dd

(149) நக்கீரன் குடும்பத்தினரை கண்காணித்த போலீஸ் படை!

முன்னாடி சொன்னேன்ல, போலீஸ்காரர் ஒருத்தரு, ஒருநாள் என்கிட்ட வந்து ரொம்ப வருத்தப்பட்டாருண்டு. "பெருசா ஒரு காரியத்தப் பண்ணி, உங்கள காலிபண்றதுக்கு மெகா திட்டம் போட்டுருந்தோம். இப்படி ஒரு டீம் ஒர்க்கா...? இத நாங்க நினைச்சுப் பாக்கவே இல்ல. அதுல எங்களுக்குப் ஃபெயிலியர்தான்''னாரு.

"என்ன ஃபெயிலியர்?''ன்னு கேட்டேன்.

Advertisment

"அதாங்க... உங்க வீட்டுல போதைப் பொருள வச்சு எடுக்கிறது...!''ன்னாரு.

"அடப்பாவிகளா!''

ஏண்டா டேய்... அதான் சொல்வாய்ங்கள்ல சிரிச்சுப் பேசுனாலே நாக்க வச்சு மூஞ்ச நக்க ஆரம்பிச்சுரும்ப் பாய்ங்கள்ல, அது மாதிரி கொஞ்சம் இயல்பா "வாங்கண்ணே, வணக்கம், நல்லா இருக்கீங்களா''ன்னவுடனே அந்த ல மேப்படி வேலைய செய்ய ஆரம்பிச்சிட்டாரு.

Advertisment

"ஏண்ணே உங்க வீட்டுல போதைப் பொருள் வைக்க அனுமதிக்காம விட்டுட்டாக. விட்டிருக்கலாமே''ன்னு கெஞ்சலா கேட்டாப்டி.

அடி விளக்குமாறு...! எப்படி கத... பாத்தீங்களா?

"போதைப்பொருள் வச்சு எடுக்கிறதுல ஃபெயிலியராம். நாசமாப் போறவிய்ங்க...''

ஒரு குடும்பத்த எப்படி குடி கெடுக்கிறதுங்கிறத இவிய்ங்க கிட்டதான் கத்துக்கணும்.

புராணத்துல கம்பன் சொல்லுவான். "ராமன் தலையில் சூட்டப்பட்ட மகுடம் அனைத் தும் மக்கள் மீதும் சூட்டப்பட் டது'ன்னு. மகுடம், கிரீடம் மாத்திரம் இல்ல... ஒரு கஷ்டம், துன்பம், இல்ல... இல்ல... பெரிய பேரிடி வந்ததுன்னா அத நக்கீரன் குடும்பம் எல்லார் மீதும் விழுந்த மாதிரி எதிர்த்துப் போராடுறது இருக்கே... அதான் சார் இத்தன சரவெடி, அணுகுண்டு, ஆட்டம் பாம்லயும் இருந்து தப்பிச்சு உசுரோட இருக்கோம். அதுல ஒண்ணு, ரெண்ட இப்ப சொல் றேன் கேளுங்க.

சகோதர ஒற்றுமை இருக்கில்ல... அதான் தனக்கு நேர்ந்தா மத்தவன்தான் கஷ்டப் படணும் அப்படிங்கிறதுல்லாம் இல்லாம, தான் சேர்ந்த குடும்பம் நக்கீரன் -அதுக்கு ஒண்ணுன்னா... குடும்பத்துல உள்ளவங்க எவ்வளவு மெனக்கெடுவாங்க, ஒவ்வொருத் தங்களும் எப்படி உசுரப் பணயம் வச்சு உறுதுணையா இருந்தாங்க; இருப்பாங்க அப்படிங்கிறதுதான். அதத்தான் நான் தொடர்ந்து இந்த போர்க்களம் தொடர்ல அங்கங்க சொல்லிக்கிட்டே வர்றேன்.

எங்க வூட்ல டெய்லி ராத்திரி 10 மணிக்கு மேல வீட்டுல எங்க வீட்டம்மா, புள்ளைங்களோட உக்காந்து பேசுவோம். அன்னன் னிக்கு நடந்த பல விஷயங்களும் பேசிக்கிட்டிருப்போம். அது ராத்திரி 12 மணிவரைக்கும் கூட போகும். 12 மணி வரைக்குமா பேசுவீங்கன்னு நெறைய பேரு கேப்பாய்ங்க.

ff

நேரம் இருக்கும்போதுதான பேச முடியும். அதுக்காக லீவு போட்டுட்டு வந்தா பேசுவாய்ங்க? பேச முடியாதுல்ல. அப்படி நான் எழுதிக்கிட்டி ருக்கிற "போர்க்களம்' பத்திப் பேசும்போது, அந்த நேரம் நடந்த சில விஷயங்கள என் துணைவியார் சொல்லுவாங்க.

அப்படி அவங்க சொன்னது....

"ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை, அல்லது ஞாயிற்றுக்கிழமை ரெண்டு நாளாவது தம்பி பிரான்ஸிஸ் துணைவியார் மெரிலா வந்துருவாங்க வீட்டுக்கு.''

"என்னப்பா''ம்பேன்.

"அக்கா நம்மதாம்க்கா ஜெயிப்போம், நம்மதான்... அண்ணன் எப்படியும் ஜெயிச்சு வெளிய வருவாங்க... கவலைப்படாதீங்க'ன்னு சொல்லும். இவ்வளவு போலீசுக்கும் மத்தியில நம்ம வீட்டுக்கு மாடியில வந்து எல்லாருக்கும் ஆறுதல் சொல்லிட்டுப் போவும். சில நேரம் ஒத்தையில வரும். சிலநாள்ல மூணு பிள்ளைங்களையும் கூட கூட்டிக்கிட்டு வரும். நம்ம வீட்டச் சுத்தி போலீஸ் இருக்குறது தெரிஞ்சும், அதுக்கெல்லாம் பயப்படாம, வந்து ஆறுதல் சொல்லிட்டுப் போவும். நாங்க ரொம்ப நேரம் லைட்டு போடாம இருக்குறப்ப, "ஏங்க்கா இருட்டுலயே உக்காந்திருக்கீங்க? லைட்டு போடலியான்னு கேக்கும்' அப்படினாங்க.

அப்ப நான் கேட்டேன்... "ஏன் இருட்டுக் குள்ள இருந்தீங்க? கரண்ட் கட் பண்ணியிருந் தாங்களோ?'' ரொம்ப நாளைக்கப்புறம் இந்தக் கேள்வி வந்துச்சு.

ஏன் இருட்டுக்குள்ள இருந்தீங்கன்னதும் ஒரு பார்வை பார்த்தாங்க. அதுவும் சீரியஸான பார்வைலாம் இல்ல... இருந்தாலும் எனக்கு குறுகுறுன்னு இருந்துச்சு. இது நடந்தப்ப நான் ரெண்டு மாசத்துக்கு மேல தலைமறைவா இருக்கவேண்டியதாப் போச்சு. அடுத்து வந்ததும் வராததுமா 200க்கு மேல எஃப்.ஐ.ஆர்... ஒவ்வொரு ஊரா போகணும், கேசு, வழக்குன்னு சதாநேரமும் சோறு தண்ணி இல்லாம சுத்தவேண்டியதாப் போச்சு. வீட்ல நடந்தத அப்ப ஆற அமர உக்காந்து கேக்க முடியாமப் போச்சு. அப்ப நடந்த கொடுமைகள கேக்காம விட்டுட்டோம். பூதகிதான் துரத்து... துரத்துன்னு விடாம துரத்துச்சே... அதுல மறந்துப்புட்டேன்.

"கரண்ட் கட் பண்ணியிருந்தாங்க... அது வேற. அப்புறமா ஜெனரேட்டர் போட்டு வீட்டுக்கு லைட் போட்டுக் குடுத்துட்டாங்க. ஆனா பெருமாள் சார், சிவகுமார், எட்விக் அண்ணன் எல்லாரும் வந்து, "நீங்க லைட் போட வேண்டாம். மெழுகுவர்த்தி வச்சுக்கங்க, இல்லன்னா ஜீரோ வாட்ஸ் குண்டு பல்பு யூஸ் பண்ணுங்க'ன்னு சொன்னதுனால எலெக்ட்ரீஷியன் ரவியும் கணேசனும் குண்டு பல்பு மாத்துனாங்க. நம்ம வீட்டுக்கு சைடுல லெஃப்ட்ல ஒரு கல்யாண மண்டபம். ஆபீசுக்கு எதிர்லயும் ஒரு கல்யாண மண்டபம். அந்த மண்டபத்தோட மாடியில ஃபுல்லா போலீஸ கொண்டுவந்து குவிச்சிருந்தாய்ங்க. அங்க இருந்து நம்ம வீட்ல என்ன நடக்குது, ஏது நடக்குதுன்னு பாத்துக் கிட்டேயிருப்பாய்ங்க. பைனாகுலர்லாம் வச்சுப் பாப்பாய்ங்க. நீங்க வர்றீங்களா, போறீங்களான்னு கண்காணிச்சுக்கிட்டே இருந்தாய்ங்க. சுத்தி போர்வைய வச்சு ஸ்க்ரீன் போட்டு மறைப்பா இருந்தோம். ஸ்கிரீன் போட்டதுனால காத்தும் வல்ல, ஒரே புழுக்கம். அந்த இருட்டுலதான் ஒருத்தர, ஒருத்தர் பார்த்துட்டு இருந்தோம்ங்க''ன் னாங்க.

அந்த நேரம் அப்படி அந்த இருட்டுல கூட்டுக் குடும்பமா... புள்ளைக்குட்டிங்க 10 பேர வச்சுக்கிட்டு வாழ்றதுங்கிறது எவ்வளவு கஷ்டம்... யோசிச்சுப் பாருங்க!

எனக்கு இதுவே புதுசா இருந்துச்சு. "அட மடையா... இந்தக் கஷ்டத்த கேக்காம விட்டுட்டி யேடா'ன்னு நானே என்னக் கேட்டுக்கிட்டேன்.

தம்பி குருசாமி... அவரும் தலைமறைவு. அண்ணன் கவிஞர் தெய்வச்சிலையோட மகன் மடிப்பாக்கம் பக்கம் ஒரு பிளாட் வாங்கிப் போட்டுருந்தார். அந்த வீட்டுல போய் தலைமறைவா இருந்துட்டாரு.

"என்ன வாழ்க்கைடா? இருட்டு... போலீசு'ங்கிறீங்களா?

நக்கீரன் குடும்பத்துல இருந்த, இருக்குற அத்தனைபேரும் இப்படித்தான் வாழ்ந்தோம். இப்படிப்பட்ட வாழ்க்கை! இந்த மாதிரி... இந்த மாதிரி... கஷ்டப்பட்டு வாழ்ந்துதான் இன்னிக்கு உங்க முன்னாடி "போர்க்களம்' எழுதிக்கிட்டி ருக்கேன்.

நாம எவ்வளவு வேணும்னாலும் கஷ்டப்பட லாம். ஆனா நம்ம கூட இருக்கிறவங்க, நமக்குத் துணையா வந்தவங்க, நமக்கு வாழ்க்கைத் துணையா வந்தவங்க... எல்லாரும் "நாம ஏன் இந்தாளுக்காக இப்படிக் கஷ்டப்படணும்?'னு ஒரு கணம் யோசிச்சிருந்தாங்கன்னா... ஒரேயடியா புட்டுருக்கும்! நம்ம எதிர்காலமும் விளங்கியிருக் கும்...? அதோட சின்னாபின்னமா ஆகியிருப்போம்... "போர்க்களம்'னு ஒண்ணு வந்தே இருக்காது.

என் துணைவியார் அவ்வளவு நெகிழ்ந்து சொன்னது... "வீட்டச் சுத்தி போலீஸ் நின்னு என்ன நடக்குதுன்னு பாத்துக்கிட்டே இருப்பாங்கங்க. தெரு பூராவும் போலீஸ். நம்ம வீட்டுல இருந்து யாரும் வெளியவே போகல. பெரிய பாப்பா மணிப்பால் போகல. அப்பவும் பிரான்சிஸ் ஒஃய்ப் மய்க்கா நாளும் ஒருக்கா வீட்டுக்கு வந்து... "அக்கா இன்னைக்கும் தெருபூராவும் போலீஸா இருக்குக்கா. யாரும் போனது மாதிரியே தெரியல்லக்கா. அத நெனைச்சு கவலப்படாதீங்கக்கா. இதுல இருந்து நாம மீண்டு வருவோம்க்கான்னு மெனக்கெட்டு வந்து ஆறுதல் சொல்லிட்டு, உங்க பிரச்சினையெல்லாம் சீக்கிரமே சரியாகணும்னு சர்ச்ல நானும் பிள்ளைகளும் பிரேயர் பண்றோம்க்கா'ன்னு சொல்லிட்டுப் போவும்''ன்னு சொன்னாங்க.

தம்பி பிரான்சிஸ் துணைவியார் எப்படி இத்தன அக்கறையோட பிரார்த்தனை, வேண்டுதல் பண்ணுனாங் களோ அதேபோலத்தான் மத்த தம்பிக மனைவிமார் களும், அவங்க அப்பா, அம்மாக்களும், மாமா, அத்தை மார்களும் நமக்காகக் கவலைப்பட்டு வேண்டிக்கிட்டாங்க. இந்த நேரத்துல இதச் சொல்றது... எனக்கு ஒரு பெரிய மன பாரத்த இறக்கி வச்ச மாதிரிதான்.

இன்னொரு சம்பவம்...

சீனிவாசன்னு ஒரு தம்பி என்னோட டிரைவரா இருந்தாரு. இதுவும் என் துணைவியார் சொன்னதுதான். "சீனிவாசன் ஒருநாள் வீட்டுக்கு வந்தப்ப, "அக்கா, சுதா அக்கா ரொம்ப வருத்தப்பட்டாங்க'ன்னு சொன்னாருன் னாங்க. அப்ப இணையாசிரியரா இருந்த காமராஜோட ஒஃய்ப் அவங்க. காமராஜ தேடியும் ஒரு குரூப் அலைய... அவரும் ஜுட். அப்போ எல்லார் வீட்டுக்கும் போலீஸ் காரய்ங்க போய் தேடியிருக்காய்ங்க. தம்பி காமராஜா இருக்கட்டும், தம்பி லெனினாகட்டும், பிரகாஷாகட்டும், ஏன் நம்ம சீனியர் பெருமாள் சார் வீடு, சிவகுமார் வீடு, நக்கீரன்ல வேலை பாக்குற ஒவ்வொருத்தங்க சூ.... க்கு பின்னாடியும் போலீஸ் வேவு பாத்துருக்கு. இப்படி எல்லாரையும் லிஸ்ட் எடுத்துட்டாய்ங்க. லிஸ்ட் எடுத்து, எல்லாருடைய வீட்டுக்கும் போலீஸ் போயிருக்கு.

ஏன்னா எல்லாருமே நக்கீரன் குடும்பம்ங்கிறதுனால எதாவது ஒரு வீட்டுல நான் ஒளிஞ்சிருப்பேன்னு நெனைச்சிட்டு எல்லாரோட வீட்டுக்கும் ஃபாலோ பண்ணியிருக்காய்ங்க. அப்படின்னா என்ன கைது பண்றதுக்கு எத்தன நூறு போலீஸ் மெனக்கிட்டிருக் காய்ங்க பாருங்க மக்களே!

அடேய்... அடேய்...

ஒரு ஒத்த கோவால தேடுறதுக்கு... இத்தன போலீஸாடா...?

(புழுதி பறக்கும்)