ஏ.டி.எம். கொள்ளையில் பெரிய பெரிய லிங்க்! -போலீசிடம் கக்கிய சந்துருஜீ

atmroberry

சாமானியர்கள் துவங்கி பில்லியனர்கள் வரை அனைவரது பணத்தையும் அவர்களுக்குத் தெரியாமல் அபேஸ் செய்து வந்த புதுச்சேரி கும்பல் சிக்கியிருப்பது ஏ.டி.எம். கொள்ளை விவகாரத்தில் புதுத் திருப்பத்தை உண்டாக்கியுள்ளது. "புதுச்சேரியில ரெண்டு வருஷமா மக்களோட வங்கி கணக்குலேந்து பணம் குறைஞ்சிட்டு வர்றதா ஒரு ரகசிய தகவல் போலீசுக்கு கிடைத்தது. ஆனால் யாரோட கைவேலைன்னு தெரியலை' என புதுவை போலீசார் குழம்பியிருந்தனர்.

atmஇந்நிலையில்தான் கடந்த ஏப்ரலில் புதுச்சேரி போலீசாருக்கு கேரள போலீசாரிடமிருந்து ரகசிய தகவல் வந்தது. "பாலாஜி தியேட்டர் பக்கத்துல இருக்குற சித்தன்குடி ஏரியாவில் இன்டர்நெட் சென்டர்ல நிறைய போலி ஏ.டி.எம். கார்டுகள் இருக்கு' என்ற அந்த தகவலின் அடிப்படையில், போலீசார் விரைந்தனர்.

சில ஓடாத கம்ப்யூட்டர்களுக்கு மத்தியில் ஸ்கிம்மர் கருவிகள், பி.ஓ.எஸ். மெஷின்கள்,

சாமானியர்கள் துவங்கி பில்லியனர்கள் வரை அனைவரது பணத்தையும் அவர்களுக்குத் தெரியாமல் அபேஸ் செய்து வந்த புதுச்சேரி கும்பல் சிக்கியிருப்பது ஏ.டி.எம். கொள்ளை விவகாரத்தில் புதுத் திருப்பத்தை உண்டாக்கியுள்ளது. "புதுச்சேரியில ரெண்டு வருஷமா மக்களோட வங்கி கணக்குலேந்து பணம் குறைஞ்சிட்டு வர்றதா ஒரு ரகசிய தகவல் போலீசுக்கு கிடைத்தது. ஆனால் யாரோட கைவேலைன்னு தெரியலை' என புதுவை போலீசார் குழம்பியிருந்தனர்.

atmஇந்நிலையில்தான் கடந்த ஏப்ரலில் புதுச்சேரி போலீசாருக்கு கேரள போலீசாரிடமிருந்து ரகசிய தகவல் வந்தது. "பாலாஜி தியேட்டர் பக்கத்துல இருக்குற சித்தன்குடி ஏரியாவில் இன்டர்நெட் சென்டர்ல நிறைய போலி ஏ.டி.எம். கார்டுகள் இருக்கு' என்ற அந்த தகவலின் அடிப்படையில், போலீசார் விரைந்தனர்.

சில ஓடாத கம்ப்யூட்டர்களுக்கு மத்தியில் ஸ்கிம்மர் கருவிகள், பி.ஓ.எஸ். மெஷின்கள், போலி ஏ.டி.எம். கார்ட் தயாரிக்க தேவையான சாமான்கள் என அனைத்தும் அந்த இன்டர்நெட் சென்டரில் இருந்ததால் அந்த கடையின் உரிமையாளர் பாலாஜி மற்றும் ஜெயச்சந்திரன் ஆகிய இரண்டு இளைஞர்களை கைது செய்து பலமாக விசாரித்தது புதுவை போலீஸ். அவர்களோடு தொடர்புடைய கடலூரை சேர்ந்த கமல் மற்றும் சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த சரவணன் என மேலும் இருவர் சிக்கினர். இவர்கள் இரண்டு குழுக்களாக தென்னிந்திய மாநிலங்கள் அனைத்திலும் கைவரிசை காட்டியவர்கள் என்பது தெரியவந்தது.

ஏதேனும் ஒரு ஏ.டி.எம். சென்டரை டார்கெட் செய்து அங்கு ஸ்கிம்மர் கருவியை பொருத்தும். அதன் மூலம் சம்பந்தப்பட்ட வங்கி கணக்கு பயனாளரின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டின் ரகசிய எண்ணை அறிந்து கொண்டு அதன்படி போலியான கார்டை கொண்டு ஏ.டி.எம். கார்டை உருவாக்கி பணத்தை அபேஸ் செய்து பங்கு போட்டு கொண்டுள்ளனர். ஏ.டி.எம். மூலம் ஒரு குறிப்பிட்ட அளவிற்குத்தான் பணம் எடுக்க முடியும் என்பதால் பிஓஎஸ் மெஷின்களை வாங்கி அதன் மூலமாகவும் பெரிய அளவில் பணத்தை ஒவ்வொரு வங்கி கணக்கிலிருந்தும் எடுத்துள்ளனர்.

"எங்களுக்கு பி.ஓ.எஸ் .மெஷின் வாங்கி கொடுத்ததே ஒரு கவர்மெண்ட் டாக்டர்தான், அவருக்கு 30% கமிஷன்' என சொல்லியிருக்கின்றனர். இதையடுத்து, புதுவை - கிருமாம்பாக்கம் ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்த விவேக் சிக்கினார். இந்த ஏ.டி.எம். கொள்ளைக்கு மூளையாக இருந்து தங்களை செயல்படுத்தியதே புதுவை - முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் சந்துருஜீதான் என போலீசிடம் வாக்குமூலம் கொடுத்தார் விவேக்.

28 வயதான சந்துருஜீ அ.தி.மு.க. புள்ளி. முத்தியால்பேட்டை தொகுதி முழுக்க தன் முகத்தைப் போட்டு பேனர் வைத்துக் கொள்வதில் அலாதி இன்பம். அப்புறம் மாணவர்களுக்கு பரிசளிக்கும் விழாக்கள் போன்ற பொது நிகழ்ச்சிகளிலும் ஈடுபாடு காட்டுவார். குறுகிய காலத்தில் நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட அசையும் மற்றும் அசையா சொத்துகளின் அதிபதியானார். குலுக்கல் சீட் மோசடி உள்ளிட்ட பல புகார்களுக்கும் பஞ்சமில்லை.

அ.தி.மு.க. சந்துருஜீ மட்டுமில்லாமல் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., காங்கிரஸ் என முக்கிய கட்சிகளின் பிரமுகர்களுக்கும், எம்.எல்.ஏ.க்களுக்கும், அவர்களின் வாரிசுகளுக்கும் இந்த ஏ.டி.எம். கொள்ளை தொடர்பான வழக்கில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் கவனமாக விசாரணையை மேற்கொண்டது காவல்துறை.

atmroberry

"சந்துருஜீ வெளிநாடு பறந்துவிட்டார்', "இந்த 50 நாள்ல 95 சிம்கார்டு மாத்தியிருக்கிறார்', "தங்கள் பக்கம் இந்த கேஸ் திரும்பிடக் கூடாதுன்னு சந்துருஜீய கொலை செய்யக் கூட அவரோட கூட்டாளிங்க தயங்க மாட்டாங்க' என பல்வேறுவிதமான கட்டுக் கதைகள் வாட்ஸாப்பில் பரவி வந்த நிலையில்,

புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி. போலீசார் பொறி வைத்துக் காத்திருந்தனர்.

இந்த வழக்கோடு தொடர்புடைய முக்கிய குற்றவாளியான சத்யாவை கைது செய்த சில மணி நேரத்தில், சந்துருஜீயின் தம்பி மணி சந்தரும் கைது செய்யப்பட்டார். தம்பியின் வாயிலிருந்து அண்ணனின் இருப்பிடம் தெரியவர, மும்பைக்கு விரைந்த போலீசார் 11-ந் தேதி அதிகாலை சந்துருஜீயை கைது செய்து மும்பையிலேயே ஒரு ரகசிய இடத்தில் விசாரித்தனர்.

தன்னுடன் யார் யாருக்கு ஏ.டி.எம். வங்கிக் கொள்ளையில் தொடர்பு என்பதை சந்துருஜீ கக்கியிருக்கும் நிலையில், புதுவை அரசியல்வாதிகள், வங்கி அதிகாரிகள் உள்பட பலரும் உதறலில் உள்ளார்கள். அ.தி.மு.க.வைச் சேர்ந்த சந்துருஜீயிடம் நடந்த தொடர் விசாரணையினால் தமிழக ஆளுங்கட்சி புள்ளிகளும் மிரட்சி அடைந்துள்ளனர்.

-சிவரஞ்சனி

ATM nkn15.06.18
இதையும் படியுங்கள்
Subscribe