சீரியஸாக மறுப்புத் தெரிவிக்கச் சொன்னார்'’என்கிறது அ.தி.மு.க. வட்டாரங்கள்.

-ஆகாஷ்

nkn140623
இதையும் படியுங்கள்
Subscribe