"ஹலோ தலைவரே, நம்ம நக்கீரன் அடிக்கடி சொல்லிக்கிட்டிருந்த மாதிரி ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் மெஹா டிரான்ஸ்பர் ரொம்பவும் பரபரப்பா அரங்கேறியிருக்கு.''”

"ஆமாம்பா, ஐ.பி.எஸ். அதிகாரிகளின் இடமாற்றம், பதவி உயர்வுன்னு தொடர்ச்சியாக பட்டியல்கள் ரிலீஸ் ஆகிவந்த லையில், ஒரே நேரத்தில் 37 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு டிரான்ஸ் பர் ஆர்டர் பிறப்பிக்கப்பட்டு இருக்குதே?''”

rr

"இந்த டிரான்ஸ்பருக்காக மூன்று முறை பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு, சில பல காரணங்களால் கிடப்பில் போடப்பட்டதாம். காரணம், ஏராளமான தலையீடுகள் குறுக்கே வந்ததாம். இருந்தும் முதல்வர் ஸ்டாலின், இந்த விவகாரத்தில் உறுதியாக இருந்து இப்போது பட்டியலை ரீலீஸ் செய்ய வச்சிட்டாராம். இந்த நட வடிக்கை கோட்டைத் தரப்பையே திகைக்க வச்சிருக்கு. காரணம், செல்வாக்காகக் கோலோச்சிக்கொண்டிருந்த அடிசனல் சீஃப் செக்ரட்டரி, பிரின்சிபல் செக்கரட்டரி என உயரதிகாரிகள் பலரும் மாற்றப்பட்டிருக்காங்க.''

"ஆமாம்பா...''”

"குறிப்பாக, உள்துறை செயலாளராக இருந்த பிரபாகர் ஐ.ஏ.எஸ். மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய உள்துறை செயலாளராக பனீந்தர் ரெட்டி நியமிக்கப் பட்டிருக்கிறார். அதேபோல யாருமே எதிர்பார்க்காதவாறு சுகாதாரத்துறை முதன் மைச் செயலாளராக இருந்த ராதாகிருஷ் ணன், உணவுத்துறைக்கு தூக்கியடிக்கப்பட்டு இருக்கிறார். நம் நக்கீரனால் ஊழல் விவாகரங்கள் அம்பலப்படுத்தப்பட்ட சுரங்கத்துறையில், கமிஷனராக இருந்த நிர்மல்ராஜ் மாற்றப்பட்டு, அந்தப் பதவிக்கு மதுவிலக்கு ஆயத்தீர்வை கமிஷனராக இருந்த ஜெயகாந்தன் நியமிக்கப்பட்டிருக் கிறார். இன்னும் மாற்றப்பட வேண்டிய ஊழல் அதிகாரிகள், பதவியில் நீடித்து வருவ தால், அடுத்த டிரான்ஸ்பர் பட்டியல் எப்ப வரும்ங்கிற எதிர்பார்ப்பு பலரின் முகத்திலும் இருக்கிறது.''”

"இப்ப வந்த டிரான்ஸ்பர் பட்டியல் குறித்தும் சர்ச்சைகள் இருக்குதேப்பா?''”

"அது வழக்கம் தானேங்க தலைவரே, சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணனைத் தூக்கிவிட்டு, அந்த இடத்திற்கு ஜூனியர் அதிகாரியான செந் தில்குமாரை அமர வைத்திருக்கிறார்கள். பா.ஜ.க. அண்ணா மலையால் அண்மை யில் ஊழல் புகார் கிளப்பப்பட்ட கர்ப்பிணிகள் மற்றும் குழந்தை களுக்கான ஊட்டச்சத்து பேக்கேஜ் திட்டத்தை வடிவமைத்தவர் இவர்தானாம். அதேபோல் கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் எடப்பாடியின் அன்பைப் பெற்று சி.எம். செகரட்டரிகளில் மூன்றாம் இடத்தில் இருந்தவராம் செந்தில். அண்ணாமலையால் நேரடியாகக் குற்றம்சாட்டப் பட்ட இவரை, சுகாதாரத்துறை செயலாளராக்கி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆளுந்தரப்போ, அண்ணாமாலை சொல்வதெல் லாம் பொய் என்பதைப் போட்டுடைக்கத்தான் இந்த நியமனம்னு சொல்லுது. அதேபோல் கடந்த ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த செங் கோட்டையனின் விசுவாசியாக செயல்பட்டதோடு, பல்வேறு ஊழல் விவகாரத்தில் சிக்கியவரான பிரதீப் யாதவை, நெருஞ்சாலைத் துறையின் செயலாளராக நியமித்திருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் மேலிடத்து சாய்ஸ் என்கிறார்கள்.''”

"தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் சேர்மன் பதவியைக் குறிவைத்து அதிகாரிகள் சிலர் மூவ் பண்றாங்களே?''”

"உண்மைதாங்க தலைவரே, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் சேர்மன் பதவி காலியாகவே இருக்கிறது. அதனால் இதைக் குறிவைத்து சீனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலர் காய்களை நகர்த்தி வருகிறார்கள். இந்த நிலையில், அரசின் உச்சபட்ச அதிகாரியை இந்த தேர்வாணை யத்தில் உட்காரவைக்கலாமான்னு முதல்வர் ஸ்டாலின் ஆலோசிப்பதாகக் கோட்டை அதிகாரிகள் தரப்பில் கிசுகிசுக்கப்படுது. இது ஒருபுறமிருக்க, தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் காலியாக உள்ள உறுப்பினர்கள் பதவியைக் கைப்பற்றவும் சிலர் சூட்கேஸ்களுடன் ஆளும் தரப்பை அணுகறாங்களாம்.''”

"ஐ.பி.எஸ் லெவலிலும் கடந்த வாரத்தில் மாற்றங்கள் நடந்தது. தமிழக காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபுவின் அணுகுமுறை எப்படி இருக்குதாம்?''”

Advertisment

ff

"அவர் சில அதிரடி நடவடிக்கைகளையும் ஆபரேஷன்களையும் எடுக்கிறார். ஆனாலும் போதுமானதா இல்லை. சமீபத்தில் சென்னை வந்த பிரதமர் மோடியை சந்தித்த டி.ஜி.பி. சைலேந்திர பாபு, அவர்கிட்ட இந்தியில் பேசியதாகவும், அதை மற்றொரு அதிகாரி லைவ்வாகப் பதிவு செய்து, முதல்வரிடம் கொடுத்துட்டாருன்னும் காவல்துறை வட்டாரத்தில் டாக் ஓடுது.''”

"தமிழக அரசின் தடய அறிவியல் துறை இயக்குநர் பதவி காலியாக இருக்குதே?''

"தடய அறிவியல் துறையின் இயக்குநராக இருந்த சீனிவாசன், கடந்த 31-ஆம் தேதியோடு ஓய்வு பெற்றுவிட்டார். இரண்டுவாரம் ஆகியும் புதிய இயக்குநரை நியமிக்கவில்லை அரசு. பொது வாக, அரசின் மிக சென்சிட்டிவ் பதவியான இந்தப் பதவியை இத்தனை நாள் காலியாக வைத்திருக்க மாட்டார்கள். ஏன் இந்தத் தாமதம்னு விசாரித்த போது, துறையின் இணை இயக்குநர்களாக உள்ள திருநாவுக்கரசு, முனியராஜன் இருவரில் ஒருவரையே அந்தப் பதவிக்கு நியமிச்சாகனும். ஆனால், சீனியாரிட்டி தொடர்பாக, முனியராஜன் ஏற்கனவே தொடர்ந்த வழக்கு ஒன்று இன்னமும் நிலுவையில் இருப்பதால் தான், புதிய இயக்குநரை நியமிக்காமல் அரசு தடுமாறுகிறது என்கிறார்கள்.''

"தடயவியல் துறை இயக்குநர் உள்ளிட்ட பதவிக்கானவர்கள் பட்டியல் 3 மாதங்களுக்கு முன்பே தயாராகணுமே?''”

"ஆமாங்க தலைவரே, அடுத்த இயக்குநர் யார் என் பதை 3 மாதங்களுக்கு முன்பே பட்டியலிட்டு வைத்திருக்கணும். இங்கே தகுதியானவர்களைத் தேர்வு செய்வதில் சட்டச் சிக்கல் கள் இருப்பதால், அதில் ஆராய்ந்து தீர்வு கண்டிருக்க வேண்டும். ஆனால், இவ்வளவு நாள் சைலண்டா இருந்துட்டு, இயக்குநர் பதவி காலியான பிறகு, இதுபற்றி இப்ப விவாதிக்கிறாங்களாம். இதை முன்னதாகவே முதல்வரின் கவனத்துக்கு அதிகாரிகள் கொண்டு சென்றிருக்கணும். அப்படி கொண்டுபோயிருந்தால் எப்போதோ தீர்வு காணப் பட்டிருக்கும்னு அதிகாரிகள் தரப்பே சொல்லுது. இதற் கிடையே, இயக்குநர் பதவி யை உள்துறையின் கட்டுப் பாட்டில் எடுத்துக்கொண்டு அந்த பதவியில் ஒரு ஐ.ஏ. எஸ். அதிகாரியை நியமிக்க லாமாங்கிற ஆலோசனை யில் உள்துறை இருக்குதாம்.''

"சரிப்பா, சாமியார் நித்யானந்தா பற்றி புதுப்புதுக் கதையாக வெளியில் வருதே?''”

Advertisment

nithy

"ஆமாங்க தலைவரே, நித்தியானந்தா கோமாவில் மிகவும் மோசமான நிலையில் இருப்ப தாக கடந்த வாரம் வரை சொல்லப்பட்டது. இந்த நிலையில், நித்தியை சிகிச்சைக்காக இந்தியாவுக்குள் அனுமதிக்கவேண்டும்னு முன்னாள் சி.பி.ஐ. அதி காரி ஒருவர் பேசிவருவது புலனாய்வு அமைப்பு களை கூர்ந்து கவனிக்க வச்சிருக்கு. இந்த நிலையில் நித்தி, மேற்கிந்தியத் தீவுக் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு தீவை விலைக்கும், மற்றொரு தீவை 100 ஆண்டுகளுக்கு லீசுக்கும் வாங்கியிருப்பதாக புதிய தகவல் ஒன்று சிறகடித்துக்கொண்டு இருக்கிறது. இந்த சூழலில் நீதிமன்றம், நித்திக்கு புளூகார்னர் நோட்டீஸைப் பிறப்பித்திருக்கிறது. இதனால் நித்தி இப்போது பதுங்கி இருக்கும் இடத்தை விட்டு எங்கும் வெளியே தப்ப முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.''”

"என்னப்பா, என்னென்னவோ சொல்றே? கைலாசாவிலேயே அவர் சிலைக்கு பூஜை பண்றாங்களே?''”

"உண்மைதாங்க தலைவரே, உயிரோடு இருப்பவர்களின் சிலைக்கு பூஜையோ அபிஷேகமோ பண்ண மாட்டாங்க. அப்படியிருந்தும் கைலாசாவில் இருக்கும் நித்தியின் சிஷ்யை களே, நித்தியின் சிலைக்கு பூஜை தொடங்கி பாலாபி சேகம் வரை பண்றாங்க. அதனால் சமாதி நிலையில் இருப்பதாக சொல்லப்பட்ட நித்தி, இப்ப உயிரோடு இருக் கிறாராங்கிற சந்தேகத்தை அவங்க வெளியில் உருவாக்க றாங்க. சட்டத்தின் கண்களில் மண்ணைத் தூவ, இது போன்ற நாடகத்தை நித்தியே நடத்தறாரோங்கிற சந்தேகமும் சிலரிடம் எழுந்திருக்கு. டிராமா போடுவதில் நித்தி கில்லாடியாச்சே. 2018-ல் நேபாளம் வழியா தப்பி யோடியபோது பெல்லீஸ் என்ற நாட்டின் பாஸ்போர்ட் நித்தியிடம் இருந்தது. அங்கி ருந்து ஈக்வெடார் நாட்டுக்கு அவர் போனபோது, தன் ஆசிரமத்துக்கு அசைவ உணவைக் கேட்டதால், அங்கிருந்து நித்தி துரத்தி அடிக்கப்பட்டதையும் சிலர் சுட்டிக்காட்டறாங்க. அதனால் எமகாதக நித்தி தொடர்பாக வெளி யாகும் செய்திகளை முழுசா நம்பமுடியாது.''”

dinakaran

"நானும் ஒரு முக்கியமான தகவலைச் சொல்றேன். இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுத்தது தொடர்பான வழக்கில் ஏற்கனவே டி.டி.வி.தினகரன் கைதாகி, ஜாமீனில் விடுதலையும் ஆனார். இந்த நிலையில் அமலாக்கத்துறை தாக்கல் செய்திருக்கும் குற்றப்பத்திரிகையில் தினகரன் குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை. மாறாக விசாரணை நபராக மட்டுமே அவர் காட்டப்பட்டிருக்கிறார். இதன் பின்னணியில் இருப்பது டெல்லியின் ஆசியோடு நடந்த பேரங்கள்தானாம். நாடாளு மன்றத் தேர்தலின்போது, எடப்பாடிக்கு செக் வைக்கவே தினகரனை இந்த வழக்கில் இருந்து பா.ஜ.க. சுதந்திரமாக்கியிருக்குதாம். இதனால் குஷியான தினகரன், அ.தி.மு.க.வை மீட்பதே எனது பணின்னு மீண்டும் குரலை உயர்த்த ஆரம்பிச்சிட்டார்.''”