(62) பெருமாள் எல்லாம் பெத்தபெருமாளா?
"கர்நாடகாவில் இருந்து தூது போகத் தயார்' அப்படின்னு வேணுகோபாலோட படத்த போட்டு கர்நாடக பத்திரிகை கள்ல செய்தி வெளியாகுது. ஏதோ "சுடச் சுட தோசை ரெடி! சுடச்சுட சப்பாத்தி ரெடி!'ங்கிற மாதிரி... தூது போக ஆள் ரெடி, தூதுவர் ரெடின்னு செய்தி பண்ணிட்டாய்ங்க. அது அங்க பரபரப்பாகுது...
நம்மகிட்டயும் பத்திரிகைக் காரங்க நெறைய பேரு இருக் காங்கள்ல. பத்திரிகைக்காரங்க எல்லாருமே நக்கீரன் கோபால் நம்ம ஆளுன்னு சொல்லுவாய்ங் களா? நாலு பேருல ரெண்டு பேரு நக்கீரன் கோபால் நாசமா போகட்டும்னு நெனைப்பாங்கள்ல? அவங்க என்ன பண்ணிட்டாங்க... "கர்நாடகாவுல இருந்து தூது போக ஒரு அட்வகேட் தயாரா இருக்காரு... தூது போக ஆள் தயார்... தூது போக ஆள் தயார்'...னு தலைப்புச் செய்தியா போட்டு வியாபாரம் பண்ண ஆரம்பிச்சிட்டாய்ங்க.
இதவச்சு, ஏர்போர்ட்ல கலைஞர்ட்ட பத்திரிகைக் காரங்க கேக்குறாங்க.
கேள்விகளுக்கு நகைச் சுவையா பதில் சொல்றதுல கலைஞருக்கு மிஞ்சுன ஆளே கெடையாது. கலைஞருக்கு நிகர் கலைஞர்தான். கலைஞ ரோட நகைச்சுவை நயம்கிறது எல்லாருமே ரசிக்கக்கூடிய ஒண்ணு. நாங்களே "கலைஞரின் நகைச்சுவை நயம்'னு ரெண்டு வால்யூம் புக் போட்டி ருக்கோம்.
"கர்நாடகத்துல இருந்து வேணுகோபால்ங்கிறவரு, ராஜ்குமார் மீட்பு விஷயமா தூது போக நான் தயார்'னு சொல்லியிருக்காரே அதைப் பத்தி...?ன்னு ரிப்போர்ட்டர் ஒருத்தர் கலைஞர்ட்ட கேட்க...
கலைஞர் சட்டுன்னு, "பெருமாள் எல்லாம் பெத்த பெருமாள் ஆகிட முடியாது''ன்னு சொல்லிட்டுப் அவரு பாட்டுக்கு போயிட்டே இருந்தாரு.
இதுல எவ்வளவு அர்த்தம் பொதிஞ்சு கெடக்கு பாருங்க. என்ன அர்த்தத்துல சொல்றாருன்னா... "எல்லாரும் நக்கீரன் கோபால் ஆகிட முடி யாது'ன்னு நச்னு சொல்லிட் டாரு.
இது கலைஞர் என்மேல வச்சிருந்த நம்பிக்கை. அந்த நம்பிக்கைய காப்பாத்துறதுக் காகத்தான் உசுரக் குடுத்து வேல பாத்தோம்.
கிட்டத்தட்ட ரெண்டு மாசம் ஆயிடிச்சி. ராஜ்குமார் வருவாரா... அவர விடுதலை பண்ணிடுவாங்களா? என்ன நடக்கப்போகுதோ?ன்னு நாலா பக்கமும் பேச ஆரம்பிச் சிட்டாய்ங்க. இதுக்காக கர்நாடகா முழுக்க பந்ந் நடக்குது. பள்ளிக்கூடம், காலேஜ் எதுவுமே தொறக்கல. எல்லாமே அடைபட்டுக் கெடக்குது. எங்க பாத்தாலும் ராஜ்குமார் வந்துரமாட் டாரா....ங்கிற எதிர்பார்ப்பே மேலோங்கியிருந்தது. அந்த பரபரப்பு அங்க அடங்கவே யில்ல... அந்த பரபரப்பு நக்கீரனையும் சுத்தி... சுத்தி வந்துக்கிட்டிருந்தது. இந்த ரெண்டு மாசத்துல ரெண்டு மாநிலத்துலயும் எந்த உயிர்ச் சேதமும், ஒரு அசம்பாவிதமும் கூட நடக்கல.
நானும் ரஜினி சாரும் பெங்களூருக்கு கவர்ன்மெண்ட் சார்பா குடுத்துருந்த புல்லட் புரூப் கார்ல போயிட்டிருக் கும்போது, ரஜினி சார்தான் என்ன கூப்பிட்டு, "இங்க பாருங்க கோபால்''னு குனிஞ்சி ஒரு எடத்த பாக்கச் சொன் னாரு. பார்த்தா... பெரிய பெரிய கட்டிடங்கள்ல உள்ள கண் ணாடியெல்லாம் நொறுங்கி யிருக்கு. குறிப்பா சாஃப்ட்வேர் கம்பெனிகள்ல முகப்பு பூரா கண்ணாடியாத்தான் இருக்கும்... அதெல்லாம் உடைஞ்சி, நொறுங்கி கெடக்கிறத பாக்க முடிஞ்சது. அதுக்கான கோபத்த என்னால உணர முடிஞ்சது... ஆனாலும் ரெண்டு மாநிலத்துலயும் உயிர்ச் சேதம் எதுவும் நடக்காம இருந்தத நெனைச்சி நிம்மதி.
உடனே நானும் ரஜினி சாரும் கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவை நேரில் சந்திச்சி பெங்களூர்ல நாங்க நேர்ல பார்த்த சம்பவங்கள விளக்கமா எடுத்துச் சொன் னோம். அதையெல்லாம் அக் கறையா கேட்டுக்கிட்ட முதலமைச்சர், "தமிழர்களுக்கு எந்தப் பிரச்சினையும் வராம அவர்களுக்கு நாங்க உறுதுணையா இருப்போம்'னு உறுதி குடுத்தாரு. அப்போ அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கேயும், கன்னட நடிகர் அம்பரீஷும் உடன் இருந்தனர்.
"ராஜ்குமார் கடத்தல் விவ காரம் இத்தன நாளா கடந்து போயிட்டிருக்கு. எந்த உயிர்ச் சேதமும் இல்ல... பிரச்சினைய நல்ல முறையில ஹேண்டில் பண்ணிக்கிட்டிருக்காங்க. ஒரு கலாட்டா, ஒரு பயங்கரம், அட் லீஸ்ட் ஒரு எழவு... இப்படி எதுவுமே நடக்கலியே...? இந்த சூழ்நிலை இப்படியே போனா நல்லா இல்லியே'ன்னு இங்க இருக்கிற போயஸ் கார்டன் ஆத்தாவுக்கு பொறுக்கல.
அதோட அவங்களுக்கு ஜால்ரா போடுற, எஸ்.டி.எப்.ல உள்ள நாலஞ்சு அடிவருடிங்க... "எம்மாம் பெரிய கடத்தல் இது. ராஜ்குமார் சார வீரப்பன் நிச்சயமா போட்டுத் தள்ளியிருப்பாரு... அதோட, தூது போன மீசக்காரன் கோபா லோட கதையையும் முடிச் சிருப்பாரு' அப்படின்னு கௌப்பி விட்டுட்டாய்ங்க.
நல்லா யோசன பண்ணிப் பாருங்க மக்களே! ராஜ்குமார் மட்டும் அன்னிக்கு உசுரோட வெளிய வரலேன்னா... நக்கீரனே கெடையாது. இன்னிக்கு லண்டன்ல நக்கீரனுக்கு இவ்வளவு பெரிய பெருமை கெடைச்சிருக்காது. இந்த நேரத்துல நான் எல்லாத்தையும் ஊத்தி மூடிட்டு.... எங்க ஊரு அருப்புக்கோட்டையில அரிசி வியாபாரமோ, முறுக்கு வியா பாரமோ பாத்துக்கிட்டிருப் பேன். எனக்கு மட்டுமில்ல... எங்க நக்கீரன் தலைமுறைக்கே பெரிய அளவுல கெட்ட பேர் வந்து சேர்ந்திருக்கும். அப்படி ஒரு அவப்பெயரோடதான் நாங்க ஊருக்குக் போயிருப் போம்.
ஏன்னா நம்மளால எந்த விதத்திலயாவது உயிர்ச்சேதம் ஏற்பட்டிருந்திச்சின்னா... நெனைச்சிப் பாருங்க...? ஆத்தாடி.... அப்படி ஒண்ண... நெனைச்சுக்கூடப் பார்க்க முடியல!
ஆனா... அப்படி ஏதாவது ஒண்ணு நடந்துறாதான்னு நெனைச்சி... தூண்டி விடுற வேலய கமுக்கமா செஞ்சுக் கிட்டிருந்தது போயஸ் கார்டன். ஏதாவது எசகுபிசகா குழப்பம் நடந்து... அந்த சந்தர்ப்பத்த பயன்படுத்தி கொல்லப்புறம் வழியா அரியாசனத்துல ஏறிடலாம்னு ஐடியா பண்ணுனாங்க. எப்ப டின்னா... "எனக்கு வேணும்... எனக்கு வேணும்... எனக்கு வேணும்...'னே எப்பவும் அலை யுற குரூப் அது. சின்னப்புள் ளைங்க சேர் வேணும்னு அடம் புடிக்கிற மாதிரி... "முதலமைச் சர் நாற்காலி வேணும்... முத லமைச்சர் நாற்காலி வேணும்'னு அடம் புடிக்கிறதுல ஜெயலலிதாதான் நெம்பர் 1.
அவங்க ரொம்பவே எதிர்பார்த்தாங்க. அதே மாதிரி கர்நாடகாவுலயும் ஒரு குரூப் எதிர்பார்த்துச்சு. (அது இப்ப வேணாம். அதுக்குள்ள போனா நெறைய தூரம் போகவேண்டி வரும்... அதனால இப்ப வேணாம்.)
ராஜ்குமார் கடத்தல் விவகாரத்துல, நாலாவது முறையா காட்டுக்கு போறதுக்கு முன்னாடி எனக்கு ஒரு பட்சி சொல்லுது. எஸ்.டி.எப்.லயும் நமக்கு உளவு சொல்றதுக்கு சில நல்லவங்க இருப்பாங்கள்ல. அவங்க சொல்றாங்க...
"கொஞ்சம் கவனம்ணே... மறுபடியும் மாறு வேஷத்துல யோ, வேறு ஏதோ ஒரு வழி யிலயோ ஒங்கள பின்தொடர்ற துக்கு ப்ளான் பண்ணியிருக் காங்கண்ணே...''ன்னாங்க.
எஸ்.டி.எப். கேம்ப்ப மூடுனாலும், அங்க இருக்கிற எல்லாரையும் வெளிய போகச் சொல்லி அப்போ கலைஞரே சொல்லிட்டாலும் கூட, நாம அப்படியே சட்டைய தோள்ல போட்டுட்டு ஹாயா லெப்ட் ரைட் போட்டுட்டுப் போக முடியாதுல்ல. ஜெயலலிதா கவர்ன்மெண்ட் இருக்குறப்ப வும் வீரப்பன போய் பாத்து ருக்கோம். அப்போ எவ்வளவு கவனமா இருந்திருப்போம்... அதே கவனத்தோட கலைஞர் கவர்ன்மெண்ட் சமயத்துலயும் நடந்துக்கிட்டோம்.
ஏன்னா ஆட்சி மாறி... மாறி வந்தாலும், போலீஸ் ஒண்ணுதான. கலைஞரும், ஜெயலலிதாவும் ஆளுதான் வேற வேற. கலைஞர், எம்மேல இருக்கிற அபிமானத்துல, எனக்கும் எங்கூடவே வர்ற தம்பி களுக்கும் எந்தவித பாதிப்பும் வந்துறக்கூடாதுன்னு நெனச் சது உண்மையிலேயே எங்க ளுக்கு கெடைச்ச கொடுப்பினை.
ஆனா போலீசு...?
"என்னடா இது... நாம இவ்வளவு பேரு மீசைய முறுக்கிட்டுத் திரியுறோம்... நம்மளத் தாண்டி ஒரு மீசைக் காரன் வீரப்பன் காட்டுக்குப் போயிட்டு உசுரோட வெளிய வந்துட்டானே?'ங்கிற வௌம் நம்ம மேல போலீசுக்கு இருந்துச்சு. அதனால கலைஞர் போட்ட ஆர்டர தூக்கி குப்பை யில போட்டுட்டு, நெறைய பேரு மாறு வேஷத்துல காட்டு வாசியோட காட்டு வாசியா திரியுறாங்கன்னு செய்தி வந்துச்சு.
"என்ன நடந்துரும்...? காட்டுக்குள்ள என்ன பெருசா பண்ணிறப் போறாங்க... ரெண்டு மாசம் சஸ்பெண்ட் பண்ணுவாங்க அவ்வளவு தானே...' அப்படித்தான் இருந்திருக்கு அவங்களோட எண்ணம்.
கலைஞருக்கு எப்பவுமே ஒரு பெருந்தன்மை உண்டு. நான் முன்னாடி ஒருதடவ சொன்னேன் பாருங்க, அது மாதிரி... "அடப் போறான்யா'ம் பாரு. அவரு நல்லெண்ணத்துல தான் அப்படிச் செல்றாரு.
ஆனா... தேவாரம் போலீஸ் கொஞ்சம் பேரு இருக்காங் கன்னு சொல் வேன்ல. அவங்க "உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்ற' மாதிரி சம்பளத்த கலை ஞர் கையில வாங் கிட்டு... வேலை பார்க்குறது, ஆள காட்டிக் குடுக்கு றது, போட்டுக் குடுக்கிறது, விசு வாசமா இருந்தது... எல்லாமே ஜெய லலிதாவுக்கு. அப்படி இருந்த வன்லாம் வௌங் காம போயிரு வான்.... அது வேற விஷயம், அதுக் குள்ள நான் போகல.
நான் காட் டுக்குள்ள இருக் கும்போது ஒரு நாள்... "தினகரன் பேப்பர்ல ஒரு அறிக்கை வந்திருக்கு'ன்னு வீரப் பன், என்கிட்ட காமிச்சாரு.
காட்டுக்குள்ள எப்படி தினகரன் பேப்பர் வந்திச்சுன்னு நெனைச்சிறாதீங்க. வீரப்பன் காட்டுக்குள்ள இருந்தாலும் நாட்டுல நடக்குற செய்தியெல் லாம் அவருக்கு அத்துப்படி.
அந்த பேப்பர்ல குபீர்னு வந்த அறிக்கை வெளியான தேதிகூட எனக்கு நல்லா ஞாபகமிருக்கு.
20-10-2000.
19-10-2000-ல அந்தம்மா அறிக்கை குடுத்துருக்கு, அது 20-ந் தேதி வெளியாகியிருந்தது.
(புழுதி பறக்கும்)