oo

இந்தியாவின் இமெல்டா!

"இந்தியாவின் இமெல்டா'ன்னு யாரச் சொல்றேன்னு உங்களுக்கெல்லாம் தெரிஞ்சிருக்கும்.

நாப்பது வருசத்துக்கு முன்னாடி நடந்த சம்பவம் இது, அதத்தான் நினைவுபடுத்துறேன். வேற யாரு... நம்ம அம்மணி ஜெயலலிதாவத்தான்!

Advertisment

பிலிப்பைன்ஸ் நாட்டோட நீண்ட கால அதிபரா... (1965-86) இருந்தவரு மார்கோஸ். இவரோட அட்டகாசத்த மக்களால ஜீரணிச்சுக் கவே முடியல. மார்கோஸோட மனைவி இமெல்டா மொரட்டுப் பேராசைக்காரி. தன்னோட இரண்டாம்தார காதல் மனைவிக்கு ஆடம்பர பொருட்களா வாங்கிக் குவிச்சாரு மார்கோஸ். நம்ம அம்மணி போல இமெல்டாவும் தன் பங்குக்கு வாங்கி, வாங்கிக் குவிச்சாரு.

சொந்தநாடு பொருளாதாரத்துல சீரழிஞ்சு அந்நியநாட்டு கடன்ல தத்தளிச்சிக்கிட்டு இருக் கும்போது இவங்களுக்கு இது தேவையா?ன்னு கொதிச்சுப்போய் மக்கள் அரசுக்கு எதிரா கொந்தளிச்சாங்க. அதுலயும் தலைநகர் மணிலாவுல... எந்நேரமும் அதிபர் மாளிகைக்குள்ள இளைஞர் பட்டாளம் நுழைவாங்க (இப்போ வங்கதேசத்துல நடக்குற புரட்சி மாதிரி) அப்படிங்கிற ரகசியத் தகவல் அதிபர் குடும்பத்துக்கு எட்டுச்சு... பிறகு ஆட்சியும் கவுந்துருச்சு.

மார்கோஸ் குடும்பத்துல உள்ளவங்க உயிருக்குப் பயந்து, இடைக்கால அரசுகிட்ட, "எங்கள நாடு கடத்திருங்க...''ன்னு கேட்க... மார்கோஸ், இமெல்டா அவங்களோட மகன், மகள் எல்லாரும் அமெரிக்காவுல இருக்கிற ஹவாய் தீவுக்கு நாடு கடத்தப்பட்டாங்க.

Advertisment

அதிபர் மாளிகைக்குள்ள புகுந்த மக்கள், ஒவ்வொரு அறையோட ஆடம்பரத்தையும் பார்த்து அதிர்ந்துபோயிட்டாங்க. இமெல்டா பயன்படுத்துன காஸ்ட்லியான கட்டிலுக்கு கீழே ஒரு பெரிய பாதாள அறை இருந்துச்சு. மக்கள் அந்த அறைக்குள்ள இறங்கி பார்த்தப்ப கிட்டத்தட்ட மூவாயிரம் ஜோடி காலணிகள் இருந்துச்சு. கட் ஷூ, செருப்புன்னு எல்லாமே விலை கூடுன லெதரால தயாரிக்கப்பட்டி ருந்திருக்கு. ஒவ்வொண்ணோட மதிப்பும் குறைஞ்சது 2 லட்சம் இருக்குமாம்.

ff

500 ஆடம்பர கவுனு, அதோட இமெல்டா அணியிறதுக்காக குண்டு துளைக்காத புல்லட் ஃப்ரூப் மேல்சட்டைல்லாம் இருந்துருக்கு. இதுல இன்னொரு விஷேசமா... ம்ண்ய்ந் ஹய்ண்ம்ஹப்ள்ங்கிற அப்பாவி விலங்கோட ஒளிர்ற தன்மையுள்ள மெல்லிசான ரோமத்தால வெளிப்புறத்துலயும், வெல்வெட்டால உள்பக்கத்துல தோள்ல இருந்து கால்வரைக்கும் நீளுற விலை கூடுன ஐந்து ம்ண்ய்ந் ஸ்ரீர்ஹற்ள்ம் இருந்திருக்கு. சுமார் 500க்கும் மேல ஹேண்ட்பேக்கும் இருந்திருக்கு. இதையெல்லாம் பார்த்த மக்கள் ஆத்திரத்துல காலணிகள அடிச்சு நொறுக்கியிருக்காங்க. அதுல உடைஞ் சது போக மிச்சம் இருந்த இமெல்டாவோட 1200 ஜோடி செருப்புகளயும், அவரு பயன் படுத்துன கவுன் உள்ளிட்ட பொருள்களையும் தேசிய அருங்காட்சி யகத்துல வச்சிருக்காங்க. இத ஃபேஷன் டெக்னாலஜி படிக்கிற பல நாட்டு மாணவர்களும் வந்து பாத்து குறிப்பு எடுத்துக்கிறாங்களாம். செருப்புல இமெல்டாகிட்ட தோத்துட்டாரு ஜெ. ஆனா, ஆடை விசயத்துல ஜெயலலிதாட்ட தோத்துப்போயிட்டாரு இமெல்டா.

இப்ப உங்களுக்கு நல்லாவே புரிஞ்சுருக்கும்... நம்ம ஊரு இமெல்டா யாருன்னு...!

தான் செஞ்சதுக்கு நேர்மாறா உல்டா அடிக்கிறது ஜெ.வோட தவிர்க்கவே முடியாத குணாதிசயம். அப்படித்தான்... "எனக்கென்ன பிள்ளையா? குட்டியா?'ன்னு சொல்லி முதலமைச்சருக்கான சம்பளத்த வேணாண்டு சொல்லிட்டு, பேருக்கு ஒரு ரூபா வாங்குன ஜெ. சொத்து, நகைன்னு வாங்கிக் குவிச்சாரு.

ஆங்... ரெய்டெல்லாம் முடிச்சுட்டு, முதல்வர்கிட்ட ரிப்போர்ட்பண்ண அண்ணன் கலைஞர பாத்துருக்காங்க போலீஸ் அதிகாரிங்க. அரெஸ்ட், ரெய்டு நடந்தவிதம்... யாரும் அவங்க மேல கை வைக்கலல்லன்னு கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டார்.

முதல்ல ஜெ.வை கைதுபண்ண நீதியரசர் சிவப்பா கோர்ட்ல கேள்வி எழுப்புனதும்... கலைஞர், "நீதிபதியே சொன்னதுனால, வேறு வழி இல்ல, கைது பண்ணுங்க... ஆனா எந்த இடத்துலயும் அந்த அம்மையார் மேல கை வச்சுறாதீங்க. ரொம்ப மென்மையா நடந்துக்குங்க. எந்த அசம்பாவிதமும் உங்களால நடந்துறக் கூடாது''ன்னு அக்கறையோட சொல்லிஅனுப்புனாராம்.

"அப்படி எந்தவித அசம்பாவிதமும் நடக்காம, அவங்க போக்குக்கு போய்தான் கைது செஞ்சோம்'னு பெருமையா சொல்லியிருக்காங்க.

ரெய்டு பண்ணி எடுத்த லிஸ்டைப் பாத்துருக்கார். பாத்ததும் அதிகாரிகள்ட்ட.., "என்ன... ஒரு ஒட்டியாணம்னு போட்டுருக்கு. நக்கீரன் அட்டையப் பாத்தீங்களா. இரண்டு பேரும் நகையோட ஆளுக்கொரு ஒட்டியாணம் போட்டுருக்காங்க. நீங்க கொண்டுவந்து காட்டுற லிஸ்ட்ல ஒரு ஒட்டியாணம்னுதான் இருக்கு. இன்னொண்ணு இருக்கணுமே. அத கவனிக்கலையா?''ன்னு நக்கலா கேட்டுருக்காரு.

"இன்னொண்ணுதாங்க இது'ன்னு சொல்லியிருக்காங்க.

ss

கலைஞர் மறுபடியும் "ரெண்டு ஒட்டியாணத்தில் ஒண்ணத்தான கைப்பத்தியிருக்கீங்க. இன்னொண்ணு எங்கே?''ன்னு கேக்க... "இன்னொண்ணுதான் இது'ன்னு திரும்பவும் அந்த அதிகாரிங்க பதில் சொல்ல... கலைஞர் ரொம்ப எரிச்சலாகி, "நான் கேக்குறது என்னன்னு புரிஞ்சுக்கிட்டுப் பேசுங்க. (நம்ம நக்கீரன் அட்டைப் படத்தக் காட்டி) இந்தப் படத்துல ஜெயலலிதா ஒரு ஒட்டியாணமும், சசிகலா ஒரு ஒட்டியாணமும் அணிஞ்சிருக்காங்க. ஆனா ரெய்டுல நீங்க ஒரே ஒரு ஒட்டியாணத்தத்தான கைப்பத்தியிருக்கீங்க''ன்னு கேட்டதும்... அதிகாரிங்க சொன்ன பதில்ல உள்ள தப்ப புரிஞ்சுக்கிட்டு, "ஒண்ணுதாங்க கிடைச்சது'ன்னு சொல்லிருக்காங்க.

"விடுபட்டுப் போன இன்னொரு ஒட்டியாணத் தையும் தேடிக் கண்டுபிடிங்க''ன்னு கலைஞர் ஸ்ட்ரிக்டா சொல்லியிருக்காரு. ஆனா கிடைச்ச மாதிரி தெரியல. சரி... அத விட்டுருவோம். அது அரசாங்கத்தோட கவலை.

தங்க நகைங்க, வைரம், வைடூரியம், ஒட்டியாணம்னு நெறைய ஐட்டம்லாம் சரசரன்னு வெளி வந்துச்சா. அதப்பாத்து தமிழகமே மூக்கு மேல விரல வச்சு "ஆத்தாடி ஆத்தாடி... எம்புட்டு நகை, எம்புட்டு செருப்பு, எம்புட்டு சேல... எம்புட்டு சொத்து...! ஒத்த பொம்பளைக்கு... அதுவும் ஒத்த ரூவா சம்பளம் வாங்குற பொம்பளைக்கு இத்தன சொத்தா'ன்னு எல்லோரும் வாயப் பொளக்க... ஜெயில்ல இருந்த ஜெயலலிதாவுக்கு அது "சுருக்'ன்னு தச்சுருச்சு.

தன் வீட்டில் அரசு பறிமுதல் செய்த அளவுக்கு மீறிய ஆபரணங்களுக்கு, அவை எப்படிக் கிடைத்தன? என்பதற்கு ஜெ. சொன்ன காரணம் என்ன தெரியுமா?

தன் கட்சித் தொண்டர்களுக்கு இதுபற்றி ஜெ. எழுதிய மேப்படி அறிக்கையை வாசகர்கள் வாசிக்கத் தருகிறோம்...

"கடந்த சில தினங்களுக்கு மேலாக நான் உங்களோடு மடல்கள் மூலம் என் கருத்துக் களைப் பகிர்ந்துகொள்ள முடியவில்லை. காரணம், நீங்கள் அறிந்ததுதான். ஆட்சியாளர்கள் என்மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, என்னை சிறையில் அடைத்தார்கள். அடுத்த கணமே என் வீடு சோதனையிடப்பட்டது. என் வீடு சோதனை என்ற பெயரில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்க அதிகாரிகள், சோதனை நடக்கும்போதே "அது கிடைத்தது, இது கிடைத்தது' என்று மக்களிடம் பரபரப்பு உருவாகும் வகையில் பத்திரிகைகளில் செய்தி வெளியிடச் செய்தார்கள்.

poo

ஆட்சியாளர்கள் விருப்பத்திற்கேற்ப அதிகாரிகள் நடந்துகொண்டு, என்னை சிறையில் வைத்துவிட்டு வெளியில் என் வீட்டில் கிடைத்த பொருட்கள் பற்றி மிகைப்படுத்திய செய்திகளை வெளியிட்டு, என்னை களங்கப்படுத்தினார்கள். என் பொதுவாழ்க்கையை கேவலப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடந்தன. என்னைத் தனிப்பட்ட முறையில் அழித்துவிடுவதன் மூலம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒழித்துவிடலாம் என்கிற ஆட்சியாளர் களின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்க அதிகாரிகள் நடந்துகொண்டார்கள்.

வீட்டில் சோதனை நடக்கும்போது கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்ட பொருட்கள் குறித்து சிறையில் நான் தெரிவித்த தகவல்களை துண்டு துண்டாக வெளியிடச் செய்தார்கள். குறிப்பாக என் வீட்டிலிருந்த நகைகள் முழுவதும் "மைசூர் மகாராஜா கொடுத்தது' என்று நான் கூறியதாக செய்தி வெளியிடச் செய்தார்கள். அடுத்தநாளே, என்வீட்டு நகைகள் முழுவதும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். எனக்களித்ததாகக் கூறியதாக செய்தி வரும்படி ஆட்சியாளர்கள் பார்த்துக்கொண்டார்கள்.

மைசூர் மகாராஜா கொடுத்ததா? புரட்சித் தலைவர் கொடுத்ததா? அல்லது உழைத்துச் சம்பாதித்ததா?

நகை எப்படி, யார்... யார் குடுத்தாங்கங்கிற கதைய அடுத்த இதழ்லயும் சொல்வாங்க...

(புழுதி பறக்கும்)