ஒன்றிய பா.ஜ.க. அரசின் 9 ஆண்டு கால ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்திற்காக வேலூர் மாவட்டத்துக்கு உள் துறை அமைச்சர் அமித்ஷா வந்திருந்தார். அந்த பொதுக்கூட்ட மேடையில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், அமித்ஷா விற்கு வெள்ளிச் செங்கோல் பரிசு வழங்கியபின் மேடையில் பேசும்போது, "2014 நாடாளுமன்றத் தேர்தலில் தாமரை சின்னத்தில் வேலூர் தொகுதி யில் போட்டியிட்டேன். கூட்டணியில் இருந்தவர் கள் சோடை போனதால், கூட்டணி துரோகத் தால் தோல்வியுற்றேன். 2019 நாடாளுமன்றத் தேர் தலில் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றேன். அப்போது கூட்டணியில் இருந்த சதிகாரர்களால் தோற்றோம். வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்துக்கு முதற் கட்டமாக வேலூரை தேர்வு செய்துள்ளார்கள், அமித்ஷா வேலூரில் அமர்ந்துவிட்டார். இனி வேலூர் பா.ஜ.க.வின் கோட்டை'' என்றார்.
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, ஜெயல லிதாவை ஊழல்வாதி என்றதை அ.தி.மு.க. மேல் மட்டத் தலைவர்கள் கடுமையாக விமர் சித்தனர். இது பா.ஜ.க. - அ.தி.மு.க. மோதலாக உருவானது. இதனால் வேலூரில் ஏ.சி.எஸ். பேசியது பிரச்சனை யாகவில்லை. அண்ணாமலையை அ.தி.மு.க.வினர் கடுமையாகத் தாக்கத் தொடங்கியதால் அவசர அவசரமாக அ.தி.மு.க. மேல்மட்டப் பிரமுகர் களை அழைத்த ராஜ்பவன், சமாதானம் பேசி அனுப்பிவைத்தபின் அந்த விவகாரம் அடங்கியது.
இந்நிலையில், ஏ.சி.எஸ்., பா.ஜ.க. மேடை யில் துரோகம், சதிகாரர்கள் எனக் கூட்டணிக் கட்சியினரை பேசியது தங்களைத்தான் என அ.தி. மு.க., பா.ம.க. தொண்டர்களை அதிருப்தி யடையச் செய்துள்ளது. இதுபற்றி நம்மிடம் பேசிய வேலூர் அ.தி.மு.க. பிரமுகர்கள் சிலர், "தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் மகன் இந்த தொகுதியில் போட்டியிட்டார். தேர்தல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களை சந்தித்துக்கொண்டே இருப்பவர் துரைமுருகன். தேர்தல் நேரத்தில் மட்டும் பணப்பெட்டிகளோடு தொகுதிக்குள் வந்து அமர்ந்துகொண்டு மக்களைச்சந்திப்பவர் ஏ.சி.எஸ். அப்படிப்பட்ட வர் துரைமுருகன் மகனிடம் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியதற்கு காரணமே எங்களின் கடுமையான உழைப்பும், இரட்டை இலை சின்னமும் தான். ஆனால் அவருக்காக உழைத்த எங்களை துரோகி என விமர்சித்தவர், அ.தி.மு.க. இருக்கும் கூட்டணியில் அவர் இனிமேல் சீட் வாங்ககூடாது. எங்களின் ஆதரவு இல்லாமல் இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிடாமல் அவர் ஜெயிக்கவேண்டும், டெபாசிட்டாவது வாங்கிவிட்டு எங்களை விமர்சிக்கட்டும்!'' என்றார்கள்.
பா.ம.க. சார்பில் பேசியவர்கள், "ஏ.சி.எஸ். க்கு வன்னியர்கள் என்றாலே வேப்பங்காய். அது தெரிந்தும் நாங்கள் அவரின் சாதி வெறியை மறந்து கூட்டணிக் கட்சி வேட்பாளர் என்பதற் காக வேலை செய்தோம். 2014ஆம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க. என மும் முனைப் போட்டி. தேர்தல் முடிவில் ஏ.சி.எஸ். இரண்டாவது இடம் வந்ததற்கு காரணம். எங்க ளின் தேர்தல் பணி. 2019 நாடாளுமன்றத் தேர்த லின்போது தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த்தை குறிவைத்து வருமான வரித் துறையை ஏவி தேர்தலை நிறுத்தினார்கள். ஏ.சி. எஸ்.க்கு தனியார் பல்கலைக்கழக வேந்தர் சாதி ரீதியாக உதவினார். ஏ.சி.எஸ். தேர்தலுக்கான 100 கோடி ரூபாய் பணம் அந்த பல்கலைகழக வளாகத்தில்தான் வைக்கப் பட்டிருந்தது. அவருக்கு அவர்சார்ந்த சாதிச் சங்கங் கள், பிரமுகர்கள் கட்சி மறந்து வேலை செய்ய றாங்க. நம்ம சாதியில் அப்படி இல்லையே, நியா யமா?ன்னு துரைமுருகன் தரப்பினர் எங்களிடம் கேட்டாங்க. நாங்கள் சாதி பார்க்கவில்லை, கூட்டணி தர்மம் முக்கியம் என உறுதியாயிருந்தோம். நாங்கள் சாதி பார்த்து வேலை செய்திருந்தால் அதிக வித்தியாசத்தில் ஏ.சி.சண்முகம் தோற்றிருப்பார். எங்களை அவமானப்படுத்தியவருக்கு பதிலடி தர காலம் நிச்சயம் எங்களுக்கு வழி ஏற்படுத்தித் தரும்'' என்கிறார்கள்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியில் தாமரையை மலரவைக்க முயல்கிறது பா.ஜ.க. இதற்காக ஒன்றிய இணையமைச்சர் வி.கே.சிங்கை வேலூர் மாவட்ட கட்சிப் பொறுப் பாளராக நியமித்துள்ளது. அவரும் அடிக்கடி வேலூர் வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். உள்துறை அமைச்சர் அமித்ஷா வேலூர் வந்ததும் அப்படியே. வேலூர் தொகுதி யை எனக்கு மீண்டும் தந்தால், இதோடு மேலும் 5 தொகுதிக்கான தேர்தல் செலவை நான் ஏற்றுக்கொள்கிறேன் என வாக்குறுதி தந்துள்ளா ராம். அண்ணாமலையிடமும் வேலூர் தொகுதி யைக் கொடுத்தால் அவருக்கு வேண்டியதைத் தருவதாகப் பேசி ஓ.கே. வாங்கியுள்ளாராம். இது வேலூர் பா.ஜ.க.வில் அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது. வேலூர் முன்னாள் மேயர் கார்த்தி காயினி, அ.தி.மு.க.விலிருந்து பா.ஜ.க.வுக்கு வந்துள் ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் கே.வி.குப் பம் தனித் தொகுதியை வாங்கிவிட காய் நகர்த் தினார், கிடைக்கவில்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சீட் வாங்கிவிடவேண்டும் என மும்முரமாக உள்ளார். அதேபோல் மாநில பொதுச்செயலாளர் ஆம்பூர் வெங்கடேசன் உட்பட சிலர் எம்.பி. சீட் கனவில் உள்ளனர். கூட்டணிக் கட்சியினருக்கு வேலூர் தொகுதியை வழங்கக்கூடாது என்று தேசியத் தலைமைக்கு சொல்லிவருகின்றனர். வாயாலேயே கெடுத்துக் கொள்கிறாரோ ஏ.சி.எஸ்.?!