ff

(78) ஒரே நாள்ல 14 வகை தண்டனை!

மிஞ்சிக்கரை ப்ளாட்பாரம்... தேதி: 8-1-2012.

Advertisment

'ஐண்ய்க்ன்' பேப்பர பிரிச்சு படிக்க ஆரம்பிச்சேன். அதுல முதல் பக்கத்துலயே... நாலு காலம் செய்தியா போட்டுருந்தாங்க. 'ஐண்ய்க்ன்' ரிப்போர்ட்டர் அண்ணன் கோலப்பன்தான் அத பண்ணி யிருந்தாங்க. அதுல ரொம்ப விரிவா நம்மள பத்துன ஸ்டோரியெல்லாம் பண்ணி, எதுக்காக இந்த தண்டனைன்னு எல்லாத்தையும் சொல்லியிருந்தாங்க.

ஜெயலலிதாவோட அராஜக ஆட்டத்துனால நாம எவ்வளவு கஷ்டங்கள அனுபவிச்சோம். அதையெல்லாம் பாத்து சந்தோஷப்பட்டவன், இவனுக்கு வேணும்டான்னு கொக்கரிச்சவன், கண்டும் காணாம போனவன், ஏளனம் பண்ணுனவன், எள்ளி நகையாடுனவன், மஞ்சள் பத்திரிகைன்னு பேசுனவன், ப்ளாக்மெயில் பத்திரிகைன்னு சொன்னவன்... எல்லாருமே இன்னிக்கு அவனவன், துண்டக் காணோம்... துணியக் காணோம்னு ஓடிக்கிட்டிருக்கான். அது வேற விஷயம்.... அதுக்குள்ள போகல.

பத்திரிகை தர்மம்ங்கிறது சக பத்திரிகைக்கு ஏற்பட்ட துயரத்துல பங்கெடுத்துக்கிறது. அந்த வகையில இந்து என்.ராம் சாருக்கும், அண்ணன் கோலப்பனுக்கும் நக்கீரன் சார்பா நன்றியை சொல்லிக்கிறேன். ஏன்னா... அந்த செய்தி போட்டதுக்காக அவங்க மேலயும் வழக்குப் பதிவு பண்ணுனாங்க.

Advertisment

ff

நடந்த விஷயம் எல்லாத்தையும் சொல்லிட்டு, முக்கிய குறிப்பா அவங்க என்ன எழுதியிருந் தாங்கன்னா... "அ.தி.மு.க.வுல உள்ள லாயர் குரூப் அன்னிக்கு சாயங்காலமே கமிஷனர போய் பாத்து உடனே நக்கீரன தடை செஞ்சு நக்கீரன்கோபால அரெஸ்ட் பண்ணச் சொல்லி வற்புறுத்துனதப் பத்தி சொல்லியிருந்தாங்க. அதே நேரத்துல.... தமிழ்நாடு பூராவுமே எல்லா கடைகள்லயும் உள்ள நக்கீரன் புக்ஸ் எல்லாத்தையும் அடாவடியா கைப்பத்தி எரிச்சது, விக்கக்கூடாதுன்னு தடுத்தது... இப்படி எல்லாத்தையுமே "இந்து' பத்திரிகைல வெளியிட்ட செய்தியில பதிவு பண்ணியிருந்தாங்க.

அதே மாதிரி இன்னொரு செய்தியில... "அம்மாவுக்கு எதிரா வெளியான அவதூறு செய்திய ஒருக்காலும் ஏத்துக்க முடியாது.... மன்னிக்க முடியாது'ன்னு ராஜேந்திர பாலாஜி... அதான் "மோடி'ய "டாடி'ன்னு சொன்னாரே... அப்படிப்பட்டவரு நமக்கு எதிரா கொதிச்சி எழுந்து... ஏரியாவுல உள்ள கடைகள்ல இருந்த எல்லா நக்கீரனையும் புடுங்கி பப்ளிக்ல வச்சி எரிச்சிருக்காரு. இது சிவகாசியில நடந்தது. உதாரணத்துக்காக இதச் சொன்னேன்... இது மாதிரி தமிழ்நாடு பூராவும் நடந்தது. 'ஐண்ய்க்ன்' பேப்பர்ல அதுக்கான புகைப்படத்தையும் வெளியிட்டி ருந்தாங்க. வௌக்குமாற வச்சிக்கிட்டு வீராவேசமா வர்ற போட்டோவ பேப்பர்ல போட்டிருந்தாங்க.

ஆபீஸ் அட்டாக் நடக்குறப்ப... ஆயிரம் பேருக்கு மேல வந்து... வந்து அடிக்கிறாய்ங்க. நாம ஒடைஞ்சிபோய் உக்காந்திருக்கோம். அப்போ, விளம்பரப் பிரிவுல இருக்கிற தம்பி சுரேஷ், "அண்ணே... ரொம்ப அவசரமாம்... போத்தீஸ்ல இருந்து அக்கா போன் பண்றாங்கண்ணே''ன்னாரு.

எதிர்பக்கம் ஒரு பொம்பள வாய்ஸ். போத்தீஸ்ல இருந்து ஜெயந்தின்னு ஒரு அக்கா, "ஸார்... என்ன பண்ணுவீங்களோ தெரியாது. உடனே எங்க விளம்பரத்த நிறுத்துங்க...''ன்னாங்க.

நடந்தத கேள்விப்பட்டு நமக்கு ஆறுதல் சொல்றதுக்குத்தான் போன் பண்றாங்களோன்னு நெனைச்சா... நம்ம யூ-டியூப் சேனலுக்கு அவங்க குடுத்திருந்த விளம்பரத்த உடனே எடுங்கன்னு சொல்லி பதறுறாங்க....

"எங்க ஓனர் ஒங்ககிட்ட சொல்லச் சொன்னாங்க. விளம்பரத்த உடனே ஸ்டாப் பண்ணணுமாம்.... இனிமே போடவே வேணாமாம்''.

"சரிங்கம்மா''ன்னு சொன்னேன்.

ஆனாலும் அந்தம்மா கேக்குறதா இல்ல... உடனே சொல்லுங்க....ன்னு பேயாட்டம் ஆடுது.

"அந்தம்மா என்ன சொல்லுதோ அதச் செய்ங்க தம்பி''ன்னு சுரேஷ்கிட்ட சொன்னேன். அப்போ தம்பி மூர்த்தியும் விளம்பரப் பிரிவுல இருந்தாரு.

பயப்படுற ஆளுட்ட போய் அப்படில்லாம் ஒண்ணும் இல்லன்னு கன்வின்ஸ் பண்ண முடியுமா? சரி... போற போக்குல எவ்வளவோ நஷ்டப்படுறோம். இது நமக்குப் பொருளாதார நஷ்டத்த குடுக்குறது... நான் சொல்றது உங்களுக்குப் புரியும்னு நெனைக்கிறேன். நமக்கு இது எல்லாவிதத்துலயும் நஷ்டத்த குடுக்குறதுதான?

ff

ஒருத்தன ஒரு பக்கம் அடிக்கலாம், இல்ல ரெண்டு பக்கம் அடிக்கலாம், இல்லையா... மூணுபக்கம் கூட அடிக்கலாம்.... ஆனா, இவங்க என்னடான்னா நாலா பக்கமும் வெரட்டி... வெரட்டி வெளுக்குறாய்ங்க.

ஒரே நாள்ல பதிநாலு வகையான தண்டன நமக்கு.

அதுவும் ஒரு அரசாங்கம்... பவர் எல்லாத்தையும் கையில வச்சுக்கிட்டு மெனக்கெட்டு... வேற எந்த வேலையயும் பாக்காம, ஒத்த ஆள சுத்திச் சுத்தி அடிச்சா...?

என்னென்ன எழவக் கூட்டுனாய்ங்கன்னு இப்ப வரிசப்படுத்துறேன் பாருங்க...

1. தமிழ்நாடு பூராவும் கடைகள்ல இருந்த நக்கீரன் புக் எல்லாத்தையும் காசு எதுவுமே குடுக்காம பிடுங்கி.... குடுக்கலன்னா நடக்குறதே வேறன்னு கடைக்காரங்கள மெரட்டி... அடிச்சு கடைகள சேதம்பண்ணி... நடு ரோட்டுல போட்டு எரிச்சாய்ங்க.

2. நக்கீரன் அலுவலகத்த 1000 பேருக்கு மேல வந்து அடிக்கிறதும், ஆபீசுக்கு முன்னால நின்னு வாய்க்கு வந்தபடி கெட்ட... கெட்ட வார்த்தையில குடும்பத்துல உள்ள நாலு தலைமுறையையும் சேர்த்து சொல்ல முடியாத வார்த்தைகளால திட்டுறதும், நக்கீரன் புத்தகங்களயெல்லாம் தீ வச்சுக் கொளுத்துறதும், எம்.எல்.ஏ., மந்திரின்னு எல்லாருமா வந்து பேயாட்டம் போட்டதும், அலுவலகத்துக்கு உள்ள புகுந்து கார்களயெல்லாம் அடிச்சு உடைச்சு, ஆபீஸ் கண்ணாடிகளையும் நொறுக்கி, தூள் தூளாக்கி.... ஆபீஸ் செக்யூரிட்டிகள இரும்புத் தடியால மண்டையப் பொளந்து.... அலுவலகத்த பூட்டி... செய்தி சேகரிக்க வந்த டி.வி. + பத்திரிகைக்காரங்கள செய்தி சேகரிக்க விடாம விரட்டி, வெடிகுண்டு மிரட்டல் விட்டும் 24 மணி நேரமும் கொலைவெறியாட்டம் போட்டது.

3. எல்லா ஊருகள்லயும் அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்ல நம்ம மேல புகார் குடுக்கணும்னு அ.தி.மு.க. தலைமையில இருந்து ஆர்டர் போயிருக்கு. அப்படி கட்சிக்காரன் குடுத்த புகார வாங்கி, கையோட எஃப்.ஐ.ஆர். போடணும்னு எல்லா ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்களும் போலீஸ் ஸ்டேஷன்ல ஆஜராகி மானாவாரியா எஃப்.ஐ.ஆர போட்டுத் தள்ளிட்டாய்ங்க.

4. நக்கீரன் ஆபீசுக்கு கரண்ட் கட். அதோட... ஆபீஸ சுத்தி இருக்கிற 200-க்கும் அதிகமான வீடுகளுக்கும், நீங்களும் சேர்ந்து சாவுங்கன்னு அவங்களுக்கும் கரண்ட் கட்.

5. உயர்நீதிமன்றத்துல என்மேல கோர்ட் அவமதிப்பு வழக்கு ஃபைல் பண்ணுச்சு ஜெயலலிதா.

6. விளம்பரம் தர்றவங்கள்ட்ட ரொம்பக் கடுமையா, குடுத்த விளம்பரத்த நிறுத்தச் சொல்லி மிரட்டல். இனி யாரும் விளம்பரம் குடுக்கக்கூடாதுன்னு எச்சரிக்கை. அதன் முதல்கட்டம்தான் "போத்தீஸ்' விளம்பரம் கட்.

7. குடிக்கிற தண்ணி சர்வீஸ் கட். ரெண்டு நாளா அந்த தெருவுக்கு வாட்டர் சர்வீஸ் பண்ற லாரி வராம முனையிலேயே தடுத்துட்டானுக படுபாவிங்க. குண்டி கழுவக்கூட தண்ணி இல்லாம நாறணும்னு திட்டம் போட்டுட்டாய்ங்க பாவிங்க.

8. ஜெயலலிதா, தனிப்பட்ட முறையில என்மேல ஒரு அவதூறு வழக்கு போட்டுச்சு. (defamatory)

9. நக்கீரன் அலுவலகத்துக்கு மட்டுமில்லாம... சுத்தி குடியிருக்கிற வீடுகளுக்கான கழிவுநீர் பாதைகளும் அடைப்பு.

10. சட்டமன்றத்துல எம்மேல உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வந்துட்டாங்க.

11. பிரஸ் கவுன்சிலில் நக்கீரன் மீது புகார்.

12. பத்திரிகை அங்கீகாரத்த ரத்துசெய்யக் கோரி ஆர்.என்.ஐ.க்கு பெட்டிஷன்.

13. எல்லாத்தையும் விட முக்கியமா... என்ன கொலை செய்ய கொடூர அடியாள் பட்டாளம். தப்பிச்சுறக்கூடாதுன்னு.... 100 போலீஸ அதிகாரிங்கள கையில துப்பாக்கியோட அனுப்பி ஸ்பாட் என்கவுன்ட்டர், அப்படியும் தப்பிச்சுட்டா... ஊரத்தாண்டி போகாம இருக்க... எல்லா டோல்கேட்லயும் என்னக் கண்டவுடன போட்டுத்தள்ள ஆட்கள நிறுத்தி வெறியாட்டம்.

14. இது இல்லாம பலான கேஸ் போடுறதுக்கு அஞ்சுலட்சுமி அக்காவ வச்சு ப்ளான் பண்ணியிருக்காங்க...

என்னண்ணே.... தல சுத்துதா....

நான் அடிச்சுச் சொல்றேன், தமிழ்நாட்டுல... இல்ல இந்தியாவுல.... ஏன் உலகத்திலேயே எந்தப் பத்திரிகைக்கும் இப்படி ஒரு கொடூரம் நடந்திருக்காது. விசாரிச்சுப் பாத்தா உங்களுக்கே தெரியும்.

மேல சொன்ன இத் தன அயிட்டத்த இல்ல... இல்ல... இம்சைகள ஒரு சின்ன பத்தி ரிகை மேல... ஏவி விட்டுச்சு நமக்கு வாய்ச்ச பொம் பள ஹிட்லர் ஜெயலலிதா...

பூவரச மரம் கேள்விப் பட்டிருப்பீங்க. அதுக்கு இன்னொரு பேர் இருக்கு... உசுர காப்பாத்துற காயகல்ப மரம். அம்புட்டு மருத்துவக் குணம் அதுக்கு இருக்கு. இந்த மரத்துக்கு இன்னொரு குணமும் இருக்கு. எவ்ளோ பெரிய புயலடிச்சாலும்... அந்த மரம் சாயாம தாக்குப்புடிச்சு நிக்கும். ஒருவேள சாய்ஞ்சாலும்... சாய்ஞ்சபடியே துளிர்விட்டு வளர்ந்து நமக்கு பலன் தரும். அந்த பூவரச மரம் மாதிரிதான் நக்கீரனும். வெட்டிச் சாய்ச்சாலும் தட்டி நிமிந்து நிக்கும்.

அமிஞ்சிக்கரை ப்ளாட்பாரத்த விட்டு நகரக்கூட மனசு இல்ல. இத்தன ஆயுதங்கள எதுத்து நாம வெளிய வரணும். அடேங்கப்பா... இப்பவே சுத்துதேங்கிற மாதிரி இருந்துச்சு.

"வீம்புக்கு களத்துல இறங்கவும் கூடாது... எதிர்முனையில இருக்குறவங்கள சாதாரணமா எடை போடவும் கூடாது'ம்பாங்க...

யோசிச்சிக்கிட்டே ரோட்டுல போற வர்ற வண்டிகளப் பாத்துட்டு அப்படியே சம்மணம் போட்டு உக்காந்துட்டேன், பிச்சக்காரன் மாதிரி...

(புழுதி பறக்கும்)