(63) ப்ளாக் மெயில் தலைவி!
மறுபடியும் மறுபடியும் ஏன் இந்த அறிக்கைகளப் பத்தி சொல்றேன்னா, ராஜ்குமார மீட்டுட்டு வர்றதுக்குள்ள அந்தம்மா மிகக் கடுமையான ரெண்டு அறிக்கைகள குடுத்திருக்கு. எங்க நாங்க ராஜ்குமார உசுரோட மீட்டுட்டு வந்துருவோமோன்னு அந்தம்மா அப்படி பதறுது... அந்தம்மவோட சேர்ந்து தேவாரமும் பதறுறாரு... தேவாரத்துக்கு கூட இருக்குற அடிப்பொடிகளும் பதறுறாங்க.
முதல் அறிக்கை வந்தவுடனே... எங்க சீனியர் லாயர் பி.டி.பெருமாள் சார்கிட்ட அதப்பத்தி டிஸ்கஸ் பண்ணுனேன்.
"எதாவது பண்ணணும் சார். அந்தப் பொம்பள அந்த அறிக்கையில ரொம்ப ஒருமையில நம்மள திட்டியிருக்கு. நான் ஏதோ ப்ளாக்மெயில் பண்ணுனதா சொல்லியிருக்கு. அது குடுக்குற ஒவ்வொரு அறிக்கையிலயும் நம்மள ரொம்ப கேவலமாவும் பேசி யிருக்கு. அதனால அந்தம்மாவ சும்மா விடக்கூடாது சார்''னு கோபமா சொன்னேன்.
14-08-2000- அறிக்கை.
இது வீரப்பன், ராஜ்குமார கடத்தி 15 நாள்... 16 நாள் கழிச்சி வந்த அறிக்கை. அந்த அறிக்கையிலதான் வௌங்கொண்டு "அவன்... இவன்... அந்தப் பயலே... இந்தப் பயலே'ன்னு ஏக வசனத்துல என்னென்னமோ சொல்லி நமக்கு பயங்கர திட்டு.
அதுல முக்கியமா என்ன சொல்லுதுன்னா... "தன் மீதுள்ள கிரிமினல் வழக்குகளை வாபஸ் பெற்றால்தான், கடத்தல்காரன் வீரப்பனிடம் தூது போக முடியும்னு நக்கீரன் கோபால் சொன்னதை, கர்நாடக அரசு ஏற்றுக்கொண்டதும்... நக்கீரன் கோபால் மீதுள்ள கிரிமினல் வழக்குகளை கர்நாடக அரசு வாபஸ் பெற்றதும் அதைவிடக் கேவலமானது'
-இது அறிக்கையில் உள்ள ஒரு பகுதியின் சாராம்சம்.
இதப் படிச்சவுடனே... வாயில நல்லா வந்துறப்போவுது. எவனோ ஒருத்தன், அந்தம்மாவுக்கு கெடுதல் பண்ணணும்னு நெனைக்கிறானா? இல்ல... ராஜ்குமார் எக்கேடும் கெட்டு நாசமாப் போகட்டும்னு இந்தப் பொம்பள நெனைக்குதா? இல்ல... ரெண்டு மாநிலத்துலயும் இருக்கிற மக்களும் செத்து சுண்ணாம்பாயி நிம்மதிய தொலைக் கட்டும்னு ஜெயலலிதாவோட இருக்கிறவங்க நெனைக்கிறாய்ங்களா?
ப்ளாக்மெயில் செஞ்சதா என்னப் பார்த்து சொல்லுது அந்தம்மா.
முன்னாடியே நான் ஒரு பழமொழி சொல்லியிருப்பேன். "ஈயத்த பாத்து இளிச்சு தாம் பித்தளை'ண்டு.
இந்தியாவுல இருக்கிற அரசியல்வாதி கள்ல... குறிப்பா தமிழ்நாட்டுல இருக்கிற அரசியல்வாதிகள்ல.... எல்லாருக்கும் தெரியும், ப்ளாக்மெயில் பண்ற அரசியல்வாதிக்கு அவார்டு தரணும்னா... இந்தம்மாவுக்குத்தான் முதல்ல தரணும்னு.
அத வரிசையா சொல்றேன்.... இந்த நேரம் அதச் சொன்னாத்தான் ஒங்களுக்கு, ஜெயலலிதாங்கிற பெண் எவ்வளவு மோசமான ப்ளாக்மெயிலர்ங்கிறதும் தெரியும்.
தன்னுடைய ஆசைக்காகவும் தன்னுடைய பதவிக்காகவும் ஜெயலலிதா பண்ணுன ப்ளாக்மெயில்கள கொஞ்சம் சொல்றேன்.
1. ஜெயலலிதாங்கிற பெண்ண, சினிமாவுலயும் அரசியல்லயும் வளர்த்து விட்டவரு எம்.ஜி.ஆரு. அது உலகத்துக்கே தெரியும்.
தன்ன வளர்த்து, தனக்கு எல்லாமுமா இருந்த எம்.ஜி.ஆரையே, அவரு உடம்பு சரியில்லாம இருந்தப்ப.... "அவருக்கு வயசாயிடுச்சு, செயல்பட முடியாத முதல்வரா இருக்காரு... அதனால அவருக்குப் பதிலா என்னை முதல்வராக்குங்க'ன்னு அப்போ பிரதமரா இருந்த ராஜீவ் காந்திக்கு கடிதம் எழுதுச்சு இந்த அம்மா.
இது எம்.ஜி.ஆர ப்ளாக்மெயில் பண்ணுனதுதான...? நீங்களே சொல்லுங்க...
அடுத்து, டான்சி வழக்கு.
முதல்வர் பதவியில இருந்துக்கிட்டு, அரசாங்கத்தோட டான்சி நிலத்த, சட்டத்த மீறி விலையை குறைச்சு தன் பேருலயே வாங்கி ஸ்வாகா போட்டது சம்பந்தமா வந்த வழக்கு அது.
அப்போ தமிழ் நாடு கவர்னரா இருந்த சென்னா ரெட்டிதான் அந்த வழக்கு போடறதுக்கு அனுமதிய குடுத்தாரு..
"எம் மேலயே வழக்கு போடுறதுக்கு அனுமதி குடுப் பியா?'ன்னு, சென்னா ரெட்டி மேல அந் தம்மா போட்டுச்சுப் பாருங்க ஒரு பழி...! "கவர்னர் சென்னா ரெட்டி என்னிடம் தவறாக நடந்துக்கிட்டார்...'' அப்படின்னு ஒரு பெரிய குண்ட தூக்கிடமால்னு போட்டுச்சு.
இது சென்னா ரெட்டியோட கவர்னர் பதவிய காவு வாங்க வச்ச பெரிய ஆப்பு. இதன்முலமா அவருக்கு ஒரு நெருக் கடியக் குடுத்து, பதவிய விட்டுத் தூக்கு றதுக்காக சொன்ன பச்சைப் பொய். இது வும் ஒருவகையான ப்ளாக்மெயில்தான?
அடுத்ததா, இது ரொம்ப முக்கியம்... முன்னாடியும் ஒரு இடத்துல லேசா சொல்லியிருப்பேன்.
1996-ல தமிழ்நாட்டுல ஆட்சி மாற்றம். கலைஞர் ஆட்சிக்கு வந்தவுடனே, கிட்டத்தட்ட 13 ஊழல் வழக்குகள் ஜெயலலிதா மேல.
வருமானத்துக்கு மீறிய சொத்து வழக்கு, டான்சி வழக்கு, ப்ளசண்ட் ஸ்டே வழக்கு.... இப்படியா 13 வழக்குகள்.
அதனால இந்தம்மா ஜெயிலுக்குப் போய் களி தின்னுச்சு. கூடவே உடன்பிறவா சகோதரியும் ஜெயில்ல களி தின்னாங்க.
1998. ஜெயலலிதா சப்போர்ட்டுல மத்தியில வாஜ்பாய் கவர்ன்மெண்ட்.
வாஜ்பாய் பிரதமரா பதவியேத்தவுடனே, இந்தம்மா பண்ணுன ப்ளாக்மெயில் ஒண்ணா, ரெண்டா...? அப்படி மெரட்டு மெரட்டுன்னு மெரட்டுனதுல முக்கியமா...
"என் மேல உள்ள எல்லா கேஸையும் வாபஸ் வாங்கணும்''
"தமிழ்நாட்டுல நடந்துக்கிட்டிருக்கிற கலைஞர் ஆட்சிய உடனே டிஸ்மிஸ் செய்யணும்''னு பிரதமர் வாஜ்பாய, ப்ளாக்மெயிலுக்கு மேல ப்ளாக்மெயிலா பண்ணி பண்ணி அவருக்கு ரொம்பவே இம்சைய குடுத்துச்சு.
பி.ஜே.பி.யில இருந்த நல்ல மனுஷங்கள்ல பிரதமர் வாஜ்பாயும் ஒருத்தரு. இந்தம்மா பண்ணுன ப்ளாக் மெயிலுக்கு அவரு ஒத்துப்போகல. எல்லாமே சட்டப் படி நடக்கும்னு அவரு கைய விரிச்சதுனால, "நான் ஒண்ணு சொல்றேன்... நீ முடியாதுங்கிறியா?'ன்ற கோவத் துல... தன்னோட ப்ளாக்மெயிலுக்கு ஒத்துப்போகலங் கிறதுக்காக, வாஜ்பாய் பிரதமரா இருந்த மத்திய அரசையே கவுத்துருச்சி. 13 மாசம் பிரதமரா இருந்த ஒரு மனுஷன தூங்கவிடாம ப்ளாக்மெயில் பண்ணுனது இந்தப் புண்ணியவதி ஜெயலலிதாதான்.
இப்ப தெரியுதா ஒங்களுக்கு... ப்ளாக்மெயிலர் யாரு, நானா, இல்ல ஜெயலலிதாவா?ன்னு.
நக்கீரனுக்கு எதிரா ஜெயலலிதா முதல் அறிக்கை வெளியிட்டவுடனே, நான் பெருமாள் சாருக்கு போன்பண்ணி "சார் உடனே ஆபீசுக்கு வர முடியுமா''ன்னு கேட்டேன்.
"அண்ணாச்சி நான் புறப்பட்டு இப்பவே வந்துர்றேன்'னு உடனே புறப்பட்டு வந்துட்டாரு.
அப்போ எனக்கு உதவியாளரா இருந்த தம்பி சிவகுமார், அப்போ இருந்த தம்பி காமராஜ், இப்ப இருக்கிற பொறுப்பாசிரியர் லெனின் எல்லாரும் சேர்ந்து டிஸ்கஸ் பண்ணுனோம்.
"இத இப்படியே விடக்கூடாது. உடனே இத வழக்கா எடுத்துட்டுப் போகணும்''னு முடிவெடுத்தோம்.
வழக்குத் தொடுக்கணும்னா அதுக்கான ஆவணங்கள்லாம் வேணுமே? அதனால கலைஞர்ட்ட அப்பாயின்ட்மெண்ட் கேட்டு உடனே கலைஞர சந்திச்சோம்.
கலைஞர், "என்ன, சொல்லுங்க''ன்னாரு.
"அண்ணே, நீங்க அந்த அறிக்கைய படிச்சீங்களா?''ன்னேன்.
"நானும் படிச்சேன்''னாரு கலைஞர்.
அவரு எப்படி படிக்காம இருப்பாரு? 4:00 மணிக்கே பாத்திருப்பாரு. எப்பவுமே காலைல நாலு... அஞ்சு... மணிக்கெல்லாம் எல்லா பத்திரிகையும் படிச்சிருவாரு கலைஞர்.
"என்னண்ணே இது ரொம்ப அநியா யமா இருக்கு. அந்தம்மா ஏதோ திட்டம் போடுதுண்ணே. இதுக்கு பதில் சொல்லாம இருந்தா நல்லாருக்காதுல்லண்ணே''ன்னேன்.
"என்ன பண்ணலாம்''னு கலைஞர் கேட்டாரு.
(புழுதி பறக்கும்)