லப்பட சமையல் எண்ணெய்யால், நுகர்வோருக்கு கல்லீரல் மற்றும் புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. உணவு பாதுகாப்பு சட்டப்படி, சமையல் எண்ணெய்யை பேக்கிங் செய்யாமல், சில்லறைக்கு விற்கக் கூடாது.’ என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில், வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர, தமிழகத்தில் சமையல் எண்ணெய்யை, பேக்கிங் செய்யாமல் விற்பதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது நீதிமன்றம்.

oil

சமையல் எண்ணெய், ஒவ்வொரு வீட்டின் சமையலறையிலும் பிரதான பொருளாக இருக்கக்கூடியது. பேக்கிங் செய்யப்பட்ட பெரிய நிறுவனங்களின் தயாரிப்புகள் பெருமளவில் மக்களால் வாங்கப்பட்டாலும், கிராமங்கள், நகரங்கள் என்ற பேதமில்லாமல், பல இடங்களிலும் சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், சில்லறை விற்பனைக்குத் தடை விதித்திருப்பது குறித்த மக்களின் கருத்தை அறிய களமிறங்கினோம்.

காளீஸ்வரி (திண்டுக்கல்)

Advertisment

""மொதல்ல பாக்கெட் எண்ணெய்தான் வாங்கினோம். சில நேரங்கள்ல, பாக்கெட்டை பிரிக்கும்போதே ஒருமாதிரி வாடை வந்துச்சு. அப்புறம்தான், லூசுல விற்கிற செக்கு எண்ணெய் வாங்க ஆரம்பிச்சோம். விலையும் கம்மியாவே இருக்கு. வாடையும் கமகமன்னு நல்லாயிருக்கு. இந்த எண்ணெய்ல சமைக்கிறது ருசியாவும் இருக்கு. அதனால.. தொட்டுக்கிறதுக்கு இந்த எண்ணெய்ப் பொடி இருந்தா, ரெண்டு இட்லி கூடத்தான் இழுக்கும். லூசு எண்ணெய்னாலும், தரமில்லாம இருந்தா வாங்குவோமா?''

செல்வராஜ் (திண்டுக்கல் மாவட்ட எண்ணெய் வியாபாரிகள் சங்கத் தலைவர்)

""ஏற்கனவே நம்ம கவர்மெண்ட், டிசம்பருக்குள்ள பாக்கெட் மூலமாத்தான் எண்ணெய் விற்கனும்னு சொல்லி இருந்துச்சு. கோர்ட்டும் இப்ப திடீர்னு தடையுத்தரவு போட்டிருச்சு. எங்கேயோ, சில இடங்கள்ல லூஸ் எண்ணெய்ல கலப்படம் நடக்கிறதுக்காக, ஒட்டுமொத்த சில்லறை விற்பனையையும் தடை பண்ணுனா.. அதை நடைமுறைப்படுத்துறது கஷ்டம். கொஞ்சம் கொஞ்சமாத்தான் மாற்றத்தை கொண்டுவர முடியும். மக்கள் இப்ப, பரவலா செக்கு எண்ணெய் வாங்க ஆரம்பிச்சிட்டாங்க. அதனால, பெரிய எண்ணெய் நிறுவனங்களுக்கு பாதிப்பு. விவகாரம் கோர்ட் வரைக்கும் போச்சு. நாங்களும், பெரிய கம்பெனிகிட்ட இருந்து பாக்கெட்லயும், டின்னாவும் எண்ணெய் வாங்குறோம். இதுல சின்ன வியாபாரிகள், டின்னை உடைச்சு லூசாவும் விக்கிறாங்க. அதையும்கூட, மக்கள் பார்க்கிற மாதிரிதான், ஒரு லிட்டர், ரெண்டு லிட்டர் கேன்ல அடைச்சு கொடுக்கிறோம். கவர்மெண்டும், கோர்ட்டும் சொல்லுறத மதிக்கிறோம். ஆனாலும்.. கொஞ்ச கால அவகாசம் வேண்டும்.""

Advertisment

குன்னிமலை (காரைக்குடி-முத்துப்பட்டினம்)

""நாங்க தலைமுறை தலைமுறையா செக்கு எண்ணெய் உற்பத்தி செய்து, விற்பனையும் செய்து வர்றோம். பாரம்பரிய நாட்டு செக்கு எண்ணைய்தான் உடலுக்கு நல்லதுன்னு சில்லைறையா வாங்கி மங்கு, பீங்கான், கண்ணாடி பாட்டில் மற்றும் பாத்திரத்துல வச்சு பயன்படுத்திட்டு வர்ற மக்கள், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திட்டு வர்றாங்க. இதுக்கு, டாக்டர்ல இருந்து எல்லா தரப்பினருமே சாட்சியா இருக்காங்க. இப்ப என்னன்னா.. எங்களைப்போல சில்லறை வணிகருங்க பிழைப்புல அடிச்சு, கார்பரேட் வியாபாரிக்கு வழிவிடற மாதிரி உத்தரவு போட்டிருக்காங்க. கோர்ட் ஆர்டர் போட்ட மாதிரி, பேக்கிங்லதான் எண்ணெய் விற்கணும்னா, 7 லட்ச ரூபாய் விலையில் அந்த பேக்கிங் மெஷின் வாங்கணும். அவ்வளவு பணம் இருந்துச் சுன்னா.. 50 மில்லி, 100 மில்லின்னு ஊற்றிக் கொடுத்து, சில்லறை வியாபாரி எதுக்கு கஷ்டப்பட ணும்? பேக்கிங்ல இருக்கிற எண்ணெய், குறிப்பிட்ட நாளுக்குள்ள வேதி வினை புரிந்து, புதுசு புதுசா நோயை உருவாக்கும். ஒரு உத்தரவால், அத்தனை பேரையும் நோயாளி ஆக்குறத எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?''

oil

‘நடிகர்’ முருகேசன் (எண்ணெய் வியாபாரி, சிவகாசி)

""பேக்கிங் எண்ணெய் மேலேயும் கலப்படம்கிற சந்தேகம் மக்களுக்கு இருக்கு. அதனால.. பேக்கிங் சரக்கு வியாபாரம் டல்லடிக்குது. மக்கள், ரேசன் கடை எண்ணெய்ய பயன்படுத்து றது அதிகமாயிடுச்சு. பேக்கிங் எண்ணெய் விலையவும், சில்லறைல விக்கிற விலையவும் ஒப்பிட்டுப் பார்த்து, லூசுல வாங்குறவங்க அதிகமாயிட் டாங்க.''

பூமாரி (சங்கரன்கோவில்)

என் வூட்டுக்காரர் வேலை பாக்குறது, அவரு மருந்துச் செலவுக்கே சரியாவுது. நானும் எம் மவளும் பாக்குற வேலைக் கூலிய வச்சுத் தான் குடும்பமே ஓடுது. நாங்க எப்படி பாக்கெட் எண்ணெய் வாங்குறது? லூசுல வாங்கி னாத்தான் கட்டுப் படியாகும். அதுவும், ரேசன் கடை எண்ணெய் பத்தாமத்தான், கடைக்கு போவ வேண்டியிருக்கு.

(திரு வேங்கடம்)

""எண்ணெய்க் கடைக்குப் போனா.. லூஸ்ல எண் ணெய் கிடை யாது.. பேக்கிங்ல தான்னு குடுக் கிறாக. லூஸ் எண்ணெயோட தரத்த.. முகர்ந்து பாக்கும் போதே கலப் படம்னா தெரிஞ்சிடும். பாக்கெட் எண் ணெய்லதான் என்ன சேர்மான மிருக்கோன்னு சந்தேகப் பட வேண்டியிருக்கு.''

கிறிஸ்டி ரமணி (நாகர்கோவில்)

""எதுலதான் கலப்படம் இல்ல. மோசடிக்காரனுவ எதையும் விட்டு வைக்கல. சமையல் எண்ணெய்ல கலப்படம்னு கோர்ட் உத்தரவு போட்டது சரிதான். ஆனா.. இந்த உத்தரவு பெரும் முதலாளிகள் வளர்ச்சிக்குத்தான் வழிவகுக்கும். பாக்கெட் எண்ணெய்லயும் கலப்படம் இல்லாம இல்ல. வீட்டுக்கு வந்து திறந்து பார்த்துட்டு, அது கலப்பட எண்ணெய்ன்னு தெரிஞ்சு, கடைக்காரங்ககிட்ட திருப்பிக் கொடுத்தா.. போம்மா.. பெரிய கம்பெனி எண்ணெய்ல எப்படி கலப்படம் இருக்கும்னு சத்தம் போடுவாங்க. கலப்பட எண்ணெய்யால புருஷன் பொண்டாட்டிக்கு சண்டை வர்றதும் உண்டு. லூஸ்ல வாங்கினா இந்த பிரச்சனையே கிடையாது.''

oil

வேலாயுதன் (தக்கலை)

""எண்ணெய் பாக்கெட்ல தேதிய மாற்றிப் போட்டு விற்காமலா இருக்காங்க? ஷாப்பிங்ல ஒரே நேரத்துல ஒரு டஜன் சோப்பு வாங்கின குடும்பங்கள், கொரோனா வந்ததுக்கு பிறகு, ஒண்ணோ ரெண்டோதான் சோப்பு வாங்குது. எண்ணெய்யும் அப்படித்தான். ஒரு லிட்டர், அரை லிட்டர்ன்னு எண்ணெய் வாங்கினவங்க.. இப்ப 10 ரூபாய் 20 ரூபாய்க்குன்னு லூஸ்ல எண்ணெய் வாங்குறாங்க. அந்த அளவுக்கு வருமானம் இல்லாம போச்சு. கோர்ட் பார்த்து, ஏழைங்க வாங்குற மாதிரி, பாக்கெட் எண்ணெய்ய சகாய விலைக்கு விற்கிறதுக்கு கோர்ட் ஒரு உத்தரவு போட்டா நல்லா இருக்கும்.

சமையல் எண்ணெய்யில் கலப்படத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கையில். கலப்பட கயவர்களைக் காட்டிலும், சிறு வியாபாரிகளும், ஏழை, எளிய மக்களும் அல்லவா ஒடுக்கப்படுகின்றனர்?''

-ராம்கி, சக்தி, மணிகண்டன், நாகேந்திரன், இராம்குமார்