dd

"ஈழத்தாய்' போட்ட ஆட்டம்!

ரு விஷயம். போர்க்களம் ஆரம்பிச்சது ஒரு மாதிரி... இப்ப அப்படியே ட்ராக் மாறி ஈழம், கீழம்னு போகுதுன்னு தப்பா எடுத்துக்காதீங்க. எல்லாத்துலயும் அரசியல் எப்படியெல்லாம் விளையாடுதுன்னு நாம தெரிஞ்சுக்கணும். அதவிட இந்த ஈழ விஷயத்துல பதவி வெறியில, "ஈழத்தாய்' ஜெயலலிதாவோட முகமூடிய கொஞ்சம் கழட்டவேண்டியதாப் போச்சு. இது யாருக்கும் வக்காலத்து அல்ல.

Advertisment

சிங்களப் பேரினவாத அரசு அப்பாவி தமிழ் மக்கள் மீது க்ளஸ்டர் குண்டு, அதாவது கொத்துக் குண்டுகள் போடுறத நிறுத்துறதா உறுதிமொழி கொடுத்ததால, கலைஞர் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் அப்படின்னு ஒரு அறிக்கை 27-4-2009 அன்று மாலை பத்திரிகைகள்ல அறிக்கையா வெளிவந்துச்சு. உண்ணாவிரதம் முடிஞ்சதும் மெரினா கூட்டம் கலைஞ்சது. ஆனா போயஸ் கார்டன் கொதிச்சது. உச்சியில் இருந்து உள்ளங் கால் வரைக்கும் தையத்தக்கா தையத்தக்கான்னு ஒரே ஆட்டம். கலைஞர் உண்ணாவிரதம் இருந்ததால அவருக்கு எல்லார் மத்தியிலயும் நல்ல பேரு வந்திடுச்சே, அத எப்படித் தாங்கிக்கிடும் இந்தம்மா. அந்தம்மா தாங்கிக்கிட்டாலும்கூட கூடயிருக்கிற மத்த ஆதரவாளர்க ஏத்துக்கிற மாதிரி இல்ல. அந்தம்மா தனி ஈழம் வாங்கிக் குடுக்கும்ணு நம்பினாங்க பாருங்க... இவங்கள எங்க போய் சொல்ல?

கலைஞர் -உண்ணாவிரதம் - பேரு... எப்படியாவது மாத்தணும்னு உச்சஸ்தாயில அந்தம்மா கத்துது. அது எப்படிங்க உங்களுக்குத் தெரியும்னு கேட்டுறாதீங்க. இந்த மாதிரியான ஜெயலலிதாவ இன்னிக்கு நேத்தா பாக்குறோம்? அந்தம்மா, தான் நெனைச்சத சாதிக்கணும்னா எந்த எக்ஸ்ட்ரீமுக்கும் போகும். அத நாங்க அனுபவ ரீதியா பார்த்திருக்கோம். அனுபவிச்சதுனால நொந்துபோய் சொல்றோம்.

முள்ளிவாய்க்கால் போர் உச்சகட்டத்துல நடந்துக்கிட்டிருக்கு. விடுதலைப்புலிகளின் முக்கிய பொறுப்புல இருக்கிறவங்க, தளபதிக எல்லாம் களத்துல சிங்களனுக்கு எதிரா உக்கிரமா போராடிக்கிட்டிருக்காங்க. அந்தப் பக்கம் புலிகள் யாரையும் தொடர்புகொள்ள முடியலையேன்னு முதல்ல பேசிக்கிட்டாய்ங்க. இந்தப் பக்கம் அந்தம்மா ஈழ விஷயத்துல தனக்கு சாதகமா செய்தி வந்தே ஆகணும்னு ஒத்தக்கால்ல நிக்குது. சரி என்ன பண்றது?

Advertisment

மாலைல வர்ற பேப்பர்கள்லயெல்லாம் கலைஞருக்கு சாதகமா செய்திகள் வந்திடுச்சா... அதப் பார்த்து இன்னும் கோபம் தலைக்கேறி பேப்பரயெல்லாம் தூக்கி எறியுது. இப்ப அந்தம்மாவ சாந்தப்படுத்தணும்னா... உலகத்துல எந்த மூலயில இருந்தாவது நீங்க அது விரும்புனத கொண்டுவந்து குடுக்கணும். இல்லன்னா முடிஞ்சிச்சு கத. அது ஜெ.கூட இருக்கறவங் களுக்குத்தான் தெரியும். இப்போ இந்த செய்திக்கு மாற்றுச் செய்தி வந்தாதான் அது அடங்கும். அதுக்கு எங்க போறது?

அங்க இருக்கிற ஈழ தளபதிகள யாரையாவது புடிச்சு, இப்படி ஒரு செய்தி வந்திருக்கா? இல்ல இப்படி ஒரு முடிவெடுத் திருக்காங்களா?, கொத்துக் குண்டுக போடுறத நிறுத்தியிருக் காங்களா? அப்படிங்கிறத கேக்கணும். இல்ல... நிறுத்தல்லங்கற ஒரு செய்தி எப்படியாவது அறிக்கையா வரணும்... இல்லன்னா அங்க ஜங் ஜங்கு ஜங்குன்னு ஆடற அந்தம்மா ஆட்டத்த நிறுத்தாது. இப்ப... ஈழத்துல உள்ள தலைவர்கள இங்க இருக்கிற தனி ஈழ ஆதரவாளர்கள் சிலபேர் தொடர்பு எடுத்துப் பேசுறாங்க. அப்ப அந்தத் தொடர்புல நடேசன் கிடைக்கிறாரு. நடேசன் அப்ப விடுதலைப் புலிகளோட செய்தித் தொடர்பாளரா இருந்தாரு. அவரும் உச்சகட்ட போர்க்களத்துல இருக்காரு. உங்க தமிழ்நாட்டு அரசியலுக்கு எங்களால ஒண்ணும் பண்ணமுடியாதுன்னு முதல்ல செய்தி வருது.

ff

ஒருகட்டத்துல இங்கிருக்கவங்க என்ன சொன்னாங்களோ... அங்க யிருந்து ஒரு அறிக்கை சுடச்சுட வருது. எப்படியோ போராடி அறிக்கை வர வச்சுட்டாங்கன்னு வச்சுக்கங்களேன். அந்த அறிக்கையில என்ன இருந்ததுன்னா, கருணாநிதி உண்ணாவிரதம் இருந்ததால் மட்டும் கொத்துக் குண்டுகள் போடுவதை நிறுத்தவில்லை. ஈழத்திலுள்ள அப்பாவி மக்கள் மீது கொத்துக் குண்டுகள் தொடர்ந்து போடப்பட்டு எம் மக்களை கொத்துக் கொத்தா சாகடிச்சிட்டிருக்குது சிங்களப்படை அப்படிங்கிற மாதிரி நடேசன் பேர்ல ஒரு அறிக்கை வெளிவந்துச்சு. இதுவும் அன்னைக்கி மாலை பேப்பர் கடைசி எடிசன்ல வெளியாகுது. ஒருவகையில இது அந்தம்மாவுக்கு கிடைச்ச வெற்றிதான். காலையில ஈழத் தமிழர்களுக்காக கலைஞர் உண்ணாவிரதம் இருந்த உடனே மக்கள் ஆதரவு கலைஞர் பக்கம் திரும்புது... அப்படியே ஜெயலலிதா பக்கம் அடுத்த நாள் திரும்ப வைக்கிறாய்ங்க.

இப்ப அந்தம்மா நினைக்குது 40 தொகுதி யிலயும் நாமதான் ஜெயிக்கிறோம், நாமதான் மத்தியில ஆட்சி பண்ணப் போறோம். பி.ஜே.பி. அரசுல முக்கிய பொறுப்புகள வாங்குறோம் அப்படின்னு டிமாண்ட் வைக்க ரெடியாகுது. இவங்கதான் டிமாண்ட் வைக்குறதுல சூப்பர் லேடியாச்சே. உடனே தனி ஈழம்ங்கிறதை வாங்கி கேக்க வெட்டி அவங்கள்ட்ட குடுத்து இந்தாங்க ஆண்டுக்கங்கன்னு குடுப்பாங்களாம்.

இப்போ தேர்தல். மறுபடியும் முதல் அத்தியாயம் அப்படிங்கிறது மாதிரி எல்லாரும் சேர்ந்து ஜங்கு ஜங்குனு ஜால்ரா அடிக்கிறாங்க. அதாவது துணைப்பிரதமர் ஜெயலலிதா, அத்வானி பிரதமர்னு. அத்வானி பிரதமர்ங்கிறத சைலண்டா சொல்றாங்க. ஆனா துணைப்பிரதமர் ஜெயலலிதான்னு சவுண்ட்டா சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. இவங்களும் நாமதான் துணைப்பிரதமர்ங்கிற நெனைப்புல மிதக்க ஆரம்பிச்சிட்டாங்க. 2009 பாராளுமன்றத் தேர்தல் முடியுது, ரிசல்ட்டுக்காக எல்லாரும் வெயிட்டிங். இதுக்கிடையில ஜெயலலிதா வீட்ட சுத்தி வடக்க இருக்குற டி.வி.காரங்க எல்லாம் அவங்கவங்க ஓபி வேன நிறுத்திட்டாங்க ஓபி வேன் அப்படின்னா... ஒரு இடத்துல லைவ்வா செய்தி சேகரிச்சு அங்கயிருந்தே ஒளிபரப்பு வாங்கள்ல அதத்தான் ஓபி வேன்ங்கிறாங்க. இப்ப துணைப்பிரதமர் ஜெயலலிதாங்கிற ரேஞ்ச்சுக்கு அவங்க நினைச்சிக்கிட்டிருக்கிற நேரத்துல தேர்தல் ரிசல்ட் வெளியானது. தேர்தல்ல 29 இடங்கள் தி.மு.க. கூட்டணிக்கு, மீதியுள்ள இடங்கள்தான் அ.தி.மு.க. கூட்டணிக்கு கிடைக்குது. துணைப்பிரதமர்ங்கிற பெரிய பலூன ஊதிட்டிருந்தாங்கள்ல... அது இப்ப பட்டுன்னு வெடிச்சிடிச்சி. ஜெயலலிதாவோட துணைப் பிரதமர் கனவு புஸ்ஸ்...

ff

ஆனாலும் அந்தம்மா பிரதமர் கனவுல இருந்து விலகவே இல்ல. இப்ப அடுத்து இன்னும் வாய்ப்பிருக்கே. அதாவது... 2014 இருக்கே. விட்டதயெல்லாம் புடிக்கிறதுக்காகத்தான் மத்த வேலைகள ஆரம்பிக்குது. அதுல ஒண்ணுதான் கொடநாடு. கொடநாட்டுல 90 அறைகள். இதுல எல்லா நவீன வசதிகளோடயும் இருக்கு. எம்.பி.க்கள தூக்கணும்னா இந்த சொகுசு அறைகள பயன்படுத்தலாம்னுதான். ஏன்னா இதுக்கு முன்னாடி இதே மாதிரி செஞ்ச அனுபவங்கள்லாம் ஜெயலலிதாவுக்கு இருக்கு. ஏன்னா அப்ப ஜா., ஜெ.ன்னு அ.தி.மு.க. பிரிஞ்ச நேரம். அப்போ ஜெ. அணியில சேவல் சின்னத்துல போட்டி போட்டு ஜெயிச்சு வந்த 27 எம்.எல்.ஏ.க்கள ஊர், ஊரா கொண்டு போயி வச்சாங்க. அதுல ஆட்டோ சங்கரோட ஒர்க்கும் இருந்தது.

மஜாவுக்கு மஜா, துட்டுக்கு துட்டு... ஒரே ஜாலிதான். (புரிஞ்சவய்ங்க புரிஞ்சுக்கங்க...) எல்லாரையும் பாதுகாப்பா ஒரு இடத்துக்கு கொண்டு வந்தாங்க. அவங்களுக்குத்தான் இப்படி ஒரு முன்அனுபவம் இருக்கே. அதுக்காகத்தான் இந்த கொடநாட்டுல 90 அறைகள் கொண்ட அதி நவீன சொகுசு பங்களா. கொடநாடு பங்களாவ வெளித்தோற்றத்ததான நாம பார்க்கிறோம். உள்ளுக்குள்ள எந்த கேமராவும் போயிருக்காது. அதனால தெரியாது. அதாவது இரும்புக் கோட்டைம்பாங்கள்ல... நமக்கு ஒருநாள் வரும்... அப்போ அங்குலம் அங்குலமா எடுத்து அதையும் வெளியிடுவோம், இது உறுதி.

இப்ப ஒரு சின்ன பிரேக். பிரேக்ன்னா தொடருக்கு அல்ல.... தொடர்ல தொடர்ந்து அடிதடின்னு வருதா, அதுல இருந்து ஒரு சின்ன பிரேக்... அவ்வளவுதான்! ஒரு நல்ல செய்திய உங்கள்ட்டயும் சரி, வாசகர்கள்ட்டயும் சரி... நம்ம நலன்விரும்பிகள் இருக்காங்க, நமக்கு ஆசி குடுக்குறவங்க இருக்காங்க, நம்மமேல அன்பு காட்றவங்க இருக்காங்க... இப்படி எல்லார்ட்டயும் இந்த நல்ல விஷயத்த பகிர்ந்துக்கணும்னுதான் இப்ப பிரேக் எடுக்குறேன்.

(புழுதி பறக்கும்)

தனிப்பட்ட பேட்டியல்ல!

நக்கீரன் வாரமிருமுறை இதழின் Vol.34, Issue No.43, 2021 செப்டம்பர் 15-17 இதழில் தியாகராசர் பொறியியல் கல்லூரி தொடர்பாக வெளிவந்த கட்டுரையில் திரு.பா.மனோகரன் மற்றும் பேராசிரியர் எஸ்.நாகன் இருவரும் நக்கீரனுக்கு பேட்டி அளித்துள்ளதாக பிரசுரிக்கப் பட்டிருந்தது. திரு.பா.மனோகரன் மற்றும் பேரா சிரியர் எஸ்.நாகன் இருவரும் ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றினர் என்றும் அது பேட்டி வடிவில் வெளியாகியுள்ளது என்றும், நக்கீரன் வாரமிரு முறை இதழுக்கு தனியாக பேட்டி எதுவும் அளிக்கவில்லை என்று அவர்கள் தரப்பில் மறுப்பும் விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.

(-ஆர்.)