ff

(75) ஜெ. போட்ட மெகா திட்டம்!

Advertisment

நாகப்பா கொல்லப் பட்ட இடத்துக்குப் போய் தடயங்களைத் தேடிச் சேகரிச்ச நாகப்பாவின் மருமகன் டாக்டர் கிரண்பட்டீல் 15-ந் தேதியன்னிக்கு நம்மகிட்ட மனம் திறந்து பேசு னாரு.

"எனது மாமனார் நாகப்பா கொல்லப்பட்டதுல எங்களுக்கு நாலு சந்தேகங்கள் இருக்கு. நாகப்பாவை வீரப்பன் கொன்னானா? தமிழ்நாடு அதிரடிப்படை கொன்னுதா? கர்நாடக அதிரடிப் படை கொன்னுச்சா? அல்லது வேறு யாராவது கொன்னார் களா?ங்கிற சந்தேகத்தின் அடிப்படையில உண் மையத் தேடுனோம்.

8-ந் தேதி வீரப்பன்கிட்ட இருந்து வந்த கேசட்டுல, "தமிழ் நாடு எஸ்.டி.எஃப். 5-ந் தேதியன்னிக்கு காட்டுக்கு வந்தது. பெரியவரே (நாகப்பா) தப்பிச்சுப் போங்கன்னு நான் சொன்னேன். அவர் கடவுள் மாதிரி உட்கார்ந்திருந்தார்... ஓடவேயில்லை'ன்னு வீரப்பன் சொல்லி யிருக்கிறாரு. போலீஸ் நம்மளத்தான காப்பாத்த வந்திருக்குன்னு எங்க மாமா நினைச்சிருப்பாரு. வீரப்பன் கும்பலை பிடிச்சிட்டோ அல்லது துரத்திட்டோ தன்ன காப்பாத்தி அழைச்சிட்டுப் போவாங்கன்னு நெனச்சி அவரு உட்கார்ந்திருப்பாருபோல. ஆனா... அவர் நெனைப்பு பொய்யா போயிடுச்சு.

Advertisment

ஆகஸ்ட் 25-ந் தேதியன்னைக்கு அவர் கடத்தப்பட்டது முதலே டைரி எழுதியிருக்காரு. ஒவ்வொரு நாளும் "ஓம் நமச்சிவாயா' மந்திரமும் சில குறிப்புகளும் எழுதியிருக்காரு. ஒண்ணு, ரெண்டு நாள்ல மட்டும்தான் குறிப்பு எதுவுமே இல்லாம சில கோடுகள் மட்டும் இருக்கு. மத்தபடி, தொடர்ந்து எழுதியிருக்காரு. ஆனா, 4-ந் தேதிக்குப் பிறகு எந்தக் குறிப்பும் இல்லை. வீரப்பன் சொன்னது போல 5-ந் தேதிதான் கொலை சம்பவம் நடந்திருக்கு.

ff

நான் ஒரு டாக்டர்ங்கிறதால எனது மாமனார் உடலை போஸ்ட்மார்ட்டம் செஞ்சப்ப பக்கத்துலதான் இருந்தேன்.

காட்டுல இருந்து மாமனாரோட பாடிய நாங்க எடுக்கும்போதுகூட போலீஸ் சீரியஸாக செயல்படல. சடங்கு செய்றதுக்காக காட்டுக்குப் போனப்ப மித்ரி மாதிரியான அதிகாரிங்கதான் எங்க பாதுகாப்புக்காக வந்தாங்களே தவிர... கொலை செய்தது யாருன்னு கண்டுபுடிக்கிறதுக் கான ஆதாரங்கள சேகரிக்கணும்ங்கிறதுல விருப்பமே காட்டல. எங்க ஆளுங்கதான் துப்பாக்கி தோட்டாக்களயும் டைரிகளயும் தேடி எடுத்தாங்க. மாமனாரின் உடலை எரிச்ச பிறகு சாம்பல எடுத்துட்டு வந்தோம். அதுல எலும்பு களும் இருந்துச்சு.. டெஸ்ட் பண்றதுக்குக் கூட அதை போலீஸ்காரங்க வாங்கிட்டுப் போகல.

கர்நாடக எல்லைக்குள்ள தமிழக அதிரடிப் படை வரல்லன்னு ஜெயலலிதா சொல்றாங்க. வீரப்பன்கிட்ட இருந்து கேசட் வர்றப்பல்லாம் தமிழக அதிரடிப்படையில இருந்த மோகன் நிவாஸ் எப்படியோ மோப்பம் புடுச்சு... எங்க வீட்டுக்கு வந்துருவாரு. மத்த சமயங்கள்லயும் அடிக்கடி வருவாரு. முதல்ல எங்களுக்கு இவர யாருன்னு தெரியல. கடத்தப்பட்ட கொஞ்சாநாள்லயிருந்து கூட்டத்தோட கூட்டமா உட்கார்ந்திருப்பாரு. யாருட்டயும் எதுவும் பேசாம உக்காந்திருப்பாரு. ரொம்ப நாளைக்கப்புறம்தான் விசாரித்தோம். திருதிருன்னு முழிச்சிட்டு கடைசியாத்தான், "நான் தமிழ்நாடு எஸ்.டி.எஃப்.'னு சொன்னாரு. "நான் உங்களுக்கு உதவத்தான் வந்தேன்னு தெரிவிச்சாரு. உதவுறதுக்கு ஏன் திருட்டுத்தனமா வெளியே கூட்டத்துல உட்காரணும். நிறைய கேள்வி இருக்கு... அவரு எங்க வீட்டுல உட்காந்திருக்கும்போது எடுத்த படத்தைப் பாருங்க... (போட்டோவை நம்மிடம் தருகிறார்) இந்தப்படம் போன இதழ்லயும் வெளியிட்டோம். அப்ப நம்ம நக்கீரன் நிருபரா இருந்த தம்பி ஜெயப்பிரகாஷ்ட்ட நாகப்பா மருமகன் கொடுத்த புகைப்படம் இது.

மாமனார் கொல்லப்படுறதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி அவரே வலியவந்து, "என் குடும்பத்தில் ஒரு கல்யாணம்'னு சொல்லிட்டுப் போனாரு. நாங்க இவர்ட்ட கேட்கவே இல்ல. சம்பந்தம் இல்லாம ஆஜராகி என்னிடம்தான் சொல்லிட்டுப்போனாரு. நாங்க அத பெருசா எடுத்துக்கலை. ஆனா, 5-ந் தேதியன்னைக்கு நெல்லூர் ரோட்டுல உள்ள கவுதலி கிராமத்துல ஒரு ஜீப்பை ஓட்டிக்கிட்டு மோகன் நிவாஸ் போனதை அங்க இருந்தவங்க பார்த்திருக்காங்க. அப்ப அந்த போலீஸ்காரன் கல்யாணத்துக்குப் போறேன்னு சொன்னது பொய்தானா? பெரிய சதி செய்து எங்க மாமாவ கொன்னுட்டாங்கன்னு சொல்லி பெருமூச்சுவிட்டார்.

ff

"போர்க்களம்' தொடர்ல கடந்த ரெண்டு, மூணு அத்தியாயங்கள்ல எஸ்.டி.எஃப். இன்ஸ்பெக் டர் மோகன் நிவாஸ்ங்கிறவரப் பத்தி சொல்லியிருப்பேன். மோகன் நிவாஸ் ஏன் இதுல வர்றாருங்கிறது இப்ப புரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன் உங்களுக்கு. ஏன்னா, முன்னாள் அமைச்சர் நாகப்பா சாவுக்கு காரணமான மெயின் கல்பிரிட்டே (ஸ்ரீன்ப்ல்ழ்ண்ற்) இந்த மோகன் நிவாஸ்தான்.

அதாவது ஜெயலலிதா, தேவாரம், தேவாரத்துக்கு கீழ இருக்கிற அடிப்பொடிகள்... அதுல முக்கியமானவரு இந்த மோகன் நிவாஸ்ங்கிற அந்த இன்ஸ்பெக்டரு.

வீரப்பன காலிபண்ணணும், வீரப்பன தேடி வர்றவங்களயும் காலிபண்ணிறணும், தூது வர்றவங்களயும் தூர் வாரிறணும்... அதோட, வீரப்பன வெறியாக்கி அதன்மூலமா ஏகபோகத்த அனுபவிச்சதும் இவங்கதான். அந்தக் காட்டுல இந்தாளோட கண்ணசைவு இல்லாம எதுவுமே நடக்கக்கூடாதுங்கிற அளவுக்கு ஒரு சாம்ராஜ்யத்தயே கட்டி வச்சது இந்த மோகன் நிவாஸ்தான். நாம அந்த ஆள குறைச்சி மதிப்பு போடமுடியாது. ஏன்னா... அந்த அளவுக்கு நெட்வொர்க்க பண்ணியிருப்பாரு. வீரப்பனுக்கு எதிரா என்ன சம்பவம் நடந்தாலும் அது மோகன் நிவாசுக்குத் தெரியாம நடக்காது. இந்த மோகன் நிவாஸ் மாத்திரம் இல்லன்னா... தேவாரம் இல்லன்னா... வீரப்பனே கெடையாது. இத நான் ஆரம்பத்துல இருந்தே சொல்லிக்கிட்டிருப்பேன்.

இப்பவும் பாருங்க, நாகப்பாவோட மருமகன் ஆணித்தரமா சொல்றாரு...

"ஒரு வாரத்துக்கு முன்னாடியே எங்க வீட் டுக்கு வலிய வந்து என்கிட்ட "நான் ஒரு கல்யாணத் துக்குப் போறேன்'னு சொல்லிட்டுப் போறாரு.

எதுக்கு?

இவரு தமிழ்நாடு எஸ்.டி.எஃப். கர்நாடகத் துக்கு சம்பந்தமே இல்லாத ஒரு ஆளு. அப்படியிருக் கையில கர்நாடகாவுல என்ன வேல...? கர்நாடகாவுல இருக்கிற நாகப்பாவோட மருமகன்கிட்ட இவரு ஏன் போய் சொல்லணும்? எங்க அப்பன் குதிருக்குள்ள இல்லங்கிறது மாதிரிதான இது.

ff

அதாவது இப்படி ஒண்ணு நடக்கப்போறதுங் கிறது தனக்குத் தெரியாது, "அவருதான் கல்யாணத் துக்குப் போயிட்டாருல்ல'ன்னு மத்தவங்க நம்பணும்ங்கிறதுக்காகவே திட்டம் போட்டு ஒரு நாடகத்த நடத்துறதுக்காகத்தான். அதுக்காகத்தான், நான் கல்யாணத்துக்குப் போறேன், ஊருக்குப் போறேன், காடாத்துக்குப் போறேன்னு வலியபோய் சொல்லிட்டு அங்கயிருந்து அவரு கௌம்பிருக்காரு. அந்த நேரத்துல நாகப்பாவோட டாக்டர் மருமக னுக்கு மோகன் நிவாஸ் போனதுல சந்தேகம் வரல.

நாகப்பா இறந்துட்டதா செய்தி வந்த பிறகுதான்... "ஓ... இந்த டிராமாவுல முக்கிய பங்கே மோகன்நிவாஸுக்குத்தான்'' அப்படிங்கிறது தெரிஞ்சுதான் அவரு பதிவு பண்ணுனாரு. போன இதழ்ல நாம வெளியிட்டிருந்த அந்த மோகன்நிவாஸோட படத்தையும் நாகப்பாவோட மருமகன்தான் நமக்கு குடுத்தாரு.

இத போற போக்குல கடந்துட்டுப் போற ஒரு விஷயமாவே நாம பாக்கல. நீங்களும் பாக்கக்கூடாதுங்கிறதுக்காகத்தான். ஒரு உயிர எவ்வளவு சாதாரணமா ஜெயலலிதா மதிச்சிருக்கு? அதுவும் கர்நாடகாவுல ஒரு முன்னாள் அமைச்சரா இருந்தவரு அவரு. அந்த உயிர் போனா ஒண்ணும் கவலையே இல்லங்கிற மாதிரி எவ்வளவு பெரிய கபட நாடகம் ஆடியிருக்காங்கன்னு பார்த்தீங்கன்னா... "நாங்க உள்ள வரல்ல. நாங்க காப்பாத்துறதுக்கு காட்டுக்குள்ள வரமாட்டோம். உங்க பாடு, வீரப்பன் பாடு. யாரையும் தூதும் அனுப்பமாட்டோம்'னு அவங்க மூஞ்சியில அடிச்ச மாதிரி... சென்னைக்கு வந்து உதவி கேட்டவங்கள திருப்பி அனுப்பியாச்சு. எங்க நமக்குத் தெரியாம நக்கீரன்கோபால் போயிருவானோன்னு நெனைச்சாங்க.

"ஒருவேள நக்கீரன்கோபால் யாருக்கும் தெரியாம காட்டுக்கு போயிட்டான்னா'ன்னு நம்மள கண்காணிக்கிறதுக்கு ஆளு போட்டாய்ங்க. அதே மாதிரி வேற எவனும் போயிறக்கூடாது... அதுக்கும் ஆளு போட்டுச்சு. இந்த வேலைய எல்லாம் மோகன் நிவாஸ் சரியா பண்ணுவாப்ல.

உதாரணமா... ஹிட்லர் பெரிய கொடுங் கோலனா இருந்தாலும் கூட அவன்கிட்ட இருந்த சில நல்ல விஷயங்களப் பத்தி சிலபேரு பேசு றாங்கள்ல. அதுமாதிரிதான்... மோகன் நிவா ஸோட திறமைய இந்த இடத்துல பாராட்டிச் சொல்றேன்.

அவங்க என்ன உத்தரவாதத்த தேவாரத்துக் கும், தேவாரம்... ஜெயலலிதாவுக்கும் குடுத்துருக் கணும்?

"இந்த முறை எப்படியும் நாங்க வீரப்பன கொன்னுருவோம்... இல்லன்னா... நாகப்பாவை யாவது நாங்க காப்பாத்துறது மாதிரி காப்பாத்தி, ஜெயலலிதாட்ட நல்லபேரு எடுக்கணும். அந்தம்மாவும் "பாத்தியா... தூது, கீதுன்னு அனுப்பாம, எப்படி கருணாநிதிய விட நான் ஜெயிச்சேன்''னு மார் தட்டணும்... இது அவங்க போட்ட மெகா திட்டம்.

எனக்கு என்ன சந்தேகம்னா... கர்நாடக எஸ்.டி.எஃப்.பும் இந்த சதிக்குள்ள இருப்பாங்கன்னு. ஏன்னா வீரப்பன், ரெண்டு ஸ்டேட் எஸ்.டி.எஃப்.புக்கும் பொதுவான வில்லன்.

இதுல அவங்களுக்குள்ள என்ன ஒரு பிரச்சின வரும்னா... யாரு இதுல பேரு எடுக்கிறது... தமிழ்நாடு எஸ்.டி.எஃப்.பா? கர்நாடகா எஸ்.டி.எஃப்.பா? வீரப்பன முதல்ல கொல்றது யாரு?, நக்கீரன் கோபால முதல்ல கொல்றது யாரு? அப்படிங்கிறதுதான்....

பழைய சம்பவம் ஒண்ணு சொல்றேன்.

(புழுதி பறக்கும்)