(97) யாருக்கு வெக்கமில்லை...?
வாரண்ட் வாங்கி சாமியத் தூக்கிறணும்னு மெனக்கெட... அதத் தெரிஞ்சுக்கிட்ட சு.சாமி டெல்லி பயணத்துக்காக விமான நிலையத்துக்குப் போக... அங்கேயும் போலீஸ் அவர துரத்துது. "கோர்ட் உத்தரவையும் மீறி கைது செய்!'ன்னு வந்த உத்தரவ நிறைவேத்த போலீஸ்காரய்ங்க வர்றதுக்குள்ள சு.சாமி பம்பாய் புறப்படுற விமானத்துல ஏறிட்டாரு.
ஏர்போர்ட் செக்யூரிட்டி அதிகாரி டி.சி. மணி, ஏர்போர்ட் உயரதிகாரி ஜெய ராமன்ட்ட, சு.சாமிய இறக்கிவிடணும்னு வேண்டுகோள் வைக்க.... ஜெயராமன் அதுக்கு மறுப்பு தெரிவிச்சு "வாரண்ட்டோ, கடிதமோ இருந்தா கொடுங்க'ன்னு சொல்ல... எதுக்கு வம்புன்னு அதிகாரிங்க முழிக்க.... விமானம் கிளம்பிடிச்சு.
அன்னிக்கு விமானம் பம்பாய் போய் சேர்றவரைக்கும் ஏர்போர்ட்லயே இருந்து, வெடிகுண்டு மிரட்டல்கள் எதாவது வந்தா... விமானம் திரும்பிடாதபடிக்கு ஏற்பாடுகள்லாம் செய்துட்டு, நைட் ராஜ்பவன்ல போய் தங்குனாரு சந்திரலேகா.
மறுநாள் சுப்ரீம் கோர்ட்டுக்குப் போன சு.சாமி, தமிழ்நாட்டுல தனக்கு இழைக்கப்படுற கொடுமைகள வரிச கட்டி ஆவேசமா கூற...
நீதிபதிகள், "சு.சாமியை கைதுசெய்தால் 100 ரூபாய் ஜாமீன் தொகையில் விடுவிக்க வேண்டும்... அதுவும் சென்னையில் மட்டும்தான் கைது நடைபெற வேண்டும்'னும் உத்தரவு போட்டாங்க.
சு.சாமிய தமிழக லாக்-அப்ல அடைச்சு வச்சு, சித்ரவதை செய்து... முடிஞ்சா மார்புப் பாகத்தை குறிவச்சு ஆசிட் அடிக்க வச்சு கொல்லணும்னு உத்தரவு போட்டுருந்த முதலமைச்சர் ஜெயலலிதா வுக்கு ஏமாற்றம். கடுப்பான "ஜெ.' உடனடியா கமிஷனர் ராஜகோபாலனை மாத்தச் சொல்லி உத்தரவு போட்டாரு. அதனால சி.பி.சி.ஐ.டி. பிரிவின் கீழ இயங்குற என்ஃபோர்ஸ்மெண்ட்ல, ராஜகோபாலன் உட்கார ஒரு அறைகூட குடுக்காம அவர தவிக்கவிட்டாய்ங்க. ஆர்.வி.க்கு உறவுக்காரர்ங்கிற மிதப்புலயும், சென்னை கமிஷனரா இருந்ததுனால ஆளும் கட்சியில குண்டர் படை தலைவர் போல செயல்பட்டாரு ராஜகோபாலன். அவருக்கே ஆப்பு வச்சிருச்சு.
"அவருக்கு நேர்ந்த கதி... "போயஸ் கார்ட னுக்கு சேவை செய்றதே தங்களோட பணி'ன்னு செயல்படுற அதிகாரிகளை யோசிக்க வைக்குமா?'ன்னு நேர்மையான அதிகாரிகள் வெளிப்படையாவே அப்போ கேட்டாய்ங்க. இதுக்கிடையில... சு.சாமி சென்னைக்கு வர... போலீஸ் அவர கைது செய்யு மாங்கிற பரபரப்பே முழுக்க... முழுக்க இருந்துச்சு.
அதுக்குக் காரணம்... ஒண்ணுக்குமே உதவாத சபாநாயகர் சேடப்பட்டியின் தீர்ப்ப எதுத்து யாரும் கேள்வியே கேக்கக்கூடாதுன்னு சொன்ன ஜெயலலிதா, சு.சாமிக்கு சுப்ரீம் கோர்ட் தந்த பாதுகாப்புக்கு எதிரா கடுமையா அறிக்கை விட்டுச்சு. அந்த அறிக்கை யில "சு.சாமிய கொல்லுங்க, வெட்டி வீசியெறி யுங்க'ன்னு நேரடியா குறிப்பிடலையே தவிர.... உசுப்பிவிடுற அளவுக்கு கடுமையாவே இருந்துச்சு
சு.சாமி டெல்லியில இருந்து திரும்பி வந்து பத்திரிகையாளர்கள சந்திச்சாரு. இந்த சந்திப்பு நடந்துக்கிட்டிருக்கும்போதே...
பெருமாள்சாமிங்கிறவர் தலைமையில சு.சாமிய அடிச்சி நொறுக்கி... தாக்கி, கலவரம் பண்ணணும்னு, 30 ஆட்டோவுல குண்டர்கள் படை வந்துக்கிட்டிருகிறதா ஒரு தகவல் பரவுது. ஸ்ரீபாலும் "அவங்கள உடனடியா அப்புறப்படுத் துங்க'ன்னு ஒயர்லெஸ்ல கதற... அதுக்காக, போலீஸ்காரங்க ஆட்டோவுல வந்தவங்ககிட்ட கெஞ்சிக் கூத்தாடி ரொம்ப சிரமப்பட்டு அனுப்பி வச்சாய்ங்க.
அதே நேரம்... சு.சாமிக்கு ஆதரவா, சி.ஆர்.பி. அடிஷனல் எஸ்.பி. ஒருத்தர் தலைமையில ஏ.கே.47 துப்பாக்கிகளோட கலவரக்காரங்கள சுட்டுத் தள்ளுறதுக்காக 50 பேரு தயாராக இருந்தாய்ங்க.
நல்லவேள, அப்படி எதுவும் நடக்கல.
சு.சாமி, ராஜ்பவன்ல கவர்னர சந்திச்சிட்டு, அவரோட கட்சி ஆபீசுக்கு வந்துக்கிட்டிருக்கும் போது... "சு.சாமி மேல உள்ள வழக்கை அரசு வாபஸ் பெறுவதாக' திடீர்னு அறிவிச்சாரு ஜெயலலிதா.
சு.சாமிக்கு ஒரே கொண்டாட்டம். "ஜெயலலிதாவுக்கு மனநிலை சரியில்ல'ன்னு பத்திரிகையாளர் சந்திப்புல சொன்னாரு
சு.சாமி டெல்லியில இருந்து சென்னை திரும்புறதுக்கு முன்னாடி, பிரதமர் வீட்டுக்குப் போய், "தமிழ்நாட்டுல நடந்துக்கிட்டிருக்கிறது கிரிமினல் ஆட்சி. அந்த ஆட்சியை உடனடியாக டிஸ்மிஸ் செய்யுங்க'ன்னு கோரிக்கை வச்சாரு. அதோட, ரங்கராஜன் குமாரமங்கலம் கொண்டு வரும் வெட்டுத் தீர்மானத்துக்கு, உங்களுக்கு ஆதரவா செயல்படணும்னா... "ஜெ' ஆட்சியை டிஸ்மிஸ் செய்தே ஆகணும்''ன்னு வற்புறுத்திச் சொன்னாரு.
பிரதமர் அவர்ட்ட, "கவர்னருக்கு கடிதம் தந்திருக்கேன்... கொஞ்சம் பொறுமையாக இருங்க'ன்னு சமாதானப்படுத்தி அனுப்பியிருக்காரு. இவர் அனுப்புன அந்தக் கடிதத்துல "உங்க உயிருக்கு ஏதாவது ஆபத்தான பிரச்சினை வந்தா... எந்த முடிவையும் எடுத்துக்கங்க'ன்னு குறிப்பிட்டிருந் தாராம் பிரதமர்.
சு.சாமியும் டிஸ்மிஸ்ங்கிற வார்த்தைய விடல... அந்தம்மாவும் பின்வாங்கல. என்னையா மனநிலை பாதிச்சவன்னு சொன்ன... உன்ன விடமாட்டேன் டான்னு பொறுப்பு அதிகாரிங்க எல்லாரையும் விடு... விடு..ன்னு வெரட்டுது. சு.சாமிய போட்டுறணும்ங்கிறதுல இருந்து பின்வாங்கல...!
தேனாம்பேட்டை. ஜனதா கட்சி பொதுக்கூட்டம். சு.சுôமி இருப்பிடத்த மாத்தி... மாத்தி... தங்கியிருந்தாரு. அன்னிக்கு முன்னாள் சபாநாயகர் க.ராஜாராம் ஐயா வீட்லதான் ஒளிஞ்சிருந்தாரு. சு.சாமியின் கூட்டத்துல வன்முறையை கட்டவிழ்த்து விடணும்னு முதல்நாளே எல்லா ஏற்பாடுகளையும் "ஜெ'. தரப்பு செஞ்சு... வயலென்ஸ் ஆபரேஷன் பேட்டாவும், போதை ஏத்திக்கிறதுக்கு ஸ்பெஷல் பேட்டாவும் கொடுத்திருந்தத, சு.சாமிட்ட விபரமாகச் சொன்ன ஐயா ராஜாராம்... "சு.சாமிக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பைத் திரும்பப் பெறுவோம்!னு குடியரசுத் தலைவருக்கு "ஜெ.' கடிதம் எழுதுனதையும், எச்சரிக்கையா இருக்கவேண்டிய அவசியத்தையும் சு.சாமிக்குச் எடுத்துச் சொன்னாராம்.
கூட்டத்துக்கு காருல போகும்போதே... "வன்முறை செய்றதுக்கு ர.ர.க்கள் திட்டம் போட்டிருக்காங்கன்னு தெரிஞ்சுக்கிட்ட சு.சாமி, அதுலயிலிருந்து எப்படி நம்மள பாதுகாத்துக் கணும்ங்கிற வியூகங்களயும் தெளிவா தன் பாதுகாவலர்கள்கிட்ட சொல்லிட்டாரு.
பிரச்சினை பண்றதுக்காகவே மகளிரணிக் காரய்ங்க ரெடி பொஸிசன்ல அங்க காத்துக்கிட்டிருந்தாய்ங்க.
அம்மாவ கூண்டுல நிறுத்துன சு.சாமிய, அசிங்கப்படுத்தணும்னு நினைக்கிற "ஜெ.'வோட விருப்பத்தை நிறைவேத்த வந்திருந்த, மகளிர் அணியில உள்ளவங்க நிக்கவும் முடியாம... உக்காரவும் முடியாம உற்சாகப் போதையில நீந்திக்கிட்டிருந்தாய்ங்க. அவங்க எல்லாருமே யாருடைய கட்டளைக்காகவோ காத்திருந்தாய்ங்க.
சு.சாமி மைக் புடிச்சதுதான் தாமதம்... புயல் வேகத்துல சர்... சர்...னு நாலா பக்கத்துல இருந்தும் கல்லு வரிசையா பறக்குது மேடைக்கு. மேடையில இருந்தவங்க நாற்காலிகளத் தூக்கி தங்களச் சுத்தி பாதுகாப்பு வளையமா வச்சி கல்வீச்சுல இருந்து தப்பிச்சாய்ங்க.
"வன்முறைக்கு முடிவு கட்டுவேன்... ஜெயலலிதாவ ஜெயில்ல தள்ளாம ஓயமாட்டேன்''னு சொல்லி பேச்சை முடிச்சிக்கிட்டாரு சு.சாமி.
சட்டமன்றத்துல முதலமைச்சர் பேசும்போது, சு.சாமிக்கு எதிரா கலகம் செய்தவங்கள, "பொதுமக்கள்'னு குறிப்பிட்டுச் சொன்னாரு.
கலாட்டா நடந்த அன்னிக்கு ராத்திரி, கவர்னர் மாளிகையில போய் தங்கியிருந்த சு.சாமி, மறுநாள் "தன்னை கொலை செய்ய முயற்சி நடந்ததா கவர்னர்ட்ட புகார் குடுத்தாரு. கவர்ன ரோ அந்தப் புகார கெடப்புல போட்டுட்டாரு.
அதுக்கு காரணம் "யாமறியோம் பராபரமே!'.
ரொம்ப உள்ள போகல... ஏன்னா, அப்ப மத்தியில காங்கிரசோட கூட்டணி வச்சுதான ஆட்சியப் புடிச்சுச்சு... அப்ப சொல்லவா வேணும்... சரி விடுங்க.
இத்தன வேகம் காமிச்ச ஜெயலலிதா, திடீர்னு வழக்க வாபஸ் வாங்குனதே... சாமிய ஃப்ரீயா சென்னைக்கு வரவச்சு... நொங்கப் பிதுக்கத்தான்.
தப்பிச்சிட்டாரு... ஆனா உயிர் பயத்த தேனாம்பேட்ட கூட்டத்துல காமிச்சுட்டாய்ங்க மகளிரணிக்காரய்ங்க.
சு.சாமியும் சென்னாரெட்டியும், ஜெயலலிதா ஆட்சிய கவுத்துட்டுத்தான் வேற வேலைய பாப்பாங்கன்னு மக்கள் எதிர்பாத்தாய்ங்க. கடைசில... புஸ்ஸ்ஸ்...னு போயிருச்சு.
1999. மத்தியில வாஜ்பாய் ஆட்சி. முக்கிய பங்கு அ.தி.மு.க.வுக்கு. ப்ளாக்மெயில் பண்ணி... பண்ணி... எல்லா காரியத்தையும் சாதிச்சது அந்தம்மா.
கடைசியா அடி மடியிலேயே கை வைக்க ஆரம்பிச்சதும், வாஜ்பாய் "விட்டா போதும்டா சாமி...'ன்னு கைய விரிச்சிருக்கிறாரு.
இதுதான் சாக்குன்னு நம்ம அரசியல் புரோக்கர் சு.சாமி வூடு புகுந்து விளையாட ஆரம்பிச்சுட்டாரு.
"மறப்போம் மன்னிப்போம்'னு ரெண்டு தலையும் ஒண்ணா சேருது.
இதுல யாருக்கு வெக்கமில்லங்கிறத உங்க முடிவுக்கே விட்டுர்றேன்.
கடைசியா ஜெயலலிதா, வாஜ்பாய் மேல கோபமா டெல்லிக்குப் போறாரு. போனவரு எப்பவும் தங்குற அசோகா ஓட்டல்ல தங்கல. தாஜ் ஓட்டல்ல தங்குறாரு. அதுக்குக் காரணம்... அசோகா ஓட்டல்ல, தான் தங்கியிருந்த ரூம்ல வாஜ்பாய் அரசு மைக் பொருத்தியிருந்தாய்ங்கன்னு புகார் சொல்லிட்டுக் கிளம்பிட்டாரு. அதுக்கு முன்னாடிதான் தாஜ் ஓட்டல்ல சு.சாமி ஜெயலலிதாவ சந்திச்சாரு.
எப்படியும் ஆட்சிய கவுத்துடணும்னு ரெண்டு பேரும் திட்டம் போட்டு, ஆச்சரியமா இருக்குல்ல... எப்படி ரெண்டு பேரும் சேந்தாய்ங்கன்னு! அதுதான் இங்கிலீஷ்ல ஒரு பழமொழி சொல்லுவாய்ங்கள்ல... 'இப்ர்ர்க் ண்ள் ற்ட்ண்ஸ்ரீந்ங்ழ் ற்ட்ஹய் ரஹற்ங்ழ்'னு. ஒரே நூல் புடுச்சு துணைக்கு சோனியாவையும் சேத்துக்கிட்டு சு.சாமி ஏற்பாடு செஞ்சிருந்த டீ-பார்ட்டியில 3 பேரும் சேர்ந்து திட்டம் போட்டு வாஜ்பாய் ஆட்சிய கவுத்துட்டாய்ங்க.
இதுல முக்கியமானதே... சு.சாமியும்-ஜெ.வும் ஒண்ணாயிட்டதுதான்.
ஒரு காலத்துல... ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, "ஆள கொன்னுருங்க'ன்னு அந்தம்மா ஆர்டர் போட்டுச்சு...
இந்த ஆளும், கோர்ட்டுக்குள்ள நீதிபதி அறைக்குள்ள ஒளிஞ்சுக்கிட்டாரு... அப்புறம் யாருக்கும் தெரியாம திருடன் மாதிரி டெல்லிக்குப் போனாரு... டிஸ்மிஸ் செய்யச் சொன்னாரு... இப்ப ஒண்ணாயிட்டாய்ங்க "என்ன கொடும சரவணா'ங்கிற மாதிரி...!
அதவிட கொடும....?
(புழுதி பறக்கும்)