ff

(104) நக்கீரனுக்கு ஆதரவளித்த அண்ணன் கலைஞர்!

துக்கிடை யில டி.வி.யில இன்னொரு கூத்து போயிட்டு இருந் தது.

Advertisment

நக்கீரன அ.தி.மு.க.காரய்ங்க அடிக்க ஆரம்பிச்சு ரெண்டு நாளாச்சு. டி.வி.காரங்க விடாம டிபேட்ங்கிற பேர்ல ரோட் டுல போறவன், வர்றவன எல்லாம் உக்கார வச்சு பேச வைக்கிறாய்ங்க. ரெண்டாவது நாளும் நமக்கு எதிரா ஒரு குரூப் உக்காந்து வாயாடிக்கிட்டிருந் தாய்ங்க. பேசுனவங்க நெறைய பேருக்கு நாக்குல சனி... நக்கீரன வளைச்சு, வளைச்சு அடிக்கிறாய்ங்க.

அதுல ஞானின்னு ஒருத்தரு. இந்தாளப் பத்தி "போர்க்களம்' 30-வது அத்தியாயத்துல நாசூக் காக எழுதியிருப்பேன். ரெண் டாவது நாளும் ஏதோ கொலக் குத்தம் பண்ணுன மாதிரி நக்கீரன், நக்கீரன்கோபால வாழவே விடக்கூடாதுங்கிற ரேஞ்சுல... தொண்ட தண்ணி வத்துற அளவுக்கு பேசிக்கிட்டேயிருக் காரு. அந்த ஆளும் எனக்குப் போட்டியா 1990-ல "அலைகள்'னு ஒரு பத்திரிகை ஆரம்பிச்சாரு. விளம்பரமே... "பரபரப்பை நம்பாமல் வரும் ஒரே பத்தி ரிகை'ன்னு பெரிய போஸ்டர்களா அடிச்சி வெளியிட்டாய்ங்க. அது வும் நாலு இதழ்தான் வந்துச்சு. அப்புறம் ஊத்தி மூடிட்டாய்ங்க. அந்தக் கடுப்புல நம்மள வெறுப் பேத்துற மாதிரி எப்பவுமே பேசு வாரு. அவரு போன இடம்லாம் எப்படி விளங்கிச்சுன்னு நான் முன்னாடியே சொல்லிட்டேன். "பையில எப்பவும் பூட்டோட போயிட்டிருக்கிற ஆளு' அவரு.

அவருக்கு முன்னோடியா ஒருத்தரு இருக்காரு. முன்னோ டின்னா, சாச்சா... சீச்சீ... சோ அப்படின்னு ஒருத்தரு. இவரு முன்னாடி வராம, பின்னாடி நமக்கு எதிரா கொம்பு சீவிட்டு இருந்தாரு. இதே ஆளு, 2000-ல நடந்த ராஜ்குமார் கடத்தல்... அந்த சமயம்... அந்த மிஷன் கெடுற மாதிரி நமக்கு எதிரா நெறைய பேசியிருப்பாரு. (அதப் பத்தியும் பின்னாடி சொல்றேன்)

Advertisment

நம்ம கெட்ட நேரம். மிருக பலத்தோட ஜெயலலிதா ஆட்சிக்கு வந்திருச்சு. அதனால அந்தம்மாவ எதுத்து நிக்கிற திராணி யாருக் கும் கிடையாது. திராணி இருக்கிற நாலு பேருதான் நமக்கு சப் போர்ட் பண்ணுனாங்க. பத்திரி கைக்காரங்கள எடுத்துக்கிட்டா லும், "தி ஹிந்து' பத்திரிகை என்.ராம் சார் தவிர... இதையெல் லாம் எடுத்துச் சொல்லுற கொஞ்சம் பெருசுகளும் வாய மூடிக்கிட்டு இருந்துட்டாங்க.

அப்புறம் ஜூனியர் விக டன், ரிப் போர்ட்டர்... இதுல ரிப் போர்ட்டர் நமக்கு நடந்தத கண்டுக்கவே இல்ல. ஜூனி யர் விகடன்ல சேம்சைடு கோல் ஒண்ணு அடிச்சாங்க. அப்போ நக்கீரனுக்கு ஆதரவா வந்தவங்க மூத்த பத்திரிகையாளர் ஜவஹர் அண் ணன், "திராவிட இயக்கத் தமிழர் பேரவை' சுப.வீ. அண்ணன், தமிழ்த்தேச பொதுவுடைமைக் கட்சி பெ.மணியரசன், காங். எம்.பி. மாணிக் தாக்கூர், தொழி லாளர் கட்சி பொன்.குமார், தலித் பாண்டியன், த.மு.எ.ச. தமிழ்ச்செல்வன், சு.வெங்கடேசன், இந்து மக்கள் கட்சி கண்ணன்...னு கொஞ்சம் பேருதான்.

dd

இதுல ஒரு விஷயத்த நாம முக்கியமா சொல்லியாகணும். எனக்கு ஆபத்து இருக்குங்கிறத அண்ணன் கலைஞர் சொல்லித் தான் முந்துன நாளு நான் தப்பிச்சுப் போனேன். அதோட நிறுத்திக்கல கலைஞர். அதுக் கடுத்து... அண்ணன் பூச்சி முருக னைக் கூப்பிட்டு (அறிவாலயத் துல, மக்கள் தொடர்ப பார்த்துக் கிறவர்) "நீயும், ஆயிரம்விளக்கு உசேனும் கொஞ்சபேரை அழைச் சிட்டு நக்கீரன் ஆபீசுக்குப் போயி ருங்க. அவருக்கு இனி ஒண்ணு மில்லன்னு எல்லாரும் நினைக் கிறோம். அவருக்கு இன்னும் முழுசா ஆபத்து விலகல... ஏன்னா அந்த அம்மையாரப் பத்தி நமக்குத் தெரியும். (ஜெயலலிதாவ அம்மையார்னு தான் எப்பவும் சொல்லுவாரு கலைஞர்) அதனால நீங்க ரெண்டுபேரும் அங்க என்ன நடக்குதுன்னு பாத்து, ஒங்களால அவங்களுக்கு என்ன உதவிகள செய்ய முடியுமோ அத அவங்க இடத்துக்கு போய் பாருங்க''ன்னு சொல்லியிருக்காரு.

ஆபீசுக்கு வந்த பூச்சி அண்ணனும், ஆயிரம்விளக்கு உசேன் அண்ணனும் அவங்க ளோட கழக உடன்பிறப்புக்கள் கொஞ்சம்பேரு எல்லாரும், பிரஸ்காரங்க பிரஸ்மீட் எல்லாம் முடிச்சு போறதுவரைக்கும், போலீஸ்காரங்கள்லாம் போனதுக்கப்புறமும் நக்கீரன் ஆபீஸ் முன்னாடியே உக்காந்திருந்திருக்காங்க. மூணாவது நாளும் பூச்சி முருகன் அண்ணன் ஆபீசுக்கு வந்தாருன்னு சொன்னாங்க.

"இன்னும் பிரச்சினை முடியல... முடியுறது வரைக்கும், அவங்களுக்கு ஆதரவா இருந்து பாத்துக்கங்க''ன்னு அண்ணன் கலைஞர் சொன்னது பெரிய விஷயம் மட்டுமில்ல... அன்னிக்கு நமக்கு கெடைச்ச மிகப்பெரிய ஆறுதலும்கூட!

dd

அதே நேரம்... நம்மள கோவப்படுத்துற மாதிரியும்... உசுப்பேத்துற மாதிரியும் பத்திரிகை யாளர் சோ, அவருக்கு நெருக்கமான ஒரு இடத்துல சொல்லியிருக்காரு...

அது என்னன்னா, "ஜெயலலிதாவ எனக்குப் பிடிக்காது. ஏன்னா அந்தம்மா ஒரு நிலையில இருக்காது. ஆரம்பத்துல நாமதான் சப்போர்ட் பண்ணுனோம், அதுக்கப்புறம் அது என்னையே உதாசீனப்படுத்திடிச்சி'ன்னு சொன்னவரு, ஆனா இப்ப அவா, "மாட்டுக்கறி தின்னும் மாமி'ங்கிற செய்திக்காக நக்கீரன் மேல எடுக்குற ஸ்டெப்ஸ் எல்லாமே ஐ லைக் இட். நக்கீரன் மேல கட்டாயம் நடவடிக்கை எடுக்கணும்''னு அந்தம்மாவோட நடவடிக்கைய எல்லாம் சோ ஆதரிச்சாருன்னு எனக்கு வேண்டிய ஒரு பட்சி சொல்லிச்சு.

அப்படி அவரு சொன்னது நமக்கு ஆச்சரியமால்லாம் இல்ல. நாம ஒண்ணும் பெரிய பாரம்பரியத்தோடல்லாம் பத்திரிகை ஆரம்பிக்கல. ஆனா... நாம ஆரம்பிச்ச பிறகு, யார், யாரெல்லாம் வயிறெரிஞ்சாங்க அப்படிங்கிறதுக்கு ஒரு பெரிய லிஸ்ட்டே போடலாம்.

ஜூனியர் விகடனப் பத்தி சொல்றேன்.

அவங்க எழுதுனது என்னன்னா...?

அ.தி.மு.க.வில் அன்புங்கிற ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொலை மிரட்டல், மனஉளைச்சலை ஏற்படுத்துதல், சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை உண்டாக்குதல், களங்கம் ஏற்படுத்துதல்... உள்ளிட்ட 6 பிரிவுகளில் கோபால் மீது போலீசார் வழக்குப் பதிவு செய் துள்ளனர். அதோடு போராட்டம் நடத்திய அ.தி. மு.க.வினர் மீது வழக்குப் போடப்பட்டிருக்கிறது.

போராட்டம் நடத்திய அ.தி.மு.க.வினர் மீது வழக்குப் போட்டாங்களாம்... எவன் போட்டான். ஒரு பயலும் போடல.

வெளிய வந்து பத்திரிகைகளுக்கெல்லாம் செய்தி சொல்லிட்டாய்ங்க. இவங்களுக்கும் சொல்லியிருப்பாங்க. அதனாலதான் இவங்க எழுதியிருக்காங்க.

ff

மின் இணைப்பு, குடிநீர், கழிவு நீர் இணைப்பு ஆகியவை அதிரடியாகத் துண்டிக்கப்பட்டதாக அந்த பத்திரிகை அலுவலர்கள் தகவலாகக் கூறுகிறார்கள்.

அப்படின்னா இவங்க வந்து பார்க்கல.

ஊரே திரண்டு வந்து போராட்டம் பண்ணிக் கிட்டிருக்காய்ங்க. முக்குல கிட்டத்தட்ட 200 பேருக்கு மேல ரோட்ட மறிச்சி மறியல் பண்ணிக் கிட்டிருக்காங்க... கரண்ட் குடுக்கலண்ட்டு. அந்த ஏரியாவுல 200 வீடுகளுக்கு மேல கரண்ட் இல்ல.

"பத்திரிகை அலுவலர்கள் சொல்கிறார் களாம்..'

இத... எங்க போய் சொல்ல?

சில விஷயங்கள நாம ஜீரணிச்சுதான் ஆகணும். ஏன்னா, நாம இது மாதிரி எவ்வளவோ சந்திச்சிருக்கோம். "குதிரை ராவுத்தர தள்ளுனதோட மாத்திரமில்லாம.... குழியும் தோண்டுச்சாம்'னு ஒரு பழமொழி சொல்லுவாய்ங்க.

அதுக்கேத்த மாதிரி, "அலுவலர்கள் சொல்கிறார்கள்'னு சொல்றாங்க.

தமிழ்நாட்டுல உள்ள மொத்த பத்திரிகை யாளர்களும் வந்து பாத்து செய்தி கலெக்ட் பண்றாங்க, வீடியோ எடுக்குறாங்க... இப்படி எல்லாமே நடக்குது.

நாம அவங்களுக்கு இணையால்லாம் கிடையாது. அவங்க நம்மளவிட ரொம்ப... ரொம்ப பெரியவங்க. விகடன் குரூப்ங்கிறது கிட்டத்தட்ட நூறு வருஷத்த தொடப்போற ஒரு பெரிய நிறுவனம். ஏணி வச்சா கூட அவங்கள எட்டமுடியாது... அது வேற விஷயம்.

ஆதரவா இல்லாட்டாலும் நீங்க குழி தோண்டாமலாவது இருக்கணும்ல?

ஆனா அவங்க எழுதுறாங்க...

"இவ்வளவு அதிரடிகளுக்கு நடுவில் அன்று மாலையில் கோபாலை கைது செய்ய உள்ளே சென்றது போலீஸ். மூன்று மணி நேரம் சோதனை நடத்தியும் கோபாலை கண்டுபிடிக்க முடிய வில்லை. மதியம் வரை அலுவலகத்தில் இருந்த அவர், போலீஸ் தேடுவதை அறிந்து வெளியேறிய தாகக் கூறப்படுகிறது. அலுவலகத்திற்கு அருகில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் கோபாலுக்கு தங்குமிடம் இருக்கிறது. அங்கிருந்து அவர் வெளியேறிவிட்டதாகச் சொல்கிறார்கள்.'

தங்கும் இடம் இருக்காம்... அவங்கள்லாம் குடியிருக்கிற வீட்ட தங்கும் இடம்னுதான் சொல்லுவாங்கபோல. அதனாலதான் நான் தங்குற இடம்னுட்டாங்க நம்ம வீட்ட.

அதுலயே தொடர்ந்து இப்படி எழுதுறாங்க...

"தாக்குதலைக் கண்டித்த பத்திரிகை யாளர் சங்கங்கள், நக்கீரனில் வந்த செய்திக்கும் குட்டு வைத்தனர்.'

நாம போட்ட செய்தி மேல இவங்களுக்கும் ஒரு வெறுப்பு இருக்குங்கிறத போறபோக்குல அப்படிச் சொல்லியிருக்காங்க.

அதுல ஒரு இடத்துல...

"இது ஒருபுறமிருக்க... நக்கீரன் அலுவலகம் உள்ள கட்டிடத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதும், இதற்கென அந்த ஏரியாவின் ஒட்டுமொத்த இணைப்பை சிறிது நேரம் நிறுத்தி வைத்ததையும், தவறான அணுகுமுறை என்று விமர்சிக்கிறார்கள்.'

சிறிது நேரமாம்...? நாலு நாளா கரண்ட்ட கட் பண்ணிட்டாய்ங்க. அந்த சீவேஜ கட் பண்ணிட்டாய்ங்க. மெட்ரோ வாட்டர கட்பண்ண வந்தாய்ங்க. அப்போ ஏன்னு கேட்டதுக்குத்தான் கழிவுநீர் அதோட கலந்துருச்சுன்னு ஒரு புரூடா விட்டாய்ங்க. ஆரம்பத்துலயும் இதப்பத்தி சொல்லியிருப்பேன். சரியான காரணத்தச் சொல்லுங்கன்னு நம்ம தம்பிங்க கேட்டவுடனே ஒரு கடிதத்த கொண்டு வந்து குடுத்துருக் காய்ங்க. அப்புறமா எனக்கு அந்த லெட்டர் காப்பிய அனுப்பியிருந்தத காமிச்சாங்க. (அந்தக் கடிதத்தையும் அதைக் கொண்டு வந்த ஆபீஸர்ஸ் எல்லாரோட முகரைகளையும் இப்ப உங்க பார்வைக்கு வெளியிட்டிருக்கோம்... அதுல என்ன எழுதியிருக்குதுன்னு பாருங்க)

செய்தியில கடைசியா ஒரு சிண்டு முடிக்கிற வேலைய பாத்திருக்காங்க. இதுவும் அவங்க பத்திரிகைல வந்ததுதான். "சந்துல சிந்து பாடுறது'ன்னு சொல்வாய்ங் கள்ல... அதுகணக்கா, சில போலீஸ் உயரதிகாரிகள்ட்ட இவங்க கேட்டாங்களாம்.... அவங்க சொன்னாங்களாம்...

போலீஸ் உயரதிகாரிகள் சிலர்... "இந்த வழக்கோடு நக்கீரன் மீது இருக்கும் வேறு வழக்குகளும் தூசு தட்டப்படும். படுக்கையறையில் எடுத்ததாக படங்களை வெளியிட்ட நக்கீரன் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி நடிகை ரஞ்சிதா-நித்யானந்தாவின் மேனேஜர் ஆதம் பிரம்மானந்தா சில மாதங்களுக்கு முன் கொடுத்த புகார் சி.பி.சி.ஐ.டி. வசம் உள்ளது. அதோடு பணம் கேட்டு மிரட்டியதாக ஒரு புகாரும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்குகளில் கோபாலும், அவருடன் இருப்பவர்களும் கைது செய்யப்படலாம். வீட்டு வசதி வாரியத்தில் காமராஜுக்கு நிலம் ஒதுக்கப்பட்ட விவகாரத்தில் ஒரு புகார் இருக்கிறது. அதற்காக காமராஜ் கைது செய்யப்படலாம். அதோடு அடுத்தடுத்து வழக்குகளும் பாயலாம். குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க முயற்சிகள் நடக்கிறது என்றும் திடுக்கிடும் வகையில் கோட்டையில் பேச்சு அடிபடுகிறது...'

எப்படியெல்லாம் கம்பி கட்டுற வேல பண்ணிருக்காங்க பாருங்க...!

(புழுதி பறக்கும்)