மாணவி ஸ்ரீமதி மர்ம மரணமடைந்தது குறித்து பல சந்தேகங்களை கிளப்புகிறார்கள் அந்தப் பகுதி மக்கள்.
"நக்கீரன் படை மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் ராஜசேகர், உருவத்தில் மட்டுமல்ல... செயலிலும் படுபயங்கரமானவர்' என்கிறார்கள்.
கோகுல்ராஜ்-சுவாதி ஆகியோர் காதலித் தார்கள். சுவாதி தனது சமுதாயப் பெண் என்பதால் கோகுல்ராஜை, ஆணவப்படுகொலை செய்தான் யுவராஜ். அவன், "தீரன் சின்னமலை பேரவை' என்ற சாதிய அமைப்பை தலைமை தாங்கி நடத்திவந்தான். அந்த அமைப்பின் புரவலர்தான் ஸ்ரீமதி மரணமடைந்த சக்தி பள்ளியின் உரிமையாளர் ரவிக்குமார்.
சேலம் -திருச்செங்கோடு பகுதியிலிருந்து வந்து குடியேறிய அந்த சமுதாயத்து மக்கள் பெரும்பாலும் உறவினர்கள். இந்தச் சமூகத்தில் பெரிய வி.ஐ.பி.யாக உருவெடுக்க ரவிக்குமார் முயற்சி எடுத்தார்.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த யுவராஜ், போலீஸின் கைகளில் சிக்கவில்லை. அவனை போலீஸின் கைகளில் சிக்க வைக்காமல் பாதுகாத்தது ரவிக்குமாரும் அப்போது "தீரன் சின்னமலை பேரவை' கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவராக இருந்த ராஜசேகரும்தான்.
கல்வராயன் மலைப்பகுதிகளிலும், சக்தி பள்ளி வளாகத்திலும் யுவராஜ் தங்கியிருந்தான். இந்தச் செயல், ரவிக்குமாரை ஒரு புகழ்பெற்ற நபராக உருவாக்கியது. ரவிக்குமார் நினைத்தால், எதையும் செய்வார் என்கிற இமேஜை கொண்டு வந்தது. அந்த நேரத்தில் ரவிக்குமாருக்கு உதவியாக இருந்தவர்கள் ராமநாதன் மற்றும் கோமதி ஆகிய டி.எஸ்.பி.க்கள்.
ராமநாதன், சின்னசேலம் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக சேர்ந்து, அதே காவல்நிலையத்தில் டி.எஸ்.பி.யாக பதவி உ
மாணவி ஸ்ரீமதி மர்ம மரணமடைந்தது குறித்து பல சந்தேகங்களை கிளப்புகிறார்கள் அந்தப் பகுதி மக்கள்.
"நக்கீரன் படை மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் ராஜசேகர், உருவத்தில் மட்டுமல்ல... செயலிலும் படுபயங்கரமானவர்' என்கிறார்கள்.
கோகுல்ராஜ்-சுவாதி ஆகியோர் காதலித் தார்கள். சுவாதி தனது சமுதாயப் பெண் என்பதால் கோகுல்ராஜை, ஆணவப்படுகொலை செய்தான் யுவராஜ். அவன், "தீரன் சின்னமலை பேரவை' என்ற சாதிய அமைப்பை தலைமை தாங்கி நடத்திவந்தான். அந்த அமைப்பின் புரவலர்தான் ஸ்ரீமதி மரணமடைந்த சக்தி பள்ளியின் உரிமையாளர் ரவிக்குமார்.
சேலம் -திருச்செங்கோடு பகுதியிலிருந்து வந்து குடியேறிய அந்த சமுதாயத்து மக்கள் பெரும்பாலும் உறவினர்கள். இந்தச் சமூகத்தில் பெரிய வி.ஐ.பி.யாக உருவெடுக்க ரவிக்குமார் முயற்சி எடுத்தார்.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த யுவராஜ், போலீஸின் கைகளில் சிக்கவில்லை. அவனை போலீஸின் கைகளில் சிக்க வைக்காமல் பாதுகாத்தது ரவிக்குமாரும் அப்போது "தீரன் சின்னமலை பேரவை' கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவராக இருந்த ராஜசேகரும்தான்.
கல்வராயன் மலைப்பகுதிகளிலும், சக்தி பள்ளி வளாகத்திலும் யுவராஜ் தங்கியிருந்தான். இந்தச் செயல், ரவிக்குமாரை ஒரு புகழ்பெற்ற நபராக உருவாக்கியது. ரவிக்குமார் நினைத்தால், எதையும் செய்வார் என்கிற இமேஜை கொண்டு வந்தது. அந்த நேரத்தில் ரவிக்குமாருக்கு உதவியாக இருந்தவர்கள் ராமநாதன் மற்றும் கோமதி ஆகிய டி.எஸ்.பி.க்கள்.
ராமநாதன், சின்னசேலம் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக சேர்ந்து, அதே காவல்நிலையத்தில் டி.எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்றவர். கோமதி, இப்பொழுது ஸ்ரீமதி மரண வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரியாக சி.பி.சி.ஐ.டி.யில் பணி யாற்றிவருகிறார். இந்த டீம்தான் இப்பொழுது "ஸ்ரீமதி தற்கொலை செய்துகொண்டார்' என தெளிவாக வழக்கை கொண்டு சென்றுகொண்டி ருக்கிறது.
ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்டார் என இந்த டீம் சொல்வதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. ரவிக்குமாருக்கு மோடி ஆட்சி அமைந்தவுடன், எச்.ராஜாவின் நட்பு கிடைத்தது. அத்துடன் எடப்பாடியும் இணைந்துகொள்ள... ஒட்டுமொத்த சாதிப் பிரிவுக்கும் தலைவராக ரவிக்குமார் மாறிப்போனார். அவருக்கு சமூகப் பிரிவினர்கள் அனைவரும் சேர்ந்து 25 கோடி ரூபாய் வசூல் செய்து பள்ளி நடத்துவதற்கு உதவி செய்திருக்கிறார்கள். இப்படி உதவி செய்தவர்களுக்கும், முக்கிய வி.ஐ.பி.க்களுக்கும் அவரவர் பலவீனங் களுக்கு ஏற்றவாறு அவர்களை திருப்திசெய்வார் ரவிக்குமார்.
ரவிக்குமாரிடம் சேவைகளைப் பெற்ற வி.ஐ.பி.க்கள், பள்ளியில் நடக்கும் மர்மக் கொலைகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள். அவர்களிடம் ரவிக்குமார் "நான் குற்றவாளியாகத் தயார், ஆனால் நான் கொடுக்கும் வாக்குமூலத்தில் நீங்கள் சிக்கிக் கொள்வீர்கள்'' எனச் சொல்லுவாராம்.
இன்னொருபுறம், இந்தக் கொலைகள் ஏற்படுத்தும் சமூக விளைவுகளைச் சந்திக்க, ராஜசேகர் தலைமையில் ஒரு அடியாள் பட்டாளத்தை தயாராக வைத்திருந்தார். தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன்... தி.மு.க.வுக்கு நெருக்க மான மகாபாரதி பள்ளி உரிமையாளர் மோகனை, ரவிக் குமார் பயன்படுத்திக் கொண்டார் என ரவிக்குமாரின் பயங் கரமான பின்னணி யை விவரிக்கிறார்கள் சின்னசேலம் பகுதி மக்கள்.
2007-ஆம் ஆண்டு பிரகாஷ் என்ற மாணவர் இந்தப் பள்ளியில் நடக்கும் லீலைகளை தெரிந்துகொண்டார். திடீரென ஒருநாள் அவர், கிணறு ஒன்றில் பிணமாகக் கிடந்தார்.
மற்றொரு மாணவர் பாத்ரூமில் கத்திக்குத்துக் காயங்களுடன் பிணமாகக் கிடந்தார். இந்த வழக்கில் ரவிக்குமார் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் கைதியாக அடைக்கப்பட்டார். ரவிக்குமார் சிறையில் இருந்தபோது ராஜசேகர், அருள்சுபாஷ் மற்றும் அவரது தாயார் பார்வதியம்மாள் ஆகியோர் பள்ளியை நிர்வகித்து வந்தார்கள்.
எடப்பாடி ஆட்சி அமைந்தவுடன், ராஜசேகர் வைத்ததுதான் சட்டம் என அந்தப் பகுதியில் மாறிப்போனது. பள்ளி அமைந்துள்ள பேருந்து நிலையத்தின் அருகே ஒரு கடையில் மாட்டிறைச்சி சமைக்கப்பட்டது. அதை, தனது ஆட்கள் மூலம் அடித்து நொறுக்கினார் ராஜசேகர். அந்த சாலையில் எந்த இடத்திலும் விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன் பெயரை எழுதக்கூடாது, அவற்றை நெடுஞ்சாலைத் துறை மூலம் சுண்ணாம்பு கொண்டு அழித்துவிடுவார் ராஜசேகர்.
பங்காரம் என்கிற ஊரில் பட்டியல் இன மக்கள் ஒன்றுகூடி ராஜசேகரை எதிர்த்து சண்டை போட்டார்கள். சின்னசேலம், கள்ளக்குறிச்சி ஆகிய காவல்நிலையங்கள் ராஜசேகரின் கட்டுப்பாட்டில்தான் இன்றுவரை இயங்குகின்றன.
கனியாமூர் சக்தி பள்ளியில் நடந்த கலவரத்தில் வந்தவர்களின் 100 மோட்டார் சைக்கிள்கள் ராஜசேகரால் அடித்து உடைக்கப்பட்டு தீவைத்து எரிக்கப்பட்டது. இந்த நிகழ்வை காவல்துறை உயரதிகாரிகள் வேடிக்கை பார்த்தார்கள். அந்தக் கலவரத்துக்குப் பிறகு கனியாமூர் பகுதியில் உள்ள பட்டியல் இன மக்களின் வீடுகளில் ஒளிந்திருந்த இளைஞர்கள் 200 பேரை ராஜசேகர் காவல்துறையினரிடம் பிடித்துக் கொடுத்தார். அத்துடன், வேடிக்கை பார்க்க வந்த இளைஞர்கள் பலரையும் காவல்துறை, ராஜசேகர் உதவியுடன் கைது செய்தது. இதை எதிர்த்து அந்தப் பகுதியிலுள்ள பட்டியல் இன மக்கள், போலீஸாருக்கு எதிராக ஒரு பெரிய போராட் டத்தையே நடத்தினார்கள்.
அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் ஸ்ரீமதியின் உடல் கொண்டு செல் லப்பட்ட ஆம்னி வேனின் காட்சிகள் பதிவாகியிருந்தது. அவை அனைத் தையும் ராஜசேகர் அழித்தார். ஸ்ரீமதி இறந்த அன்று நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத் தில் ராஜசேகரின் மகன் மற்றும் ரவிக் குமாரின் மகன் சக்தி ஆகியோர் மட்டுமல்ல... ராஜசேகரும் பங் கெடுத்தார்.
ஸ்ரீமதியின் முகத்தை ஒரு பெரிய கை மூடியதால் ஏற் பட்ட மூச்சுத் திணறலால்தான் மரணம் நடந்திருக்கிறது என முதல் போஸ்ட் மார்ட்டம் அறிக்கையைப் படித்த வழக்கறிஞர்கள் வைத்த வாதத்தின் அடிப்படையில் விழுப்புரம் நீதிமன்றம் ரவிக்குமார் மற்றும் சாந்திக்கு, ஜாமீன் தர மறுத்தது. ஸ்ரீமதியை மூச்சுத்திணறலுக்கு உட்படுத்திய பெரிய கை ராஜசேகரின் கையாகக் கூட இருக்கலாம் என அந்தப் பகுதி மக்கள் சந்தேகம் கிளப்புகிறார்கள்.
பா.ஜ.க., அ.தி.மு.க. என இரண்டு கட்சியிலும் ஒன்றிய கவுன்சிலர் சீட் கேட்டு விண்ணப்பித்த ராஜசேகருக்கு, ரவிக்குமாரின் செல்வாக்கால் இரண்டு கட்சிகளுமே ஒன்றிய கவுன்சிலர் சீட் தர முன்வந்தன. அவர், அ.தி.மு.க.வை தேர்ந் தெடுத்தார். அவரது ஒன்றிய கவுன்சிலர் அலுவலகத்தை எடப்பாடி திறந்துவைத்தார்.
இப்படி... சகல செல்வாக்குடன் திகழும் ராஜசேகர் சொன்னால் அந்தப் பகுதியில் உள்ள அவரது சமூகத்தினர் கேட்பார்கள். அந்தப் பகுதியில் எடை மெஷின் கடை நடத்தும் ஒருவர், தனது இரண்டு பிள்ளைகளையும் நக்கீரனைத் தாக்குவதற்காக ராஜசேகர் கேட்டுக்கொண்டதன் பேரில் அனுப்பி வைத்திருக்கிறார்.
"ஒன்றிய கவுன்சிலர் எலெக் ஷன் நேரத்தில் ஒரு ஓட்டுக்கு ஐயாயிரம் ரூபாய் கொடுத்து ராஜ சேகர் வெற்றி பெற்றுள்ளார்.
அவரது அனைத்துச் செலவுகளையும் ரவிக்குமாரே ஏற்றுக்கொண் டார்'' என வியப் புடன் சொல் கிறார்கள் அப் பகுதி மக்கள்.
"ராஜசேகர் இருக்கும்வரை ரவிக்குமார் எதற் கும் அஞ்சமாட் டார். ராஜ சேகரும் அவரது தம்பி அருள்சுபாஷும்தான் இதுவரை சக்தி பள்ளிக்கு எல்லாமுமாக இருந்தவர்கள். தற்பொழுது நக்கீரன் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலுக்காக அருள்சுபாஷை தேடி வருவதாக போலீஸார் சொல்கிறார்கள். ஆனால் அருள்சுபாஷ் கூலாக தனது வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டி ருக்கிறார். போலீஸ் தேடுவதால், வெளியே தெரியும்படி நடமாடுவதில்லை' என்கிறார்கள் சின்னசேலம் பகுதி மக்கள்.
_________________
தொல்.திருமாவளவன் ஆறுதல்!
ஸ்ரீமதி மர்ம மரணம் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற நக்கீரன் முதன்மைச் செய்தியாளர் தாமோதரன் பிரகாஷ் மற்றும் வீடியோகிராபர் அஜித்குமார் இருவரையும் கனியாமூர் சக்தி பள்ளி நிர்வாகத்தினர் ஏவிவிட்ட குண்டர்கள் கொடூரமாகத் தாக்கினார்கள். இந்த கொலைவெறித் தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையெடுத்த பின், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ மனையில் தொடர் சிகிச்சையில் இருந்தனர். இருவரையும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் நேரில் சந்தித்து, சம்பவம் குறித்து கேட்டறிந்ததோடு, உடல்நலம் குறித்தும் விசாரித்தார்.