(241) வீரப்பன் மனைவியின் சந்தேகம்!
கடந்த இதழ்ல டி.ஜி.பி. விஜயகுமார், வீரப்பன் பத்தி எழுதுன புக்குல... "வீரப்பன் இருந்த குக்கூனை, அதான் போலீஸ் வண்டிய, இல்ல... இல்ல... ஆம்புலன்ஸ சுத்தி வளைச்சு சுடோ சுடுன்னு சுட்டோம். சுட்டதும் ஒரே அமைதி... மறுபடி அமைதி...! நான் ராஜராஜன் மற்றும் ஹூசேனுக்கு சைகை காட்டுனேன். மற்றொரு வெடிகுண்டு (அப்ப முதல்ல ஒரு குண்டு போட்டுருக்காங்க) குக்கூன் மேல எறியப்பட்டது. நெருப்பு ஜுவாலையோட ஒரு பெரும் சத்தமே கேட்டுச்சு'ன்னு எழுதியிருக்காரு.
""ஓ.கே. சார். நீங்க இப்படி எழுதியிருக்கீங்க. வெடிகுண்டு ஒண்ணு, ரெண்டு வீசுனோம்'னு. ஆனா இந்த ஆபரேஷன் "பட்டர்பிளை குக்கூன்' பத்தி செந்தாமரைக் கண்ணன் எஸ்.பி. 2004 நவம்பர்ல வெளிவந்த "ஃப்ரண்ட் லைன்' ஆங்கிலப் பத்திரிகையில பக்கம் 6-ல எங்கயும் "வீரப்பனை சுடும்போது குண்டு போட்டதா'' சொல்லல. மூணு ரவுண்டு சுட்டதாத்தான் சொல்றாரு.
அத நீங்களே பாருங்க, ஃப்ரண்ட் லைன் ஆங்கில வெர்சன்...
A question that has been raised is why did so few bullets (hardly a 100) hit the ambulance and the four bandits, despire the fact that 22 men had almost emptied their magazines (around 20 bullets in each) at the target. (One press of an AK-47's trigger spews out two or three bullets.) Explained Senthamaraikannan: "Yes, we fired over 30
(241) வீரப்பன் மனைவியின் சந்தேகம்!
கடந்த இதழ்ல டி.ஜி.பி. விஜயகுமார், வீரப்பன் பத்தி எழுதுன புக்குல... "வீரப்பன் இருந்த குக்கூனை, அதான் போலீஸ் வண்டிய, இல்ல... இல்ல... ஆம்புலன்ஸ சுத்தி வளைச்சு சுடோ சுடுன்னு சுட்டோம். சுட்டதும் ஒரே அமைதி... மறுபடி அமைதி...! நான் ராஜராஜன் மற்றும் ஹூசேனுக்கு சைகை காட்டுனேன். மற்றொரு வெடிகுண்டு (அப்ப முதல்ல ஒரு குண்டு போட்டுருக்காங்க) குக்கூன் மேல எறியப்பட்டது. நெருப்பு ஜுவாலையோட ஒரு பெரும் சத்தமே கேட்டுச்சு'ன்னு எழுதியிருக்காரு.
""ஓ.கே. சார். நீங்க இப்படி எழுதியிருக்கீங்க. வெடிகுண்டு ஒண்ணு, ரெண்டு வீசுனோம்'னு. ஆனா இந்த ஆபரேஷன் "பட்டர்பிளை குக்கூன்' பத்தி செந்தாமரைக் கண்ணன் எஸ்.பி. 2004 நவம்பர்ல வெளிவந்த "ஃப்ரண்ட் லைன்' ஆங்கிலப் பத்திரிகையில பக்கம் 6-ல எங்கயும் "வீரப்பனை சுடும்போது குண்டு போட்டதா'' சொல்லல. மூணு ரவுண்டு சுட்டதாத்தான் சொல்றாரு.
அத நீங்களே பாருங்க, ஃப்ரண்ட் லைன் ஆங்கில வெர்சன்...
A question that has been raised is why did so few bullets (hardly a 100) hit the ambulance and the four bandits, despire the fact that 22 men had almost emptied their magazines (around 20 bullets in each) at the target. (One press of an AK-47's trigger spews out two or three bullets.) Explained Senthamaraikannan: "Yes, we fired over 300 bullets, but it was part of our straegy. After our first round of fire, there was a lull. A few of the officers whom we has summoned by mike once we knew that the van (ambulance) was indeed going to Padi joined us just prior to the second round of fire. Then there was a lull, but we were not sure whether Veerappan and his people were dead, or were regrouping to fire again. So in order to make them think that firing was still on. We had groups of our men stationed at different points around the van to fire in the air. While the firing in the air was going on, two officers opened the back door of the ambulance. No movement was found inside the van. During the operation 70 or 80 of our bullets must have hit the target.The rest were fired in the air."
""22 கமாண்டோக்கள் தங்கள் துப்பாக்கியிலுள்ள அனைத்துக் குண்டுகளையும் காலிசெய்த போதும், ஆம்பு லன்ஸ் மீதும் இறந்த நான்கு பேர் மீதும் வெகுசில குண்டுகளே பாய்ந்திருக்கிறதே'' என்பதைப் பற்றிக் கேட்டபோது...
செந்தாமரைக் கண்ணன், ""ஆமாம் நாங்கள் 300 குண்டுகள் வரை சுட்டோம். அது எங்கள் திட் டத்தின் ஒரு பகுதி. முதல் ரவுண்ட் சுட்ட பிறகு ஒரு இடைவேளை. ஆம்புலன்ஸ் பாடி வழி யாகச் செல்கிறது என்பது உறுதியானதும் சில அதி காரிகளை நாங்கள் மைக் வழியாக அழைத்திருந் தோம். அவர்கள் இரண் டாவது ரவுண்ட் துப்பாக் கிச்சூடு தொடங்குவதற்கு சற்று முன்பாகத்தான் எங்களுடன் இணைந்து கொண்டிருந்தனர். இரண் டாவது ரவுண்ட் முடிந்த தும் மீண்டும் ஒரு அமைதி. வீரப்பனும் அவ னது ஆட்களும் இறந்து விட்டனரா, இல்லை மீண்டும் சுடப்போகின்ற னரா என எங்களுக்கு உறுதியாகத் தெரிய வில்லை. எனவே இன் னும் துப்பாக்கிச் சூடு தொடர்கிறது என அவர் கள் நினைப்பதற்காக வேனைச் சுற்றி பல்வேறு இடத்தில் நாங்கள் நிறுத்தியிருந்த பல்வேறு போலீசார்கள் வெறுமனே காற்றில் சுட்டார்கள். இப்படி சுட்டுக்கொண்டி ருக்கும்போது இரண்டு போலீசார் ஆம்புலன்ஸின் பின் கதவைத் திறந்தார் கள். வேனுக்குள் எந்த அசைவும் இல்லை. திட்டத்தின்போது 70-லிருந்து 80 தோட்டாக்கள் இலக்கைத் தாக்கியிருக்கும். மற்றவை அந்தரத்தில் சுடப்பட்டிருக்கும்...''’’
என விளக்கினார்.
வீரப்பன் கொல்லப்பட்டதும் சுடச்சுட வந்த "ப்ரண்ட் லைன்' ஆங்கிலப் பத்திரிகையில வந்ததுதான் நீங்க மேல பார்த்தது. எந்த இடத் துலயும் வெடிகுண்டு பிரயோகிச்சதா, ஆபரே ஷன் குக்கூனை முன்னெடுத்த தலைகள்ல சின்னத் தலை... அதான் செந்தாமரைக் கண்ணன் சொல்லல.
"வீரப்பனே செத்துட்டான் விடுவியா...'ன்னு இந்த விஷயத்த விடமுடியல. பொறுப்புல இருந்த ரெண்டுபேருக்குமான முரண்பாடுகள நாம சொல்லித்தான ஆகணும்.
முடிவு எடுக்கிறத உங்க கையில விட்டுடுறேன் மக்களே...!
எங்க துணை ஆசிரியர் தம்பி சுப்பிரமணி, என் அறைக்கு டி.ஜி.பி. விஜயகுமார் எழுதுன வீரப்பன் புக்க எடுத்துட்டு வந்து, ""அண்ணே... இந்த புக்குல 273ஆம் பக்கத்துல மிக முக்கியமான விஷயத்த விஜயகுமார் பதிவு பண்ணியிருக்காரு''ன்னாரு.
விஜயகுமார் ஐ.பி.எஸ். எழுதுன புத்தகத்த நான் வாசிக்கவே இல்ல. ஏதோ அவரு எழுதி வெளியிட்டாரு, நாம ஏன் படிக்கணும்னு விட் டுட்டேன். ஆனா, அந்தப் புக்குல என்ன... என்ன இருக்குங்கிறத என் தம்பிகள் படிச்சிருக்காங்க. அதுல ஒருத்தர் சுப்பிரமணி. அவருதான் என்ன பதிவுங்கிறத சொன்னாரு. சொல்லச் சொல்ல... நான் கொஞ்சம் ஆடிப்போயிட்டேன்.
அதுக்கு முன்னாடி வீரப்பன் மனைவி முத்துலட்சுமி ஒரு வீடியோ பேட்டியில, கொளத்தூர் மணிய பத்தி பேசியிருப்பாரு. அந்த பேட்டியின் ஒரு பகுதிய போர்க்களம் 234-வது அத்தியாயத்துல பதிவு பண்ணியிருப்போம்.
அது... மறுபடியும் உங்களுக்காக...
அப்ப நீங்க திரு.கொளத்தூர் மணி அவர்கள் மீது சந்தேகத்த எழுப்புறீங்களா?
முத்துலட்சுமி: ஆமா! செந்தாமரைக் கண்ணன் தொடர்ந்து கொளத்தூர் மணிய... அவர் மேல நான் குற்றம் சொல்லல. ஏன்னா... அவங்ககிட்ட ஆதாரம் திடமா மாட்டிக்கிச்சு. மணி அண்ணன் ஈழத்துக்கு கூட்டிட்டுப் போறாருங்கிற ஆதாரத்தோட போலீஸ்கிட்ட மாட்டிட்டாரு. மாட்டுனது னால போலீஸ் நெருக்கடிக்குப் பயந்துட்டு இதவந்து... இது பண்ணியிருக்கலாம்ங் கிறதுதான் என்னுடைய இது.
போறபோக்குல அவர் மீது வைக்கக்கூடிய ஒரு குற் றச்சாட்டு மாதிரி இல்லையா?
முத்துலட்சுமி: இது... நடந்த உண்மையத்தான் நான் சொல்றேன். அது போற போக்குல வர்ற குற்றச் சாட்டா? அது பின்னாடி வைக்கிற குற்றச்சாட்டா? எனக்குத் தெரியாது. பட்... என்கிட்ட வந்து மணி அண்ணன் மூலமா செந்தா மரைக்கண்ணன் கேசட் கொண்டாந்து குடுக்கச் சொன்னது, செந்தாமரைக் கண்ணன் கூட வந்தது, எனக்கு அப்ப அது போலீஸ்னு தெரியாது. ஆனா மணி அண்ணனுக்குத் தெரிஞ்சிருக்கும். செந்தா மரைக் கண்ணன, மணிய தெரியாம இருக்குமா? செந்தாமரைக் கண்ணனுக்கு மணிய தெரிஞ்சிருக்கும். அப்ப... அப்பவே தெரிஞ்சுதான அந்த கேசட்ட கொண்டாந்து குடுக்கச் சொல்றீங்க? அப்ப எனக்குத்தான் தெரியாது எதுவுமே. மணி அண்ணனையும் நம்புறேன். சண்முகப்பிரியாவையும் நம்பு றேன். இந்தக் கேரக்டர்கள நான் நம்புறேன். நான் நம்பி, நம்ம புருஷன் வரட்டும்... நம்ம குழந்தைகள வந்து பாக்கட்டும்னு நம்புறேன். நம்பிக் கொண்டுபோய் அந்த கேசட்ட குடுக்குறேன்.
ஆனா மணி அண்ணனுக்கு தெரியும், சண்முகப்பிரியா போலீஸ் ஆளுன்னும் தெரியும், செந்தாமரைக்கண்ணன் யாருன் னும் தெரியும்.
இந்த உண்மைய அவரு என்கிட்ட சொல்லலியே? ""இல்லம்மா... கேசட்லாம் குடுக்காத. இவங்க போலீஸ் ஆளு'' அப்படின்னு ஒரு வார்த்த கூட எங்கிட்ட சொல்லலியே?
இது முத்துலட்சுமி அக்கா, அண்ணன் கொளத்தூர் மணி மேல விழுந்த சந்தேகத்தப் பத்தி சொன்னது...!
(புழுதி பறக்கும்)