ஆகஸ்ட் 7-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவில், சென்னை திருவல்லிக்கேணி சி.என்.கே. சாலையோர குப்பைத்தொட்டிக்கருகே கிடந்த ஒரு சாக்குப்பையை, ஏழெட்டு தெரு நாய்கள் அங்குமிங்குமாய் இழுத்து தங்களுக்குள் சண்டையிட்டபடியிருந்தன. அவ்வழியே வந்த பொதுமக்களில் சிலர் நாய்களை விரட்டியடித்துவிட்டு அந்த சாக்குப் பையைப் பிரித்துப் பார்த்தபோது, அதில் ஒரு ஆண் சிசு பிணமாகக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே சென்னை மாநகரக் காவல் கட்டுப்பாட்டு அறையின் 100 நம்பருக்கு கால் செய்து விவரத்தைக் கூறியுள்ளனர்.
உடனடியாக அத்தகவல், திருவல்லிக் கேணி காவல் உதவி ஆணையர் பாஸ்கர னுக்கு தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து, திருவல்லிக்கேணி பகுதியில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த திருவல்லிக்கேணி குற்றப்பிரிவு ஆய்வாளர் கலைச்செல்விக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்துக்கு விரைந்து சென்ற ஆய்வாளர் கலைச்செல்வி மற்றும் உடனிருந்த காவலர்கள், குப்பைத்தொட்டியருகே சாக்குப்பையிலிருந்த ஆண் சிசுவின் பிணத்தை மீட்டு விசாரணையைத் துவக்கினர். அங்கி ருந்த சி.சி.டி.வி. பதிவினை வைத்துப் பார்த்த போது, 30 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் கட்டைப் பையுடன் குழந்தையை குப்பையில் வீசிச் சென்றது பதிவாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து மற்ற சி.சி.டி.வி. காட்சிகளை சோதனை செய்தபோது, அருகே ஒரு கடையில் கட்டப்பையை வாங்கியது பதிவாகி இருந்தது. அங்கு விசாரித்தபோதும் அந்த ஆளைப் பற்றி விவரம் ஏதும் தெரியவில்லை.
அருகே கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனை உள்ளதால் அங்கு சென்று போலீசார் விசாரித்தபோது, ஞாயிற்றுக்கிழமை 7ஆம் தேதி கவிதா-தனுஷ் தம்பதிக்கு, எட்டு மாதம் ஆன நிலையில் இறந்தே பிறந்த குழந்தையை தனுஷிடம் ஒப்படைத்ததாகத் தெரிவித்தனர். அதன்பேரில் கவிதாவையும் தனுஷையும் போலீசார் விசாரித்தபோது, தனுஷுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியைப் பிரிந்துள்ளதாகவும், கவிதாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும் விசாரணையில் தெரிவித்தார். ஆகஸ்ட் 7ஆம் தேதி இரவு, கவிதாவுக்கு இறந்த நிலையிலேயே ஆண் குழந்தை பிறந்துள்ளதாகக் கூறி ஆண் சிசுவின் பிணத்தைக் கொடுத்துள்ளனர். அதனால் மன உளைச்சலுக்கு ஆளான தனுஷ், மது அருந்திவிட்டு முழு போதையில் வந்து, தனது குழந்தை யின் பிணத்தைப் பார்த்து அழுதவர், பிணத்தைச் சாக்குப்பையில் எடுத்துச்சென்று, குப்பைத்தொட்டியில் வீசியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில், திருவல்லிக்கேணி காவல் உதவி ஆணையர் பாஸ்கரன், தனுஷுக்கு புத்தி சொல்லி, 'உறவு கள்' என்ற அமைப்பின் மூலம், அந்த ஆண் சிசுவின் பிணத்தை மயிலாப்பூர் கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட் டில் அடக்கம் செய்தார். பின்னர் உதவி ஆணையர் பாஸ்கரன், தனுசுக்கு ஓர் வேலை ஏற்பாடு செய்து தருவதாகத் தெரிவித்தார். போலீசாரின் மனிதாபிமான செயலுக்கு சல்யூட்!
-அரவிந்த்