டந்த ஆண்டு 2022, டிசம்பர் 26-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை சட்ட மன்றத் தொகுதிக்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தி லுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் தண்ணீர் பிடித்த மக்களுக்கு அதிர்ச்சி. அந்த தண்ணீரில் மனிதக்கழிவு கலக்கப்பட்டிருந்ததை சில இளைஞர்கள் தொட்டியில் ஏறிப்பார்த்து சொன்னார்கள். தண்ணீரில் மிதந்த மனிதக் கழிவுகளை அகற்றினர்.

இந்த தகவலறிந்து ஒருமணி நேரத்தில் அங்கு வந்த கந்தர்வக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தோழர் எம்.சின்னத்துரை (சி.பி.எம்.) தண்ணீரைப் பார்த்தவுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து சம்பவ இடத்திற்கு வரவைத்தார்.

vv

அப்போது நம்மிடம் பேசிய தோழர் எம்.சின்னத் துரை, “"இந்த ஊரில் வாழும் மக்கள் எந்தப் பாகுபாடும் இல்லாமல் ஒற்றுமையாகவே வாழ்கிறார்கள். யாரோ இந்த இழிசெயலைச் செய்திருக்கிறார் கள். அந்த இழிசெயலை செய்த சமூக விரோதிகளை உடனே கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டிருக்கிறோம். போலீசார் விசாரணை செய்துகொண்டிருக்கிறார்கள். குடி தண்ணீருக்கு மாற்று ஏற்பாடு செய்யச் சொல்லியிருக் கிறோம்''’என்றார்.

அடுத்த சில மணி நேரத்தில் இந்த விவகாரம் இந்திய அளவில் எதிரொலிக்கத் தொடங்கியது. பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களை முன்னெடுத்தனர். வேங்கைவயல், இறையூர் ஆகிய கிராம மக்களும் "இந்தப் பிரச்சனையால் எங்களுக்குள் வேற்றுமையை உருவாக்க நினைத்துள்ளனர். அதனால் உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்கவேண்டும் என்றனர். தனிப்படை போலீசார் விசாரணையைத் தொடங்கிய நிலையில் சிலர் விசாரணைக்கு ஒத்துழைக் காமல் இருந்ததாகக் கூறிவந்தனர். பாதிக்கப்பட்ட எங்கள் தரப்பையே விசாரணைக்கு அழைக்கிறார்கள்'' என்று வேங்கைவயல் மக்கள் போலீசார் மீது குற்றம் சாட்டினர்.

ஜனவரி 25-ஆம் தேதி இந்த வழக்கை சி.பி. சி.ஐ.டி.க்கு மாற்றியது தமிழ்நாடு அரசு. சுமார் 220 பேருக்கு மேல் விசாரணை சென்ற நிலையில், சாட்சிகள் இல்லாததால் அறிவியல்பூர்வமாகவே இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று மனிதக் கழிவு கலக்கப்பட்ட தண்ணீரை சோதனைக்கு அனுப்பினர். அதில் பெண் உட்பட சிலரது கழிவுகள் கலக்கப்பட்டிருக்கலாம் என்று ஆய்வு முடிவுகள் வந்தது. அதன்பிறகு சம்பவம் நடந்த அன்று வேங்கைவயல் இளைஞர்கள் உட்பட பலர் உறுப்பினர்களாக உள்ள வாட்ஸ் அப் தளத்தில் நடந்த உரையாடலை வைத்து அதில் ஒரு போலீஸ்காரர் உள்பட 2 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது.

Advertisment

vv

இதனையடுத்து வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணனை தனிநபர் கமிசனாக அமைத்தது தமிழ்நாடு அரசு. தொடர்ந்து டி.என்.ஏ. பரிசோதனைக்கு பலரது பட்டியலை நீதிமன்றத்தில் கொடுத்தனர். முதற்கட்டமாக பலர் இந்த பரிசோதனைக்கு உட்பட மறுத்தனர். அதன்பிறகு பரிசோதனைக்கு வந்தனர். இதுவரை 31 பேருக்கு புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டி.என்.ஏ. பரிசோதனைக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது.

உண்மையான குற்றவாளிகளை வெளிஉலகுக்குக் காட்டுங்கள் என்று அரசியல் கட்சிகள் மட்டுமின்றி வேங்கைவயல், இறையூர் மக்களும் தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டேதான் இருக்கின்றனர்.

Advertisment

டி.என்.ஏ. பரிசோதனைக்குப் பிறகு, உண்மையான குற்றவாளியை கண்டறியமுடியாமல் திணறும் விசா ரணைக்குழுவினர் அடுத்தகட்டமாக உண்மை கண்டறியும் சோதனைக்கு பலரை உட்படுத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டிருக் கின்றனர்.

எத்தனையோ வழக்குகளில் விரைந்து குற்றவாளிகளைக் கைதுசெய்யும் போலீசார் வேங்கைவயல் சம்பவத்தில் அரசியலுக்காக மெத்தனமாகச் செயல்படுகிறார்களா என்ற கேள்வியை எழுப்புகிறார்கள் பொதுமக்கள். இது, மற்ற வழக்குகள்போல சாதாரணமாக முடித்துவிடமுடியாது. அறிவியல்பூர்வமாகவே நிரூபிக்க வேண்டியுள்ளதால் இத்தனை சோதனைகளும் நடத்திவருகிறோம் என்கின்றனர் போலீசார்.

இந்த வழக்குகள் புதுக்கோட்டை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. கடந்த ஒரு வருடமாக நடந்துவரும் வழக்கு விசாரணையில் தற்போது திடீர் திருப்பமாக அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞரை மாற்றி, தாங்கள் சொல்லும் வழக் கறிஞர்களை அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர்களாக நியமனம் செய்யக்கோரி வேங்கைவயல் பொதுமக்கள் சார்பாக டிசம்பர் 26-ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.

தாமதப்படுத்தப்படும் நீதியும் அநீதிதான் என்பதை அரசு மறந்துவிடக்கூடாது.

vv