ff

(246) மூக்கு உடைந்த எடப்பாடி -கவர்னர் பன்வாரிலால்!

டுத்ததா என்னை மாஜிஸ்திரேட் ரிமாண்ட் செய்ய முடியாதுன்னு ஆர்டர் போட்டத எதிர்த்து, அப்ப இருந்த எடப்பாடி அரசு வேகவேகமா உயர்நீதிமன்றத்துக்கு கொண்டுபோச்சு.

அங்க நடந்தத எங்க சீனியர் பெருமாள் சார் சொல்றாரு... கேளுங்க!

Advertisment

"கவர்னருடைய தனிப்பட்ட செயலாளர் தாக்கல் செய்த கிரிமினல் கம்ப்ளைண்ட் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து, ஆசிரியரை கைது செய்து குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அன்றைய தினம் பிற்பகல் 2:15 மணிக்கு நடுவர் மன்றத்தில் விவாதம் நடந்தது.

அந்த விவாதம் நடந்தபோது என்னுடைய விவரமான ஆர்க்யூமென்ட்டைக் கேட்டுவிட்டு, ராம் சார் அவர்களையும் அழைத்து கருத்துக் கேட்டுவிட்டு, ரிமாண்ட் ரிப்போர்ட்டை நடுவர் மன்றம் ரிஜெக்ட் செய்தது. ஆசிரியர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால் அரசுத் தரப்பு, "வேண்டுமென்றே பத்திரிகையாளர், "என்.ராம் என்ற அவுட்சைடரிடம் ஆர்க்யூமெண்ட் கேட்டுவிட்டு தவறாக குற்றவியல் நடுவர் கோபிநாத் அவர்கள் ஆசிரியரை விடுவித்துவிட்டார். இது தவறான செயல்பாடு' என்று உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்து ரிமாண்ட் ரிஜெக்ட் செய்த ஆர்டரை மறுபரிசீலனை செய்யவேண்டுமென்று' வாதிட்டிருக்கிறார்கள்.

அந்த வாதத்தைக் கேட்ட நீதிபதி மாண்புமிகு ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள், கூறியதை நம்பி "ராம் என்கிற ஒரு அவுட்சைடரிடம் எப்படி விவாதம் கேட்டு விடுவிக்கலாம்? இது தவறு' என்று ஒரு கருத்தைத் தெரிவித்து, ஆசிரியருக்கு நோட்டீஸ் அனுப்பினார். அந்த மனு மீது மீண்டும் விரிவான வாதங்கள் நடந்தன.

Advertisment

எனது வாதத்தையும், அரசுத் தரப்பு வாதத்தையும் கேட்டு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள், "அந்த மனுவே தவறானது. குற்றவியல் நடுவர் கோபிநாத் அவர்கள் வழங்கிய தீர்ப்பு சரிதான்' என்று உத்தரவிட்டார்.

அதற்குக் காரணம்... நடுவர் மன்றத்தில் ரிமாண்ட் ரிப்போர்ட்டின் மீது விவாதம் நடந்தபோது, "உண்மையிலேயே என்ன நடந்தது?' என்பதை நான் விரிவாக எடுத்துக் கூறினேன்.

ரெண்டு மணி நேரம் என்னுடைய விவாதத்தைக் கேட்ட பின்பு, இறுதியாகத்தான் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த திரு.என்.ராம் அவர்களை அழைத்து, அவருடைய கருத்தையும் கேட்டார்கள்.

"இது தவறு என்று அரசுத் தரப்பு வாதிடுவது தவறான காரியம். காரணம், ஏற்கனவே உச்சநீதிமன்றம் இதுபோன்ற ஒரு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகவிருந்த ஒரு எக்ஸ்பர்ட்டிடம் அவருடைய கருத்தையும் கேட்கலாம் என்று கூறியிருக்கிறது. அந்தத் தீர்ப்பைக் கூறியவர், மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர்.'

இதையெல்லாம் நான் மேற்கோள் காட்டி விவாதித்தபோது, திருமிகு நீதியரசர் அதை ஏற்றுக்கொண்டு "அந்த ரிமாண்ட் ரிஜெக்ட் உத்தரவு சரியான உத்தரவுதான்' என்று தீர்ப்பு வழங்கினார்.

poorkalam

மேலும், இந்த வழக்கின் விவாதம் நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில்... டெல்லி உயர்நீதிமன்றம் அர்னேஷ்குமார் என்ற ஒரு வழக்கில் "7 வருடத்திற்குக் கீழ் தண்டனை கூறப்பட்டுள்ள குற்றங்களுக்கு எந்த நபர்களையும் கைது செய்யக்கூடாது. மாறாக, குற்றவியல் நடைமுறைச் சட்டம் "பிரிவு 41-ஏ'ன்படி அவர்களுக்கு சம்மன் அனுப்பி, விசாரிக்க வேண்டும், மாறாக கைது செய்யக்கூடாது. அந்த விசாரணையிலும், தொடர்ந்து நடக்கும் புலன்விசாரணையிலும் அந்த நபர்கள் ஒத்துழைக்க மறுத்தால் மட்டுமே அவர்களை கைது செய்யலாம்' என்ற விவாதத்தையும் நாம் எடுத்து வைத்தோம்.

அதையும் ஏற்றுக்கொண்ட நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள், அதனுடைய தீர்ப்பை, "இது ஒரு புதிய சட்டத் திருத்தத்தால் உருவானது என்றும், அர்னேஷ்குமார் வழக்கில் இது உறுதிசெய்யப்பட்டுள்ளது' என்பதையும் கூறி, "இனிமேல் தமிழகத்தில் இருக்கின்ற எல்லா காவல்நிலையங்களிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படவேண்டும், அதற்காக டி.ஜி.பி. இந்த உத்தரவு நகலை எல்லா காவல்நிலையங்களுக்கும் ஒரு சர்க்குலராக அனுப்பி வைக்கவேண்டும்' என்று உத்தரவிட்டார். அத்தோடு அந்த வழக்கு முடிந்தது.

பின்பு ஆசிரியர் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரில் அதிவிரைவாக இறுதி குற்ற அறிக்கை தாக்கல் செய்தார்கள். அந்த குற்ற அறிக்கை 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இப்படியான குற்ற அறிக்கைகளை தாக்கல் செய்யும்போது அந்த வழக்கில் புதியதாக சில ஒடஈ. பிரிவுகளைச் சேர்த் திருந்தார்கள். அந்த ஒடஈ புதிய பிரிவுகளைச் சேர்த்ததால், அந்த வழக்கு, அமர்வு நீதிமன்றம்... செசன்ஸ் நீதிமன்றத்தில்தான் விசாரணை செய்யப்பட வேண்டும்.

இப்படி ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்ற அறிக்கை தாக்கல் செய்யும்போது, அதைப் படித்து ஆராய்ந்து ஜுடிசியல் மாஜிஸ்திரேட் "இந்த வழக்கை நான் விசாரணை செய்ய முடியாது. இதனுடைய ட்ரையல் செசன்ஸ் நீதிமன்றத்தில்தான் நடத்தவேண்டும்' என்று அவருக்கு ஓ.கே. என்று பட்டால், மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத் திற்கு அந்த வழக்கை கமிட் செய்யவேண்டும். இதை "கமிட்டல் புரொஸீடிங்' என்று சொல்வார்கள்.

நமது வழக்கில் செகண்ட் மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட், ஃபைனல் ரிப்போர்ட்டைப் பெற்றுக்கொண்டு அதனுடைய கமிட்டல் புரொஸீடிங்ஸ் தொடங்குவதற்கு, ஆசிரியருக்கு சம்மன்ஸ் அனுப்பினார்.

இந்த சம்மனைப் பெற்றுக்கொண்டு, அந்த ஃபைனல் ரிப்போர்ட்டை க்வாஷ் செய்ய வேண்டுமென்று புதியதாக ஒரு க்வாஷ் மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தோம்.

அந்த வழக்கையும் மாண்புமிகு நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ்தான் முதல் முதலில் அட்மிஷனுக்கு எடுத்துக்கொண்டு, தடை ஆணை வழங்கி னார்.

கிட்டத்தட்ட 70 பக்கங்களுக்கு நீளும் அந்தத் தீர்ப்பில், சுவாரஸ்யமான ரெண்டு பத்திகள மட்டும் கீழே தந்துள்ளோம்.

கைது செய்யப்பட்ட பிரதிவாதிக்கு, போலீ ஸாரினால் வழங்கப்பட்ட கைது அறிவித்தல் படிவம், இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட் டுள்ளது. ரிமாண்ட் பரிசீலனையின்போது இந்த பதிவு கீழே உள்ள நீதிமன்றத்தில் கிடைத் தது. இந்த கைது அறி வித்தல் படிவம் கைதுக் கான காரணத்தைக் குறிப்பிடவில்லை. இந் தப் படிவம், கைது நட வடிக்கையை மேற் கொண்ட எந்தக் காவல் நிலையத்தின் பெய ரையோ, நக்கீரன் அலுவலகத்திலிருந்து வெளியீடுகள் எதுவும் கைப்பற்றப்பட்டதா என் பதையும் குறிப்பிட வில்லை. எந்த வழக் கறிஞரையும் சந்திக்க, பிரதிவாதிக்கு அனுமதியளிக்கப்படவில்லை என்று, அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இது ஈழ்.டஈன் 41-உ பிரிவை மீறுவதாகும். விசாரணை அறிக்கை, பிரதிவாதியை கைது செய்யும்போது மாண்புமிகு உச்சநீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல்கள், ஈழ்.டஈன் விதிகள் காவல்துறையால் பின்பற்றப்பட்டதாக கூறுகிறது.

அதாவது... பின்பற்றப்பட்டதாகச் சொல்லிக்கிட்டு வழி காட்டுதலை மீறியிருக் காங்க.

இந்த வழக்கில், 2018 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை கட்டுரைகள் வெளி யிடப்பட்டதாக கூறப்படு கிறது. மாண்புமிகு தமிழக ஆளுநரின் சட்டப்பூர்வ அதிகாரங்களையும் கடமை களையும் செய்யவிடாமல் இந்தப் பிரசுரங்கள் எப்படித் தடுக்கின்றன, எந்த வகை யில் ஆளுநர் முடக்கப்பட் டார் என்பதை மனுதாரர் காவல்துறையால் நிரூபிக்க முடியவில்லை. புகாரில் அளிக்கப்பட்ட தீட்சித் அறிக்கையைத் தவிர, பிரதிவாதியைக் காவலில் வைக்கக் கோரும் வகையில் வேறு எந்த சாட்சியும் காவல்துறையிடம் கிடைக்கவில்லை. எனவே, போதுமான காரணங்களின் அடிப்படையில் நீதிமன்றம் காவல் கோரிக்கையை நிராகரித்தது சரி யானது.

எடப்பாடி அரசு கவர்னருக்கு காவடி தூக்க நடத்துன நாடகம்... அதுதான் என் அரெஸ்ட்...! கீழ்கோர்ட்ல உள்ள வைக்கமுடியலயா... மேல்கோர்ட்... இப்படி ஒவ்வொண்ணா முட்டி மோதுனாங்க. கடைசியா மூக்கு உடைஞ்சது எடப்பாடிக்கும்... கவர்னர் பன்வாரிலாலுக்கும்தான்...!

நீதி.... நீதீ.... வென்றது...

(புழுதி பறக்கும்)