pp

(324) புரட்சித் தலைவரை அலட்சியப்படுத்தி ஜெ. பேட்டி!

போர்க்களத்துல எதுக்கு எம்.ஜி.ஆரை பத்தி ஆர்.எம்.வீ. எழுதுன புத்தகத்த பத்தி, இந்த அளவுக்கு நக்கீரன் கோபால் விலாவாரியா எழுதுறாருன்னு சிலருக்கு தோணலாம்.

அது வேற ஒண்ணுமில்ல. நக்கீரன் சந்திக்காத சோதனைகள் இல்ல. சவால்கள் இல்ல. ஆனா, ஜெயலலிதா அளவுக்கு நக்கீரனை ஒண்ணுமில்லாம பண்ணிறணும்னு குறிவச்சு தாக்குனவங்க யாரும் இல்ல. என்மேல ஜெயலலிதா கவர்மெண்ட் போட்ட பொடா கேஸ் ஒண்ணு போதுமே! நக்கீரன் அலுவலகத்த தாக்குனது, அய்யா பிரிண்டர் கணேசனை ஜெயில்ல சித்ரவதை பண்ணி.. அவர் சாவுக்குக் காரணமா இருந்தது, தனிப்பட்ட முறைல எங்க மாமனார் பாண்டியனை நாங்க இழந்ததுன்னு... இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்.

Advertisment

அப்படின்னா... "ஜெயலலிதாவுக்கும் நக்கீரனுக்கும் -ஜெயலலிதாவுக்கும் நக்கீரன் கோபாலுக்கும் தனிப்பட்ட பகை இருந்துச்சு... அதுக்காகத்தான் போர்க்களமே எழுதுறாரு'ன்னு சிலர் அவசரப்பட்டு சொல்லிறலாம்.

நக்கீரன் கோபாலுக்கும் ஜெயலலிதாவுக்கும் என்ன வாய்க்கா வரப்பு தகராறா? சொந்தப் பிரச்சினையா? எதுவுமில்ல.

எம்.ஜி.ஆரோட சிபாரிசுல அரசியல் முகமூடி போட்டுக்கிட்டு பொதுவாழ்க்கைக்கு வந்த ஜெயலலிதாவ பத்தி, சமூக அக்கறையோட நெறய உண்மைகளை வெளி உலகத்துக்கு சொல்ல வேண்டிய கடமை நக்கீரனுக்கு இருந்துச்சு. அதுவும் ஜெயலலிதா கவர்மெண்ட் பண்ணுன அக்கிரமத் தையும், அத்தனை ஊழலையும் தோலுரிச்சுக் காட்டவேண்டிய பொறுப்பும் இருந்துச்சு. அந்த ஜனநாயகக் கடமைய நேர்மையுடன் நக்கீரன் துணிஞ்சு பண்ணுச்சு. அதுக்காக நக்கீரன் கொடுத்த விலை என்னன்னா... உயிர்கள்ல இருந்து உடமைகள் வரைக்கும் நெறய இழந்துச்சு. ஜெயலலிதா இறந்துட்டாலும், இன்னைக்கு வரைக்கும் அந்தக் கொடுமையோட தாக்கம் இருந்துக்கிட்டுத்தான் இருக்கு.

Advertisment

நியாயத்தின் பக்கம் நின்ன நக்கீரனை பகைச்சுக்கிட்ட ஜெயலலிதா... நக்கீரனுக்கு மட்டுமில்ல... தனக்கு அரசியல் அடையாளத்தை தந்த எம்.ஜி.ஆரையே பகைச்சுக்கிட்டாங்க. எம்.ஜி.ஆரை பத்தி மனசுல வேற ஒண்ண வச்சுக்கிட்டு, இதய தெய்வம்னு பொய் வார்த்தை பேசி சாகும்வரைக்கும் அரசியல் பண்ணாங்க.

ஜெயலலிதாவோட உண்மை முகம் என்னன்னு நக்கீரனுக்கும், நக்கீரன் வாசகர்களுக்கும் ரொம்ப நல்லா தெரியும். எம்.ஜி.ஆரோட நிழலா இருந்து, அவருகிட்ட வேலை பார்த்து... எம்.ஜி.ஆருக்கு எந்த கெட்ட பெயரும் வந்துறக்கூடாதுன்னு பொத்திப் பொத்தி பாதுகாத்த ஆர்.எம்.வீ.க்கோ, சினிமா ஜெயலலிதாவயும் தெரியும். ஒரு விபத்தா அரசியலுக்கு வந்த அரசியல்வாதி ஜெயலலிதாவையும் ரொம்ப நல்லா தெரியும். எம்.ஜி.ஆர்.கிட்ட நன்றியோ, துளிகூட விசுவாசமோ இல்லாம ஜெயலலிதா எப்படி எல்லாம் நடந்துக்கிட்டாங்கன்னு ஆர்.எம்.வீ. அளவுக்கு தெரிஞ்சவங்க யாருமில்ல. அதான்... எம்.ஜி.ஆர். பட்ட வேதனைய, அதை பக்கத்துலயே இருந்து பார்த்து, தான் துன்பப்பட்டத "எம்.ஜி.ஆர். யார்'னு அவரு எழுதுன புத்தகத்துல கொட்டித் தீர்த்துட்டாரு.

oo

ஆக.. ஜெயலலிதா நக்கீரனுக்கு மட்டும் எதிரி இல்ல, எம்.ஜி.ஆருக்கும் எதிரி. ஏன்... தமிழ்கூறும் நல்லுலகத்துக்கே எதிரி. அதனாலதான் ஆதாரபூர்வமா ஜெயலலிதாவ பத்தி ஆர்.எம்.வீ. எழுதுனத, போர்க்களத்துல நக்கீரன் பதிவு பண்ணிட்டு வருது.

அம்மா... அம்மான்னு அந்தக் கட்சிக்காரங்க இன்னைக்கு வரைக்கும் சொல்லிட்டு இருக்கிற துனால அது ஒரு தவறான வரலாறா ஆயிறக்கூடாதுங்கிறதுனால... "ஜெயலலிதா அம்மா இல்ல... ரொம்ப ரொம்ப சும்மா'ன்னு, உண்மையான வரலாற நக்கீரன் நேர்மையா எழுதிட்டு வருது.

ஆட்சி, அதிகாரத்த கையில வச்சிக்கிட்டு.. நக்கீரன் மேல ஜெயலலிதா தொடுத்த போர்ல பேனாங்கிற வலிமையான ஆயுதத்தை ஏந்தி நக்கீரன் உயிர்ப் போராட்டமே நடத்துச்சு. இயற்கை அந்த அம்மையாரை அழைச்சிட்டு போயிருச்சு.

ஆக... போர்க்களத்துல இன்னைக்கு வரைக்கும் நின்னு ஜெயிச்சிட்டு வர்றது நக்கீரன்தான். ஆனாலும், பட்ட விழுப்புண் நெறய. ஆறவே ஆறாத அந்த ரணத்த... வேதனையத்தான்.. போர்க்களம் தொடர்ல எழுதிட்டு வர்றோம்.

எம்.ஜி.ஆர் அமெரிக்காவுல ட்ரீட் மெண்ட் எடுத்தபடியே, ஆண்டிப்பட்டி தொகுதியில போட்டியிட்டு ஜெயிச்சார். எம்.ஜி.ஆர். மேல மக்களுக்கு ஏற்பட்ட "ஸிம்பதி'யால அ.தி.மு.க.வை மாபெரும் வெற்றிபெறச் செஞ்சு, மூணாவது தடவையா எம்.ஜி.ஆரை முதலமைச்சராக்கினாங்க மக்கள்.

ஆனா... "இந்த தேர்தல்ல கிடைச்ச வெற்றிக்கு தான்தான் காரணம்'னு ஆங்கிலப் பத்திரிகைக்கு பேட்டி கொடுத்தாரு ஜெ.

அதப்பத்தி "எம்.ஜி.ஆர் யார்?' நூல்ல ஆர்.எம்.வீரப்பன் தொடர்ந்து எழுதி யிருக்கத பார்ப்போம்...

1985-ஆம் ஆண்டு இந்திய அரசியல் வரலாற்றிலேயே ஒரு புரட்சியை ஏற்படுத் திய அந்த நிகழ்ச்சிகளுக்கு சொந்தக்கார ரான புரட்சித் தலைவர் தமிழகத்தில் இல்லாமலேயே தமிழகத்தின் தேர் தலிலே வெற்றிபெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டு அமெரிக்காவிலிருந்து திரும்பியிருந்தார்களே அந்த நேரத்தில்... ஒரு ஆங்கிலப் பத்திரிகைக்கு ஜெயலலிதா அவர்கள் அளித்த பேட்டியில், புரட்சித் தலைவரை அலட்சியப்படுத்துகிற; அவரின் இலட்சக்கணக்கான தொண்டர் களைக் கேவலப்படுத்தி, ஆணவம் தொனிக்கிற கருத்துக்களைத் தெரிவித் திருந்தார்கள்.

அது இதுதான்...

"முன்பு எப்படியிருந்திருந்தாலும் சரி, நான் கட்சிக்குள் நுழைந்தபோது அது ஒரு அமைப்பு என்று சொல்லிக்கொள்ளும் நிலைமையில் இல்லை. கட்சி சுக்குநூறாக உடைந்து கிடந்தது. கட்சியின் இன்றுள்ள நிலைக்கு காரணம் நான்தான். இந்த வளர்ச்சிக்காக நான் கடுமையாக உழைத்தேன். பூஜ்யமாக இருந்த கட்சியை இவ்வளவு தூரம் உருவாக்கியிருக்கிறேன். இந்த மாநிலத்தின் கோடிக்கணக்கான மக்களுக்காக நான் போராடிக்கொண்டிருக்கிறேன். வழிகாட்டு தலுக்காகவும், தங்களது பாதுகாப்பிற்கும் என்னை எதிர்நோக்கியிருக்கும் கட்சித் தொண்டர் களுக்கும், என்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தவர்களுக்கும், நான் கடன்பட வில்லையா? ஏனென்றால், ஜெயலலிதா சொன் னார் என்பதற்காகத்தானே அவர்கள் வாக்களித்தார்கள்.

பதவி வெறி பிடித்தவர்களும், ஊழல் வாதிகளும் நம்முடைய அரசியலை நெடுங்காலமாக ஆட்டிப்படைத்துக் கொண் டுள்ளனர். அரசியலில் கொள்கை, லட்சியங் களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காலம் வந்துவிட்டது. ராஜீவ்காந்தி ஒரு சிறந்த கொள்கையாளர். அந்த ஆரோக்கியமான போக்கு நாட்டின் கீழ்மட்டம்வரை இயல் பாகத்தானே செல்லவேண்டும் என்பதை அவர் நிச்சயம் பார்த்துக்கொள்வார். அதனால்தான் என்னைப் போன்ற தலைவர்கள் தேவைப்படு கிறார்கள்''

-இப்படி நன்றி மறந்த உணர்வோடு; அகம்பாவம்; ஆணவத்தோடு இந்த அம்மையார் சொன்ன கருத்துக்களுக்கு கடுமையான மறுப்பு தெரிவித்தேன். நான் தெரிவித்த அந்தக் கருத்துக்களுக்கு விளக்கம் கேட்டு 1985ம் ஆண்டு மார்ச் மாதம் எனக்கு ஒரு ள்ட்ர்ஜ் ஸ்ரீஹன்ள்ங் ய்ர்ற்ண்ஸ்ரீங் வந்தது. அனுப்பியவர்... புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.தான்.

முப்பத்தி இரண்டு ஆண்டுகள் நான் என்ன செய்தாலும் அதை ஏற்றுக்கொண்டு, நான் எதைச் செய்தாலும் புரட்சித் தலைவரின் நன்மைக்காகத்தான் செய்வேன் என்று என்மீது நம்பிக்கை வைத்திருந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களே எனக்கு ஒரு விளக்கம் கேட்கும் கடிதம் -show cause notice கொடுக்கிற சூழ்நிலைக்கு ஆளாக்கப்பட்டேன். அதற்குக் காரணம் இந்த அம்மையார்தான்.

oo

இதுதான், புரட்சித் தலைவர் எனக்கு அனுப்பிய நோட்டீஸ்:

அன்புடையீர்,

என் உடல்நிலை சரியாகும்வரை செல்வி ஜெயலலிதாவை யாரும் குறை கூறிப் பேச வேண்டாமென்று அறிக்கை மூலம் ஏற்கனவே நான் கழகத்தவர் அனைவரையும் கேட்டுக் கொண்டிருக் கிறேன். உங்களிடமும் இதுபற்றி நேரில் தெரிவித்திருக்கிறேன். நான் அவ்வளவு தூரம் கேட்டுக்கொண்டிருந்த போதிலும், நீங்கள் செல்வி ஜெயலலிதாவைப் பற்றி, அவர் மனம் புண்படும் வகையில், பொதுக் கூட்டம் (பல) பேசியதாக எனக்குத் தகவல் வந்துள்ளது. இது ஏன் என்பதற்கான காரணங்களை தயவு செய்து எனக்குத் தெரிவிக்கவேண்டுமென்று உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அன்பன்

(எம்.ஜி.இராமச்சந்திரன்)

நோட்டீசைப் பெற்றுக்கொண்ட நான் எனது உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் என் கைப்பட புரட்சித் தலைவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அது...

(புழுதி பறக்கும்)