ff

(301) நல்லம நாயுடு போட்ட கணக்கு!

சிகலா அக்கா மகன்... அதான் T.T.V.தினகரன், காபிபோஸால அரெஸ்ட் ஆகி சென்னை மத்திய ஜெயில்ல அடைக்கப்பட்டப்ப, சாருக்கு தேவையான வசதிகளச் செய்துதரச் சொல்லி போன்லயே சசிகலா சொன்னப்ப, ஜெயில்ல நல்ல சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்து குடுத்தாரு ராஜ்குமார். ஆனா T.T.V. தினகரனோ, தனக்கு மெத்தையும், மூணு வேளையும் வீட்டுச் சாப்பாடு வேணும்னும், ஞாயிற்றுக்கிழம மட்டுமாவது வெளியில போயிட்டு வர அனுமதிக்கணும்னும் கேக்க... (T.T.V. எப்படி ஜெயிலுக்குள்ள இருந்தும் வாரம் ஒருநாள் வெளிய போயிட்டு வர அனுமதி கேட்டாரோ... அதையே சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில சாதிச்சுக் காட்டுச்சு... வெளிய ஷாப்பிங் போயிட்டு வந்துச்சு. அது ஒரு கதை...!) ராஜ்குமார் மறுத்துட்டாரு. அதனோட விளைவு... அடுத்த நாளே சென்னை சிறையில இருந்து புதுக்கோட்டை சிறைக்கு தூக்கியடிக்கப்பட்டாரு ராஜ்குமார்.

எங்கெல்லாமோ ஜெயலலிதாவால பாதிக்கப் பட்டவங்க இருக்கிறது போல ஜெயில்லயும் ஒருத்தரு இருந்ததுனால... சொல்லுவாங்கள்ல பழமொழி, "ஆனைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வரும்'னு... அந்தக் கதைதான் ஓடிக்கிட்டிருக்கு.

Advertisment

ஜெயலலிதா கனவுலயும்கூட நினைச்சுப் பாத்துருக்குமா? இப்படி குண்டக்க மண்டக்க வந்து ஏடாகூடமா மாட்டி... கொடுஞ்சிறையில...

வந்ததும், வராததுமா அந்தம்மாவ இருட்டு அறையில உக்கார வச்சது... வாழ்க் கையில எங்கயாவது கனவு கண்டுருக்குமா, நாம இப்படி ஜெயிலுக்கு குனிஞ்சு வந்து... அந்தம்மா எப்ப குனிஞ்சிருக்கு? நல்லா பாருங்க... இவங்கள கும்புட்டுப் போறவன், பாக்கப் போறவன் எல்லாருந்தான கூனிக் குறுகி, குனிஞ்சு... பாத்துட்டு திரும்பிப் போகும்போதும் பின்பகுதிய காமிக்காம அப்படியே riverse-ல அதாவது... வந்தவங்க பின்பகுதிய அந்தம்மாவுக்கு காமிக்கக்கூடா தாம். மறந்து கிறந்து காமிச்சு... கீமிச்சுட்டாங் கன்னா... அவங்க எதிர்காலமே கந்தல்!

இந்தம்மா டெய்லி பலபேர பார்க் கிறதுனால அவங்கள்லாம் பார்க்கிறதுக்கு முன்னாடி அவிய்ங்களுக்கு ஒரு பெரிய வகுப்பே எடுப்பாய்ங்களாம் தோட்டத்துல.

Advertisment

s

"மிஸ்டர்... அம்மா முன்னாடி குனிஞ்சு தான் போகணும். திரும்பிப் போகுறப்போ அப்படியே அம்மாவ பாத்துக்கிட்டேதான் நடக்கணும். எதுவும் மிஸ் ஆகாம பாத்துக் கணும். புரியுதா?'ன்னு ட்ரெயினிங் நடக்கு மாம்.

இதெல்லாம் உங்களுக்குப் புதுசு. எங்களுக்கு பழசு. அப்படி வாழ்ந்த மனுஷிய கொண்டாந்து இண்டியன் கக்கூஸ்...

ஒண்ணு தெரியுமா...? நெறைய அரசியல்வாதிங்க ஜெயிலுக்குப் போவாய்ங் கள்ல... போய் திரும்புனதும், யார் அரெஸ்ட்பண்ணி உள்ள வச்சாய்ங்களோ, அவங்க கட்சியில சேர்ந்துருவாய்ங்க. வீறாப்பா பேசிட்டு உள்ள போனவய்ங்க, வெளிய வந்ததும் வாயை... சூ... யும் மூடிக்குவாய்ங்க. ஒரே காரணம்... அந்த இண்டியன் கக்கூஸ்தான். இண்டியன் கக்கூஸ்ல ஒருநாள் அத்தனவாட்டி போனா... பெண்டு கழண்டுரும். இதுக்காகவாவது கட்சி மாறிருவாய்ங்க. சரி... அது கிடக்கட்டும்!

ஜெயலலிதாவுக்கு ஜெயில்ல இருந்த அந்த 28 நாளும் நரகம்தான்; சித்ரவததான். அந்தம்மாவோட ராணி வாழ்க்கைக்கு இது ரொம்ப, ரொம்ப ஓவரான தண்டனை. இந்த வழக்குல கடுமையா தண்டிக்கப்படுதோ, இல்லியோ இதுவே... அதான் சிறையில இருந்த 28 நாளும் உச்சபட்ச தண்டனதான். வாழ்க்கையில மறக்காது அந்த பெருச்சாளியையும், அலுமினியத் தட்டையும், மண்பானையயும், இண்டியன் கக்கூஸையும்.

ஆங்... ஒரு சின்ன பிரேக்...! பிரேக்குன்னா... "போர்க்கள'த்துக்கு இல்ல... ஜெயலலிதாவோட சிறைவாசத்துக்கு...

அடுத்தது ரொம்ப முக்கியம்... படிச்சா நீங்களே புரிஞ்சுக்குவீங்க!

விளம்பரப் படத்துலல்லாம் சொல்வாய்ங்கள்ல... "இதயம் பலவீனம் உள்ளவங்க இத பாக்காதீங்க'ன்னு அந்தக் கதைதான். இத படிச்சீங்கன்னா... நிறைய பேருக்கு இதயத் துடிப்பு நின்னுரும்.

"என்ன மிஸ்டர் இத்தன பீடிகை, சொல்லித் தொல... எவ்வளவு நாளா இப்பிடி பிரேக்கு... பிரேக்...னு கழுத்த அறுக்கிற.... சொல்லுங்கய்யாங் கிறீங்களா?'

"சரி... சொல்லிப்புடுறேன்...

கைது படலம் தொடங்குனதுமே போலீஸ் ஒரு கணக்குப் போட்டுச்சு. நிச்சயமா வீட்ட சோதன போடணும், இல்லன்னா அந்தக் கும்பல் பணம், நகை, இத்யாதி... இத்யாதிகள கடத்திருவாய்ங்கன்னு யோசிச்சு, ஜெயலலிதா சம்பந்தப்பட்ட வீடு... அதான் ஏகப்பட்ட வீடுகள் இருக்கே... போயஸ் வீடு, சிறுதாவூர் பங்களா, பையனூர் பங்களா, கொடநாடு, ஐதராபாத் திராட்சைத் தோட்ட பங்களா... (இன்னும் இருக்கு, ஞாபகத்துக்கு வரல.) கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஸ்டார் ஓட்டல்.... எல்லாத்துலயும் ஒரேநேரம் ரெய்டு பண்ணணும், அதுக்கு உடனே கோர்ட் ஆர்டர வாங்கி பரபரப்பா இயங்கிச்சு போலீஸ்.

ss

அதுக்குள்ள செய்தி.... ஜெயலலிதா வீட்டுல இருந்து பணம், வைரம், வைடூரியம், தங்கம்... இது இல்லாம டாகுமெண்ட்டுக எல்லாத்தையும் கடத்துறதா பப்ளிக்கா பேசிக் கிட்டாங்க.

கோழிய அமுக்குன மாதிரி அமுக்கி புடிக்கணும்னு வேகம் காட்டுன மகராஜன்... அந்த போலீஸ் அதிகாரி யாருமில்ல... நல்லமநாயுடு.

அவரே, என்ன நடந்துச்சு ஜெயலலிதா வீட்டுல? சோதனை போட எப்படி எப்படி திட்டம் போட்டோம்னு எழுதியிருப்பாரு. அவரு எழுத்து நடையிலயே சொல்றேன்...

"நான் இந்த விசாரணை தொடங்கியதும் முதல்கட்டமாக செல்வி ஜெ.ஜெயலலிதா அவர் களின் வீட்டை சோதனை இட நினைத்தேன். அந்த நேரத்தில் அவரது இல்லத்தில் இருந்து பணம், நகைகள் மற்றும் பொருட்கள் கடத்தப் படுவதாக தகவல் இருந்தது. ஆனால் முதல்வ ராய் இருந்த ஒருவரது இல்லத்தை சோதனை செய்ய அவசரப்பட வேண்டாம் என அறிவுரை வந்தது. ஆனாலும் அந்த இல்லத்தை தவிர்த்து வழக்கில் சம்மந்தப்பட்டதாக சந்தேகப்பட்ட சென்னை, மன்னார்குடி, தஞ்சாவூர் போன்ற இடங்களில் இருந்த வீடுகள் அலுவலகங்களில் 24-10-1996 மற்றும் 2 நாட்களில் நீதிமன்ற உத்தரவு பெற்று அந்தந்த இடங்களில் பணிபுரிந்து வந்த ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவினரை சேர்ந்த சகோதர அதிகாரிகளின் உதவியுடன், ஒரே நேரத்தில் சோதனை செய்யப்பட்டது. அவற்றில் கிடைத்த ஆவணங்கள் மற்றும் பொருட்கள் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டது.

கடைசியாக போயஸ் கார்டன் வீட்டில் சோதனை செய்ய நீதிமன்றத்தின் ஆணை பெற்று செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் இல்லங் களான எண்.36 மற்றும் 31-ஆ ஆகியவற்றையும், ஐதராபாத் திராட்சை தோட்டத்தில் இருந்த பண்ணை வீட்டையும் சோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. 07-12-1996ம் தேதி மேற்சொன்ன இடங்களில் சோதனைக்கு தயாராக இருந்த நிலையில் அன்றைய தினம் காலை 7 மணியள வில் என்னுடைய ஆய்வாளர் ஒருவர் என்னிடம் வந்து செல்வி ஜெ.ஜெயலலிதாவை வேறு ஒரு வழக்கில் கைது செய்து கொண்டுபோய் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்திருப்ப தாக சொன்னார். செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் இல்லாமல் சோதனை எப்படி செய்வது என்று ஒருகணம் திகைத்துப்போனேன். அந்த நேரத்தில் யோசனை சொல்ல யாரும் இல்லை. கொஞ்ச நேரத்தில் தெளிவு பிறந்தவனாக எனக்கே தோன்றிய யோசனைப்படி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு போனேன். அங்கே CB-CID பிரிவைச் சேர்ந்த உதவி கண்காணிப் பாளர் திரு. சென்ராயபெருமாள் என்பவர் அங்கிருந்தார். அவரின் பாதுகாப்பில்தான் செல்வி ஜெ.ஜெயலலிதா இருப்பதாக அறிந்தேன். செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களை பார்ப்பதற்கு அனுமதிவேண்டி அவரிடம் ஒரு கடிதம் கொடுத்தேன். அதன்பேரில் அவரும் எனக்கு அனுமதிக் கடிதம் கொடுத்தார். பிறகு நான் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களை பார்த்தேன்.

நீதிமன்ற ஆணைகளை காட்டி சோதனை களின்போது அதிகாரிகளின் உடன் இருந்து பார்த்துக்கொள்ள அவரின் சார்பாக இரண்டு நபர்கள் நியமிக்கப்பட வேண்டும் என வேண்டி னேன். ஆரம்பத்தில் சிறிது கோபப்பட்ட செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள், கொஞ்ச நேரத்தில் சாந்தம் அடைந்தவராக 2 கடிதங்கள் கொடுத்தார்.

அவற்றில் எண்.36 -31ஆ போயஸ் கார்டன் இல்லத்தில் சோதனையின்போது திரு.பாஸ்கரன் என்பவரையும், திராட்சை தோட்ட வீட்டினை சோதனையிடும்போது திரு.விஜயன் என்பவரை யும் உடன் இருந்து பார்த்துக்கொள்ள நியமித் திருந்தார். திரு.பாஸ்கரன், செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் அரசியல் ஆலோசகர் என்றும் திரு.ராம விஜயன் அவர்கள் வீட்டின் எல்லா வேலையும் செய்வார் என்றும் அவரது நம்பிக்கைக்கு உரியவர் என்றும் தெரிந்தது.''

நல்லமநாயுடு அவர்களின் சோதனை (ரெய்டு) அனுபவம்... தொடரும்.

(புழுதி பறக்கும்)