புதுச்சேரியில் பீகார் மாடலா? மகாராஷ்ட்ரா மாடலா?-அதிருப்தியில் ரங்கசாமி!

dd

புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டசபையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசின் நிதிக் குறைப்பு, பட்ஜெட் அனுமதிக்கு காலதாமதம் உள்ளிட்ட காரணங்களால் மார்ச்சில் இடைக்கால பட்ஜெட்டும், ஆகஸ்ட் மாதம் முழுமையான பட்ஜெட்டும் தாக்கல் செய்யும் நிலை உள்ளது.

dd

ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் பட்ஜெட் கூட்டத் தொடரில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்துவிடலாம் என பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ள என்.ஆர். காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான ரங்கசாமி கடும் முயற்சி மேற்கொண்டார். இதற்காக துணைநிலை ஆளுநர் தலைமையில் கூட்டப்பட்ட திட்டக்குழுக் கூட்டத்தில், இவ்வாண்டு பட்ஜெட் மத்திய அரசு நிதி உதவி, மாநில அரசின் வருவாய் மற்றும் கடன்பெறுதல் ஆகியவற்றை உள்ளடக்கி சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் என இறுதி செய்யப்பட்டது.

பிப்ரவரி மாதத்தில் போடப்பட்ட மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரிக்கு மத்திய அரசின் நிதி உதவியாக 1724 கோடி

புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டசபையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசின் நிதிக் குறைப்பு, பட்ஜெட் அனுமதிக்கு காலதாமதம் உள்ளிட்ட காரணங்களால் மார்ச்சில் இடைக்கால பட்ஜெட்டும், ஆகஸ்ட் மாதம் முழுமையான பட்ஜெட்டும் தாக்கல் செய்யும் நிலை உள்ளது.

dd

ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் பட்ஜெட் கூட்டத் தொடரில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்துவிடலாம் என பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ள என்.ஆர். காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான ரங்கசாமி கடும் முயற்சி மேற்கொண்டார். இதற்காக துணைநிலை ஆளுநர் தலைமையில் கூட்டப்பட்ட திட்டக்குழுக் கூட்டத்தில், இவ்வாண்டு பட்ஜெட் மத்திய அரசு நிதி உதவி, மாநில அரசின் வருவாய் மற்றும் கடன்பெறுதல் ஆகியவற்றை உள்ளடக்கி சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் என இறுதி செய்யப்பட்டது.

பிப்ரவரி மாதத்தில் போடப்பட்ட மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரிக்கு மத்திய அரசின் நிதி உதவியாக 1724 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டைவிட ரூ 150 கோடி குறைவு. இந்த நிலையில், புதுச்சேரி அரசு கோரிய கூடுதல் தொகையான ரூபாய் 2000 கோடியுடன் 100% பட்ஜெட்டிற்கு அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கிடைக்கவில்லை.

இதனால், பதவியேற்ற 15 மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக முதலமைச்சர் ரங்கசாமி கடந்த 09-ஆம் தேதி டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரைச் சந்தித்தார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்து முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான நிதியை ஒதுக்கும்படி மனு அளித்தார்.

இந்நிலையில், 2022-23ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டம் கடந்த 10-ஆம் தேதி கூடியது. இந்த கூட்டத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமையில் தி.மு.க. உறுப்பினர்கள் நாஜிம், அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார், நாக.தியாகராஜன், காங்கிரஸ் உறுப்பினர்கள் வைத்தியநாதன், ரமேஷ்பரம்பந்த் ஆகியோர் கருப்புச் சட்டை அணிந்து வந்தனர். மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேற்றப்படாததைக் கண்டித்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர்.

ஆளுநர் உரை முடிந்தவுடன் எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் பேச அழைப்பார் என எல்லோரும் எதிர் பார்த்திருந்த நேரத்தில் சபையை ஒத்திவைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய அரசு பட்ஜெட் கோப்புகளுக்கு இன்னும் அனுமதி அளிக்காத தால்தான் காலவரையின்றி சபையை ஒத்தி வைத்துள்ளதாகத் தெரிகிறது. சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஒன்னேகால் மணி நேரத்தில் முடிவடைந்து ஒத்திவைக்கப்படுவது சட்டமன்ற வரலாற்றில் இதுவே முதல் முறை.

இதனிடையே, வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் இரா.சிவா செய்தியாளர் களிடம், “"பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் போன்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பா.ஜ.க. கூட்டணியிலிருந்து விலகி ராஜினாமா செய்ய வேண்டும்''’எனக் கூற, புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

pondy

இதுகுறித்து தி.மு.க எம்.எல்.ஏ. சிவாவிடம் பேசினோம்... "பா.ஜ.க.-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசு முழு பட்ஜெட் தாக்கல் செய்யவில்லை. துணைநிலை ஆளுநர் தமிழிசை, புதுவை மக்களுக்கு நல்லது செய்வார் என நினைத்தோம். ஆனால் அவர் பா.ஜ.க.வின் பிரதிநிதியாகவே செயல்படுகிறார். மத்திய அரசு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற போதிய நிதி தரவில்லை. புதுச்சேரி மாநிலத்தை பா.ஜ.க. தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. டெல்லி சென்று பிரதமர், மத்திய அமைச்சர்களை சந்தித்தும் எதுவும் நடக்கவில்லை. அதனால் நிதிஷ்குமார்போல ரங்கசாமி மாறவேண்டும் என கூறினேன்''’என்றார்.

பா.ஜ.க. மாநில தலைவர் சுவாமிநாதனோ, “"தி.மு.க.விலிருந்து எம்.எல்.ஏ.க்கள் வெளியேறி மகாராஷ்ட்ராவில் நடந்ததைப்போல தமிழ்நாட் டில் வேண்டுமானால் ஆட்சி மாற்றம் நடக்கலாம். மற்றபடி புதுச்சேரி மாநிலம் அல்ல, யூனியன் பிரதேசம். பட்ஜெட்டுக்கான முழு நிதியும் மத்திய அரசுதான் தருகிறது. பட்ஜெட் வரவு அறிக்கைகளை ஆய்வு செய்து அனுமதி வழங்க காலதாமதமாவது இயல்பானதே''’என்கிறார்.

இதுகுறித்து புதுவை அரசியல் பார்வை யாளர்களிடம் விசாரித்ததில், "பொதுவாக முதலமைச்சர் ரங்கசாமி மீது எதிர்க்கட்சிகளான தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற எந்த கட்சிகளுக்கும் கோபமோ, எதிர்ப்போ இல்லை. அவர் பா.ஜ.க.வின் பிடியில் சிக்கித் தவிக்கிறார். பா.ஜ.க.வோ ரங்கசாமி பதவியேற்றதிலிருந்து டெல்லிக்கு வந்து தங்களைச் சந்திக்கவில்லை என்பதால் அவருக்கு ஆட்டம் காட்டுகிறது.

மகாராஷ்டிராவில் சிவசேனை கட்சியை உடைத்து உத்தவ் தாக்கரேவை காலி செய்து, தனது ஆதர வாளரான ஏக்நாத் ஷிண்டேவை பதவியில் அமர்த்தியதைப்போல புதுச்சேரியிலும் செய்துவிடலாம் என்று பா.ஜ.க. கனவு காண்கிறது. அதற்கு முன்பாக பீகாரைப்போல தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் ரங்கசாமி முதலமைச்சராகத் தொடர்வதற்கு எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளனர். புதுச்சேரியில் பா.ஜ.க. ஆட்சி என்கிற கனவுத் திட்டத்தை நிறைவேற்றத் துடிக்கும் பா.ஜ.க.வுக்கு ‘செக்’ வைக்கவேண்டும் என்பதற்காகத்தான் நிதீஷ்குமாரைப்போல ரங்கசாமி அவதாரம் எடுக்கவேண்டும் என் கின்றனர் தி.மு.க.வினர்''’ என்கிறார்கள்

nkn170822
இதையும் படியுங்கள்
Subscribe