தற்போது நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் மானியக் கோரிக்கை விவாதத்தின்போது பதிலளித்துப் பேசிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, "கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மிகச்சிறப்பான திட்டம் இந்தத் திட்டத்திற்கு 3500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இதுவரை 25 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப் பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 2 லட்சத்து 25 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்படும்'' என்று தெரிவித்திருந்தார்.
தமிழக அரசின் கணக்கீட்டின்படி குடிசை களில் வசித்துவரும் சுமார் 8 லட்சம் பேர்களுக்கு வரும் 2030ஆம் ஆண்டுக்குள் முழுமையாக வீடுகள் கட்டிக்கொடுக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத் துள்ளது. முழுக்க முழுக்க குடிசை வீடுகளில் வாழ் வோருக்கு மட்டுமே இந்தத் திட்டம் பொருந்து மென்று அறிவித்துள்ளது. நல்ல திட்டம் தான், ஆனால் இதன் பயனாளர்களில் பலர் வசதியான வர்களாக இருக்கிறார்களென்றும், ஒரு வீடு கட்ட, ஒவ்வொரு பயனாளரிடமிருந்தும் 30 ஆயிரம் முதல் ஐம்பதாயிரம்வரை லஞ்சமாக வசூலிக்கப்படுவ தாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே கலைஞரின் கனவு இல்லத் திட்டம், லஞ்சம் கொடுக்க வசதியற்ற ஏழைகளுக்கு கனவாகவே போய்விடுமோவென்ற குமுறல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், மாவட்டங்களில் எதிரொலிக்கிறது.
திருநாவலூர் ஒன்றியத்திலுள்ள டி.ஒரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பரிமளா, "கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் என்னை பயனாளியாக சேர்த்துள்ளதாகக்கூறி முன்பணம் செலவு செய்து முதலில் வீடு கட்டச்சொல்லி அதிகாரிகளும், ஊராட்சி மன்றத் தலைவரும் உத்தரவிட்டனர். அதன்படி வட்டிக்கு வாங்கி பாதியளவு வீட்டைக் கட்டினேன். இப்போ
தற்போது நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் மானியக் கோரிக்கை விவாதத்தின்போது பதிலளித்துப் பேசிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, "கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மிகச்சிறப்பான திட்டம் இந்தத் திட்டத்திற்கு 3500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இதுவரை 25 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப் பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 2 லட்சத்து 25 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்படும்'' என்று தெரிவித்திருந்தார்.
தமிழக அரசின் கணக்கீட்டின்படி குடிசை களில் வசித்துவரும் சுமார் 8 லட்சம் பேர்களுக்கு வரும் 2030ஆம் ஆண்டுக்குள் முழுமையாக வீடுகள் கட்டிக்கொடுக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத் துள்ளது. முழுக்க முழுக்க குடிசை வீடுகளில் வாழ் வோருக்கு மட்டுமே இந்தத் திட்டம் பொருந்து மென்று அறிவித்துள்ளது. நல்ல திட்டம் தான், ஆனால் இதன் பயனாளர்களில் பலர் வசதியான வர்களாக இருக்கிறார்களென்றும், ஒரு வீடு கட்ட, ஒவ்வொரு பயனாளரிடமிருந்தும் 30 ஆயிரம் முதல் ஐம்பதாயிரம்வரை லஞ்சமாக வசூலிக்கப்படுவ தாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே கலைஞரின் கனவு இல்லத் திட்டம், லஞ்சம் கொடுக்க வசதியற்ற ஏழைகளுக்கு கனவாகவே போய்விடுமோவென்ற குமுறல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், மாவட்டங்களில் எதிரொலிக்கிறது.
திருநாவலூர் ஒன்றியத்திலுள்ள டி.ஒரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பரிமளா, "கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் என்னை பயனாளியாக சேர்த்துள்ளதாகக்கூறி முன்பணம் செலவு செய்து முதலில் வீடு கட்டச்சொல்லி அதிகாரிகளும், ஊராட்சி மன்றத் தலைவரும் உத்தரவிட்டனர். அதன்படி வட்டிக்கு வாங்கி பாதியளவு வீட்டைக் கட்டினேன். இப்போது எனக்கு வீடில்லையென்று கைவிரிக்கின்றனர்'' எனக் கொந்தளித்தார். அதே ஊரைச் சேர்ந்த ரேணுகாம்பாள், "எங்களுக்கு கலைஞர் கனவு இல்லம் வேண்டும்னு கிராம சபைக் கூட்டத்தில் மனு கொடுத்தோம். பணமில்லாத காரணத்தால் எங்களைக் கண்டுக்கவே இல்லை. வசதியானவர்களுக்கு மட்டும்தான் வீடு ஒதுக்கீடு பண்றாங்க" என்றார்.
திருநாவலூரை சேர்ந்த பிச்சை மனைவி சின்னபொண்ணு, "காலகால மாக கூலி வேலை செய்துதான் வாழ்கிறோம். புயல், மழைக்கெல்லாம் இந்த குடிசையில் தான் முடங்கிக் கிடக்கிறோம். இந்த ஆண்டு அர சாங்கம் எப்படியும் வீடு கொடுக்கும்னு நம்பியிருந்தோம், ஆனால் இல்லைன்னு கைவிரிச்சிட்டாங்க. இத்திட்டத்தை எங்களைப்போன்ற ஏழைகளுக்கு கொண்டாந் தாங்களா இல்ல, பணக்காரங்களுக்கா?'' என்று கேள்வியெழுப்புகிறார். பெரியவர் பழனிவேல், "கடந்த புயல், மழையில் பெரிதும் பாதிக்கப் பட்டோம். எப்படியும் வீடு தருவாங்கன்னு நம்பியிருந்தோம். இல்லைன்னு மறுத்துட்டாங்க'' என்று வேதனைப்படுகிறார்.
கடந்த ஆண்டு லோகநாயகி என்பவரது வீடு தீ விபத்தில் முற்றிலும் எரிந்து நாசமாகிப்போனது. தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு தொகுப்பு வீடு, கலைஞர் வீடு ஆகியவற்றில் முன்னுரிமை கொடுப்பது வழக்கம். ஆனால் அவருக்கு வீடு வழங்க அதிகாரிகள் மறுத்து விட்டனர். இப்படித்தான், ஏழைகள் பலருக்கும் எட்டாக்கனியாகிவிட்டது இத்திட்டம்.
திருவெண்ணைநல்லூர் ஒன்றியத் திற்கு உட்பட்ட கருவேப்பிலை பாளையத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மூதாட்டி தனம், "2019ஆம் ஆண்டு எனக்கு வீடு வழங்குவதாகக் கூறினார்கள். ஆனால் தற்போதுவரை வீடு தரவேயில்லை. என்ன காரணம்னு கேட்டபோது ஐம்பதாயிரம் ரூபாய் லஞ்சமாகக் கொடுத்தால் வீடு தருவோம்னு சொல்றாங்க அதிகாரிங்க. தள்ளாத வயதில் நீதி கேட்டு திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் கொடுக்க பேரனோட போனால் யாரும் கண்டுக்கவேயில்லை'' என்று கண்ணீர்விட்டார்.
களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கோதண்ட பாணி, "எங்க ஊர்ல குடிசை வீடுகள கணக்கெடுத்துட்டு போனதால எங்களுக்கு இந்த ஆண்டு வீடு கிடைக்கும்னு நம்பிக்கையோட இருந்தோம். ஆனால் வீடு இல்லைன்னு சொல்லிட்டாங்க. இரவு நேரத்தில் வீட்டுக்குள் வரும் பாம்பு, தேள் போன்றவற்றிலிருந்து காப்பாற்றிக்கொள்வதே பெருங்கவலையாக இருக்கு'' என்று வருந்துகிறார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் மக்களைத் திரட்டி கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் தகுதியானவர் களுக்குத்தான் வீடு வழங்க வேண்டு மென்று மனு கொடுக்கும் போராட் டத்தை நடத்தியுள்ளார். அவர் நம்மிடம், "திருநாவலூர் ஒன்றியத்தில் வீடு எரிந்தவர்கள், முற்றாக சேதமடைந்தவர்கள், இயற்கை சீற்றத்தால் வீடிழந்தவர்களுக்குத்தான் வீடு வழங்கவேண்டும். ஆனால், ஏற்கெனவே வீடு இருப்பவர்களுக்கு பினாமிகள் பெயரில் வழங்கப்படுகின்றன. ஏழைகளைக் கணக்கெடுத்து, ஒவ்வொரு ஊராட்சியிலும் தீர்மானம் நிறை வேற்றித்தான் வீடுகள் வழங்க வேண்டும். ஆனால் தீர்மானங்களில், வேண்டியவர்களின் பெயர்களைச் சேர்த்து, மோசடியாக வீடு வழங்கப்படுகிறது. தகுதியான பயனாளர்களைத் தேர்வுசெய்து, ஒன்றிய அலுவலக விளம்பரப்பலகையில் ஒட்டி, வெளிப்படைத்தன்மையோடு வழங்க வேண்டும். கட்சிக்காரர்களுக்கும், பணம் படைத்தவர்களுக்கும் வீடுகள் வழங்கப்படும் கொடுமையை தமிழக அரசு வேடிக்கை பார்க்கக்கூடாது. இப்படியிருந்தால், வரும் தேர்தலில் தி.மு.க. வேட்பாளருக்கு எப்படி வாக்குக்கேட்டுச் செல்லமுடியும்?" என்கிறார்.
கடந்த 2006-2011, கலைஞர் ஆட்சிக்காலத்தில், குடிசையில்லாத் தமிழகத்தை உருவாக்க வேண்டுமென்ற நோக்கில் குடிசை வீடுகளைக் கணக்கெடுத்து, 22 லட்சம் குடிசை வீடுகளைக் கான்கிரீட் வீடுகளாக மாற்றுவதற்கான திட்டத்தை 2010-ல் துவங்கினார். அந்த ஆண்டு மட்டும் மூன்று லட்சம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. பயனாளிகளிடம் லஞ்சம் வாங்காமல் அந்தத் திட்டத்தை மக்களிடம் கொண்டுசேர்த்தார்.
2011-ல் ஆட்சி மாற்றத்துக்குப்பின் கலைஞரின் திட்டம், பசுமை வீடு திட்டமென்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில், பம்ப்செட்டையும், மாட்டுக் கொட்டகையையும் கணக்கில்காட்டி மோசடி செய்தனர். சொந்த வீடு வைத்திருந்தவர்கள், மாடியில் வீடெடுத்தனர். அப்போதும் ஏழைகளுக்கு வழங்காமல் மோசடி செய்தனர். தற்போதும் அதேபோல் தடுமாற்றம் தொடர் கிறது.
எனவே, இதுபோன்ற மோசடிகளைத் தடுக்க, பயனாளர்கள் தேர்வில் வெளிப்படைத் தன்மை வேண்டும். கமிஷன் கேட்பது தடுக்கப் படுவதோடு, வீடு தேவைப்படும் உரிய பயனாளர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். மேலும், தற்போது விற்கப்படும் கட்டுமானப் பொருட்களின விலையுயர்வு காரணமாக, மூன்று லட்சத்து 51 ஆயிரம் ரூபாயில் வீடு கட்டுவது இயலா தென்பதால், கடன் பெற்றுத்தான் வீடு கட்டுகிறார்கள். இதிலும் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் 50 ஆயிரம் வரை கமிஷன் கொடுக்க எங்கே போவதெனக் கேட்கிறார்கள் பயனாளிகள்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட காணை ஊராட்சி ஒன்றியம் அன்னியூர் ஊராட்சி, சிறுவாலை ஊராட்சி, பள்ளியந்தூர் ஊராட்சி, திருக்குணம் ஊராட்சி உள்ளிட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய நிதியாண்டில் தமிழக அரசு, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சுமார் 4000 முதல் 5000 வீடுகள் வரை ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பித்துள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் பிரித்துக்கொடுத்து அரசு வழிகாட்டுதலின்படி பயனாளிகள் பட்டியலை எப்படி தேர்வு செய்வதென்று அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், பணி மேற்பார்வையாளர், ஒன்றிய பொறியாளர் ஆகியோர்களை அழைத்து கூட்டம் நடத்தி, தகுதிவாய்ந்த பயனாளிகளைத் தேர்வுசெய்ய வேண்டுமென்று கூறினார். மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர், 29-3-2025 அன்று அனைத்து ஊராட்சிமன்றத் தலைவர்களுக்கும் சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் பயனாளிகளைத் தேர்வுசெய்து அனுப்புமாறு கடிதம் அனுப்பி யிருந்தார். அதன் பேரில் அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களும் பயனாளிகளைத் தேர்வுசெய்து அனுப்பினால், ஒரு ஊராட்சிக்கு இரண்டு வீடுகள் என்ற அடிப்படையில் மட்டுமே ஊராட்சி தலைவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படும். இது ஆளுங்கட்சி முக்கிய நிர்வாகியின் உத்தரவு எனத் திட்டவட்டமாகக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி, வட்டார வளர்ச்சி அலுவலர் வரை அனைவருக்கும், இத்திட்டத்தில் முறைகேடு நடப்பது குறித்து கடிதத்தின்மூலம் தெரிவித்தோம். மேலும் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்ததில், 12.6.2025 வரை காணை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சுமார் 50 ஊராட்சிகளில் இத்திட்டத்தை செயல்படுத்த தற்காலிகத் தடை விதித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர். எளிய மக்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தில் நடக்கும் முறைகேடுகளை யாரிடம் சென்று சொல்வதென்று புலம்புகிறார்கள் ஊராட்சிமன்றத் தலைவர்கள்.
-எஸ்.பி.எஸ்.