கொரோனா ஊரடங்கால் தளர்வுகள் நீக்கப் படாத 11 மாவட் டங்களில் 45 நாட்களாக டாஸ்மாக் மூடியுள்ள நிலை யில், இந்து முன் னணியின் மாவட் டச் செயலாளராக உள்ள முருகேசன் என்பவர், ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி யிலுள்ள தனது தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிவந்துள்ளார். பொதுவாக இப்பகுதியில், வெளி மாவட்டங்களிலிருந்தும் கர்நாடகா மாநிலத்திலிருந்தும் மது பானங்களைக் கொண்டு வந்து அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள். இதன் ஒருபகுதியாக, அரசியல் பிரமுகர்களின் பக்கபலத்துடன் காட்டுப் பகுதியில் உள்ள தோட் டங்களில் கள்ளச்சாராய ஊறல் போட்டு, காய்ச்சி விற்பனை செய்வதும் வழக்கமாக இருந்து வருகிறது.

hh

இந்து முன்னணி முருகேசனும், அவரது அமைப்பைச் சேர்ந்த ரகு, தாமரைச்செல்வன் ஆகியோரும், கவுந்தப் பாடி அருகிலுள்ள மின்ன வேட்டுவபாளையம் பகுதியிலுள்ள நேரு தோட்டத்தில் ஆட்டுப் பண்ணை நடத்திவரு கிறார்கள் இந்த தோட்டத்தில் தான் தற்போது தொடர்ச்சியாக சாராயம் காய்ச்சி அமோகமாக விற்பனை செய்து வந்துள்ளார். முருகேசன் தனது நெற்றியில் பட்டை போட்டு பக்திமானாக வெளியே காட்டிக்கொண்டு, தனது தோட்டத்தி லேயே கமுக்கமாக பட்டைச் சாராயம் விற்பனை செய்துவந்துள்ளார். சுமூகமாகச் சென்று கொண்டிருந்த சாராய விற்பனையில், குழுவாகச் செயல்படும் இந்து முன்னணி பிரமுகர்களுக்குள் ஏற்பட்ட பிசினஸ் கொடுக்கல், வாங்கல், வரவு செலவுத் தகராறால், விவகாரம் போலீசுக்கு தெரியவர... 26-ம் தேதி காலையில் ரெய்டு சென்ற கோபிசெட்டிபாளையம் மதுவிலக்கு போலீசார், அந்த தோட்டத்திலிருந்த சாராய ஊறல்களை அழித்தனர். மேலும், விற்பனைக்காக இருந்த 60 லிட்டர் சாராயம் மற்றும் அங்கிருந்த இந்து முன்னணி முருகேசன், ரகு, தாமரைச்செல்வன் ஆகிய மூவரையும் கைதுசெய்து, போலீஸ் ஜீப்பில் ஏற்றி கோபிசெட்டிபாளையம் காவல்நிலையம் கொண்டுவந்தனர்.

இந்த செய்தியறிந்து இந்து முன்னணி மாநில நிர்வாகி கள் சிலரும், பா.ஜ.க.வைச் சேர்ந்த முக்கிய புள்ளிகளும், ஈரோடு மாவட்ட காவல்துறை அதிகாரிகளோடு தொடர்புகொண்டு, அவர்களைக் கைது செய்யக்கூடாதென்றும், இச்செய்தி வெளியே போகக்கூடாதென்றும் மிரட்டியுள்ளனர். அதனால் ஒரு கட்டத்தில் போலீஸ் பின்வாங்க இருந்த நிலையில், இந்த விவகாரம் அப்பகுதி ம.தி.மு.க.வினருக்கு தெரியவந்தது. உடனே, அவர்கள் போலீஸ் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வில்லையென்றால் போராட்டத்தில் இறங்குவோம் என எச்சரிக்க... வேறு வழியில்லாமல் போலீ ஸார், இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் முருகேசன் உட்பட மூவரையும் கைது செய்தனர்.

பக்திப்பழம் போல வேஷமிட் டுக்கொண்டு, சாராயம் காய்ச்சிய சம்பவம்தான் தற்போது அப்பகுதியின் ஹாட் டாபிக்.

Advertisment