ராங்கால் ஆருத்ரா விவகாரம்! அண்ணாமலைக்கு உதவ மறுத்த நிர்மலா சீதாராமன்! கர்நாடகாவிலும் பா.ஜ.க. அதிகார அடாவடி! பா.ஜ.க.வில் வேலுமணி?

rang

"ஹலோ தலைவரே, வழக்குச் சிக்கலில் கைதாகிவிடுவோமோ என்ற பதட்டத்தில் இருக்கிறாராம் பா.ஜ.க. அண்ணாமலை''”

"அதனால்தான், சென்னை வந்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அவர் பதட்டத்தோடு சந்தித்தாரா?''”

rang

"ஆமாங்க தலைவரே, எனக்கு முன்பாகவே விவகாரத்தை சேகரம் பண்ணிட்டீங்களே, இருந்தாலும் என் காதுக்கு வந்த செய்திகளைச் சொல்றேன். இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னைக்கு வந்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மாரடைப்பு காரணமாக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவரும் பா.ஜ.க. பிரமுகர் கே.டி.ராகவனை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் காஞ்சிபுரம் சென்று சில நிகழ்வுகளில் கலந்துகொண் டார். இதன்பின்னர், டெல்லிக்குச் செல்ல சென்னை விமானநிலையத்துக்கு வந்த அவரை பா.ஜ.க. அண்ணாமலை சந்தித்துப் பேசினார். அதற்குமுன் தனியே சந்திக்க அப்பாயின்மெண்ட் கேட்ட அண்ணாமலையிடம், "நான் டெல்லிபோக ஏர்போர்ட் வரும்போது அங்கேயே பேசலாம்'னு சொல்லிவிட்டாராம் நிர்மலா. அதுவே அண்ணாமலைக்கு சங்கடத்தை ஏற்படுத்தியதாம்.''”

"ஆமாம்பா. அவர்களின் சந்திப்பு பற்றிய நியூஸ்தான் வெளில வந்துருச்சே. எதுக்காக இந்த சந்திப்பாம்?''”

"அந்த சந்திப்புக்குக் காரணம், அண்ணா மலைக்கு வந்திருக்கும் கைது பயமும், பதட்டமும் தான். இந்த சந்திப்பின்போது, பா.ஜ.க.வில் நிலவும் கோஷ்டி பூசல்கள் பற்றி ஆதங்கத்தோடு நிர்மலா சீதாராமனிடம் பேசினாராம். அவர் சொன்னதை எல்லாம் சலனமில்லாமல் கேட்டுக்கொண்ட நிர்மலா, சீதாராமன், சரி வந்த விசயத்தைச் சொல்லுங்கள்னு நாடி பிடித்தது போல் கேட்க... அண்ணாமலையோ, ஆருத்ரா நிதி நிறுவன விவகாரத்தில் எனக்கு சிக்கல் வராமல் நீங்கள்தான் பார்த்துக்கணும். இந்த கவலையிலேயே இருப்பதால் கட்சிப் பணிகளில் முழு கவனத்தை என்னால் செலுத்த முடியவில்லை. நம்ம கட்சியினரே எனக

"ஹலோ தலைவரே, வழக்குச் சிக்கலில் கைதாகிவிடுவோமோ என்ற பதட்டத்தில் இருக்கிறாராம் பா.ஜ.க. அண்ணாமலை''”

"அதனால்தான், சென்னை வந்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அவர் பதட்டத்தோடு சந்தித்தாரா?''”

rang

"ஆமாங்க தலைவரே, எனக்கு முன்பாகவே விவகாரத்தை சேகரம் பண்ணிட்டீங்களே, இருந்தாலும் என் காதுக்கு வந்த செய்திகளைச் சொல்றேன். இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னைக்கு வந்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மாரடைப்பு காரணமாக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவரும் பா.ஜ.க. பிரமுகர் கே.டி.ராகவனை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் காஞ்சிபுரம் சென்று சில நிகழ்வுகளில் கலந்துகொண் டார். இதன்பின்னர், டெல்லிக்குச் செல்ல சென்னை விமானநிலையத்துக்கு வந்த அவரை பா.ஜ.க. அண்ணாமலை சந்தித்துப் பேசினார். அதற்குமுன் தனியே சந்திக்க அப்பாயின்மெண்ட் கேட்ட அண்ணாமலையிடம், "நான் டெல்லிபோக ஏர்போர்ட் வரும்போது அங்கேயே பேசலாம்'னு சொல்லிவிட்டாராம் நிர்மலா. அதுவே அண்ணாமலைக்கு சங்கடத்தை ஏற்படுத்தியதாம்.''”

"ஆமாம்பா. அவர்களின் சந்திப்பு பற்றிய நியூஸ்தான் வெளில வந்துருச்சே. எதுக்காக இந்த சந்திப்பாம்?''”

"அந்த சந்திப்புக்குக் காரணம், அண்ணா மலைக்கு வந்திருக்கும் கைது பயமும், பதட்டமும் தான். இந்த சந்திப்பின்போது, பா.ஜ.க.வில் நிலவும் கோஷ்டி பூசல்கள் பற்றி ஆதங்கத்தோடு நிர்மலா சீதாராமனிடம் பேசினாராம். அவர் சொன்னதை எல்லாம் சலனமில்லாமல் கேட்டுக்கொண்ட நிர்மலா, சீதாராமன், சரி வந்த விசயத்தைச் சொல்லுங்கள்னு நாடி பிடித்தது போல் கேட்க... அண்ணாமலையோ, ஆருத்ரா நிதி நிறுவன விவகாரத்தில் எனக்கு சிக்கல் வராமல் நீங்கள்தான் பார்த்துக்கணும். இந்த கவலையிலேயே இருப்பதால் கட்சிப் பணிகளில் முழு கவனத்தை என்னால் செலுத்த முடியவில்லை. நம்ம கட்சியினரே எனக்கு எதிராக இருந்தால் எப்படி?ன்னு தழுதழுத் திருக்கிறார் அண்ணாமலை. நிர்மலாவோ, நிரபராதியாக இருந்தால், எந்தப் பாதிப்பும் வராதுன்னு பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிட்டு பிளைட் ஏறிவிட்டாராம்.''”

"அண்மைக்காலமாக எடப்பாடியுடன் முரண்பட்டுவரும் அ.தி.மு.க. மாஜி மந்திரி வேலுமணியும், நிர்மலா சீதாராமனை சந்தித்திருக்கிறாரே?''

velumani

"ஆமாங்க தலைவரே, அண்ணாமலை இருந்தப்பவே, அ.தி.மு.க. வேலுமணியும் நிர்மலா சீதாராமனை சந்தித்ததால், வேலுமணி பா.ஜ.க.வில் ஐக்கியமாகப் போகிறார் என்ற தகவல் பரவத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து எதிர்பாராமல் ஏர்போர்ட்டில் நடந்த சந்திப்புதான் அதுன்னு, அண்ணாமலை ஸ்டேட்மெண்ட் கொடுத்தார். வேலுமணியோ இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். உண்மையில் வேலுமணியின் சந்திப்புக்கான நோக் கமே வேறு. இந்த சந்திபின்போது, அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை தன் மீது போட்டிருக்கும் வழக்குகளிலிருந்து தன்னை விடுவிக்க உதவும்படி வேண்டுகோள் வைத்திருக்கிறார். தான் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தையும் அவர் அப்போது நிர்மலாவிடம் பரிதாபத்தோடு தெரிவித்திருக்கிறார். ஆனால், நிர்மலா சீதாராமனோ, நிதி தொடர்பான வழக்கு விவகாரங்களில் நான் தலையிடுவதில்லை. உங்களிடத்தில் தவறு இல்லையெனில் பயப்படவேண்டாம் என்று கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிட்டாராம். இதில் வேலுமணி படுஅப்செட்டாம்.'' ”

"தேர்தல் நெருங்கிவரும் நிலையில் கர்நாடகாவில் பா.ஜ.க.வின் அடாவடி அதிரடிகள் ஆரம்பித்துவிட்டதே?''”

"ஆமாங்க தலைவரே, கர்நாடக சட்டமன்றத் தேர்தல் மே 10-ஆம் தேதி நடக்க இருக்கிறது. அங்கு ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க., இந்த தேர்தலில் பதவி இழக்கும் என்றும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் அங்கே சொல்கின்றன. இவை பரபரப்பை ஏற்படுத்திவரும் நிலையில், காங்கிரஸ் தரப்பை பலவீனப்படுத்த, அதில் உள்ள முக்கிய புள்ளிகள் மற்றும் காங் கிரஸுக்கு ஆதரவாக இருக்கும் தொழிலதி பர்களைக் குறிவைத்து, வருமான வரித் துறை மூலம் ரெய்டுகளை முடுக்கிவரு கிறது மோடி அரசு. கர்நாடகத் தேர்தலில் ஆட்சியைக் கோட்டை விட்டுவிடக் கூடாது என்று சகல உத்திகளையும் பா.ஜ.க. அங்கே பயன்படுத்தி வருகிறது. இதையும் மக்கள் எரிச்சலோடு பார்த்துவருகிறார்கள்.''”

"சமீபத்தில் சு.சாமி சீக்ரட்டா சென்னை வந்து போயிருக்கிறாரே?''”

"ஆமாங்க தலைவரே, டெல்லியில் இருந்து கடந்த 29ஆம் தேதி காலை 8:30-க்கு அவசரமாக சென்னைக்கு வந் தார் சுப்பிரமணியசாமி. சுமார் 3 மணிநேரம் கழிந்த நிலையில் 11:30-க்கு மறுபடியும் மீண்டும் ஏர்போர்ட் வந்து டெல்லிக்கு பறந்தார். சு.சாமியின் இந்த விசிட் குறித்து விசாரித்தபோது, "உடல் நலம் சரியில்லாமல் இருக்கும் இந்தியா சிமெண்ட்ஸ் சீனி வாசனை சந்தித்து நலம் விசாரிக்க வந்தார்'னு சொன்னாங்க. துருவிக் கேட்டப்ப, தன் உடல்நிலையால் சீனிவாசன், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தை விற்கும் முடிவில் இருக்கிறார் என்றும், இந்த விபரமறிந்த சு.சாமி, சீனிவாசனை சந்தித்தார் என்றும், விற்பனை குறித்து இருவரும் விவாதித்தார்கள் என்றும் சொன்னார்கள். சு.சாமிக்கு தெரிந்த ஒரு தொழிலதிபர், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தை வாங்க லாம்னு நினைக்கிறாராம். அதனால் அவர் சார்பில் சு.சாமி டீலிங் பேசினாராம். ஆனால் இந்த பேச்சுவார்த்தை இன்னும் ஃபைனல் ஆகவில் லைன்னு சொல்கிறார்கள்.''”

"அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் தி.மு.க. பேரைச்சொல்லி, சொந்தக் கட்சிக்காரர்களையே மிரட்டிப் பணம் பறிக்கிறாராமே?''”

subramaniasamy

"திருச்சியைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் முருகானந்தம் என்பவர், எடப்பாடியின் வலது கையான சேலம் இளங்கோவன், "நான் கிழித்த கோட்டைத் தாண்டமாட்டார். நான் சொல்வதைத் தான் அவர் கேட்பார். அவர் மூலம் எம்.பி.சீட் வாங்கித் தருகிறேன்' என்றபடி, அ.தி.மு.க.வில் இருக்கும் பலரிடமும் வசூல் வேட்டையில் இறங்கி யிருக்கிறாராம். இவரை நம்பி, திருச்சி ஆவின் முன்னாள் சேர்மன் கார்த்திகேயனும் எம்.பி. சீட் வாங்க பரபரக்கிறாராம். இதில் கொடுமை என்னவென்றால், அந்த சேலம் இளங்கோவனையே சந்தித்து, "தி.மு.க. ஆட்சியில் முக்கியப் புள்ளிகள் பலரையும் எனக்கு பர்சனலாகத் தெரியும். நீங்கள் சரியென்று சொன்னால் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையிலுள்ள உங்களுக்கு எதிரான புகார்களை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட முடியும்' என்று ஆசை வார்த்தைக் கூறி, இளங்கோவனையும் படி யவைக்க முயல்கிறாராம். இந்த விவகாரம் அ.தி. மு.க. வட்டாரத்தில் புயலைக் கிளப்பிவருகிறது.''”

"எல்காட்டில் இன்னும் சலசலப்பு முடியலையே''”

"ஆமாங்க தலைவரே, தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழே இயங்கும் எல் காட் நிறுவனத்தில், தொகுப்பூதிய அடிப்படை யில் பணிபுரியும் ஓய்வுபெற்ற அதிகாரிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் யாரும் பதவியில் இருக்கக் கூடாது என்பது விதி. இதன்படி, எல்காட்டின் நிர்வாக இயக்குநராக இருந்த அஜய்யாதவ் ஐ.ஏ.எஸ்., அப்படிப்பட்ட அதிகாரிகளை பணியிலிருந்து நீக்கியிருந்தார். கடந்த வருடம் அஜய்யாதவ் மாற்றப்பட்டு எல்காட்டின் நிர்வாக இயக்குநராக ஜான்லூயிஸ் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டார். தற்போது எல்காட்டின் எம்.டி.யாக அவர்தான் இருந்து வருகிறார். இந்த நிலையில், மெட்டீரியல் பர்ச்சேஸ் பிரிவில் உள்ள நித்தியானந்தம் மே மாதத்திலும், ஐ.டி. பார்க்குகள் கவனிக்கும் பிரிவில் உள்ள குமார் ஆகஸ்ட் மாதமும், நிதித்துறை மேலாளராக இருக்கும் கோபி செப்டம்பரிலும் ஓய்வு பெறவிருக்கிறார்கள். இவர்கள் ஓய்வு பெற்றப் பிறகு, இந்த மூவரும் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதிய மாத சம்பளத்தில் டெபுடி ஜெனரல் மேனேஜராக மீண்டும் எல்காட்டில் பதவியேற்கும் வகையில் கோப்புகள் ரகசியமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.''”

"எல்காட்டின் போர்டு மீட்டிங்கில் அந்த கோப்பிற்கு ஒப்புதல் பெறும் வேலைகளும் நடந்ததே?''”

"ஆமாங்க தலைவரே, எல்காட்டின் போர்டு உறுப்பினர்களாக இருக்கும் முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் உடந்தையுடன் இது அரங்கேற உள்ளது. எல்காட்டில் டெபுடி ஜெனரல் மேனேஜராக சுமதி, சாந்தி, மோகனரங்கம் என 3 பேர் தற்போது இருக்கிறார்கள். இவர்களுக்கு ஜெனரல் மேனேஜ ராக பதவி உயர்வளிக்கும் கோப்பும் தயாராகி யிருக்கிறது. இவர்கள் மூவரையும் பதவி உயர்வில் ஜெனரல் மேனேஜராக உயர்த்திவிட்டால், டெபுடி ஜெனரல் மேனேஜர் பதவிகள் காலியாகும். அவற்றில் ஓய்வுபெறப் போகும் நித்தியானந்தம், கோபி, குமார் ஆகிய மூவரையும் தொகுப்பூதி யத்தில் அமரவைக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. இதன் பின்னணியில் ஏகத்துக்கும் பணம் விளையாடுதாம். இதெல்லாம் தகவல் தொழில் நுட்பத்துறை செயலாளர் குமரகுருபரனுக்கும், இந்தத் துறையை கவனிக்கும் முதல்வரின் முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரனுக்கும் தெரியாமல் நடக்குதா?ன்னு எல்லோரும் கேட்கறாங்க.''”

"நானும் ஒரு முக்கிய செய்தியைப் பகிர்ந்துக்கறேன். இதேபோல் காவல்துறையில் 13 டி.எஸ்.பிக்கள் அவசர கதியில் எஸ்.பி.க்களாக ஆக்கப்பட்டு, அதற்கான சலுகைகளோடு ஓய்வு கொடுக்கப்பட்டு இருக்கிறார்களாம். மேலும், ஜூன் மாதம் ஓய்வுபெற இருக்கும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, ஓய்வுபெறு வதற்கு முன்பாக பலருக்கும் டிரான்ஸ்பர் தரும் முயற்சிகளும் விறுவிறுப்பாக நடக்கிறதாம். இப்படிப்பட்ட சர்ச்சைகள், டி.ஜி.பியை சுற்றிச் சுழன்றடிக் கிறது என காவல் துறையினரே அங்கலாய்க்கின்றனர்.''”

nkn050423
இதையும் படியுங்கள்
Subscribe