oo

ஜெயலலிதா என்ன சிங்கமா... புலியா? -ரஜினி கேள்வி!

1995 ஏப்ரல் 22-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியம் மைதானத்துல, அன்னைக்கி முதல்வரா இருந்த ஜெ. தலைமையில ஃபிரான்ஸ் நாட்டின் "செவாலியே' விருது பெற்ற சிவாஜி சாருக்கு பாராட்டு விழா நடந்துச்சு. இந்திய சினிமா பிரபலங்கள் பலபேரும் இதுல கலந்துக்கிட்டாங்க.

விருதுப் பதக்கத்த சிவாஜிக்கு அணிவிச்சு, சான்றிதழையும் கொடுத்தாரு இந்தியாவுக்கான அன்றைய ஃபிரான்ஸ் தூதர் பிலிப் பெட்டிட்.

Advertisment

"கலைத்துறையில சேவை செஞ்சவங்களுக்கு தமிழக அரசு தர்ற விருதுல "சிவாஜி விருது'ங்கிற பேர்ல விருது வழங்கப்படும்''னு ஜெ. இந்த மேடையில அறிவிச்சாரு.

வெளிநாட்டுக்குப் போயிருந்த ரஜினி (ஆஸ்திரேலியா) இந்த விழாவுல கலந்துக்கிறதுக் காகவே சென்னைக்குத் திரும்பினார்.

"செவாலியே சிவாஜி'யை பாராட்டிப் பேசுறவங்க லிஸ்ட்ல ரஜினி பெயர் சேர்க்கப் பட்டிருந்துச்சு. ஆனா ரஜினியோ, "நான் நன்றியுரையாற்றுகிறேன்''ன்னு கேட்டு வாங்கிக்கிட்டாரு.

Advertisment

"சிறப்புரையாற்ற வாய்ப்புக் கொடுத்தும்... அது வேணாம்னுட்டு நன்றியுரை சொல்ல ஆசைப் படுறாரே''ன்னு வியந்தவங்க... "ஏன் ரஜினி நன்றியுரையை தேர்ந்தெடுத்தாரு?'ன்னு யோசிக்கல.

ஆனா ரஜினி, ஒரு கணக்கோடதான் நன்றி யுரை பேச ஆசப்பட்டாரு.

விழாநாயகன் சிவாஜி சாருக்கு வீர சிவாஜியின் சிலை நினைவுப் பரிசா தரப்பட்டுச்சு. ஆனா பட்டுத் துணியில தங்க இழைகளால உருவாக்கப்பட்ட ஜெ.வின் உருவம் நெய்யப்பட்ட பொன் னாடைய ரஜினியின் மனைவி லதாவும், கமலின் மனைவி சரிகாவும் ஜெ.வுக்கு போர்த்துனாங்க.

"பலநாள் வேதனைக்கு ஒருநாள் தீர்வு'ங்கிற மாதிரி... பலநாள் கடுப்பு ஒருநாள் வெடிப்பா மாறியது.

நன்றி உரைய சரவெடியா அதிரவிட்டாரு ரஜினி. சும்மா அரங்கமே அதிர்ந்துச்சு.

ரஜினி சார்... ஜெ.வையே நேருக்கு நேர் குத்தம் சுமத்தி... கலக்கியெடுத்த பேச்சு அது.

poo

விழாநாயகன் சிவாஜி. ஜெ.வோட சேர்ந்து எல்லாரும் பேசி முடிச்ச பிறவு நன்றியுரை சொல்ல மைக் முன்னாடி போக எந்திரிக்கும்போது...

ஒரு சீட்டு ரஜினிக்கு தரப்பட்டது.

"யார், யாருக்கெல்லாம் ரஜினி நன்றி சொல்லணும்' அப்படீங்கிற பட்டியல் அது.

அந்த சீட்டை வாங்கிப் படிச்சுப் பாக்காமலே, அப்படியே சுருட்டிக் கசக்கி தன் ஜிப்பா பாக்கெட்டுல வச்சுக்கிட்டார். தான் என்ன பேசணும்ங்கிறத முன்னமே முடிவெடுத்துட்டு வந்துருக்காரு ரஜினி.

சிவாஜி சார இதய சுத்தியோட பாராட்டுன அண்ணன் ரஜினி, "இந்த மாபெரும் கலைஞனின் உடல்நலம் சிறப்பாக இருக்க அனைவரும் எழுந்து நின்று பிரார்த்திப்போம்'' என்றார்.

பார்வையாளர்களும், பிரபலங்களும் ஒட்டுமொத்தமா சுமார் 8000 பேர் எழுந்து நின்னாங்க. ஜெ.வும் எழுந்து நிக்க வேண்டிய கட்டாயம்.

அதுக்குப் பிறகு... திரையுலகினருக்கு ஜெ. அரசு வழங்கிய சலுகைகளைக் குறிப்பிட்டு ஜெ.வை புன்னகைக்க வைத்த ரஜினி...

"நான் ரொம்ப டென்ஷனா இருக்கேன்''னு சொன்னதும், ஒட்டுமொத்த ஸ்டேடியமும் ரஜினிய பாத்துச்சு.

மேடையில் அமர்ந்திருந்த ஜெ. பக்கம் திரும்பிய ரஜினி...

"நீங்க ஃபிலிம் சிட்டி திறப்புவிழாவிலேயே சிவாஜி சாரை மேடையில அமரவச்சு கௌரவிச்சிருக்கணும். ஆனா... அப்படிச் செய்யல... அது தப்பு. தப்பு பண்றது மனுச இயல்பு. தப்பை திருத்திக்கிறது மனுச குணம்... அப்போ பண்ணின தப்பை, இப்போ சரி பண்ணீட்டீங்க''ன்னு பேசுனாரு.

ஜெ.வோட அலட்சிய மனோபாவத்த நேருக்கு நேர் தட்டிக்கேட்ட ரஜினியின் துணிச்சல், அப்போ பரபரப்பா பேசப்பட்டுச்சு.

poo

"துக்ளக்' பத்திரிகையில 5 விழாக்கள பத்தி ரஜினி கட்டுரை எழுதுனாரு. அதுல ஒண்ணு "செவாலியே' சிவாஜிக்கு நடந்த பாராட்டு விழா பத்தி 10-04-1996 தேதியிட்ட இதழ்ல ரஜினி எழுதுன கட்டுரை இதோ...

"செவாலியே விழாவை சேப்பாக்கம் மைதானத்துல நடத்த, திரையுலக நண்பர்கள் ஏற்பாடு செய்துகொண்டிருந்தனர். ஒருநாள் நான் என் அலுவலகத்தில் உட்கார்ந்திருக்கும்பொழுது, விழாக் குழுவினர் தாங்கள் தயாரித்திருந்த விழா நிகழ்ச்சி நிரலுடன் என்னை வந்து சந்தித்தார்கள். அப்போது, டைரக்டர் திரு. எஸ்.பி. முத்துராமன் ஸார் அவர்கள், "சரவணன் (ஏவி.எம்.) ஸார் உங்களைக் கூப்பிடறாங்க. நீங்க ஃப்ரியா இருந்தா ஒரு தடவை விழா நிகழ்ச்சி நிரலைப் பார்த்துட்டா நல்லா இருக்கும்' என்றார். சரியென்று நானும் போய் பார்த்தேன். அந்த நிகழ்ச்சி நிரல் எப்படி இருந்ததென்றால் முதல்வர் அவர்களுக்கும், சிவாஜி ஸாருக்கும், ஒவ்வொருவர் மாலை போடுவதாக இருந்தது. நான் சொன்னேன்... "ஸார்! முதல்வர் அவர்களுக்கு, திரும்பவும் சினிமா கலைஞர்களே மாலை போடற மாதிரி இருக்குது! ஒண்ணு பண்ணலாம் ஸார்... கமல் வொய்ஃப்பும், என்னுடைய வொய்ஃப்பும் சி.எம். அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தினா நல்லா இருக்கும்' என்றேன்.

அவர்களும் "நல்ல ஐடியா ஸார்' என்று சொல்லி, ஒப்புக்கொண்டார்கள்.

"அதேபோல, சிவாஜிகணேசன் அவர்களுக்கு சினிமா துறையிலிருக்கும் நானும், கமலஹாசனும், மற்ற எல்லா கலைஞர்களும் சேர்ந்து மாலை போடலாம்' என்றேன், அதையும் நல்ல யோசனைதான் என்று சொல்லி எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள்.

இது தவிர, நிகழ்ச்சி நிரலில் என்ன இருந்தது என்றால், முதலில் சிவாஜி ஸார் மேடைக்கு வருகிற மாதிரி இருந்தது. சிவாஜி ஸார் வந்து உட்கார்ந்த பிறகு, "செவாலியே' விருதை வழங்கும் ஃபிரெஞ்சு தூதுவர் வருகிறார். அதற்குப் பின் முதல்வர் வருவதுபோல் நிகழ்ச்சி நிரல் இருந்தது.

கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். சிவாஜி ஸார்தான் அந்த விழாவின் நாயகன். அவருக்காகத்தான் அந்த விழா எடுக்கப்படுகிறது. அந்த விழாவில் அவர்தான் முக்கியப் பிரமுகர். அவருக்குத்தான் "செவாலியே' விருது கொடுக்கப்போகிறார்கள். அவர் எப்போது வருவார் என்று ஜனங்களை எதிர்பார்க்க வைப்பதுதானே முக்கியம்? சிவாஜி ஸார் முதலில் வந்து உட்கார்ந்தால் என்ன நடக்கும்?

dd

அவருக்கு அடுத்ததாக வரும் ஃபிரெஞ்ச் தூதுவருக்காக சிவாஜி ஸார் எழுந்து நிற்கவேண்டியதிருக்கும். அதற்குப் பிறகு சி.எம். வருவார்கள். அவர்களுக்காக சிவாஜி ஸார் மறுபடியும் எழுந்து நிற்கவேண்டியதிருக்கும். அதன் பின்னர் விழாவை ஆரம்பிக்க வேண்டிய நிலை.

நான் சொன்னேன்... "ஸார் இது அவ்வளவு நல்லா இருக்குமா? நீங்களே யோசனை பண்ணிப் பாருங்க. அந்த விழா மேடைக்கருகிலேயே ஏ.சி. ரூம் இருக்கு. சிவாஜி ஸாரை ஏ.சி. ரூம்ல உட்கார வைக்கலாம். அதுக்கப்புறம் ஃபிரெஞ்சு தூதுவர், சி.எம். எல்லாம் வந்துருவாங்க. அதுவரை சிவாஜி ஸார் அந்த ரூமிலேயே இருக்கட்டும். ஃபிரெஞ்சு தூதுவரும், முதல்வரும் வந்த உடனே, சிவாஜி ஸாரை கூட்டிக்கொண்டு வந்தோம்னா, எவ்வளவு நல்லா இருக்கும்! ஆடிட்டோரியமே எந்திரிச்சு நின்னு, கைதட்டி, கரகோஷம் பண்ணி அவருக்கு மரியாதை கொடுக்கும். விழாவை அந்த மாதிரி ஆரம்பிச்சோம்னா எப்படி இருக்கும் ஸார்...? நீங்க நினைச்சுப் பாருங்க' என்று சொன்னேன்.

நான் சொன்னது எல்லோருக்குமே ரொம்பப் பிடித்திருந்தது. பாலச்சந்தர் ஸார், சரவணன் ஸார், பாலசுப்பிரமணியன் ஸார், கே.ஆர்., கே.ஆர்.ஜி. உட்பட எல்லோருமே "இதுதான் முறை. இப்பொழுதே முதல்வரின் செயலாளரிடம் இதற்குச் சம்மதம் வாங்கிவிடலாம்' என்று சொல்லி என் முன்பாகவே ஃபோன் செய்து, முதல்வரின் செயலாளரிடம் பேசினார்கள். அவரும். "ஆமாம், இதுதான் முறை. இது நல்லாயிருக்கு. நான் சி.எம்.மிடம் சொல்கிறேன்' என்று சொன்னார்.

பிறகு முதல்வர் அவர்கள் தன் செயலாள ரிடம், “"இல்லை... இல்லை! அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். அதை யார் மாற்றியது? முதலில் நிகழ்ச்சி நிரல் எப்படி இருந்ததோ, அப்படியே இருக்கட்டும். அதெல்லாம் ஒண்ணும் மாத்த வேண்டாம்' என்று சொல்லியிருக்கிறார்கள்.

இந்தத் தகவல் எனக்குக் கிடைத்தது. முதல்வர் அவர்கள் மறுத்த செய்தி கிடைத்த உடனேயே, நான் கலையுலக நண்பர்களிடம் சொன்னேன். "ஸார், சி.எம்.கிட்டே இதைப் பத்தி கரெக்டா சொல்லியிருக்கமாட்டாங்க. நானே அவங்ககிட்டே பேசறேன். இதிலே என்ன தப்பு இருக்கு? நாம விஷயத்தை சரியா எக்ஸ்ப்ளெய்ன் பண்ணி சொன்னாத்தானே அவங்களுக்குப் புரியும்?' என்றேன்.

நான் சொன்னதைக் கேட்டு எல்லோரும் பயந்தார்கள். "ஐயையோ... வேண்டாம், வேண்டாம்! நீங்க சொல்லாதீங்க. அவங்க அப்படிச் சொல்லிட் டாங்க இல்லே, அதோட விட்டுடுங்க' என்றார்கள்.

"ஏன் ஸார் பயப்படறீங்க? அவங்க என்ன புலியா, சிங்கமா, கரடியா?'

(புழுதி பறக்கும்)