"ஹலோ தலைவரே, நீட் விலக்கு மசோதா மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி ராஜ்பவனுக்கு அனுப்பி வைக்கப் பட்டிருக்கே?”

"ஆமாம்பா.. சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில், சபையிலிருந்து வெளிநடப்பு செய்த பா.ஜ.க.வின் 4 உறுப்பினர்கள் போக மற்ற அனைத்துக்கட்சியினரும் ஆதரித்து நிறைவேற்றி, தமிழ்நாட்டின் நிலையைத் தெளிவா ஆளுநருக்கு உணர்த்தியிருக்காங்க.”

assembly

Advertisment

"ஆமாங்க தலைவரே, தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், ம.ம.க., தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொ.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள், சட்ட மசோதாவை திருப்பி அனுப்பிய கவர்னரின் செயலைக் கடுமையாகவே விமர்சனம் செஞ்சாங்க. அதேபோல் அ.தி.மு.க.வும் சட்ட மசோதாவை ஆதரித்தே பேசுச்சு. ஆனால், நீட் தேர்வை காங்கிரஸ் அரசுதான் கொண்டு வந்துச்சுன்னு குற்றம் சாட்ட, அதை காங்கிரஸ் உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்தாங்க. எடப்பாடி பதில் சொல்ல முற்பட்டப்ப, அவரைப் பேச அனுமதியுங்கள்னு துரைமுருகன் கேட்டுக்கொண்டது சுவாரஸ்யம். இறுதியாகப் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஆளுநருக்கென்று தனிப்பட்ட கொள்கை கிடையாது. அமைச்சரவையின் ஆலோசனைப்படிதான் அவர் நடந்துக்கணும்னு அறிவுறுத்தியதோடு, தமிழ்நாடு வாழ்க, தமிழ்நாடு வாழ்கன்னு 3 முறை முழக்கமிட, பேரவையே உணர்ச்சிப் பெருக்கில் மூழ்கிடிச்சி.”.

"கவர்னரின் டெல்லிப் பயணம் கடைசி நேரத்தில் ரத்தாயிடிச்சே!''

Advertisment

"டெல்லிதான் அவர் விசிட்டுக்கு கடைசி நேரத்தில் பிரேக் போட்டுடுச்சு. காரணம், பேரவையில் இரண்டாம் முறையாய் நிறைவேறிய நீட் எதிர்ப்பு மசோதாவின் தன்மை, உறுப்பினர்கள் விவாதம், முதல்வரின் உரையில் இடம்பெறும் சொற்கள் எல்லாவற்றையும் முழுதாகத் தெரிந்துகொண்ட பிறகு, கவர்னரை அழைக்கலாம்னு அவரது பயணத்தை டெல்லி ஒத்தி வைச்சிருக்கு. இந்த நிலையில், சபாநாயகர் அப்பாவு அனுப்பி வைத்த சட்ட மசோதாவின் நகலை, பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறாராம் கவர்னர் ரவி. இனி டெல்லியிலிருந்து வரும் உத்தரவுக்கு ஏற்பவே ரவியின் செயல்பாடுகள் இருக்கு மாம்.”

"ஜெயலலிதா ஆட்சியில் வீட்டுக்கு அனுப்பப்பட்ட மக்கள் நலப் பணி யாளர்களின் நீதிக்கான சட்டப் போராட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கே?''”

"ஆமாங்க தலை வரே, அவர்களுக்காக சுப்ரீம் கோட்டில் ஆஜராகிவருபவர் தமிழக வழக்கறிஞர் அ.ராஜராஜன். மேல்முறையீட்டு வழக்கு 8-ந் தேதி தலைமை நீதிபதி ரமணா தலைமை யிலான முதல் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்ப வழக்கறிஞர் ராஜராஜன், கடந்த 7 ஆண்டுகளாக இந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. இதுபற்றிய முறையீட்டு மனுவும் நிலுவையிலேயே இருக்குது. 13 ஆயிரம் பேரின் வாழ்க்கைக்கான சட்டப்போராட் டம் இதுன்னு வாதம் செய்தார். தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா வோ, மக்கள் நல பணியாளர்களின் பணி நீக்கம் தொடர்பாக சில சாதகமான முடிவு களை எடுக்க, தமிழக அரசு தீர் மானிச்சிருக்கு. இதுதொடர்பாக அரசின் ஊரக வளர்ச்சித்துறை சில முன்மொழிவு களை அரசுக்கு தெரி விச்சிருக்குன்னு உறுதி யளித்தார். இதையடுத்து வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்திருக்கிறது நீதிமன்ற அமர்வு. தங்களை மீண்டும் பணி அமர்த்துவதால் அரசுக்கு ஆகும் கூடுதல் செல வினங்கள் குறித்த ஒரு அறிக்கையை ஊரக வளர்ச்சித் துறை யிடம் தி.மு.க. அரசு கேட்டிருக்கிறது என்கிற ம.ந. பணியாளர்கள், விரைவில் தங்களுக்கு விடிவு காலம் பிறக்கும் என்று நம்பு கிறார்கள்.''”

"5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை நாடே எதிர்பார்க்குதுப்பா...''

"உண்மைதாங்க தலைவரே, இதில் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைப்பதற்கான தேர்தல் வியூக வல்லுநராக, தமிழகத்தைச் சேர்ந்த ஜான் ஆரோக்கிய சாமியும் அவரது சகாவான கிரிஸ் தோக்கேவும் இணைந்து செயல்படும் ஜேபிஜி-பேக்’ டீம், களநிலவரங்களை தீவிரமாக ஆராய்ந்திருக்குது. முதலமைச்சர் கேண்டிடேட் யார் என்பதை அறி வித்துவிட்டுதான் தேர்தலை எதிர் கொள்ள வேண்டும் என இந்த டீம் வலியுறுத்தியது. அதன்பிறகே, முதல்வர் சன்னியை, ஒரு தலித் தலைவர் என்பதையும் கடந்து வெகுஜன மக்களின் தலைவராக கட்டமைத்து வருகிறது காங்கிரஸ் தலைமை. அதற்கான தீம் சாங்கையும் பஞ்சாப் மொழியில் ரெடி பண்ணி எல்லா இடங் களிலும் பரவ விட்டி ருக்காங்க. பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சித்து, முதல்வர் சன்னிக்கு எதிராக மேற் கொண்ட வியூகங்களைத் தாண்டி ஆட்சியைத் தக்க வைக்க காங்கிரஸ் களமிறங்கியிருக்கு.''”

sasi

"சசிகலா தரப்பில் பரபரப்பு தெரியுதே?''

"உண்மைதாங்க தலைவரே, சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்க ளூர் சிறையில் சசிகலா இருந்த நேரத்தில், அங்குள்ள சிறை அதிகாரிகளுக்கு கோடிக் கணக்கில் லஞ்சத்தைக் கொடுத்து, சுகபோக வாழ்வை அனுபவித்தார். இதை அப்போது ஆய்வுக்கு வந்த சிறைத்துறை அதிகாரி ரூபா, ஆதாரத்துடன் கண்டுபிடித்து ரிப்போர்ட் செய்ய, விசாரணைக் கமிஷனெல்லாம் அமைக் கப்பட்டது. சசிகலா மீது குற்றச்சாட்டுகள் நிரூ பிக்கப்பட்டும், அந்த விவகாரம் கோமாவில் கிடத்தப்பட்டது. இப்போது அந்த விவகாரம் கர்நாடக அரசால் தோண்டி எடுக்கப்பட்டு, தீவிரத் திசையில் நகரத் தொடங்கியிருக்கிறது. இதை அறிந்த சசிகலா, கைது பயத்தில் இருக்கிறாராம்.''

rangg

"நான் ஒரு தகவலைச் சொல்றேன்.. தி.மு.க.வில் சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் பற்றி அமைச்சர் முத்துசாமியிடம் செங்கோட்டையன் சொன்னதாக நம்ம நக்கீரனில் வந்த செய்தியை முத்துசாமி -செங்கோட்டையன் இரண்டு தரப்புமே முழுமையா மறுக்குது. தி.மு.க.வுக்கு விசுவாசமா பணியாற்றுவதா தோப்பு வெங்கடா சலமும் சொல்றாரு. அதுபோல, நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர் சந்திரசேகர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) பற்றி நம்ம நக்கீரனில் வெளியான செய்தி களையும் அந்தத் துறையின் தலைமையிலிருந்து மறுக்குறாங்க.”

___________________

புலனாய்வுக் குழு அமைப்பு!

rang

நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், கடந்த 2012-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29-ம் தேதி மர்ம நபர் களால் கடத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக கடந்த பத்தாண்டுகளாக திருச்சி மாநகர போலீசார், சி.பி.சி.ஐ.டி., சி.பி.ஐ. விசாரணை நடத்தியும், கொலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை.

இந்நிலையில், ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புலனாய்வுக் குழுவில் தூத்துக்குடி எஸ்.பி. ஜெயகுமார், அரியலூர் டி.எஸ்.பி. மதன், சென்னையைச் சேர்ந்த சி.பி.ஐ. இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். விரைவில் விசாரணை தொடங்கப்பட வேண்டுமென்றும், விசாரணை விவரங்களை 15 நாட்களுக்கு ஒருமுறை சமர்ப்பிக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளது.

-துரை.மகேஷ்