Advertisment

உத்தரவின்றி கைதிகளுக்கு ஜாமீன்! ஆந்திராவில் விரட்டப்பட்ட புழல்சிறை அலுவலர்கள்!

jail

ந்திராவிலிருந்து சென்னைக்கு காய்கறி மூட்டையில் கடத்தி வந்த கஞ்சாவை, மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு திருவள்ளூரில் கைப்பற்றியது. கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அந்தக் கைதிகளில் இருவர், தங்களது வழக்கறிஞர் மூலம், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரியிருந்தனர். அந்த மனு தள்ளுபடியாகி, அது குறித்த உத்தரவு புழல் சிறைக்கு வந்தது.

Advertisment

jail

அது தள்ளுபடி உத்தரவு என்பதைக்கூட சரியாக கவனிக்காமல், பிணை உத்தரவு என்று கருதி, "தேவையான ந

ந்திராவிலிருந்து சென்னைக்கு காய்கறி மூட்டையில் கடத்தி வந்த கஞ்சாவை, மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு திருவள்ளூரில் கைப்பற்றியது. கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அந்தக் கைதிகளில் இருவர், தங்களது வழக்கறிஞர் மூலம், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரியிருந்தனர். அந்த மனு தள்ளுபடியாகி, அது குறித்த உத்தரவு புழல் சிறைக்கு வந்தது.

Advertisment

jail

அது தள்ளுபடி உத்தரவு என்பதைக்கூட சரியாக கவனிக்காமல், பிணை உத்தரவு என்று கருதி, "தேவையான நடவடிக்கை எடுக்கவும்' என்று எழுதிவிட்டார், கண்காணிப்பாளர் செந்தாமரைக் கண்ணன். பிறகென்ன? சிறை அலுவலர் குண சேகரன், தண்டனை குறைப்பு பிரிவு எழுத்தர் கோடீஸ்வரன், முதல்நிலை தலைமை காவலர் கணேசமூர்த்தி ஆகியோர், சிறை கண்காணிப் பாளரே சொல்லிவிட்டார் என்று, கைதிகள் இருவரையும் "ரிலீஸ்' செய்துவிட்டனர்.

சிறை விதிகளின்படி, பிணை உத்தரவின் அடிப்படையில் கைதி ஒருவரை ரிலீஸ் செய்வதாக இருந்தால், அவர் மீது பழைய வழக்கு எதுவும் நிலுவையில் உள்ளதா என்று சரிபார்த்த பிறகே, பிணையில் அனுப்ப வேண்டும். மேலும், கைதிகளை பிணையில் விடும் அதிகாரமானது, கண்காணிப் பாளர் மற்றும் கூடுதல் கண்காணிப்பாளருக்கு மட்டுமே உண்டு. ஆனால், புழல் சிறை கண்காணிப்பாளர் செந்தாமரைக்கண்ணனோ, ஜெயிலர், ரெமிசன் கிளார்க் போன்றோரிடம் பிணை யில் விடும் பணியை ஒப்படைத்துவிட்டார்.

Advertisment

தவறுதலாக இருவரை சிறையிலிருந்து வெளியேற்றியது, கடந்த 5-ஆம் தேதிதான் தெரிய வருகிறது. "மோசம் போய்விட்டோமே' என்று அடித்துப்பிடித்து, குணசேகரன், கோடீஸ்வரன், கணேசமூர்த்தி ஆகிய மூவரும், மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினரோடு சேர்ந்து, ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் போய் இரண்டு கைதிகளையும் தேடினார்கள். கைதிகளின் சொந்த கிராமமோ, தீரன் அதிகாரம் ஒன்று சினிமா ரேஞ்சுக்கு, இவர்களை விரட்டிவிட்டது.

இந்த சூழ்நிலையில், விசாகப்பட்டினம் ரசாயண ஆலையில் விஷவாயு கசிவு விவகாரம் பெரிதாக வெடிக்க, அத்தனை காவலர்களும் அங்கு போய்விட்டனர். கைதிகளைப் பிடிப்பதற்கு விசாகப் பட்டினம் காவலர்களின் உதவி கிடைக்காததால், சென்னையிலிருந்து கிளம்பிய சிறை ஊழியர்கள், தற்போது விசாகப்பட்டினம் சிறையில் தஞ்சம் அடைந்திருக்கின்றனர்.

இதே ரீதியில், உயர் நீதிமன்ற உத்தரவை புரிந்துகொள்ளாமல் கைதிகளை தவறுதலாக ரிலீஸ் செய்தது இதற்கு முன்பும் நடந்து, கண்காணிப்பாளர் செந்தாமரைகண்ணன் டோஸ் வாங்கியிருக்கிறார். சிறைத்துறை டி.ஜி.பி. ஆபாஷ் குமார் மாற்றப்பட்டு, அந்த இடத்துக்கு வந்திருக் கிறார், சுனில்குமார் சிங். கண்காணிப்பாளர்கள் கூட்டத்தைக்கூட இன்னும் அவர் நடத்தவில்லை என்று சிறைத்துறை வட்டாரத்தில் முணுமுணுக் கின்றனர்.

தமிழக சிறைத்துறை எப்போது சீராகுமோ?

- ராம்கி

nkn130520
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe