(84) துணிந்து நின்ற நக்கீரன் டீம்!
போலீஸ் தட...தட...ன்னு வந்து இறங்குது. நம்ம ஆபீஸ பொறுத்த அளவுல கம்ப்ளீட்டா பேக்டு... பெரிய கதவத் தொறக்கிறதே இல்ல, விக்கெட் கேட்டும் No Open-தான். தொறக்கிறதில்ல. ஏன்னா, அடிக்கிறதுக்குத்தான் எடுவட்ட நாய்ங்க ஒவ்வொரு குரூப்பா வந்துக்கிட்டிருக்காய்ங்களே!
இதுக்கு கொஞ்சம் முன்னாடி ஒரு குரூப் வந்துச்சு. வந்தவங்க கையில ஒரு பெரிய தட்டி.
அதுல...
நாய்கறி தின்ன நக்கீரனே!
பன்றிக்கறி தின்ன பரதேசியே!
பிணம் கறி தின்ன பிசாசே!
பத்திரிகை தொழிலில் துரோகம் செய்யும் துரோகியே உனக்கு இது ஒரு தொழிலா?
பத்திரிகையை களங்கம் செய்யாதே!!!
அப்படின்னு நமக்கு எதிரான வாசகங்கள அந்த தட்டியில எழுதிக் காமிச்சிக் கிட்டே ஆட்டம் போட்டுட்டுப் போறானுக.
ஏண்டா நாய்ப் பசங்களா... மாட்டுக் கறிக்கு இத்தன கொடுமை பண்றீங்களாடா... இப்ப எங்கள நாய், பண்ணி, பிணம்னு இத்தன ஐட்டத்த வச்சு போஸ்டர் வச்சதுக்கு நாங்க எதாலடா அடிக்கிறது முண்டங்களா...?
வந்தவன் பூராவுமே வெளியூர்க் காரனுகளா இருக்கானுக. வேற, வேற மாவட்டம், வேற... வேற... ஊர்கள்ல இருந்து வந்திருக்கானுங்க. வந்ததுக்கு எதையாவது சாணி அடிச்சிட்டுப் போகணும்னு போறாய்ங்க. வந்து ரெண்டு கத்து கத்தணும்... கல்ல விட்டு எறியணும்... சோடா பாட்டில் வீசணும்...னு ப்ளான் பண்ணி எல்லாத் தையும் பண்ணிட்டுப் போய்த் தொலைச்சாய்ங்க.
பெருசு ஏற்கனவே சொன்ன மாதிரி... மப்ஃடியில இருந்த போலீஸ் காரய்ங்க ஆபீஸ அடிக்க வந்தவய்ங்க ளோட சேர்ந்துக்கிறாய்ங்க. வாசல நாம லாக் பண்ணுனவுடனே, அங்க இருந்த செக்யூரிட்டி சிவகுமார், அவருகூட கண்ணன், டிரைவர் கண்ணன், ஆட்டோ சம்பத், சந்திரபாபு, டிரைவர் கணேசன், பிரிண்டிங்ல இருந்த தம்பிகள் எல்லாருமே... கதவ டைட்டா மூடி, வெளில இருந்து யாரும் உள்ள வந்துறாமப் பாத்துக்கிட்டாய்ங்க.
போலீஸ்லாம் உள்ள ஃபோர்ஸா போகுது... அரெஸ்ட்பண்ணப் போகு துங்கிறதெல்லாம் வெளிய மக்களுக்குத் தெரியக்கூடாது. வெளில இருக்கக் கூடிய பத்திரிகைக்காரங்களுக்குத் தெரியக்கூடாது அப்படீங்கிறதுக்காக வெளியூர்ல இருந்து வந்த கட்சிக் காரய்ங்கள வரிசையா விட ஆரம்பிச்சாய்ங்க.
நம்ம ஆபீஸோட மொரட்டு கேட் இடுக்கு வழியா திறக்கச் சொல்லி போலீஸ்காரய்ங்க கத்துறாய்ங்க. உடனே செக்யூரிட்டி சிவகுமார்... போலீஸ்காரய்ங்க வெளிய இருந்து நம்ம ஆபீஸ் உள்ள எட்டிப் பார்க் கிறத செக்யூரிட்டி கண்ணன், டிரைவர் கண்ணன், கூடவே இருந்த தம்பி கள்ட்ட சொல்லிர்றாரு. செக்யூரிட்டி அலர்ட்னஸ உண்மையிலேயே நாம பாராட்டியாகணும்.... இத நான் ஆரம்பத்துலயே சொல்லியிருக்கேன்.
இந்த சம்பவத்துல எல்லாருமே விஜிலென்ஸ் மாதிரி ரொம்ப அலர்ட்டா இருந்தாங்க. அதுல ஃபர்ஸ்ட் மார்க் குடுக்கணும்னா... ஒண்ணு செக்யூரிட்டி டீம், ரெண்டா வதா எங்க போட்டோகிராபர் அண்ட் வீடியோ டீம்.
போட்டோகிராபர்கள் 3 பேருல சீனியர் போட்டோகிராபர் சுந்தர், அடுத்து ஸ்டாலின், அடுத்தது தம்பி அசோக். இவங்க எல்லாரும் ரொம்ப ரொம்ப அலர்ட். அதோட நம்மு டைய வீடியோ டீம். அது தம்பி ஃபெலிக்ஸ் தலைமைல ரெண்டு பேரு. எல்லாருமே ரொம்ப படு அலர்ட்டா இருந்தாங்க. அதனாலதான் நம்மால நடந்த எல்லாத்தையும் அக்கு வேறு ஆணி வேறா பதிவு செய்ய முடிஞ்சது.
ஆபீஸ்ல என்னன்னா... நாம இன்ஸ்ட்ரக்ஷன் குடுத்த பிரகாரம் ஃபாரம் போகணும். அதுக்கு ஜென் செட் வெச்சு ஓட்டியாகணும். அந்த விஷயங்கள தம்பி ஆனந்த், எலக்ட்ரீஷி யன் ரவி ரெண்டுபேரும் கரெக்ட்டா பாத்துக்கிட்டாங்க. மேல லே-அவுட் சரியா நடக்கணும். கொஞ்சம் பேரு தலைமறைவு. இருக்குறவங்கள வச்சி மேட்டர முடிச்சி லே-அவுட் பண்ணி உடனே முடிக்கணும்னு சொல்லி அப்போ எடிட்டோரியல்ல பொறுப்பா பாத்துக்கிட்ட தம்பி லெனின் மேற்பார்வையில தமிழ்நாடன், பரமேஷ், செந்தில், இரா.த.சக்திவேல், மனோ, அப்புறம் சிஸ்டம் ஆபரேட் பண்றதுக்கு கணேசன், தாணு, சரவணன், ராஜேந்திரன் இவங்க எல்லாரும் இருந்தாங்க. எல்லாருமே இரண்டாவது ஃப்ளோர்ல இருக்கிற ஷட்டர குளோஸ் பண்ணி, கதவயும் உள்ள பூட்டிக்கிட்டு அவங்கவங்க வேலைய பரபரப்பா பாத்துக் கிட்டிருந்தாங்க.
பிரான்சிஸ், சிவகுமார், ஆனந்த், ஜி.எம். சுரேஷ், சந்திர மோகன், விளம்பர மூர்த்தி, சுரேஷ், சிவகுமார், மலைக்கண் ணன், சின்ன அன்பு... இப்படி நெறைய பேரு ஃப்ளோருக்கு வெளிய இருக்காங்க. கௌரி வெளிய பிரிண்டிங் பண்றதுக்கான மத்த வேலைக்காக அலைஞ்சிக்கிட் டிருந்தாரு. கொஞ்சம்பேரு... தமிழ் நாடு பூரா நக்கீரன கொண்டு வந்தா கணுமே.. அதுக்கான வேலைகளப் பாத்துக்கிட்டிருந்தாங்க. விடாம போலீஸ்காரய்ங்க கதவு இடுக்கு வழியா பாத்துட்டுப் போய் நொய்யு நொய்யுன்னு, "கதவத் தொறங் கய்யா... தொறங்கய்யா'ன்னு காட்டுக் கத்தலா கத்துறாய்ங்க.
உடனே ஜி.எம்.சுரேஷுக்கு செக்யூரிட்டி போன் பண்ணியிருக் காங்க. உடனே சடசடன்னு எல்லாரும் கீழ வந்து நிக்கிறாங்க. அப்போ நேரம் பகல் 12:30 தாண்டிடிச்சு. காலையில இருந்து சோறு தண்ணி சாப்பிடாம வெறும் வயித்துல இருந்தவங்களுக்கு சோறும் டீயும் வாங்கணும்? அதுக்கு எப்படியும் விக்கெட் டோர் வழியாத்தான் போய் ஆகணும். அதுக்காக விக்கெட் கதவ மெதுவா வெளியே யாரும் இல்லைன்னு நினைச்சு நைசா திறக்குறாங்க. அங்கேயே திருட்டுத்தனமா பதுங்கி நின்னுகிட்டிருந்த போலீஸ் இதான் சாக்குன்னு சட...சடன்னு தொறந்த வீட்டுல ஏதோ நுழைஞ்ச மாதிரி, பொத... பொதன்னு கூட்டமா உள்ள புகுந்து தொலைச்சிட்டாய்ங்க. அவங்க என்னத்துக்கு வர்றாய்ங்கன்னு நமக்குத் தெரியாது.
உள்ள வந்தவுடனே... மொத ஆளா என்னத் தேடியிருக்காய்ங்க. நான் இல்லன்னவுடனே, அடுத்ததா ஆபீஸ் ஃபுல்லா செக்பண்ணப் போறோம்னு அதட்டலா சொல்லியிருக்காய்ங்க.
"வாரண்ட் இருக்கா ஸார்''னு தம்பிங்க கேட்டிருக்காங்க.
"ஸார்... அதையெல்லா ஒங்கள்ட்ட சொல்ல ணும்னு அவசியமில்ல ஸார்... நாங்க ஒரு அக்யூஸ்ட்ட தேடி வந்திருக்கோம்'' அப்படின்னுருக் காய்ங்க.
அவங்களோட நோக்கம் என்னவா இருக்கும்னு நான் யூகிச்சதுல... பிரிண்டிங் சம்பந்தமா ஒரு வழக்கு வருதுன்னு வச்சுக்குங் களேன்... கடைக்கு வந்திருக்கிற நக்கீரன் புத்தகத்த மட்டும் வச்சு அதுல உள்ள ஒரு செய்திக்காக டிபர்மேட்டிவ் வழக்குப் போடுவாங்க. அந்த புத்தகம் மட்டும் ஆதாரமா இருந்தா போதும்.
நம்ம மேல எஃப்.ஐ.ஆர். போட்டு, கிரிமினல் வழக்கு பதிவு பண்ணுனதுனால அந்த செக்ஷனுக்கு என்ன ஆதாரத்த அவங்க கொண்டுவந்து வைக்க ணும்னா... முதலாவதா, செய்தி எழுதியிருக்கிற மேனுஸ்கிரிப்ட், அடுத்ததா அத டைப் பண்ணுனது, லே-அவுட், ஃபிலிம், பிளேட், பேப்பர்... இத்தன ஐட்டத்தையும் கொண்டுவந்து இவங்க இத வச்சு தான் பண்ணுனாங்கன்னு சொல்லி முழுசா எல் லாத்தையும் புரூஃப் பண்ணணும். இது எல்லாத்துக்கு மான தடயத்தத் தேடி, அத எடுக்குறதுக்காகவும் போலீஸ்காரய்ங்க வந்திருக்கணும். நல்ல உதா ரணம்... சொல்லணும்னா ஒரு கொலை நடக்குது. கொலைக்கு காரணமான கத்தி, அருவா, பிளேடுன்னு என்னத்தயாவது காமிப்பாங்கள்ல... அது மாதிரிதான்.
இன்னொரு பக்கம், வந்தவய்ங்க ரொம்பவே கத்தி கூப்பாடு போடவும்... சீனியர் அட்வகேட் பெருமாள் சார் விருட்னு வெளிய வந்துட்டாரு. அன்னிக்கு காலைல இருந்தே பெருமாள் சார் நம்ம ஆபீஸ்லதான் இருந்தாரு. அவரோட ஜூனியர் அட்வகேட்ஸ் அண்ணன் எட்விக்கும், தம்பி வர்க்கீஸும் ஆபீஸ்ல மேல இருந்தாங்க.
கீழ வந்த பெருமாள் சார், "என்ன சார், என்ன விஷயம்?''னு கேட்டவுடனே...
"ஆபீஸ ஸர்ச் பண்ணணும்... வெடிகுண்டு, ஆயுதம்லாம் இருக்கிறதா எங்களுக்கு தகவல் வந்திருக்கு. அதனால ஆபீஸ செக் பண்ணணும்...''னு சொல்லியிருக்காய்ங்க. (ஏதோ நாங்க இதுக்காக ஒரு பேக்டரி வச்சு நடத்துறது மாதிரி)
பெருமாள் சார் உடனே, "விடுங்க... அவங்க வரட்டும், அவங்கள ஃப்ரீயா விடுங்க... ஆனா, எத்தனை பேரு வந்தாலும் அத்தன ஆளுக்கும் தலைக்கு ஒரு ஆளு வீதம் நம்ம ஆளுங்க இருக்கணும். நம்மட்ட இவ்வளவு பேருதான் இருக்காங்கன்னா... அந்த அளவுக்கான ஆளுங்கள மட்டும் உள்ள விட்ருங்க, மத்தவங்கள வெளிய நிப்பாட்டிருங்க, உள்ள விடவேணாம்''னு ஆர்டர் போட்டாரு.
சரியா சொல்லணும்னா, நம்மகிட்ட 20 பேர்தான் இருக்காங்கன்னா, 20 போலீஸ மட்டும் உள்ள விடுங்க, 25 பேரு வந்தா 25, 30-ன்னா 30... அப்படிங்கிறதுல நாம கரெக்ட்டா இருந்தோம்.
இதுல இன்னொரு ஜரூர் என்னன்னா... நம்ம போட்டோகிராபர்களும், வீடியோகிராபர்களும் ரொம்பவே ஸ்பீடா வேலை பார்த்தாங்க. எந்தப் போலீஸுக்கும் பயப்படல. மத்த நம்ம ஆளுங் களும் யாருமே பயப்படல. ஆத்தாடி... இவங்க வந்து ஏதோ நட்டமா நிறுத்திருவாங்களே... ஐயோன்னு பயந்து யாரும் ஓடல... ஒளியல.
போட்டோகிராபர்ஸ் எல்லாருமே அவங்களோட ஒவ்வொரு அசைவையும், அவங்க பேசுறது, செய்றது எல்லாத்தையுமே கவர் பண்ணுனாங்க... ரெக்கார்டும் பண்ணுனாங்க. மூணு பேரும் மூணு ஆங்கிள்ல வெவ்வேற இடங்கள், வெளிய ஒரு ஆளு இருப்பாங்க, உள்ள வெவ்வேறு ஆங்கிள்னு எல்லாத்தையும் கவர் பண்ணியிருப் பாங்க. அந்தப் படங்கள எல்லாம் நீங்க இப்ப பாத்தீங்கன்னா தெரியும்.
எப்பவுமே ஒரு சீரியல் எழுதும்போது ஆபீஸ்ல ஸர்ச் பண்ணுனாங்கன்னு ஒரு படத்த மட்டும் வச்சி காமிச்சிட்டுப் போயிருவாங்க... மத்த பத்திரிகை, பேப்பர்கள்ல எல்லாம் அப்படித்தான்.
ஆனா... இந்த போர்க்களத்துக்கு மாத்திரம் நானும், என் தம்பி பொறுப்பாசிரியரும் டிஸ்கஸ் பண்ணி, என்ன ப்ளான் பண்ணுனோம்னா...?
(புழுதி பறக்கும்)