இந்திய நாட்டு பணத்தின் மதிப்பு, அந்நிய செலவாணி கையிருப்பு, ரிசர்வ் வங்கி வைத்திருக்கும் தங்கத்தின் இருப்பு மற்றும் ரொக்க மதிப்பு இவற்றின் அடிப்படையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பிடப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய பொருளாதாரம் சரிவடைந்த நிலையில், கொரோனாவால் பெரும் வீழ்ச்சியடைந்திருப்பது குறித்து சமீபத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் 7-வது பொருளாதார மாநாட்டில் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகந்ததாஸ், ""பொருளாதாரத்தின்மீது கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத எதிர்மறை தாக்கத்தை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியிருக் கிறது'' என தனது கவலையைப் பகிர்ந்தார். பொருளாதார வளர்ச்சியே ரிசர்வ் வங்கியின் முன்னுரிமை கோட்பாடு என்றும், நிதி ஸ்திரத்தன்மைக்கு சம முன்னுரிமை கொடுக் கப்படும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார் சக்திகந்ததாஸ்.
ரிசர்வ் வங்கி ஆளுநரின் இத்தகைய பேச்சு, ரிசர்வ் வங்கியிடமிருக்கும் நிதி இருப்பின் மீது மோடி அரசு குறி வைத்திருப்பதையே சுட்டிக்காட்டுகிறது என்கிறார்கள் பொருளாதார பேராசிரியர்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. டாக்டர் விஷ்ணுபிரசாத், ""ஜி.டி.பி.யின் வளர்ச்சி சதவீதம் அதிகரிக்கும் போது தான் ஒரு நாட்டின் பொருளாதாரம் வலிமையாக இருக்கும். இந்தியாவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, ஜிடிபி மைனஸ் 24 சதவீதமாக சரிந்துள்ளதை, மோடி அரசின் புள்ளியியல் திட்ட அமலாக்கத் துறையே அம்பலப்படுத்தியுள்ளது.
உலக அளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி 100 சதவீதம் என கணக்கிடும் போது, அதில் இந்தியாவின் பங்களிப்பு 11 சதவீதமாக அதிகரிக்கச் செய்தவர் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங். வெள்ளைக்காரர்கள் மைனஸ் 3 சதவீதமாக விட்டுச்சென்றதை ப்ளஸ் 6 சதவீதத்தில் கொண்டுவர பல காலம் தேவைப்பட்டது. அதை 11ஆக உயர்த்தினார் மன்மோகன்சிங். 2014-19 மோடியின் ஆட்சியில் 9 சதவீதமாக சரிந்தது. பிறகு அதுவும் குறைந்து 3 சதவீதமானது. தற்போது மைனஸ் 24 சதவீதமாக வீழ்ச்சியடைந்திருக்கிறது. இதற்கு கொரோனாமீது பழி போடுகிறார்கள் பிரதமர் மோடியும், நிதியமைச்சர் நிர்மலாசீதாராமனும். ஆனால், பாஜகவின் மோசமான பொருளாதார கொள்கைகளால்தான் ஜி.டி.பி. வீழ்ச்சிக்கு காரணம் என பாஜக எம்.பி. சுப்பிரமணியசாமியே குற்றம் சாட்டினார். மோடி அரசின் தவறான பொருளா தார நிர்வாகம்தான் மைனஸ் 24 ஆக ஜிடிபி சரிந்ததற்கு காரணமே தவிர கொரோனாவால் அல்ல என்பதே சுப்பிரமணியசாமியின் குற்றச்சாட்டு.
இந்த கொரோனா நெருக்கடியில்தான் தனது கடனையெல்லாம் அடைத்து உலகத்திலேயே பணக்காரர் வரிசையில் மூன்றாம் இடத்தை பிடித்திருக்கிறார் முகேஷ் அம்பானி. அவரால் எப்படி முடிந்தது? மோடியின் அரசாங்கம் இந்திய மக்களுக்கானதா? அல்லது தொழிலதிபர்களுக் கானதா? என்கிற கேள்வி எழுகிறது.
இந்தியாவின் பொருளாதார வலிமை என்பது ரிசர்வ் வங்கியிடமுள்ள தங்கம் மற்றும் ரொக்கத்தின் இருப்பைப் பொறுத்தது. தனது நிர்வாகத் திறமையின்மையையும் பொருளாதார வீழ்ச்சி யையும் மறைக்க, ரிசர்வ் வங்கியிடமுள்ள தங்கத்தின் இருப்பிலிருந்து கணிசமான அளவை எடுக்க திட்டமிட்டிருக்கிறது மோடி அரசு.
எங்களுக்கு கிடைக்கிற தகவல்படி, ரிசர்வ் வங்கி ஏற்கனவே 1.15 பில்லியன் டாலர் அளவுக்கான தங்கத்தை விற்பனை செய்து அதன் தொகையை மோடி அரசுக்கு கொடுத்து விட்டது. தற்போது, 28,377 கிலோ தங்கத்தை மீண்டும் விற்பனை செய்ய ரிசர்வ் வங்கியை வலியுறுத்துகிறார்கள். தங்கத்தை விற்பனை செய்து கிடைக்கும் தொகையை வைத்து பொருளாதாரத்தை மீட்க போகிறார்களாம். தற்போது மோடி அரசு குறி வைக்கும் தங்கம், பொருளாதாரத்தை சரி செய்ய பயன்படுத்து வார்களா? அல்லது வாங்கிய கடனுக்காக உலக வங்கியிடம் அதனை அடகு வைப்பார்களா என்பது இனிதான் தெரியும்.
ஏற்கனவே, ரிசர்வ் வங்கியிடம் ரொக்கமாக இருந்த இருப்புத் தொகையில் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடியை மோடி அரசு எடுத்துகொண்டது. அந்த பணம் எப்படி செலவிடப்பட்டது? பொருளாதாரத்தை மீட்க பயன்படுத்தியிருந்தால் மீண்டும் பொருளாதார சரிவு ஏன் ஏற்பட்டிருக்கிறது? இதற்கெல்லாம் மோடி அரசிடம் பதில் இல்லை. தவறான பொருளாதார கொள்கைகளால் அரசின் கஜானா காலியாவதால் இந்தியா திவாலாகும் கட்டத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் ஆதார சுருதியான இருப்புகளை குறிவைப்பது நமது பொருளாதாரத்திற்கு ஆபத்து'' என்கிறார் ஆவேசமாக.
இது குறித்து மேலும் விசாரித்தபோது, ""ரிசர்வ் வங்கியிடமுள்ள ரொக்கத்தை தாருங்கள் என மோடி அரசு கேட்டதை கடுமையாக மறுத்ததினால்தான் ரிசர்வ் வங்கியின் முன் னாள் கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக சக்திகந்ததாஸை நியமித்தார் மோடி. பொருளாதாரத்தை மீட்பதற்கான வழிகளை ஆராய முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு அளித்த பரிந்துரையில்தான் 1,76,051 கோடியை மத்திய அரசுக்கு தூக்கிக் கொடுத்தது ரிசர்வ் வங்கி. அதே குழுதான் தற்போது, ரிசர்வ் வங்கியிடமுள்ள தங்கத்தை விற்பனை செய்து அந்த தொகையை கொடுக்கச் சொல்கிறது. இதனை சக்திகந்ததாஸ் ஏற்றுக்கொண்டாலும் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர்கள் ஏற்க மறுக்கின்றனர். அவர்களுக்கு மத்திய அரசிட மிருந்து நெருக்கடிகள் அதிகரித்திருக்கிறது'' என்கின்றார்கள் பொரு ளாதார பேராசிரியர்கள்.
- இரா.இளையசெல்வன்