ஜனநாயக நாட்டின் மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம். அந்த நீதிமன்றத்தின் வாயிலாகத்தான் கொள்ளைபோன மணல் விவகாரம் வெளியேறியிருக்கிறது. மாஃபியாக்களுக்குத் துணைபோன டாப் டூ பாட்டம் அதிகாரிகள் பற்றி அறிந்த தென்மாவட்டங்கள் அதிர்வில் உள்ளன.
கடந்த 2019 டிசம்பரில் கேரளாவைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவர் நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியருகிலுள்ள பொட்டல் கிராமத்தில், தான் வாங்கிப் போட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நிலத்தில் எம்.சாண்ட் குவாரி அமைப்பதற்காகத் தன்னுடைய உறவினர்களான கேரளாவின் ரெவரண்ட் ஃபாதர் ஜோஸ், ரெவரண்ட் ஃபாதர் கிரிக்கோரியாஸ் ஆகியோரை பங்காளியாக்கிக்கொண்டு அம்பை வருவாய்த் துறை தாசில்தாரிடம் அனுமதிகேட்டு ஆவணங்களோடு மனுக் கொடுத்திருக்கிறார். சரள் மணலுடன் பாறைக்கற்கள் மற்றும் கூழாங்கற்களைச் சேர்த்து கிரஷ்ஷரில் அரைத்து மணல் பருவத்திற்கு கொண்டு வருவதுதான் எம்.சாண்ட் எனப்படும் செயற்கை மணல். அதற்கான ஆவணங்கள் நெல்லை மாவட்டத்தின் கனிமம் மற்றும் சுரங்கத்துறையின் உதவி இயக்குனரான சபீயாவின் பார்வைக்கு அனுப்பப்பட்டு, கீழ்நிலை முதல் ஏ.டி.மைன்ஸ் வரை வெயிட்டாகப் போனதால் காரியம் தடங்கலின்றி முடிந்திருக்கிறது.
பூமி எம்.சாண்ட் என்ற குவாரியை அமைத்த ஜார்ஜுக்கு ஆரம்ப நாளில் அதில் அத்தனை சுகமான லாப லோபங்கள் இல்லாமல் போனதால் ஆரம்பித்த வேகத்தில் குவாரியை விற்க முற்பட்டிருக்கிறார். அப்போது குறுக்கிட்ட தென்மாவட்ட அரசியல் புள்ளியின் உறவினர் ஒருவர், ""விற்க வேண்டாம். அருகில் தாமிரபரணியை ஒட்டிய வண்டல் ஓடை ஆறு மற்றும் எலுமிச்சையாறு ஓடுகிறது. அங்கே மணல் திட்டுகள் அதிகம். அதிகாரிகளை வெயிட்டாக அணுகுவதால், பெரியளவில் சிக்கல் ஏதுமின்றி எம்.சாண்ட் பெயரில், மணல் கடத்தல் பிசினஸில் கொழிக்கலாம்'' என்று கேரள புள்ளிக்கு சாம்பிராணி போட்டிருக்கிறார்.
வண்டல் ஓடை ஆற்று மணல், அன்றாடம் 500 லோடுகள் கடத்தப்பட, அதற்கு லாரி நடைச் சீட்டாக எம்.சாண்ட் பெர்மிட் டிரிப்ஷீட் பாஸே அதிகாரிகளின் கண்ணசைவோடு அனுமதிக்கப்
ஜனநாயக நாட்டின் மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம். அந்த நீதிமன்றத்தின் வாயிலாகத்தான் கொள்ளைபோன மணல் விவகாரம் வெளியேறியிருக்கிறது. மாஃபியாக்களுக்குத் துணைபோன டாப் டூ பாட்டம் அதிகாரிகள் பற்றி அறிந்த தென்மாவட்டங்கள் அதிர்வில் உள்ளன.
கடந்த 2019 டிசம்பரில் கேரளாவைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவர் நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியருகிலுள்ள பொட்டல் கிராமத்தில், தான் வாங்கிப் போட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நிலத்தில் எம்.சாண்ட் குவாரி அமைப்பதற்காகத் தன்னுடைய உறவினர்களான கேரளாவின் ரெவரண்ட் ஃபாதர் ஜோஸ், ரெவரண்ட் ஃபாதர் கிரிக்கோரியாஸ் ஆகியோரை பங்காளியாக்கிக்கொண்டு அம்பை வருவாய்த் துறை தாசில்தாரிடம் அனுமதிகேட்டு ஆவணங்களோடு மனுக் கொடுத்திருக்கிறார். சரள் மணலுடன் பாறைக்கற்கள் மற்றும் கூழாங்கற்களைச் சேர்த்து கிரஷ்ஷரில் அரைத்து மணல் பருவத்திற்கு கொண்டு வருவதுதான் எம்.சாண்ட் எனப்படும் செயற்கை மணல். அதற்கான ஆவணங்கள் நெல்லை மாவட்டத்தின் கனிமம் மற்றும் சுரங்கத்துறையின் உதவி இயக்குனரான சபீயாவின் பார்வைக்கு அனுப்பப்பட்டு, கீழ்நிலை முதல் ஏ.டி.மைன்ஸ் வரை வெயிட்டாகப் போனதால் காரியம் தடங்கலின்றி முடிந்திருக்கிறது.
பூமி எம்.சாண்ட் என்ற குவாரியை அமைத்த ஜார்ஜுக்கு ஆரம்ப நாளில் அதில் அத்தனை சுகமான லாப லோபங்கள் இல்லாமல் போனதால் ஆரம்பித்த வேகத்தில் குவாரியை விற்க முற்பட்டிருக்கிறார். அப்போது குறுக்கிட்ட தென்மாவட்ட அரசியல் புள்ளியின் உறவினர் ஒருவர், ""விற்க வேண்டாம். அருகில் தாமிரபரணியை ஒட்டிய வண்டல் ஓடை ஆறு மற்றும் எலுமிச்சையாறு ஓடுகிறது. அங்கே மணல் திட்டுகள் அதிகம். அதிகாரிகளை வெயிட்டாக அணுகுவதால், பெரியளவில் சிக்கல் ஏதுமின்றி எம்.சாண்ட் பெயரில், மணல் கடத்தல் பிசினஸில் கொழிக்கலாம்'' என்று கேரள புள்ளிக்கு சாம்பிராணி போட்டிருக்கிறார்.
வண்டல் ஓடை ஆற்று மணல், அன்றாடம் 500 லோடுகள் கடத்தப்பட, அதற்கு லாரி நடைச் சீட்டாக எம்.சாண்ட் பெர்மிட் டிரிப்ஷீட் பாஸே அதிகாரிகளின் கண்ணசைவோடு அனுமதிக்கப் பட்டுள்ளன.
ஒரு யூனிட்டின் விலை 7500 ரூபாய் என புரோக்கர்களின் மூலம் மணல் கை மாறும். பின்னர், மணல் கடத்தல் புள்ளிகளுக்கு பத்தாயிரம் -பனிரெண்டாயிரம் ரேட்டில் கைமாற்றப்பட்டு பின்னர் அது கட்டுமானப் பணிக்கான மணலுக்கும் ஆலாய்ப் பறக்கும் சாமான்யனுக்கு யூனிட் ஒன்று பதினெட்டு அல்லது இருபதாயிரம் ரேட்டில் விற்கப்பட்டிருக்கிறது. எம்.சாண்ட் குவாரியை ஆய்வு செய்ய வேண்டிய பொறுப்பிலிருப்பவர் ஏ.டி.மைன்சின் அதிகாரியான சபீயா. ஒட்டு மொத்தக் கண்காணிப்பும் மாவட்டக் கலெக்டரின் அதிகாரத்தின் கீழ் வருவது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.
மணல் கடத்தலையடுத்து, மைன்சிலிருக்கும் பாறைகளின் மீது கண் பதிந்திருக்கிறது. ஆற்றோரப் படுகைப்பகுதி என்பதால் மேலாட்டமாகத்தான் பாறை. அதனைத் தோண்டினால் அடியில் மணல் என்பதை யறிந்தவர்கள், அதிகாரிகளின் துணையோடு அதனைக் குறிவைத்து குவாரியில் பண்ணைக் குட்டை அமைப்பதற்கான அனுமதியை வேளாண் பிரிவு பொறியியல் துறையின் அதிகாரிகளின் தயவில் மின்னல் வேகத்தில் வாங்கிவிட்டனர். விதிமீறலான இந்த அனுமதிக்கு, விவசாயிகளுக்கான மானியத் தொகையும் அளிக்கப்பட்டது தான் புருவங் களை உயர வைக்கிற விஷயம்.
பண்ணைக்குட்டை அமைப்பு என்ற பெயரில் குவாரியின் உள்ளே 8 வகையான ராட்சத சைசில் பள்ளம் தோண்டியுள்ளனர். அத்தனையும் தங்கம் போல அள்ளித்தரும் மணற் சுரங்கம். அதிகாரிகள் ஆய்வுக்கு வரும் பட்சத்தில் அவர்களின் பார்வைக்காக பண்ணைக்குட்டை அமைப்பில் தண்ணீர் இருப்பதாகக் காட்டிக் கொள்ள அருகிலுள்ள தாமிரபரணியாற்றின் மூன்று பகுதிகளின் சக்தி கொண்ட இன்ஜின் பம்ப்பின் மூலமாகத் தண்ணீரை உறிஞ்சியெடுத்திருக் கிறார்கள்.
வகை தொகையில்லாமல் எம்.சாண்ட் குவாரியிலிருந்து அதிகாரிகளின் சப்போர்ட்டில் மணல், பல நூறு லோடுகள் கடத்தப்பட்டதைக் கண்டித்து, தண்ணீர் பற்றாக் குறையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், அதனைத் தடுப்பதற்காக எத்தனையோ போராட்டங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியும் மணல் கொள்ளைக்கு நடவடிக்கையில்லாமல் போயிருக்கிறது.
"இதற்கு முழுக்க முழுக்க அதிகாரிகளே துணையாகவும் பாதுகாப்புக் கவசமாகவு மிருப்பதால் பிறகெப்படி நடவடிக்கையிருக்கும்' என எதிர்கேள்வியைப் போடுகின்றனர் பொட்டல்வாசிகள்.
மணல் கொள்ளை இப்படிக் கேட்பாரற்று நடப்பதைத் தடுக்கும் பொருட்டு அந்தப் பகுதியின் புண்ணியவான் ஒருவர் ஆவண ஆதாரங்களோடு மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் கதவுகளைத் தட்டியிருக்கிறார். பெரிய நெட் ஒர்க்கை ஏற்படுத்திக்கொண்டு தொடர்புடைய பல அதிகாரிகளைச் சரிக்கட்டியிருக்கிறார்கள். அடித்தட்டு முதல் மேல்தட்டு வரையிலான அரசுப் பணியாளர்கள், அதிகாரிகளுக்கு அன்றாட அன்பளிப்பு அவர்களின் பதவித் தகுதிக்கேற்பப் போயிருக்கிறது. கடத்தப்படும் குவாரியின் மணல் லோடுகள் தடையின்றிச் செல்லவும், போலீஸ் வசம் பிடிபட்டால், அவர்களைச் சரிகட்ட தனியாக பணிவு ஓய்வு இன்ஸ்பெக்டர் ஒருவரும் நெட்ஒர்க்கில் அடக்கம். ஏ.டி.மைன்ஸ் சம்பந்தப்பட்ட கவனிப்புகளை நேரடியாக அவரது கணவர் பார்த்துக்கொள்கிறார். அவருக்கும் தனியான டிப்ஸ் வேறு.
உயர்நீதிமன்றப் பார்வைக்கு பொட்டல் மணல் கடத்தல் விவகாரம் வந்த உடனேயே, இது தொடர்பாக எப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தொடர்புடைய மாவட்ட நிர்வாகத் தலைமையைக் கேள்வி கேட்ட உயர்நீதிமன்றம், அறிக்கை தாக்கல் செய்யும்படி கண்டிப்புக் காட்டியிருக்கிறது. அதன்பிறகே அதிகாரிகளின் உலகம் பரபரப்பாகியிருக்கிறது. பூமி எம்.சாண்ட் குவாரியை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சேரன்மகாதேவி சப் கலெக்டரான பிரதிக் தயாள் அதனைப் பார்ட் பார்ட்டாக ஆய்வு செய்து எம்.சாண்ட்டிற்குப் பதிலாகக் கடத்தப்பட்ட மணல் லோடுகளுக்காக 9.57 கோடியளவு குவாரி அதிபர் ஜார்ஜுக்கு அபராதம் விதித்திருக்கிறார். வி.ஏ.ஓ.வான மோகனை சஸ்பெண்ட் செய்து அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்திருக்கிறார்.
அறிக்கையைப் பார்த்து அதிர்ந்த நீதிமன்றம் "9.57 கோடி அபராதம் விதிக்கிற அளவுக்கு முறைகேடு என்றால் எவ்வளவு மணல் லோடுகள் கடத்தப்பட்டிருக்கும்? ஒரே ஒரு வி.ஏ.ஓ.வை மட்டும்தான் சஸ்பெண்ட் செய்திருக்கிறீர்களே. துணைபோன அதிகாரிகள், மணல் கடத்தல்காரர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை' எனக் கடுமை காட்டி, விரிவான நடவடிக்கையை எடுக்கச் சொல்லி நவம்பர் முதல் வாரத்திற்கு வழக்கை ஒத்திவைத்திருக்கிறது.
இந்நிலையில், முக்கிய அதிகாரியான கனிமம் மற்றும் சுங்கத்துறையின் ஏ.டி.யான சபீயாவை நெல்லையிலிருந்து தூத்துக்குடிக்கு மாற்றி, கண்துடைப்பைக் காட்டியிருக்கிறார்கள் அரசுத் தரப்பினர். ஏனெனில் நெல்லையிலிருந்த அதிகாரி சபீயா தூத்துக்குடிக்கும் இன்சார்ஜாக இருந்தவர். மணல் கடத்தலின் குவாரி அதிபர்களான விலாங்குகளை விட்டுவிட்டு, அயிரைமீன்களான ஜான்பீட்டர், சங்கரநாராயணன், பால்ராஜ், ஆத்தியப்பன் என நான்கு பேரை கைது செய்திருக்கிறது போலீஸ். இவர்கள் குவாரியின் மணல் புரோக்கர்கள் மட்டுமே.
அடுத்த நெருக்கடிக்குப் பின்பு ஜோயல், வினோத் இருவர் கைது செய்யப்பட்ட பிறகு, குவாரியின் அலுவலகத்தை போலீஸ் ரெய்ட் அடித்ததில், அங்கு முக்கியமான டைரி ஒன்று சிக்கியிருக்கிறது. அந்த டைரியில் அன்றாடம் மணல் கடத்தலுக்கான மொய் கீழிருந்து மேலேவரை எந்தெந்த அதிகாரிகள் மற்றும் யார், யாருக்கெல்லாம் எவ்வளவு கொடுக்கப்பட்டது என்ற மாதக்கணக்கிலான அப்டுடேட் விவரங்கள் அடங்கியுள்ளனவாம். இதன் ரகசியங்கள் வெளியேறினால் தென்மாவட்ட அதிகார வர்க்கத்தில் பூகம்பமே கிளம்புமாம்.
தொடர்ந்து பிடிபட்ட வினோத் என்பவரிடமிருந்து பெர்மிட்களில் ஒட்டப்படுகிற ஒரிஜினல் அரசு முத்திரையான 100 மோனோகிராம் அடங்கிய புக்லெட் ஒன்றும் கைப்பற்றப்பட்டிருக்கிறது. சுரங்கத்துறை அதிகாரி ஏ.டி. வசம் பாதுகாப்பாக வைக்க வேண்டிய இந்த புக்லெட், கடத்தல்காரர் வசம் வந்ததற்கு உயரதிகாரியின் துணையிருக்கிறது என்றும் சொல்லப்படுவதோடு இவை கோர்ட்டின் பார்வைக்கும் கொண்டு போகப்பட வேண்டும் என்கிறார்கள்.
இந்தச் சூழலில் கைதுசெய்யப்பட்ட ஜோயல், வினோத், சுப்பையா மூவரையும் போலீசார் ரிமாண்ட் செய்ய நீதி மன்றம் கொண்டு சென்றபோது தனக்கு நெஞ்சு வலிப்பதாகச் சொல்லி சீன் போட்ட ஜோயல் கீழே விழுந்திருக்கிறார். உடனே அவரைப் பாளை. அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டுபோயிருக்கிறார்கள். அதுசமயம் மருத்துவமனை நிர்வாகத்தைத் தொடர்புகொண்ட ஒரு அதிகாரியின் தலையீட்டால், ஏ.சி. வார்டில் வீட்டு சாப்பாட்டுடன் படுத்திருக்கிறார் ஜோயல். இந்தத் தகவலும் கோர்ட்வரை போயுள்ளதாம்.
இதுகுறித்து நாம் சேரன்மகாதேவி சப்கலெக்டரான பிரதிக்தயாளை தொடர்பு கொண்டதில், அவர் தனது உதவியாளரைப் பேசச் சொன்னார். நம் லைனில் வந்த உதவியாளரும், "குவாரியில் முறைகேடு நடந்திருக்கிறது. ஒவ்வொரு வீதி மீறலுக்கும் கனிமவளச் சட்டப்படியான அபராதமாக மொத்தம் 9.57 கோடி அபராதம் விதிக்கப் பட்டது' என்றார்.
தொடர்ந்து நாம் கனிமம் மற்றும் சுரங்கத் துறையின் உதவி இயக்குனர் சபீயாவைப் பல தடவை அவரது செல் லைனில் சென்றும் நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை... பதிலில்லை.
மணல் கடத்தல் தொடர்பாக நீதிமன்றம் சென்றவர்களில் ஒருவரான பொட்டலைச் சேர்ந்த சுகுமார் சொல்லுவது... ""எம்.சாண்ட் என்ற பெயரால் பல லட்சம் டன்களுக்கு மேலான மணலைக் கடத்தி யுள்ளனர். இதனால் எங்களின் விவசாயம் பாதிக்கப்பட்டதால் போராட்டம் நடத்திய நாங்கள், மாவட்டக் கலெக்டருக்குக் கடந்த பிப். 17-ம் தேதி முதல் தொடர் புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. மணலைக் காக்க வேண்டிய ஏ.டி. மைன்ஸ் உள்ளிட்ட பல அதிகாரிகள் துணை போயுள்ளனர். குவாரிக் காரர்களால் ஆதாயம் அடைந்துள்ளனர். குவாரி அதிபர்களான ஆறு பேர்கள் மீது இன்னமும் கை வைக்கவே இல்லை. புரோக்கர்களைக் கைது செய்து கணக்கை முடிக்கப் பார்க்கிறார்கள். நெஞ்சு வலி என நடித்த ஜோயலுக்கு மருத்துவமனையில் ஏ.சி. ரூம் கொடுக்கச் சொன்ன அதிகாரி யார். சிக்கிய பெர்மிட்டிற்கான அரசு முத்திரை மோனோ கிராம், அன்றாடம் மாமூல் கணக்கு குறிக்கப்பட்ட டைரி இவைகள் பற்றி வரும் விசாரணையின்போது நாங்கள் நீதிமன்றத்தில் முறையிடுவோம்'' என்கிறார் சூடாக.
தோண்டத் தோண்ட மணல் பூதம் கிளம்புவதால் அடிவயிறு கலக்கத்திலிருக்கிறது அதிகாரிகளின் உலகம்.
-பரமசிவன்
படங்கள்: ப.இராம்குமார்