அ.தி.மு.க.வை வளர்ப்பதா? தடுப்பதா? அமித்ஷாவின் எம்.பி. தேர்தல் கணக்கு!

dd

புதுச்சேரி யூனியன் பிரதேச நிகழ்ச்சிகளுக்காக கடந்த ஏப்ரல் 24-ந் தேதி ஒன்றிய பா.ஜ.க. அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா பாண்டிக்குச் செல்லும் வழியில் சென்னை ஆவடியில் ஓரிரவு (23-ந் தேதி) தங்கினார். அது குறித்து ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அமைப்புச் செயலர் கேசவவிநாயகம், மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, இணைப்பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, ஒன்றிய அமைச்சர் முருகன் ஆகியோரிடம் ஆலோசித்தார் அமித்ஷா. ஆலோசனை விவகாரங்கள் நமக்கு கிடைத்துள்ளன.

dd

ஆலோசனைக் கூட்டம் துவங்குவதற்கு முன்பு தமிழக ஆளுநரிடமிருந்து அமித்ஷாவுக்கு போன் வந்திருக்கிறது. ஊட்டியில் துணைவேந்தர்கள் மாநாடு நடக்கும் அதேநாளில் (25-ந் தேதி), துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு மாற்றும் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றவிருக்கிறார்கள் என்பதை அமித்ஷாவிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார் கவர்னர் ஆர்.என்.ரவி. நோ ப்ராப்ளம் என்று சொன்ன அமித்ஷா, "உங்கள் ப்ரோக்கிராமை கண்டினியூ பண்ணுங்கள்' என்றிருக

புதுச்சேரி யூனியன் பிரதேச நிகழ்ச்சிகளுக்காக கடந்த ஏப்ரல் 24-ந் தேதி ஒன்றிய பா.ஜ.க. அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா பாண்டிக்குச் செல்லும் வழியில் சென்னை ஆவடியில் ஓரிரவு (23-ந் தேதி) தங்கினார். அது குறித்து ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அமைப்புச் செயலர் கேசவவிநாயகம், மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, இணைப்பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, ஒன்றிய அமைச்சர் முருகன் ஆகியோரிடம் ஆலோசித்தார் அமித்ஷா. ஆலோசனை விவகாரங்கள் நமக்கு கிடைத்துள்ளன.

dd

ஆலோசனைக் கூட்டம் துவங்குவதற்கு முன்பு தமிழக ஆளுநரிடமிருந்து அமித்ஷாவுக்கு போன் வந்திருக்கிறது. ஊட்டியில் துணைவேந்தர்கள் மாநாடு நடக்கும் அதேநாளில் (25-ந் தேதி), துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு மாற்றும் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றவிருக்கிறார்கள் என்பதை அமித்ஷாவிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார் கவர்னர் ஆர்.என்.ரவி. நோ ப்ராப்ளம் என்று சொன்ன அமித்ஷா, "உங்கள் ப்ரோக்கிராமை கண்டினியூ பண்ணுங்கள்' என்றிருக்கிறார். இதனையடுத்து பா.ஜ.க. தலைவர்களை தனது அறைக்கு அழைத்து அரசியல் சூழல்களை விவாதித்தார் அமித்ஷா.

நாடாளுமன்ற தேர்தலின் வெற்றிக்காக அடுத்த வருட துவக்கத்திலிருந்தே சில முடிவுகளை தமிழகத்தில் செயல்படுத்த வேண்டியதிருக்கிறது. குறிப்பாக, தமிழகத்தில் பா.ஜ.க.வின் தேர்தல் நிலைப்பாடு குறித்து ஒரு முடிவுக்கு வரவேண்டியுள்ளது. நாம் தனித்துப் போட்டியிடலாமா? இப்போதிருக்கும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கலாமா? ஒன்றுபட்ட அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கலாமா? என்று 3 கேள்விகளை கேட்டிருக்கிறார் அமித்ஷா.

அதற்கு அண்ணாமலை, "நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையில் கூட்டணி அமைய வேண்டும். இப்போதுள்ள எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரலாம்'' எனச் சொல்ல, "அ.தி.மு.க.வுடன் கூட்டணின்னா அது பா.ஜ.க. தலைமை யில் எப்படி அமையும்? அதற்கு அ.தி.மு.க. ஒப்புக் கொள்ளுமா?'' என சி.டி.ரவி கேட்க, "இப்போதைய அ.தி.மு.க. பலவீனமாக இருக்கிறது. அவர்களுக்கும் ஒரு வெற்றி தேவைப் படுகிறது. அதனால், 50:50 சீட் ஷேரிங்கில் அவர்களை ஒப்புக் கொள்ள வைக்க வேண்டும்'' என்றிருக்கிறார் அண்ணாமலை. எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க.தான் அண்ணாமலையின் சாய்ஸ். கேசவவிநாயகமோ, "தி.மு.க.வின் வெற்றியைத் தடுக்கணும்னா அ.தி.மு.க. வலிமையாகனும். ஆனா, அது அ.தி. மு.க.வுக்கு மட்டும்தான் லாபம். தி.மு.க.வுக்கு மாற்றாக அ.தி.மு.க.வை தவிர்த்து ஒரு வலிமையான வேறு ஒரு கட்சி இங்கு இல்லை. இருந்தால் ஒருவேளை மக்க ளின் மனம் மாறலாம். அதனால் அ.தி.மு.க. பலவீனமாகி பா.ஜ.க. பலமாக தெரிந்தால் மட்டுமே தி.மு.க.வின் அதிருப்தி வாக்குகள் நமக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது'' எனச் சொல்லியிருக்கிறார்.

இந்த சூழலில் பேசிய சுதாகர் ரெட்டி, "அதிக எண்ணிக்கையில் பா.ஜ.க. போட்டியிடும்போதுதான் கணிசமான வெற்றி கிடைக்கிறது. அதனால், தனித்துப் போட்டியிட லாம். அந்த முடிவை எடுத்தால், இரட்டை இலையை முடக்க வேண்டும். அ.தி.மு.க.வுக்கு பலமே அதன் சின்னம்தான். அ.தி.மு.க. பலவீனமாகிவிட் டால் பா.ஜ.க. பக்கம் மக்கள் திரும்ப வாய்ப்பிருக்கிறது'' எனச் சொல்லியிருக்கிறார்.

இதனை உன்னிப் பாகக் கவனித்த அமித்ஷா, "இன்னும் ஆழமாக யோசிங்க. உங்கள் யோசனைகளை ஒரு ரிப்போர்ட்டாக கொடுங்கள்'' என்றிருக்கிறார். பின்னர் அமித்ஷாவை தனியாக சந்தித்து, தமிழக அரசின் சுகாதாரம், மின் சாரம், நெடுஞ்சாலை, இந்து சமய அறநிலை, தொழில், பத்திரப்பதிவு, நகராட்சி நிர்வாகம், கனிமவளம் உள்ளிட்ட துறைகளில் தி.மு.க.வுக்கு எதிராக தனக்கு கிடைத்த மெட்டீரியல் எவிடென்ஸ்களை அமித்ஷாவிடம் விவரித்திருக் கிறார் அண்ணாமலை. முதல் வர் குடும்ப நபர்களின் ஆதிக் கம் குறித்தும் பேசியிருக் கிறார்.

அண்ணாமலையைத் தொடர்ந்து அமீத்ஷாவை சந்தித்த முருகன், "புதிய நிர்வாகிகள் நியமனத் தில் எனது கருத்தை அண்ணாமலை கேட்கவே இல்லை'' என்று புகார் வாசித் திருக்கிறார். இந்த நிலையில், தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் வந்திருப் பதை அறிந்து ஆலோசனையை முடித்துக்கொண்டார் அமித்ஷா.

என்.ஐ.ஏ. அதிகாரிகளை அழைத்து அவர்களிடம் அமித்ஷா பேச, உள்நாட்டு பாதுகாப்பு குறித்த சில தகவல்களை அவருடன் பகிர்ந்துள்ளனர்.

மறுநாள் காலை அண்ணா மலை, கேசவவிநாயகம், சுதாகர் ரெட்டி ஆகியோருடன் காலை டிஃபன் சாப்பிட்டுக்கொண்டே பேசிய அமித்ஷா, "புதிய நிர்வாகி கள் நியமனத்தில் முருகன் கொடுக்கிற லிஸ்ட்டை கொஞ்சம் பாருங்கள் என அண்ணாமலைக்கு அட்வைஸ் பண்ணி விட்டு, பாண்டிக்கு கிளம்பினார்'' என்று ரகசியங்களை விவரித்தனர்.

பாண்டிச்சேரிக்கு அமித்ஷா கிளம்பியதையடுத்து, கமலாலயத் திற்கு வந்த அண்ணாமலை, புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்து பா.ஜ.க. தலைவர்களுடன் விவா தித்தார். முருகனின் சிபாரிசுகள் அதில் ஆலோசிக்கப்பட்டன. முதல் பட்டியலும் வெளியானது.

இதற்கிடையே அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க.வுக்கு இழுக்கும் அசைன்மெண்ட்டை பா.ஜ.க.வும் சசிகலா தரப்பும் தனித்தனி ரூட்டில் தொடங்கிய பணிகள் தொய்வடைந்திருக் கிறது. இவர்களிடம் சிக்காத அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 22 பேர் தி.மு.க.வின் வலையில் விழுந்துள்ளனர். அமைச்சர்கள் ஏ.வ.வேலு, செந்தில்பாலாஜி, சேகர்பாபு, அனிதா ராதா கிருஷ்ணன் ஆகியோரின் பிடி யில் அந்த 22 எம்.எல்.ஏ.க்களும் இருப்பதாக தி.மு.க. தரப்பில் எதிரொலிக்கிறது.

nkn040522
இதையும் படியுங்கள்
Subscribe