(275) நடக்குறது யார் ஆட்சி?
"தேவாரம் எழுதுன புத்தகத்துக்கு ஏன் இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டம்'னு நினைக்கி றீங்களா...? நம்மள ரொம்பவும் இளிச்சவாயனா நெனைச்சுக்கிறது இருக்குல்ல... நான் சொல்றது அரசாங்கத்தையும், தலைமைப் பொறுப்புல இருக்கிற எல்லாரையுமே இளிச்சவாயனா நெனைச்சுக்கிருவாங்க சிலபேரு. அதுதான்... அதுதான் இப்ப போய்க்கிட்டிருக்கு. இத, நம்ம அண்ணன் முதல்வரையோ, வேறு யாரையுமோ காயப்படுத்துறதுக்காக நான் சொல்ல வரல. ஆனா இப்ப நடக்குறதப் பாத்தா ரொம்ப வருத்தமா இருக்கு. அதனாலதான் இத பதிவு பண்ணவேண்டியிருக்கு.
ஜெயலலிதாவிடம் இருந்தப்ப தன் தலையில கொம்பு முளைச்ச மாதிரி ஒரே ஆட்டம்! ஆட்டம்னா ஆட்டம் உங்க ஆட்டம் எங்க ஆட்டம் இல்ல... ஹிட்லர்தனத்தோட ஆட்டம். ஏன்னா... ஜெயலலிதா குடுத்த தைரியம். இவிய்ங்க ஆட்டத்துல இருந்து அண்ணன் கலைஞரும், நானும் தப்பிச்சது சாதாரண விஷயமா!
மோகன் நிவாஸ்ங்கிறவன்தான், வீரப்பன் காட்டுல தறிகெட்டு ஆடுன ஒரு ஆளு. பெண்கள பாலியல் ரீதியா அத்தன கொடூரங் களப் பண்ணுனவன். கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசாங்கத்த கவுத்துறணும்னு சொல்லி தேவாரத்தோட தூண்டுதல்ல செயல்பட்டத அப்பவே பதிவு பண்ணியிருப்பேன். மலைவாழ் பழங்குடியின பெண் விஜயலட்சுமிங்கிற ஒரு பெண்ணோட கணவர, வீரப்பன் ஆள்னு கொன்னு போட்டுட்டு, அந்தப் பொண்ணையும் இவன் பயன்படுத்திக்கிட்டு... அந்தப் பொண்ண வச்சே "வீரப்பன்தான் எனக்குப் புருஷன்'னு சொல்லவச்சி பத்திரிகையில வந்தது, அதனால வீரப்பன் கோபப்பட்டது... இது எல்லாத்தையும் சொல்லியிருக்கேன்.
அந்த மோகன் நிவாஸ்ங்கிறவனப் பத்தி ஐயா தேவாரம், அவர் எழுதுன புக்குல 437-ஆம் பக்கத்துல "உதவி ஆய்வாளர் மோகன் நிவாஸ், தேடுதல் வேட்டைகள் முடிவுக்கு வரும்வரை திருமணம் செய்துகொள்ளமாட் டேன் என்று இருந்துவிட்டார். இன்று அவர் ஓய்வுபெறும் வயதில், சிறுகுழந்தைகள் பள்ளி யில் பயில்கிறார்கள். நிச்சயம் நான் நம்பு கிறேன், அரசாங்கம் அவரது ஓய்வுக்குப் பின் ஏதாவது ஒரு பணி கொடுத்து ஆதரிக்கும் என்று...' மெனக்கெட்டு எழுதியிருப்பார்.
என்னன்னு... வீரப்பன் சாகுறவரை "கல்யாணம் செய்துகொள்ள மாட்டேன்'னு கட்ட பிரம்மச்சாரியா இருந்தாராம். இது எல்லாம் பொய்... பொய்... பொய்ய்ய்...
ஒண்ணு, ஏன் கல்யாணம் செஞ்சுக்கணும்... அதான் மலைவாழ் பெண்களை தினம், தினம் போட்டு ராவா தின்னு தொலைச்சாப்டி. இதுக்கு ஆதாரம் எங்கள்ட்ட இருக்கு, தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம், தோழர் வி.பி.ஜி., எங்க வழக்கறிஞர் ப.பா. மோகன், தோழர் மோகன்குமார் -இவங்க கிட்ட பண்டல், பண்டலா சாட்சி இருக்கு. இந்த ஆளால கற்பிழந்த பெண்கள் அவ்வளவு பேரோட கண்ணீர்க் கதைய பதிவாவே வச்சுருக்காங்க.
அடுத்து, இவரு தேவாரம் சொல்ற மாதிரி வீரப்பன் வேட்டைக்குப் பிறகு கல்யாணம் பண்ணிக்கல... "வீரப்பன நம்ம எப்ப பிடிக்கிறது, எப்ப கல்யாணம் பண்ணிக்கிறது'ன்னு 2000 வாக்குல கல்யாணமே பண்ணிக்கிட்டாப்டி.
தேவாரம் இன்னொண்ணும் சொல்றாரு... "அவரது ஓய்வுக்குப் பின் ஏதாவது ஒரு பணி கொடுத்து ஆதரிக்க வேண்டும்''னு.
அவரு, மோகன் நிவாஸுக்காக, அவர் செஞ்ச; அதாவது... வீரப்பன் காட்டுல செஞ்ச அத்தன கற்பழிப்பு, கொலை...ன்னு எத்தனையோ தியாகம் செஞ்சாருல்ல... அதுக்கு "இவர் ஓய்வு பெற்றதும் பணி குடுக்கணுமாம்.'
சூப்பர்! அதுதான் முன்னமே சொன்ன மாதிரி தலைவன் (அதாவது வால்டர்) இட்ட கட்டளையை நிறைவேத்துன பெருமை... நம்ம முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு அதை செவ்வனே செஞ்சு, தியாகி மோகன் நிவாஸுக்கு ஒரு நாள் எஸ்.பி. உயர் அந்தஸ்து பதவி குடுத்து, மங்களகரமா ரிட்டையர்டு ஆக்கி அனுப்புனாரு.
பார்க்க: தமிழக அரசின் ஆணையிட்ட அட்டவணை பிரசுரம் பண்ணியிருப்போம். அதுல இந்த எழவெடுத்த மோகன் நிவாஸ் பேரு 12-வது ஐட்டமாக இருக்கும்.
இப்பதான் தெரியுது... "இது வால்டர் சார் ஆசைப்பட்டத, சைலேந்திரபாபு சார் நிறைவேத்தி வச்சுட்டாரு'ன்னு.
எங்களுக்கு சந்தேகம் என்னன்னா, டி.ஜி.பி.யா சைலேந்திபாபுதான் இருந்தாருன்னு நினைச்சோம். இப்பதான் தெரியுது, தேவாரம்தான் அந்த இடத்துல ஷேடோவா (நட்ஹக்ர்ஜ்) இருந்து ஆட்சி செஞ்சிருக்காருன்னு.
ஆங்... நடப்பு தி.மு.க. ஆட்சியில டி.ஜி.பி. சைலேந்திபாபு -தேவாரம் இட்ட கட்டளையை செஞ்சார்... செஞ்சாருங்கிறதுக்கு இது ஒரு சாம்பிள்.
இன்னொண்ணு இருக்கு.
உங்க எல்லாருக்கும் நினைவுல இருக்கும். கள்ளக்குறிச்சி... சக்தி பள்ளி! மாணவி ஸ்ரீமதி.
திருட்டு நாய்களால துள்ளத் துடிக்க கற்பழிக்கப்பட்டு கொன்னு தூக்கிப் போட்டுட்டாய்ங்க படுபாவிங்க. இப்ப அவிய்ங்க எல்லாரும் தப்பிச்சுட்டாய்ங்க. இப்ப இல்ல, தப்பிச்சுட்டதா நினைச்சிருக்காய்ங்க... இருக்கட்டும், இருக்கட்டும்...! (அதுக்கள்ள போகல)
பள்ளியில கலவரம் நடந்து நம்ம டி.ஜி.பி. சார் விசிட் போனாரு. போன இடத்துல பத்திரிகையாளர்கள்ட்ட, "இந்த ஸ்ரீமதி மரண விவகாரத்தில் பள்ளி நிர்வாகம் எந்தத் தவறும் செய்யவில்லை'ன்னு திருவாய் மலர்ந்துட்டு வந்தாரு. இவரு பெரிய ஆபீசரு. இவருக்கு கீழ வேலை பாக்குற மத்த போலீஸ் பின்னாடி புலனாய்வு செய்யப் போய், இல்ல... இல்ல... ஏதோ தப்பு இருக்குன்னா சொல் வாய்ங்க. சொன்னா அவிய்ங்க கதி தலைவன் சொன்னத மாத்திச் சொல்லவா முடியும்?
"சரி அது இருக்கட்டும்... இப்ப இதுக் கென்னன்னுதான கேள்வி உங்களுக்கு...?'
ஜூலை 13, 2022 அன்னிக்கு ஸ்ரீமதி மரணம்.
நல்லா கவனிங்க, நடந்தது 2022-வது வருஷம்.
தேவாரம் ரிடையர்டு ஆனது 1997.
ஆனா 2022ல கலவரம் நடந்த கள்ளக் குறிச்சி சக்தி பள்ளிக்கூடத்துக்கு தேவாரம் ஏன் போறாரு? அங்கபோய் அந்த பள்ளிக்கு உள்ள போய், அங்க இருக்கிற போலீஸ்கிட்ட பேசிட்டு... வெளிய வந்து பத்திரிகையாளர்ட்ட...
"காவல்துறை பணி யாளர்கள் இரவு, பகல் பாராமல் பணியாற்றுகிறார் கள். அவர்களுக்கு டீ வாங்கிக் குடுத்தேன். நடந்த இந்த சம்பவம் துரதிருஷ்ட வசமானது''ன்னு சொல்லிட்டுப் போறாரு.
நமக்கு கேள்வியே... "ஹலோ தேவாரம், உங்களுக்கு அந்தப் பள்ளியில என்ன வேலை?
பிள்ளைய பறி குடுத்துட்டு ஸ்ரீமதியோட அம்மா பரிதவிக்குது. அதுக்கு ஆறுதல் சொல்லல. ஆனா அந்தப் பள்ளி நிர்வாகத்துக்கு சப்போர்ட்டா, எப்படி உங்க சிஷ்யன் நடந்துக்கிட்டாரோ அதே பாணியில நீங்களும் வந்து தலைய காட்டுறீங்க. ஏன் சார்... உங்களுக்கும் அந்தப் பள்ளிக்கும் என்ன சம்பந்தம்..?''
இப்ப புரியுதா தேவாரம் இருந்து செய்ற வேலைய அவர் சிஷ்யகோடி சைலேந்திரபாபு செஞ்சாருன்னு. அதத்தான் கேக்குறேன்... நடக்குறது யாரு ஆட்சி?
"இதே இது ஜெயலலிதா இருந்தா நடக்குமா?'ன்னு கேக்குறாங்க. நமக்கு அந்த அம்மா, மேல கொஞ்சம்கூட மரியாத இல்ல. ஆனா, அ.தி.மு.க. ஆட்சியில கொடிகட்டிப் பறந்து, தி.மு.க.வினர பந்தாடுன ஒரு போலீஸ்காரர் எழுதுன புத்தகம், யார தூக்கிப் போட்டு பந்தாடுனாரோ... அதே தி.மு.க. ஆட்சி யில அரசாங்கம் நடத்துற போலீஸ் கேன்டீன்ல எப்படி சார் விக்கலாம்? யார் கேக்குறாங்களோ கேக்கலியோ, நக்கீரன் கேட்பாண்டா... கேட்கத்தான் செய்வாண்டா...
இந்தா... இன்னிக்கி என் தம்பி, நிருபர் நாகேந்திரன் இன்னொரு புத்தகம், தேவாரம் எழுதுன அதே புத்தகம் ஒண்ணு வாங்கி அனுப்பியிருக்காரு. எங்க இருந்து தெரியுமா? ஊட்டியில இருந்து. அதாவது 54, கமர்சியல் ரோடு, அப்பர் பஜார், ஊட்டி. இந்த விலாசத்து இருக்கிற போலீஸ் கேன்டீன்ல இந்தப் புத்தகம் மட்டும் விக்கிறாய்ங்க. தம்பி நாகேந்திரன் மேக்கொண்டு கொடுத்த தகவல் என்னன்னா...
1. மாவட்டத் தலைநகரங்களில் உள்ள போலீஸ் கேன்டீனில் தனியாக புத்தகம் விற்பனை செய்யப்படுகிறது.
2. இதற்கென்று தனியாக ரிஜிஸ்டர் கையாளப்படுகிறது.
3. பில் இல்லை
4. எனினும் யார் யார் புத்தகம் வாங்குகிறார்கள் என்று வாங்குபவர்கள் கையாலே எழுதச் சொல்கிறார்கள்.
5. இதனை தினசரி போட்டோ காப்பி எடுத்து வால்டர் தேவாரத்திற்கு அனுப்பி வைக்கின்றனர்.
6. சராசரியாக ஒவ் வொரு கேன்டீனிலும் 500 ஆங்கில புத்தகங்கள் 500 தமிழ் புத்தகங்கள் விற் பனைக்கு வைக்கப்பட் டுள்ளதாக தகவல்.
பாருங்க சார் இன்னொரு கொடு மைய...!
இன்னைக்கி காலையில என் தம்பி திருச்சி நிரு பர் மகேஷ் போன் செஞ்சாரு. "அண்ணே திருச்சி ஆயுதப் படை கேன்டீன்லயும் அந்தப் புத்தகத்த விக்கிறாய்ங்க. பில் கிடையாது.... காசுக்கு மட் டும்தான் விற்பனைன்னு சொன்னாய்ங்க, படம் எடுத்து அனுப்பியிருக்கேன் பாருங்க''ன்னார்.
நான் சொல்லல, "நடக்குறது தி.மு.க. ஆட்சிதான் ஆனா தேவாரமும் அவரோட சேர்ந்த போலீஸ்காரங்களும் போட்டுருக்கிறது அ.தி.மு.க. சட்டை'ங்கிற கதைதான் ஓடுது...
தி.மு.க. அரசாங்கத்த கலைக்க நெனைச்ச... தி.மு.க. அரசாங்கத்த அப்புறப்படுத்தணும்னு நெனைச்ச ஜெயலலிதாவோட எடுபுடியாக வீரப்பன் காட்டுல இருந்த போலீஸ்காரர் மோகன் நிவாஸுக்கு ஒருநாள் எஸ்.பி. அந்தஸ்து. கலைஞர கைது பண்ண காரணமா இருந்த மீசைக்கார போலீஸ் எழுதுன புத்தகம் தமிழ்நாடு பூரா இருக்குற போலீஸ் கேன்டீன்ல விற்பனை... அதுவும் இந்த ஆட்சியில! வெட்கக்கேடு சார்... ரைட்!
இப்ப, தேவாரம் எழுதுன புத்தகத்துல... 458ஆம் பக்கத்துல...
(புழுதி பறக்கும்)