dவேலூர் பாராளு மன்றத் தொகுதியில் போட்டியிடப்போவதாக இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் நடிகர் மன்சூர் அலிகான் கூறியுள்ளார். முதலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையை நடத்தினார். அப்போது அக்கட்சியின் பொதுச் செயலாளர் கண்ணதாசன் தலைமையிலான குழு, மன்சூர்அலிகானை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தது. "அவன் ஆபீஸ் பாய், அவன் யார் என்னை நீக்க? காசு வாங்கிக்கொண்டு ஏதோ பண்ணி என்னை நீக்கியதாக அறிவித்துள்ளார்'' என்றார்.

இந்த கூத்துக்கள் ஒருபுறம் நடந்துகொண்டி ருக்க மார்ச் 18-ஆம் தேதி வேலூர் சத்துவாச் சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே வாக்குச் சேகரிக்க தொடங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசும்போது, “"நான் நின்றால் மாநாடு, நடந்தால் ஊர்வலம், படுத்தால் பந்த். எப்போது வேலூரில் இறங்கினேனோ அப்போதே பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டேன். அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேசிவிட்டு வந்தேன் அதுகுறித்து இன்னும் ஏதும் தகவல் இல்லை. வேலூரில் நிற்கிறேன், கொடுத்தால் இரட்டை இலை. இல்லையென்றால் வாழை இலை. நான் வென்றால் வேலூர் கோட்டை… இல்லையென்றால் டெல்லி செங்கோட்டை''” என சீரியஸாகப் பேசுவ தாக நினைத்து காமெடி செய்துவிட்டுச் சென்றார்.

ss

மன்சூர் அலிகான் திடீரென வேலூர் தொகுதியைக் குறிவைத்து தேர்தல் பணி செய்ய புறப்பட்டிருப்பதன் பின்னணி என்னவென அந்தக் கட்சி வட்டாரங்களில் விசாரித்தபோது, “"வேலூர் தொகுதியில் மூன்றாவது முறையாக ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். 2014-ல் 150 கோடி அளவுக்கு செலவு செய்தும் தோல்வியடைந்தார். 2019-ல் அதைவிட அதிகமாக செலவு செய்தும் தோல்வி யடைந்தார். மூன்றாவது முறையாக இப்போது பா.ஜ.க.வின் தாமரைச் சின்னத்தில் போட்டி யிட முடிவுசெய்து கடந்த 4 மாதமாக தொகுதி யில் வலம் வந்துகொண்டிருக்கிறார். கடந்த இரண்டு முறை இஸ்லாமிய வாக்குகள் அவ ருக்கு விழவில்லை. 2014-ல் அது அ.தி. மு.க.வுக்கும், 2019-ல் தி.மு.க.வுக்கும் விழுந்தது. இந்தமுறை இஸ்லாமிய வாக்குகளை குறி வைத்து இஸ்லா மிய பிரமுகர்கள் சிலரைச் சந் தித்து ஏ.சி.எஸ். தரப்பு பேசிய போது, "நீங்க பா.ஜ.க.வில் இருந்துக்கிட்டு வந்து ஓட்டு கேட்கறிங்க, நாங்க உங்களை ஆதரிச் சாலும் எங்க மக்கள் ஆதரிக்கமாட்டாங்க' என் றுள்ளனர். இஸ்லாமிய வாக்குகள் தி.மு.க. வேட் பாளருக்கு போகக்கூடாதென சில திட்டங்களை ஏ.சி.எஸ் தரப்பு வகுத்துள்ளது. அந்த திட்டத்தின் ஒருபகுதியாகவே நடிகர் மன்சூர்அலிகானை ஏ.சி.எஸ். தரப்பு களமிறக்கிவிட்டுள்ளது. அதனால் தான் ஆரணி தொகுதியில் போட்டியிடுவேன் என்றவர், இப்போது இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் வேலூர் தொகுதியில் போட்டியிட களமிறங்கியுள்ளார்''’என்கிறார்கள்.

எது எப்படியோ வேலூர் தேர்தல் களம் சீரியஸாகவும், காமெடியாகவும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

Advertisment