(99) போலீஸ், ரௌடின்னு வரிசையா
போலீஸ் திமு... திமு... திமு...ன்னு மொட்ட மாடிக்கு ஏறுறானுவோ. பைண்டிங்ல ஃபாரம்லாம் மடிக்கிறதுக்கு கொஞ்சம் பொம்பளப் புள்ளைங்க இருப்பாங்க. அவங்க, ரவுடிக் கும்பல்தான் திரும்பவும் ஆபீசுக்குள்ள வந்துடிச்சுன்னு நெனைச்சு மொட்ட மாடிப் பக்கமா ஓடியிருக்காங்க. பொம்பளப் புள்ளைங்க அலறுன அலறல் சத்தம்... ஏதோ அபாயகரமான அலறரா மத்த எல்லாருக்கும் கேட்டிருக்கு. அத கேட்டவங்களுக்குத்தான் தெரியும்... நாம போற போக்குல எழுதுறோம். ஆனா அன்னிக்கு உயிர்வதைய அனுபவிச்சித்தான் என்கூட ஆபீஸ்ல வேலை பார்த்த தம்பிங்க எல்லாருமே இருந்திருக்கோம்ங்கிறத... அத என்ன வார்த்தையில சொல்றதுன்னே எனக்குத் தெரியல.
திமு... திமு... திமு...ன்னு போலீஸ்காரனும் மேல ஏறுறான். ஏற்கனவே அவங்க வெளியில ஏதோ ஒரு விஷயத்தப் பத்தி டிஸ்கஸ் பண்ணிருக்காங்க. ஏதோ சீக்ரெட்ட மறைக்கிறாங்க. உள்ளுக்குள்ளதான் எங்கேயோ ஆசிரியர் ஒளிஞ்சிருக்காருன்னு நெனைச்சி புதுசா வந்த டி.சி. பாஸ்கரனுக்கு நம்பத்தகுந்த வட்டாரத்துல இருந்து செய்தி வந்துச்சாம். அவரு வந்தவுடன தான் இந்த ஆக்ஷன்லாம்.
ராஜவேலு இவங்கள்லாம் எங்க ஆபீஸ ஒட்டி ஒரு இன்னொரு மாடி ப்ளாட் இருக்கும். சுவரத் தாண்டி அந்தப் பக்கம் போலாம்னு போயிருக்காங்க. இது ரொம்ப நேரமா இந்த போலீஸ்காரய்ங் களுக்குத் தெரியல. அதுவழியா தம்பிங்க மூணுபேரும் இறங்கி ஓடியாந்திருக்காங்க. எப்பவுமே வீட்டுல மாடிக் கதவ பூட்டிதான் வச்சிருப்பாங்க. துணி எதையோ எடுக்கிறதுக்காக பெரியவரு தம்பி பிரசாந்த் மேல போயிருக்காரு. அவரு கதவத் தொறந்தத பார்த்தவுடனே ராஜவேலு எல்லாருமா தட... தட...ன்னு கீழே இறங்கி வந்து, எங்க வீட்டுக் கதவ தட்டியிருக்காங்க.
அப்போ என்னோட துணைவியா ரும், அவங்களோட அண்ணன், பெரிய மாப்ள மூர்த்தியும், சின்ன மாப்ள ராஜாவும் வீட்டுல இருந்துருக்காங்க. எப்பவுமே ஒரு ஆபத்துன்னா சடார்னு அடுத்த நிமிஷம் என்னோட மாப்பிள் ளைங்க ஓடிவந்துருவாங்க. அவங்க வந்து என்னன்னு கேட்டிருக்காங்க.
அவங்கள்ட்ட... "ரவுடிகள்லாம் ஆபீசுக்குள்ள புகுந்துட்டாங்க. அதனால நாங்கள்லாம் இந்தப் பக்கமா வந்தோம்.... நீங்க கதவப் பூட்டிக்குங்க''ன்னு சொல்லிட்டு வெளிய போயிருக்காங்க நம்ம தம்பிக. விருட்டுன்னு மொட்ட மாடி கதவ பூட்டிட்டாரு மூர்த்தி.
இப்ப மேல வந்த பைண்டிங்ல உள்ள பொம்பளப் புள்ளைங்க எல்லாம் கீழ இறங்கி வந்து வீட்டுக்கு உள்ள வர்றதுக்கு ஒரு ஷட்டர் இருக்கு, அத தொறந்துட்டு நேரே நம்ம வீடு இருக்கிற 3-வது மாடிக்கு வந்து, "அக்கா... ஆபீசுக்குள்ள ரவுடிங்க கும்பலா வந்து அடிக்கிறாங்கக்கா''ன்னு அவங்க சவுண்டா சொல்லியிருக்காங்க.
மஃடி போலீசும் யூனிபார்ம் போலீசும்... ஆம்பளப் போலீஸ் பொம்பளப் போலீஸ் எல்லாருமா சேர்ந்து ஃபோர்ஸா வந்ததுனால... பொம்பளப் புள்ளைங்க நெனைச்ச சந்தேகம் உண்மைதான்னு நிரூபிக்கிறது மாதிரி அவங்க ரவுடிங்க மாதிரிதான் நடந்துக்கிட்டிருக்காங்க. அவங்க எஜமானி சொல்றத அவங்க கேக்கிறாய்ங்க... அவங்களால வேற என்ன செய்ய முடியும்?
இப்ப மேல ஏறிப்போன போலீஸ்... 2-வது ப்ளோர் ஆபீஸ், 3-வது ப்ளோர் எல்லாத்துலயும் தேடிப் பாத்துட்டு, மொட்ட மாடியில ஏறி.... அப்பதான் கண்டுபுடிக்கிறாய்ங்க... எங்க இந்தப் பக்கமா நின்னுக்கிட்டிருந்த மூணுபேரயும் காணோமே... எங்கிட்டுப் போனாங்க?ன்னு தேடுறாய்ங்க. தேடுனா... பக்கத்துல ஒரு மொட்ட மாடி இருக்கு, அது வழியாத்தான் அந்தப் பக்கமா போயிருக்காங்கன்னு, ஏ.சி. செந்திலும், யூனிஃபார்ம் போட்ட போலீஸ்காரய்ங்களும் அந்தப் பக்கமா ஏறித் தாவிப் போறாய்ங்க. (நீங்க படங்கள பாத்தாலே தெரியும்)
பைண்டிங்ல உள்ள பொண்ணுங்க ரவுடிங்க வந்துட்டாங்கன்னு மாடியில போய் சொல்லவும்... கதவ பூட்டிக்கிட்டு வீட்டுக்கு உள்ளயே இருந்துக்கிட்டாங்க.
பாருங்க... இதுல என்ன கொடுமன்னா.. நாம இஷ்டப்பட்டுத்தான் இந்த பத்திரிகைய ஆரம்பிச்சோம், அதனால ரொம்ப கஷ்டப்பட்டோம், அது வேற. ஆனா... எனக்காக வாழ்க்கைத் துணையா வந்து அவங்க படுற கஷ்டங்கள் இருக்கு பாருங்க... அது கொஞ்சநஞ்சமில்ல. ஜெயலலிதாங்கிற ஒரு அரக்கியினால அவங்க பட்ட துன்பத்தயெல்லாம் சொல்லிமாளாது.
இதென்னடா போலீஸ், ரௌடின்னு வரிசையா வந்து பயமுறுத்துறாங்களே... இதென்ன கொடுமன்னு விக்கித்து பயந்துபோய் உக்காந்துட்டாங்க. பிள்ளைகள் பெரிய மகள் பிரபாவதி, சின்ன மகள் சாருமதி, பெரியவர் பிரசாந்த், சின்னவர் ராம் சார், அப்பா, தம்பி துணைவியார் எல்லாருமே... என்ன எழவு எப்படி வரும்னு தெரியாம வீட்டுக்குள்ளயேதான் இருந்தாங்க.
மாடி வழியா வீட்டுக்குப் போற கதவு பூட்டியிருக்குதுன்னவுடனே, போலீஸ்காரங்க என்ன பண்ணிட்டாய்ங்க, மேல இருந்து தட... தட... தடன்னு கீழ இறங்கி ஷட்டர ஓபன் பண்ணி வந்திருக்காங்க. எங்க சீனியர் அட்வகேட் பெருமாள் சார், அவரோட ஜூனியர்ஸ் எல்லாரும் அங்க இருந்திருக்காங்க. அவங்கள்ட்ட போய் "வீடு பக்கத்துலதான் இருக்கிதுங்கிறத ஏன் எங்ககிட்ட சொல்லல? அவரு வீட்டுலதான் இருக்காருன்னு நெனைக்கிறோம்... மேல மாடியில இருந்து வீட்டுக்குப் போறதுக்கான கதவு பூட்டியிருக்கு. நீங்க எங்ககூட வீட்டுக்கு வாங்க... நாங்க வீட்ட ஸர்ச் பண்ணணும்''னு கேட்டீருக் காங்க.
பெருமாள் சாரும், சட்டப்படிதான வராங்கன்னு சொல்லி, அவரும் கூடவே வீட்டுக்குப் போயிருக்காரு.
கதவத் தட்டி "மூர்த்தி கதவத் தொறங்க... நான்தான் அட்வகேட் பெருமாள் வந்திருக்கேன். போலீஸ் வந்திருக்காங்க. ஸர்ச் பண்ணணும்ங் கிறாங்க... பண்ணிட்டுப் போகட்டும்''ன்னு சொல்லியிருக்காங்க.
என் மூத்த மாப்ள மூர்த்திதான் வந்து கதவத் தொறந்துருக்காரு. என்னோட அண்ணன் சங்கர் அப்போ வீட்டுக்கு வந்திருந்தாரு. எங்க குடும்பம் ஒரு கூட்டுக் குடும்பமாத்தான் வாழ்ந்துக்கிட்டிருக்கோம்.
போலீஸ்காரய்ங்க உள்ள வந்தவுடனே பர...பர...ன்னு எப்படியாவது கோபால அமுக்கிப் பிடிச்சிறணுங்கிற மாதிரி தேடுறாய்ங்க. எல்லா ரையும் ஒரு மாதிரியா கடுகடுன்னு பார்க்கிறாங்க.
வீட்டுல அப்பா ஒரு அறைல இருப்பாங்க. பிள்ளைங்க, எங்க அத்தை தனியா இன்னொரு அறையில இருப்பாங்க. அதுக்கு அடுத்து தம்பிக்கு ஒரு அறை. மேல மாடியில என்னுடைய அறை.
வந்த படுபாவிக என்ன பண்ணிட் டானுவோ... மேல ஒரு குரூப், கீழ ஒரு குரூப்... பக்கத்துல ஒரு குரூப்புன்னு பிரிஞ்சி, தனித்தனியா தாட்... பூட்....டுன்னு லத்திய வச்சுக்கிட்டு குடைய ஆரம்பிச்சுட்டாய்ங்க.
இந்த தொடர் எழுத ஆரம்பிச்ச சமயத் துல ஒருநாள் என் துணைவியார்கிட்ட நான் கேட்டேன். "ஏம்ப்பா அன்னிக்கு நம்ம வீட்டுக்கு போலீஸ்காரய்ங்க வந்தாங்கள்ல... அப்ப அவங்க என்னென்ன பண்ணுனாங்க?''ன்னு கேட்டேன்.
அதுக்கு அவங்க, "நான் கிச்சன்ல இருக்குறப்பதான் கும்பலா வந்தாய்ங்க. வந்த எல்லா ஆம்பள போலீஸ், பொம்பள போலீஸ் கையிலயும் லத்தி வச்சிருந்தாய்ங்க. கிச்சன்ல உள்ள சாமான் செட் எல்லாம் இருக்கிற கப்போர்ட தொறக்கச் சொல்லி ஒவ்வொண்ணா செக்பண்ணி இதென்ன, அதென்ன?ன்னு கேள்வியா கேட் டாய்ங்க. அதுல இருந்த பாக்ஸ் எல்லாத்தையும் தொறந்து பாத்தாய்ங்க''ன்னு சொன்னவங்க, "நான் கூட நம்ம பிள்ளைகள்ட்ட "என்னடா அப்பாவத் தேடித்தான இவங்க வந்திருக் காங்க'ன்னு கேட்டேன்... பிள்ளைங்க "ஆமா'ன் னாங்க. "அதுக்கு ஏன் மிளகு டப்பா, அரிசி டப்பா, உளுந்து டப்பாவயெல்லாம் போட்டுக் கொடையுறாங்க... அப்பா என்ன இதுக்குள்ளயா இருப்பாங்க'ன்னு விளையாட்டா சொன்னேன்''னு சிரிச்சுக்கிட்டே சொன்னாங்க. இப்ப சிரிக்கிறாங்க, ஆனா... அப்ப அவங்க மனசு எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும்...?
என்னா ஒரு யோசனை பாருங்க நம்ம போலீசுக்கு. "பட்டணத்தில் பூதம்' படத்துல வர்றது மாதிரி நாம என்ன டப்பாவுக்குள்ளயா ஒளிஞ்சிருப்போம்.
அதுக்கப்புறமா பிள்ளைங்க இருக்கிற அறை, தம்பியோட அறை எல்லாத்துலயும் போய் தேடு றாய்ங்க. பாத்ரூம்ல கூட போய் பாக்குறாய்ங்க. (படங்களப் பாத்தா ஒங்களுக்குத் தெரியும்)
இவ்வளவு நடந்த பிறகும் ஒருத்தன் வீட்டுல இருப்பானாங்கிற குறைந்தபட்ச அறிவாவது வேண்டாமா?
"நம்ம பிளாட்டுக்கு அந்த சைடுல ஒரு அட்ட கம்பெனி... க்ரவுண்ட் ப்ளோர் மட்டுமே இருக்கும். அடுத்ததா அஷ்ரா மகால்னு ஒரு கல்யாண மண்டபம் இருக்கும். அந்த மண்டபத்து மாடியில பூராவும் போலீஸ். அதே மாதிரி... எங்க ஆபீசுக்கு எதுத்த மாதிரி இருக்கிற எல்லா வீட்டு மாடியிலயும் போலீஸ். பக்கத்துல இன்னொரு கல்யாண மண்டபம் இருக்கு. அதுக்கு மேலயும் நெறைய போலீஸ். ஆபீசுக்கு வலது பக்கமா இருக்கிற வீடுகள்ல உள்ள மொட்டமாடிகள்லயும் போலீஸ்.
எதுக்குடா இவ்வளவு போலீஸ்....?
(புழுதி பறக்கும்)