oi

(329) "உதிர்ந்த ரோமம்!' நாவலரை வசைபாடிய ஜெயலலிதா!

ம்.ஜி.ஆருடன் 46 வருடங்கள் (எம்.ஜி. ஆரின் இறுதிக்காலம் வரை), எம்.ஜி.ஆர். பிக் ஸர்ஸ் மேனேஜராக பணியாற்றி, அமைச்சரவையி லும் இடம்பெற்ற மூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பன், தனது "எம்.ஜி.ஆர். யார்?' என்ற நூலில் ஜெ.வின் சதி வேலைகளை பட்டியலிட்டதை ஏற்கனவே எழுதி யிருந்தோம். மேலும், பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆர்.எம்.வீ. கொடுத்த பேட்டிகளையும் கடந்த அத்தியாயத்தில் சொல்லியிருந்தோம்.

திராவிடப் பெருந்தலைவர்களுள் ஒருவரான நாவலர் நெடுஞ்செழியன், ஜெ. பற்றி பல சந்தர்ப்பங்களில் அளித்த பேட்டியை பதிவு செய்யவேண்டிய அவசியம் இருப்பதால், இந்த அத்தியாயத்தில் பதிவு செய்துள்ளோம்.

Advertisment

("உதிர்ந்த ரோமம் ஒட்டாது' இப்படி ஒரு தத்துவ முத்தை உதிர்த்தவர் ஜெ.

யாரைப் பார்த்து இப்படிச் சொன்னார் தெரியுமா?

கோவையில் கல்லூரி ஒன்றின் விடுதியில் கண்டிப்பான வார்டனாக இருந்து, பேரறிஞர் அண்ணாவின் பேச்சாலும், கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டார். வார்டன் வேலையை உதறிவிட்டு, சென்னை வந்து அண்ணாவுடன் இணைந்தார். "திராவிடத்தின் ஐம்பெரும் தலைவர்கள்' பட்டியலில் அண்ணாவுக்கு அடுத்த இடத்தில் இரண்டாம் இடம் பெற்றவர். அவரின் பேச்சுத் திறமையில் வியந்து "நாவலர்' என்கிற சிறப்புப் பெயரை வழங்கினார் அண்ணா.

Advertisment

இவ்வளவு பெருமைக்குரிய நாவலர் நெடுஞ் செழியனைத்தான் "உதிர்ந்த ரோமம்' என்றார் ஜெ.

ஏன் அப்படிச் சொன்னார்?

ஜெயலலிதாவின் நடவடிக்கை பிடிக்காமல், நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன், அரங்கநாயகம் மற்றும் திருநாவுக்கரசு ஆகியோர் "அ.தி.மு.க. நால்வர் அணி'யை உருவாக்கினார்கள்.

"அவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்வீர்களா?' என ஜெ.விடம் கேட்டபோது தான்... "உதிர்ந்த ரோமம் ஒட்டாது' எனச் சொன்னார்.

வார்டன் என்பதால் கொஞ்சம் கண்டிப்பும், கொஞ்சம் சிடுசிடுப்புமாக இருப்பார். அதனால் நெடுஞ்செழியனிடம் நெருங்கத் தயங்குவார்கள் தொண்டர்கள். இதனால் நாவலரால் தனக்கென ஆதரவாளர்களை சேர்க்க முடியவில்லை.

கலைஞருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட வுடன் "மக்கள் தி.மு.க.' என்கிற கட்சியைத் தொடங்கினார். ஆனால் கட்சி... காட்சிப் பொரு ளாகவே இருந்தது.

எம்.ஜி.ஆர்.தான் நாவலரின் பெருமை அறிந்தவராயிற்றே. அ.தி.மு.க.வில் இரண்டாம் இடமும், நிதியமைச்சர் பதவியும் கொடுத்தார்.

மற்றவர்களின் திறமையை, தகுதியை உணர்ந்தவர்களுக்கு -அறிந்தவர்களுக்குத்தானே அதற்குரிய அங்கீகாரம் வழங்கத் தெரியும். பிறரை அவமதித்தே பழகிய ஜெ., "உதிர்ந்த ரோமம்' என்றும் சொல்லுவார்... இன்னும் ஏதேதோ சொல்லுவார்.)

அண்ணன் நாவலர் நெடுஞ்செழியன் பேட்டியில்...

pu

"கட்சியின் பொருளாளராக திருநாவுக்கரசு இருந்தார். ஆனால் கணக்கு, வழக்குகளையும், பேலன்ஸ் பணத்தையும், வங்கிக் கணக்குகளையும் திருநாவுக்கரசுவிடம் ஒப்படைக்காமல் ஜெயலலிதாவே வைத்திருந்தார். 1984 தேர்தலில், கூட்டணிக் கட்சிகளுக்கு ஸீட் ஒதுக்கும் விஷயங்களில் ஜெயலலிதா ஈடுபடவே இல்லை.

அப்பல்லோவில் எம்.ஜி.ஆர். சிகிச்சை பெற்றுவந்தபோது அவருடைய உடல் நிலை குறித்து ஸ்கேன் செய்யப்பட்டது. ஸ்ட்ரெச்சரில் கொண்டு சென்றபோது ஜெயலலிதா மீது ஆர்.எம்.வீ. ஆட்கள் ஆசிட் வீசப்போவதாக தகவல் கசிந்தது. அப்போது நான் முதலமைச்சர் பொறுப்பில் இருந்தேன். ஒருவேளை அப்படி ஒரு சதித்திட்டம் இருந்திருந் தால் எனக்குத் தெரிந்திருக்கும்.

ஜெயலலிதாவால்தான் கட்சி ஜெயித்ததாக ஜெயலலிதா சொன்னார். அவர் போய்தான் அவர்கள் ஜெயித் தார்கள் என்று சொன்னால், இந்த அம்மையாருக்கு வேண்டிய கோவைத் தம்பி, ஜே.சி.டி.பிரபாகரன், கருப்பசாமி பாண்டியன் உள்ளிட்டோர் தோற்றார் கள். அதனால் என்னால்தான் வென் றது கட்சி என்று ஜெயலலிதா சொன்ன தை தொண்டர்களோ, புரட்சித் தலைவரோ ஏற்கவில்லை.

ஜெயலலிதாவை நான் முதன் முதலில் பார்த்தது அந்த அம்மா நடித்த ஒரு படத்திற்கான நூறாவது நாள் விழாவில்தான். அந்தப் படத்தின் பெயர் சூரியகாந்தி என்று நினைக் கிறேன். அந்த விழாவிற்கு நான் தலை மை வகித்தேன். மற்றபடி அவர்களுடன் எனக்கு நெருங்கிய பழக்கமோ அல்லது நெருங்கிய ஈடுபாடோ கிடையாது. மேலும் அந்த அம்மையாரை தனியாக சந்தித்துப் பேச வேண்டிய அவசியம் எனக்கு ஏற்படவில்லை. எட்டயபுரம் பாரதி விழாவில் அவர்கள் கலந்து கொண்டார்கள். அப்பொழுது அவர் களை நான் தூரத்திலிருந்து பார்த்தேன். பிறகு... 1982ல் கடலூர் மாநாட்டில் அவரது பேச்சைக் கேட்டேன். பிறகு பொதுக்குழு, செயற்குழு போன்றவற் றில் அவர்களைப் பார்க்கும் வாய்ப்பும், கழகத்தின் கொள்கை பரப்புச் செய லாளர் என்ற முறையில் அவர்களது அறிக்கைகளைப் படிக்கிற வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. அவர்களை கொள்கைப் பரப்புச் செயலாளராக அறிவிக்கும் முன்பு என்னிடம் போனில் அதுபற்றிக் கூறினார் எம்.ஜி.ஆர். நான் அப்பொழுது அபிப்பிராயம் ஏதும் சொல்லவில்லை.

கட்சியில் 1980-ல் நான் பொதுச்செயலாளராக இருந்தேன். அதற்குப் பிறகு ப.உ.ச.வும், ராகவானந்தமும் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்கள். நான் புரட்சித் தலைவரால் மந்திரியாக்கப்பட்டுவிட்டேன். எனவே எனக்கும், கட்சியின் தலைமை அலுவலகத்துக்கும் அதிகமாகத் தொடர்பு கிடையாது. எனவே ஜெயலிதாவைப் பார்த்து பேசக்கூடிய வாய்ப்போ அல்லது அவர்களுடன் உட்கார்ந்து ஆலோசனை செய்கிற அவசியமோ எனக்கு ஏற்படவில்லை.

ஆர்.எம்.வீ. முதலமைச்சராவதற்கு முயற்சித்தார். "நான் முதலமைச்சராகப் போகிறேன்' என ஜானகி அம்மாள் சொன்னதும், வேறு வழியில்லாமல் போனது. ஆனால் ஜானகி அம்மாள் அப்படி ஒரு முடிவெடுப்பார் என, என் நீண்ட கால அரசியல் அனுபவத்தைக் கொண்டு நினைத்தேன். அது சரியாக இருந்தது. அவரது கிச்சன் கேபினட் உறுப்பினர்கள் ஜானகி அம்மையாரை உசுப்பேற்றி முதல்வராகும் எண்ணத்தை தூண்டிவிட்டார்கள்.

ஜெயலலிதா என்னை ஆதரித்தார். ஆனால் அவராகவே அந்த முடிவெடுத்தார். தேடிவந்த ஆதரவை எப்படி மறுப்பது? 1984 தேர்தலில் ஜெயலலிதாவை பிரச்சாரத்திற்கு அனுப்புவதற்கு எல்லோரும் எதிர்த்தபோது, "அவரை அனுப்பியே ஆகவேண்டும்' என உறுதியாக நின்றேன்'' என நெடுஞ்செழியன் பேட்டியளித்தார்.

(ஜெயலலிதா செய்திகளை முன்னிலைப் படுத்தி வெளியிடுவதற்காக திருநாவுக்கரசு மூலம் "பொன்மனம்' என்ற கட்சிப் பத்திரிகையை தொடங் கச் செய்தார்.

"கட்சியின் அதிகாரப்பூர்வமான பத்திரிகை யாக "அண்ணா'வும், அதற்கு முன்பாக கே.ஏ. கிருஷ்ணசாமி, எம்.ஜி.ஆரின் அனுமதி பெற்று "தென்னகம்' பத்திரிகையும் நடத்திவந்த நிலையில், "பொன்மனம்' பத்திரிகை எதற்கு?' என பலரும் அதிருப்தியடைந்த நிலையில்... சென்னை கலை வாணர் அரங்கில் "பொன்மனம்' பத்திரிகையின் முதல் பிரதியை வெளியிட்டார் எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி.

oo

அப்போது எம்.ஜி.சி. பேசுகையில் "தம்பி அமெரிக்காவில் சிகிச்சையில் இருக்கும் இந்த நேரத்தில் ஜெயலலிதா பிரச்சாரத்திற்கு போவதுதான் சரியாக இருக்கும்'' என்றார்.

எம்.ஜி.சி.க்கும், ஜானகி அம்மையாருக்கும் வீட்டுக்கு வீடு வாசப்படி என்பதைப் போல, குடும்பப் பிரச்சினை இருந்ததாக சீனியர்கள் நம்மிடம் தெரிவித்தார்கள். அதாவது... எம்.ஜி.சி. யின் பிள்ளைகள்தான் ராமாவரம் தோட்டத்தில் வளர்ந்தார்கள். என்ன காரணமோ, ஒருகட்டத்தில் ஜானகியின் அண்ணன் நாராயணனின் பெண் பிள்ளைகள் எம்.ஜி.ஆரின் சட்டபூர்வ வாரிசுகளானார்கள். "ஒருவேளை இதனால்கூட எம்.ஜி.சி., ஜெயலலிதாவை ஆதரித்திருக்கலாம்' என பழைய கட்சிக்காரர்கள் நம்மிடம் சொன்னார்கள்.)

"ஜெயலலிதாவை "மேடம்' என திருநாவுக்கரசு அழைப்பார். (கட்சி செயற்குழு, பொதுக்குழு மற்றும் பொதுக்கூட்டங்களில் ஜெயலலிதாவும், திருநாவுக்கரசும் அருகருகேதான் அமர்ந்திருப்பார்கள். அதுவும், அப்போதும் எம்.ஜி.ஆர். அணிந்திருப்பது போன்று சால்வையும் அணிந்திருப்பார் திருநாவுக்கரசு. அதிலும் மேடையிலிருந்து எம்.ஜி.ஆர். பார்வையில் படும் படி உட்கார்ந்திருப்பார்கள். எம்.ஜி.ஆரை வெறுப் பேற்றுவதற்காக ஜெ. இந்த காரியத்தைச் செய்வார். இதுபற்றி பத்திரிகைகளில் அவ்வப்போது செய்திகள் வந்திருக்கிறது. இதனால்தான் திருவிடம் இருந்த தொழில்துறையைப் பறித்து, சத்துணவுத் திட்ட அமைச்சராக்கினார் எம்.ஜி.ஆர்.)

நாவலரை ஆதரித்துக்கொண்டே அவரை டம்மிபண்ணும் வேலையையும் செய்தார் ஜெ.

இதுபற்றி நாவலரே சொல்கிறார்...

"நான் முதலமைச்சராக இருக்கும்போது ஜெயலலிதா ஆதரவாளர்கள் பொதுக்குழுவைக் கூட்டி, முதல் தீர்மானமாக என்னை முதலமைச்ச ராக தொடர்ந்து நீடிக்கவும், இரண்டாவதாக ஜெயலலிதாவை பொதுச்செயலாளராகவும் தீர்மானம் போட்டார்கள். பிறகு, நான் முதலமைச்சராக நீடிக்கவில்லை. ஜெயலலிதா பொதுச்செயலாளராக நீடித்தார். கட்சியிலும் பொறுப்பு வேண்டாம் என அவைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன்.

அரசியல் விவகாரக் குழுவை ஏற்படுத்திய ஜெயலலிதா, முதல் இரண்டு கூட்டங்களை என் தலைமையில் நடத்தினார்கள். அதன்பிறகு அவர்களே கூட்டத்தைக் கூட்டினார்கள். அதற்குப் பின்னாடிதான் விவகாரம் வெவ்வேறு மாதிரியாகப் போக ஆரம்பித்தது. நான் எப்போதுமே நன்கு யோசித்து நிறைய நாட்கள் எடுத்தே எனது பதிலடியைத் தருவேன்.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா கைக்கு கட்சி வந்தபிறகு, நாங்கள் கொடுத்த பதிலடிதான்... அ.தி.மு.க. நால்வர் அணி''!

எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்த அரங்கநாயகம் சொல்லித் தான் தெரியவேண்டும் என்பதில்லை... ஜெயலலிதாவின் அடாவடியை, ஜெயலலிதாவை ஆதரித்த அரங்கநாயகத்தையும், "உதிர்ந்த ரோமம்' எனச் சொன்னவர்தான் ஜெ.

அரங்கநாயகம் பல வருடங்களுக்கு முன் அளித்த பேட்டியில்... "ஒரு கட்சி பிளவுபடக் காரணமே ஒற்றைத் தலைமைதான். தனி நபர் தலைமையால் கிடைக்கும் பலம், தேர்தலில் ஒற்றைத் தலைமையை நம்பியே மக்கள் வாக்களிப்பார்கள். (வட மாநிலங்களில் பொதுவாக தேர்தல் முடிந்த பின் தேசிய கட்சியின் தலைமை தான் மாநில முதல்வரை தீர்மானிப்பார்கள். பேரறிஞர் அண்ணா காலத்திலிருந்து தமிழகத்தில் ஒற்றைத் தலைமையை நம்புவார்கள் மக்கள்.

அ.தி.மு.க.வின் ஒற்றைத் தலைமையாக இந்த அடிப்படையில் எடப்பாடி எஸ்.பழனிச்சாமி இருக்கிறார்.)

"ஒற்றைத் தலைமையின் பலவீனம், தன்னிச் சையாக செயல்படும் தலைவரால் கட்சிக்கும், நிறைய பிரச்சினைகள் உண்டாகின்றன. இதை நான் ஜெயலலிதாவிடம் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்'' இவ்வாறு சொல்லியிருக்கிறார் அரங்கநாயகம்.

மேலும் அவர் கூறுகையில்...

(புழுதி பறக்கும்)