"ஹலோ தலைவரே, கலைஞர் நூற்றாண்டு விழா கோலாகலமாகத் தொடங்கி யிருக்கு.''”
"ஆமாம்பா, இந்த நேரத்தில் இங்கே தி.மு.க. ஆட்சி இருப்பதால், விழாவின் வெளிச்சம் அதிகமாகவே இருக்கே?''”
"உண்மைதாங்க தலைவரே, கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடும் நேரத்தில் இங்கே அவர் புதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்திருப்பது சாலப்பொருத்தம். தி.மு.க. சார்பில், இவ்விழாவை பல்வேறு வகையிலும் கொண்டாடப் போறாங்க. நாடுமுழுக்க கொடி யேற்று விழாக்கள், கலைஞர் சிலை திறப்பு நிகழ்ச்சிகள், கருத்துப் புரட்சியின் கருவறையாக படிப்பகங்களை அமைத்தல்னு விழாவை பிரமாண்டப்படுத்தும் திட்டங்களை தி.மு.க. வகுத்திருக்கு. கலைஞர் நூற்றாண்டை தி.மு.க.வுக் கான திருப்புமுனையாக மாற்ற நினைக்குது அறிவாலயம். தி.மு.க. உடன்பிறப்புக்கள், இதனால் புதிய உற்சாகத்தில் மிதக்கறாங்க. அங்கங்கே கட்சி வேறுபாடு கடந்தும் கலைஞர் விழா நடக்கப் போகுது. இதற்கிடையே கட்சியில் மா.செ.க்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, கட்சி அளவிலான மாவட்டங்களைப் பிரிக்கும் திட்டத்தில் இருக்கிறதாம் தி.மு.க.''”
"இந்த நேரத்தில் ஒடிசா ரயில் விபத்து ஏற்படுத்திய அதிர்ச்சி, தமிழகத்தை திணற வச்சிருக்கே?''”
"ஆமாங்க தலைவரே, ஒடிசா வழியாக சென்னை நோக்கி வந்த ரயில் விபத்தில் சிக்கிய செய்தி வந்தபோது, தமிழக மக்களின் பதட்டம் அதிகமாயிடிச்சி. அதேபோல் அதிர்ச்சியடைந்த இங்குள்ள தி.மு.க. அரசும், மின்னல் வேகத்தில் ஹெல்ப்லைன் வசதிகளை அறிவித்து, பாதிக்கப் பட்டோருக்கு உதவுவதில் வரிஞ்சி கட்டியது. தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு உயிர்ச்சேதம் ஏற்படலைன்னாலும் மற்ற மாநிலத்தவர்களின் குவியல், குவியலான மரணம், எளிதில் கடக்க முடியாத துயரமாக அமைந்துவிட்டது. இந்த விபத்தால், பெரம்பூரில் தி.மு.க. மிக பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்த கலைஞர் நூற்றாண்டுத் தொடக்கவிழா 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டிருக்கு.''
"காஞ்சி சங்கர மடத்தில், வாரிசுச் சர்ச்சை உருவாகி யிருக்குதே?''”
"ஆமாங்க தலைவரே.காஞ்சி மடாதிபதியான விஜயேந்திரருக்கு அடுத்த நிலையில், இளைய மடாதி பதியாக விஜய்மேத்தா என்பவரை நியமிக்கப்போகிறார்கள் என்று மூன்று ஆண
"ஹலோ தலைவரே, கலைஞர் நூற்றாண்டு விழா கோலாகலமாகத் தொடங்கி யிருக்கு.''”
"ஆமாம்பா, இந்த நேரத்தில் இங்கே தி.மு.க. ஆட்சி இருப்பதால், விழாவின் வெளிச்சம் அதிகமாகவே இருக்கே?''”
"உண்மைதாங்க தலைவரே, கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடும் நேரத்தில் இங்கே அவர் புதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்திருப்பது சாலப்பொருத்தம். தி.மு.க. சார்பில், இவ்விழாவை பல்வேறு வகையிலும் கொண்டாடப் போறாங்க. நாடுமுழுக்க கொடி யேற்று விழாக்கள், கலைஞர் சிலை திறப்பு நிகழ்ச்சிகள், கருத்துப் புரட்சியின் கருவறையாக படிப்பகங்களை அமைத்தல்னு விழாவை பிரமாண்டப்படுத்தும் திட்டங்களை தி.மு.க. வகுத்திருக்கு. கலைஞர் நூற்றாண்டை தி.மு.க.வுக் கான திருப்புமுனையாக மாற்ற நினைக்குது அறிவாலயம். தி.மு.க. உடன்பிறப்புக்கள், இதனால் புதிய உற்சாகத்தில் மிதக்கறாங்க. அங்கங்கே கட்சி வேறுபாடு கடந்தும் கலைஞர் விழா நடக்கப் போகுது. இதற்கிடையே கட்சியில் மா.செ.க்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, கட்சி அளவிலான மாவட்டங்களைப் பிரிக்கும் திட்டத்தில் இருக்கிறதாம் தி.மு.க.''”
"இந்த நேரத்தில் ஒடிசா ரயில் விபத்து ஏற்படுத்திய அதிர்ச்சி, தமிழகத்தை திணற வச்சிருக்கே?''”
"ஆமாங்க தலைவரே, ஒடிசா வழியாக சென்னை நோக்கி வந்த ரயில் விபத்தில் சிக்கிய செய்தி வந்தபோது, தமிழக மக்களின் பதட்டம் அதிகமாயிடிச்சி. அதேபோல் அதிர்ச்சியடைந்த இங்குள்ள தி.மு.க. அரசும், மின்னல் வேகத்தில் ஹெல்ப்லைன் வசதிகளை அறிவித்து, பாதிக்கப் பட்டோருக்கு உதவுவதில் வரிஞ்சி கட்டியது. தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு உயிர்ச்சேதம் ஏற்படலைன்னாலும் மற்ற மாநிலத்தவர்களின் குவியல், குவியலான மரணம், எளிதில் கடக்க முடியாத துயரமாக அமைந்துவிட்டது. இந்த விபத்தால், பெரம்பூரில் தி.மு.க. மிக பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்த கலைஞர் நூற்றாண்டுத் தொடக்கவிழா 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டிருக்கு.''
"காஞ்சி சங்கர மடத்தில், வாரிசுச் சர்ச்சை உருவாகி யிருக்குதே?''”
"ஆமாங்க தலைவரே.காஞ்சி மடாதிபதியான விஜயேந்திரருக்கு அடுத்த நிலையில், இளைய மடாதி பதியாக விஜய்மேத்தா என்பவரை நியமிக்கப்போகிறார்கள் என்று மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அவர் படத்தோடு நம் நக்கீரன் செய்தி வெளியிட்டது. அதை இப்போதுதான் சங்கரமடத் தரப்பு ஒத்துக்கொண்டி ருக்கிறது.அதனால் சங்கரமட அபிமானிகள், அந்த நக்கீரன் செய்தியைத் தேடிப்பிடித்து ‘"விடாது கருப்பு'’ என்ற தலைப் பில் வாட்ஸ்ஆப் குழுக்களில், சில கேள்விகளோடு உலவ விட்டுக் கிட்டு இருக்காங்க. விஜய் மேத்தா என்ற பெயரில் இருக்கும், மேத்தா என்ற ஒட்டுதான் சங்கரமட ஆர்வலர்களைக் குழப்பு கிறதாம். அவர்களில் சிலர் ஆந்திராவில் உள்ள ‘ராவ்’ என்ற சாதிப் பெயருக்குள், பிராமணர்களும் அடங்கு வதுபோல், மேத்தா என்கிற பட்டத்திற்குள் ஒருவகை பிராமணர்களும் அடங்கு வார்கள் என்று சொல்லி வருகின்றனர். பொதுவாக பால்யப் பருவம் கடக்காத சிறுவர்களைத்தான் சங்கரமட இளைய மடாதி பதியாகப் பட்டம் சூட்டுவார்கள். ஆனால் இப்போது 40 வயது கடந்த குஜராத்திக் காரரான விஜய் மேத்தாவை சங்கரமட ’சின்னவர்’ஆக்கப் போவதற்கான காரணம், இவர் அதானியின் ஆள் என்பதாலாம்.''”
"சரிப்பா, கல்வித் துறையை குழப்பிக்கிட்டி ருக்காரே கவர்னர்?''”
"ஆமாங்க தலைவரே, அரசுமுறைப் பயணம் என்ற பெயரில், அரசு செலவில் ஊட்டிக்கு ஒருவார கால கோடைச் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி, அங்கே பேருக்கு சில நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்து, அதில் கலந்துகொண்டு வருகிறார். அந்த வரிசையில், துணைவேந்தர்களின் கூட்டத்தையும் அங்கே அவர் பரபரப்பா நடத்தினார். அதில், கல்வித்துறையைக் குழப்பும் வகையிலும், ஆர்.எஸ்.எஸ். சிந்தாந்தத்தை பாடத் திட்டத்தில் புகுத்தும் ஆர்வத்திலும் அவர், ஒன்றிய அரசின் புதியக் கல்விக் கொள்கையை நடைமுறைக்குக் கொண்டுவரும்படி வலியுறுத்திப் பேசினார். ஆனால் இதற்கு முன்பாகவே உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "கவர்னரின் இதுபோன்ற முயற்சிக்கு செவி சாய்க்காதீர்கள். மாநில கல்வித் துறை வகுக்கும் கல்வி முறையை மட்டும் பின் பற்றுங்கள்'னு சொல்லியிருந்தார். எனினும், ’தங்களை சரியா வேலை செய்யவிடாமல், அடிக்கடி கூட்டம் போட்டு, கவர்னர் குட்டையைக் குழப்பிக் கிட்டே இருக்கிறாரேங்கிற எரிச்சலில் பெரும் பாலான துணைவேந்தர்கள் இருந்தாங்களாம்.''”
"பா.ஜ.க. அண்ணாமலை தமிழக அரசையும் அமைச்சர்களையும் மிகவும் தரம்தாழ்ந்து விமர்சிக்கிறாரே?''” ”
"அண்மைக்காலமாக கட்சி செயல்பாடுகளில் அதிக ஆர்வம் காட்டாமல் ஒதுங்கியது போல் இருந்துவந்தார் பா.ஜ.க. அண்ணாமலை. அப்படிப் பட்டவர், இப்ப சில நாட்களாக பத்திரிகை யாளர்களை சந்திக்கிறார். அதிலும் தி.மு.க.வை தாக்குவதற்காகவே இந்த ஊடக சந்திப்பைப் பயன்படுத்திக்கிறார். ஒரு ஊடக சந்திப்பில் தி.மு.க.வுக்கு எதிரான கருத்துக்களை அடுக்குகிற அவர், பிரஸ்மீட் முடிந்த பிறகு, தனக்கு நெருக்கமான ஒரு நிருபரின் மைக்கை மட்டும் கைகாட்டி இருக்கச் செய்து, அதில் பதிவாகிற மாதிரி அமைச்சர் செந்தில் பாலாஜியை கீழ்மையாக கமெண்டடித்தவர், அமைச்சரையும் அவர் தம்பியையும் பெண் விவகாரத் தில் தொடர்புபடுத்திப் பேசி வக்கிரமான தகவலை விதைத்தார். அண்ணாமலை ஏன் இப்படி என்று விசாரித்தபோது, தி.மு.க. நடத்தும் கலைஞர் நூற்றாண்டு விழா கோலாகலத்தின் மீதான மக்கள் கவனத்தைத் திசை திருப்பத்தான், அவர் இப்படி செய்கிறார்’என்கிறார்கள் அவரை அறிந்தவர்கள்.''”
"புதுக்கோட்டையின் புதிய கலெக்டருக்கு எதிராக இந்துத்துவா அமைப்புகள் வரிந்து கட்டுகிறதே?''”
"ஆமாங்க தலைவரே, புதுக்கோட்டை மாவட்ட கலெக்டராக கடந்த 3ஆம் தேதி பதவி ஏற்றுக்கொண்ட மெர்சி ரம்யா ஐ.ஏ.எஸ்., தன் அதிரடி நடவடிக்கையால் இந்துத்துவா அமைப்புகளின் எதிர்ப்பை சம்பாதித்திருக்கிறார். எப்படின்னா? மாவட்ட நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட அவர், தான் தங்கவேண்டிய கலெக்டர் பங்களாவை நோக்கிச் சென்றார். அதன் நுழைவு வாயிலில், விநாயகர் சிலை இருப்பதைப் பார்த்த அவர், அதிகாரிகளை அழைத்து, அதை முதலில் நீக்குங்கள் என்று உத்தரவிட்டார். இதைக்கேட்டு அதிர்ந்துபோன அதிகாரிகளில் சிலர், அது ஒரு பக்கம் இருந்துவிட்டுப் போகட்டுமே, அதை எடுத்தால் சர்ச்சை கிளப்ப ஆரம்பித்துவிடுவார்கள் என்று தயங்கினர். எனினும் அந்த சிலையை எடுத்தே ஆகவேண்டும் என்று கலெக்டர் கறார்க் குரலில் கூற, வேறு வழியின்றி அந்த விநாயகர் சிலை அங்கிருந்து நீக்கப்பட்டுவிட்டது. இதையறிந்த இந்துத்வா அமைப்புகள், கலெக்டருக்கு எதிராகக் கொடிபிடிக்கத் தொடங்கிவிட்டன. இந்நிலை யில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமோ, "நாங்கள் விநாயகர் சிலையை அகற்றவில்லை. இதே வளாகத்தில் சற்று தள்ளிதான் வைத்துள்ளோம்' என்று அறிவித்துள்ளது.”
"கர்நாடகாவில் தோல்வியைத் தழுவிய பா.ஜ.க, இப்பவே ஆந்திராவைக் குறி வைக்குதே?''”
"உண்மைதாங்க தலைவரே, அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த கையோடு, ஆந்திர மாநிலத்துக்கான சட்ட மன்றத் தேர்தல் நடக்கப்போகுது. அதனால் அங்கு இப்பவே பலமான கூட்டணியை அமைக்கவேண்டும் என்பதில் பா.ஜ.க. உறுதியாக இருக்கிறது. இந்த நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை 3ஆம் தேதி இரவு, ஆந்திர தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு சந்தித்திருக்கிறார். இந்த சந்திப்பு அரசியல்ரீதியாக பெரும் எதிர்பார்ப் பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஆந்திராவைப் பொறுத்தவரை, ஆளும்கட்சி யான ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கும், சந்திரபாபுவின் தெலுங்கு தேச கட்சிக்கும் இடையேதான் போட்டி. நாயுடுவும் ரெட்டியும் அங்கே ஒருவருக்கு ஒருவர் ’ஆண்டி ஹீரோவாக வாள் சுழற்றி வருகிறார் கள். தேசிய கட்சிகளுக்கு அங்கு நயாபைசா அளவுக்குக் கூட மதிப்பில்லை. அதனால்தான், அங்கே காலூன்ற ஆசைப்படும் பா.ஜ.க., சந்திரபாபுவின் முதுகில் இப்போது சவாரி செய்ய ஆசைப்படுகிறதாம்.''”
"ஏற்கனவே பா.ஜ.க. கூட்டணியில் இருந்த சந்திரபாபு நாயுடு, இனி பா.ஜ.க.வின் சங்காத்தமே வேண்டாம்ன்னு 2014-ல் விலகிப் போனவர்தானே?''”
"ஆமாங்க தலைவரே, இருந்தாலும் மறுபடியும் டெல்லி செல்வாக்கை வளர்த்துக் கொள்ள ஆசைப்பட்டு, 2019-ல் பா.ஜ.க. கூட்டணியில் மீண்டும் இணைய விரும்பினார் சந்திரபாபு. ஆனால், அப்போது வெற்றி மமதையில் இருந்த பா.ஜ.க., அவருக்குக் கதவு திறக்கவில்லை. இந்த நிலையில், கர்நாடகா கொடுத்த அடியால், பித்தம் கலைந்திருக்கும் பா.ஜ.க., இப்போது ஆந்திராவைக் குறிவைத்து, சந்திரபாபு நாயுடுவோடு நாடாளுமன்றத் தேர் தல் குறித்து, அடிக்கடி ஆலோசனை களை நடத்த ஆரம்பித்திருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசத்துடன் கூட்டணி வைத்தால்தான் குறிப்பிடத்தக்க சீட்டுகளையாவது பிடிக்க முடியும்; இல்லையெனில் அங்கு ஒரு இடம்கூட பா.ஜ.க.வுக்கு கிடைக்காது என்று உளவுத் துறையும் ரிப்போர்ட் கொடுத் திருக்கிறதாம். எனவே, ஆந்திராவைப் பொறுத்த வரை, தனக்கிருக்கும் ஒரே ஆபத்பாந்தவனாக தெலுங்கு தேசத்தை நம்புகிறது பா.ஜ.க.''”
"நம்ம திருச்சி செய்திய தவறா புரிஞ்சுக் கிட்டாங்களாமே...''
"ஆமாங்க தலை வரே... நாம் சொல்லும் சொற்களுக்கு கூர்மை அதிகம். அதனால் அதை ரொம்பவும் கவனமாத்தான் நாம் பயன்படுத்தணும். உதா ரணத்துக்கு ஒரு விசயத்தைச் சொல்றேன். நம்ம நக்கீரனில், ’திருச்சி கூத்துங்கிற தலைப்பில், ஒரு பெட்டிச் செய்தி வெளியாகி இருந் தது. அதில், தமிழ்நாட் டில் குற்ற நடவடிக்கை களுக்கு உறுதுணையாக இருக்கும் காவல்துறை அதிகாரிகளின் பட்டியல் எடுக்கப்பட்டு வருவதாகவும், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி யின் பெயர் அந்த பட்டியலில் முதலிடத் தில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது, இந்த செய்தி பூடக மாகத் தெரிவிக்கப்பட்டிருந்ததால் சிலர், திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சத்தியபிரியா பற்றிதான் எழுதப்பட்டிருக்கிறது என்று தவறாகவே புரிந்துகொண்டனர். அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தவர் அவரல்ல, வேறொரு ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். அதனால் ஒரு தகவலைப் பகிரும்போது, நாமகூட ரொம்பவும் கவனமாகப் பகிரணும்.''’
"நானும் ஒரு முக்கியமான தகவலை சொல்றேன்... சென்னையில் மழைநீர் கால்வாய் களை அமைக்கும் பணிகளை மேற்கொண்டிருக் கிறது மாநகராட்சி நிர்வாகம். இதற்காக சாலைகளில் உள்ள, டிவைடர்களை உடைத்து எடுக் கிறார்கள். அந்தந்தப் பகுதிகளில் பணிகள் முடிந்ததும், மீண்டும் அந்த டிவைடர்களை இருந்த இடத்திலேயே அவர்கள் வைப்பதில்லை. நம்ம வேலை முடிந்ததுன்னு அங்கிருந்து கிளம்பிவிடுகிறார்கள். இவர்களின் இந்த அலட்சியத்தால், அடிக்கடி பல இடங்களிலும் சாலை விபத்துகள் நடக்கின்றன என்கிறார்கள் சென்னைவாசிகள். குறிப்பாக, மகாலிங்கபுரம் அய்யப்பன் கோவில் பகுதியில் தினமும் இரண்டு விபத்துக்களாவது நடக்கிறதாம். இது குறித்துப் புகார்கள் போயும், அதனை மாநகராட்சி அதி காரிகள் கண்டுகொள்வதில்லை என்று புகார்கள் கிளம்புகின்றன. இதனால் சென்னைவாசிகளிடம் எரிச்சல் அதிகரித்து வருகிறது.''”