அமைச்சர் துரைக்கண்ணு அடக்கம் செய்யப்பட்ட சொந்த இடத்தில் அவர்களின் குடும்ப வழக்கப்படி பால் தெளிக்கும் சடங்கு நடந்தது. உறவினர்கள் சூழ்ந்திருந்த இடத்தில் அமைச்சரின் இளைய மருமகன் கனகாதரனுக்கும், அமைச்சரின் இளைய மகன் ஐயப்பனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. உறவினர்களின் சமாதானத்திற்குப்பின், அமைச்சரின் மருமகன் கனகாதரன் அந்த வீட்டிற்குள் காலெடுத்து வைக்கவில்லை.
இந்த நிலையில்தான், ஐயப்பனின் நண்பர்களான, பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கள்ளபுலியூர் ஊராட்சி மன்றத் தலைவர் பெரியவன் என்கிற முருகன், அவரது சகோதரியின் மகன் ஐயர் என்கிற சக்திவேல், அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பிரமுகரான வழக்கறிஞர் சுரேஷ்குமார், அகில இந்திய முக்குலத்தோர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் வேதா என்கிற வேதசெல்வம், கும்பகோணம் பா.ம.க முன்னாள் ந.செ. பாலகுரு ஆகியோர் அதிரடியாக கைதுசெய்யப்பட்டு, அவர்களிடம் தனி தனியாக விசாரணை நடந்துவருகிறது.
இந்தக் கைது நடவடிக்கையைக் கண்டித்து, ஊராட்சிமன்றத் தலைவர் முருகனின் ஆதரவாளர்களும், உறவினர்களும் கும்பகோணம் பைபாசில் சாலை மறியலில் ஈடுபட்ட னர். அவர்களில் பலரின் கைகளில் ஆயுதங்கள் இருந்தன. ஆர்.டி.ஒ. மற்றும் கும்ப கோணம், திருவிடைமருதூர், பாபநாசம் டி.எஸ்.பி.க்கள் ஸ்பாட்டுக்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தியும், போராட்டத்தைக் கைவிட மறுத்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்றின் கண்ணாடி உடைக்கப்பட்டதோடு, ஆம்புலன்ஸ் ஒன்றின் மீதும் அவர்கள் பெட்ரோல் குண்டு வீச முனைந்தனர். இதைத் தொடர்ந்து டி.ஐ.ஜி. தலைமையில் குவிந்த போலீஸ் டீம், லத்தி சார்ஜ் செய்து கூட்டத்தைக் கலைத்தது.
அமைச்சர் துரைக்கண்னு குடும்பத்தில் என்னதான் நடக்கிறது என நாம் கேட்க... அந்தப் பிரமுகர் நம்மிடம் விவரிக்கத் தொடங்கினார்.
""துரைக்கண்ணுவின் மூத்தமகன் வேளாண்மை துறையில் அதிகாரி. நேரடி அரசியலில் ஆர்வம் காட்டாமல், அமைதியாக சம்பாத்தியம் கண்டு வருகிறார். அமைச்சரின் இளைய மகள் சத்யாவின் கணவரான ஸ்ரீமுஷ்ணத்தைச் சேர்ந்த கனகாதரனுடன் சேர்ந்துகொண்டு, அமைச்சரின் இலாக்கா வழியாக பெருமளவு நிலமாகவும், கட்டிடங்க ளாகவும் வாங்கிக் குவித்திருக்கிறார். இதற்கு குறிஞ்சிப்பாடி அருகில் உள்ள 130 ஏக்கர் நிலமும், தோட்டமுமே சாட்சி. துரைக்கண்ணுவின் அனைத்து வரவு செலவுகளையும் கனகாதரனே கவனித்து வந்தார். அமைச்சர் மகன் ஐயப்பன் அனைத்திலும் தலையிட்டு கங்காதரனுக்கு நெருக்கடி கொடுத்து வந்தார். ஒருகட்டத்தில், துரைக் கண்ணுவையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டார்.
இந்தச் சூழலில்தான் பா.ம.க.வின் முக்கிய பிரமுகர் ஒருவரின் நிழலாக இருந்து வந்த கள்ளப்புலியூர் ஊராட்சி மன்றத் தலைவரான பெரியவன் என்கிற முருக னோடு நட்பை ஏற்படுத்திக் கொண்டு, அமைச்சரிடமும் நெருக்கத்தை ஏற்படுத்திவைத் தார் ஐயப்பன். முருகன் மீது சாராய கடத்தல், மணல் கொள்ளை உள்பட 20-க்கும் அதிகமான வழக்குகள் இருக்கின்றன. சொத்துகளும் எக்கச்சக் கம். அமைச்சர் தரப்பின் சப்போர்ட் டால் முருகனை போலீசால் நெருங்க முடியவில்லை. மறைந்த அமைச்சர் தரப்பில் கும்பகோணம் அ.தி.மு.க. ஒ.செ. என்.ஆர்.வி.செந்தில், அறிவழகன், அசோகன், அசோக்குமார் என பல பேரிடம் ஆயிரம் கோடிக்கு மேல் பினாமியாக சொத்துக்களை வாங்கி குவித்துவைத்துள்ளனர். பினாமி சொத்துக்கள் முருகனிடமே அதிகம் இருக்கிறது, அதோடு கட்சிக்கான பணமும் இருப்பதாக சொல்கிறார்கள்'' என்று திகைக்க வைத்தார்.
கபிஸ்தலத்தைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் ஒருவரோ, ""மருத்துவமனையில் நடந்த கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணையின் போது, கனகாதரன் ஐயப்பனை நோக்கிக் கை காட்டியிருக்கிறார். இந்த விவகாரம்தான் வீடுவரை வந்து சுடுகாடுவரை சென்றது. எடப்பாடியிடம் கனகாதரன் சரண்டராகி, பணம் விவகாரம், ஐயப்பன், முருகன் அடாவடி என அனைத்தையும் போட்டுக் கொடுத்துள்ளார். இந்த சூழலில்தான் ஐயப்பன் கபிஸ்தலம் சுற்றுலா மாளிகையில் தன்னிச்சையாக கட்சிக்காரர்கள் அனைவரையும் வரவழைத்து, ""அப்பா தொகுதியில் நான்தான் நிற்கப்போறேன்'' என சொல்ல, இதையறிந்த வைத்திலிங்கம், எங்கே அடித்தால் எங்கே வலிக்கும் என கணித்தார். முருகனில் தொடங்கி தனது ஆதரவாளர்கள் அடுத்தடுத்து கைதானதைக் கண்டு நடுங்கிய ஐயப்பன் மீண்டும் எடப்பாடியிடமே ஓடியிருக்கிறார்'' என்கிறார் தலையில் அடித்துக்கொண்டு.
காவல்துறை வட்டாரமோ, ""சி.எம். தொடர்பான சில டீலிங்குகள் இதில் இருக்கு. அமைச்சர் மருத்துவமனையில் இருக்கும்போதே குடந்தை மகாமகக் குளம் அருகில் இரண்டு கோடி மதிப்புடைய இடத்தை 67 லட்சத்திற்கு மிரட்டி, ஸ்பாட் பேமெண்ட் கொடுத்து எடுத்திருக்கிறார் முருகன். அதே போல அன்னலஹ்ரகாரத்தில் உள்ள ஒரு வீட்டை வாங்கியிருக்கின்றனர். அந்த வீட்டில் அமைச்சர் இறந்த மறுநாள் இரவு முழுவதும், தரை தளம் தோண்டப்பட்டு, எதையோ வைத்து மூடி டைல்ஸ் பதித்துள்ளனர். இதை விசாரித்து வருகிறோம்'' என்று அதிரவைக்கிறார்கள்.
கைது டீமில் உள்ள அந்த காவல்துறை அதிகாரியோ கட்டபஞ்சாயத்து, நிலஅபகரிப்பு, கொலைமிரட்டல் உள்ளிட்ட விவகாரத்தில்தான் நடவடிக்கை எடுத்திருக் கிறோம். வேறொன்றுமில்லை’’என்கிறார். ஒரு பள்ளி விவகாரம் உள்பட பலவும் இதற்குள் அடங்கியிருக்கிறது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
மக்களின் சொத்து அமைச்சர்களின் பினாமிகளிடம் சிக்கி இப்படித்தான் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறது.
-க.செல்வகுமார்