(229) கவர்னர் அறிக்கையில் முரண்பாடு!
கே.எம்.காதர்மொய்தீன்: (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)
ஜனநாயகம் என்பதே ஒரு சாரார் உடன்படுவதை, மறு சாரார் உடன்படாமல் இருப்பது தான். இந்திய ஜனநாயகத்தை பாதுகாக்கிற தூண்களில் நவீன காலத்தில் பத்திரிகை மற்றும் ஊடகத்துறை முதன்மை பெற்று வருகிறது. நக்கீரன் பத்திரிகை, மறைக்கப்பட்ட பொதுநலம் தொடர்பான பல உண்மைகளை வெளிக்கொண்டு வருவதில் தனி முத்திரை பதித்து வருகிறது. ஆசிரியர் நக்கீரன் கோபால் அவர்கள் துணிச்சல் மிக்கவர். எதனையும் ஆதாரப்பூர்வமாக வெளியிடுவதில் வல்லவர். துப்புத் துலக்கும் இதழியலில் முன்னோடியாக திகழ்ந்து வருபவர்.
நக்கீரன் கோபால் எழுப்பியிருக்கக்கூடிய வாதங்களுக்கும், விமர்சனங்களுக்கும் மறுப்பு தெரிவித்து, தங்களது கண்டனங்களை அறிக்கைகள் மூலமாக வெளியிட்டு ஜனநாயக மரபுகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கும், அமைச்சரவைக்கும் இருக்கிறது.
அவர்கள் கொடுக்கும் மறுப்பு அறிக்கைகளை ‘நக்கீரன்’ இதழில் வெளியிடுமாறு வலியுறுத்தவும் அவர்களுக்கு உரிமை உண்டு. இத்தகைய ஜனநாயக மரபுகளை புறந்தள்ளிவிட்டு எமர்ஜென்ஸி காலத்தை நினைவுபடுத்தும் வகையில் பத்திரிகையாளர்களை கைது செய்வது தமிழக அரசுக்கு அழகல்ல. தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயர் இது. நக்கீரன் கோபால் அவர்களை உடனடியாக விடுவித்து ஜனநாயக மாண்பு களையும் பத்திரிகை சுதந்திரத்தையும் பாதுகாக்கும் முறையில் தமிழக அரசு முன்வரவேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் வற்புறுத்துகிறோம்.
சாமான்யன் ஒருத்தனுக்காகவும், அவன் நடத்தும் பத்திரிகைக்காகவும் இத்தனை கைகள் அரவணைச்சத பொறுக்க முடியல கவர்னர் கோஷ்டிக்கு. தமிழ்நாட்டுல இருக்குற அத்தனை அரசியல் தலைகள் ஒன்றிரண்டைத் தவிர எல்லாரும் கவர்னரை கண்டிச்சு அறிக்கை குடுத்துட்டாங்க. இந்திய அளவுல கவர்னருக்கு பெரிய மூக்குடைப்பு. இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத கவர்னரும், அவரோட ஜால்ராக்களும், இதுக்கு நாம ஏதாவது பதில் சொல்லணுமேன்னு, எல்லாம் முடிஞ்சு நாம சிறைக்குச் செல்லாம வெளிய வந்து அடுத்த நாளு பாராட்டுக் கூட்டமும் நடந்து முடிஞ்ச பிறகு...
கவர்னர் மாளிகையில இருந்து ஒரு அறிக்கை அழுதுகொண்டும், தொழுதுகொண் டும் ஒரு ஒப்பாரியா வந்துச்சு. அது...
மிகுந்த திகைப்புடனும், கவலையுடனும் இந்த செய்தி அறிக்கை வெளியிடப்படுகிறது
திருவள்ளுவர் முதல் டாக்டர் ராதாகிருஷ்ணன் வரை பல நூற்றாண்டுகளாக மிகப்பெரிய தத்துவார்த்த தலைவர்களையும், மிகப்பெரிய கலாச்சாரத்தையும் கொண்ட நாடு இந்தியா.
தமிழ்நாட்டு மக்கள் எப்போதும் நேர்மை, உண்மை மற்றும் நல்லவை பக்கம் நிற்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.
சமூகவிரோத சக்திகள் சமூகத்தை தங்கள் கையில் எடுத்துவிடுவார்களோ என்ற பயத்தில் இந்த விளக்கத்தை அளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.
பிரிட்டிஷ் காலத்திலிருந்து மகாத்மா காந்தி எப்போதும் உண்மை மற்றும் நல்லவற்றுக்கான பாதையில் அச்சம் தவிர்த்து உறுதியாக நிற்கவேண்டும் என்று மக்களுக்கு போதித்திருக்கிறார்.
ஆளுநருக்கோ, ஆளுநர் மாளிகைக்கோ, அருப்புக்கோட்டை கல்லூரி உதவிப் பேராசிரியர் நிர்மலாதேவி என்பவருக்கும் தொடர்பு என்ற செய்தியில் துளியளவு உண்மையும் இல்லை. அந்தச் செய்திகள் முற்றிலும் தவறானவை.
போலீஸிடம் நிர்மலா தேவி கொடுத்த வாக்கு மூலம் உண்மைக்கு மாறானது. மாநிலத்தின் முதல் குடிமகன் மீது ஆபாச மான, கோழைத்தனமான தாக்குதலை சகிக்கும் பொறுமையை இழந்த பிறகே பத்திரிகை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பத்திரிகை சுதந்திரத்தை அச்சுறுத்துவ தாக சிலர் கூறுவது நகைப்புக்குரியது.
எல்லா விஷயங்களுக் கும் ஒரு எல்லை உண்டு. கடந்த ஆறு மாதங்களாக, நிர்மலாதேவி விவகாரத்தில் சட்டப்படியான விசா ரணைகள் நீதிமன்றத்தின் முன் விசாரணைக்காக வைக்கப்படுவதை கண்ணி யம் நிறைந்த அமைதியுடன் கவனித்து வருகிறது.
செப்டம்பர் 2ஆம் தேதி எல்லா விசாரணையும் நிறைவு பெற்று, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு நக்கீரன் என்ற பத்திரிகையில் மீண்டும் ஆபாசமான தகவல்கள் வெளியிடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
புலனாய்வு இதழியல் என்று சொல்லிக்கொள் கிறவர்கள், நிர்மலாதேவி போலீஸிடம் கொடுத்த உண்மையான வாக்குமூலத்தை சரி பார்க்க வேண்டும் என்றுகூட கவலைப்படவில்லை.
நக்கீரன் வெளியிட்ட கட்டுரையில் இதழியல் ஒழுக்கம் மீறப்பட்டுள்ளது. நிர்மலாதேவி கடந்த ஒரு ஆண்டில் எப்போதும் ராஜ்பவனுக்குள் நுழைந்த தில்லை. ஆளுநரையோ, அவருடைய செய லாளரையோ, ஆளுநர் மாளிகை ஊழியர்களையோ சந்தித்ததில்லை.
மதுரை காமராஜர் பல்லைக்கழகத்தில் நடைபெற்ற அன்னை தெரஸா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக மதுரை பல்கலைக்கழகத்திற்கு சென்ற ஆளுநர், மதுரை பல்கலைக் கழக விருந்தினர் மாளிகையில் தங்கியதில்லை. அப்போது ஆளுநருடைய செயலாளர் உடன் செல்ல வில்லை. நக்கீரனில் வெளியிடப்பட்ட கட்டுரையில் உண்மைக் கும் நேர்மைக்கும் மாறாக வெறுப்புணர்வுதான் அதிகமாக இருக்கிறது.
உண்மையை உணராமல் நக்கீரனின் மஞ்சள் பத்திரிகைத்தனமான அப்பட்டமான பொய்க் கட்டுரையை மரியாதைக்குரிய நபர்களும் ஆதரிப்பது வருத்தமளிக்கிறது.
சுப்பிரமணிய பாரதி, வ.உ.சி., அண்ணா, காமராஜர், எம்.ஜி.ஆர்., அப்துல்கலாம் போன்றோர் தங்களுடைய சிந்தனைகளாலும், பேச்சாலும், நடவடிக்கைகளாலும் இந்த மாநிலத்தை கவுரவப்படுத்தினார்கள்.
மாநில அரசின் அதிகாரத்தை ஆளுநர் மாளிகை ஒருபோதும் எல்லை மீறி அதீதமாக பயன்படுத்திய தில்லை. தொடர்ந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட தால் சட்டப்படி ஒரு புகார் கொடுக் கப்பட்டது. ஜனநாயகத்தில் ஆரோக்கியமான கருத்துகள் பரிமாறப் படலாம். ஆனால் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆளுநரை நோக்கி விடுக்கப்பட்டால் தாங்கிக்கொள்ள முடியாது. ஆளுநர் மாளிகையின் கண்ணியத்தைக் காயப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு ஆளுநர் மாளிகை பணிந்துவிடாது.
கவர்னரோட திகைப்பு + கவலை கலந்த அறிக்கை யைத்தான் மேலே படிச்சிருப் பீங்க.
அதுல...
நல்லா கவனிங்க, 6-வது பாரால கவர்னர் என்ன சொல்றாருன்னா, "போலீஸிடம் நிர்மலாதேவி கொடுத்த வாக்குமூலம் உண்மைக்கு மாறானது''ன்னு சொல்றாரு...
அதே மறுப்பில் 9-வது பாரால "நிர்மலாதேவி போலீஸிடம் கொடுத்த உண்மையான வாக்குமூலத்தை சரிபார்க்க வேண்டும் என்று கூட கவலைப்படவில்லை''ங்கிறாரு...
கொடுமை என்னன்னா... ஒரு பாரால "நிர்மலாதேவி குடுத்த வாக்குமூலம் உண்மைக்கு மாறா னது'ங்கிறார்.
இன்னொரு பாரால "நிர்மலாதேவி கொடுத்த உண் மையான வாக்குமூலத்தை சரி பார்க்கணும்'கிறார். எவன் எழுதிக் குடுத்தானோ தெரியல... அவரே குழம்பிப்போயிட் டாரு..!
சரி... இதுக்கு நாம குடுக்கிற ஒரு விளக்கம் அடுத்து...
(புழுதி பறக்கும்)