இந்தியாவெங்கும் கவனத்தை ஈர்த்த ஒரு திட்டம் தி.மு.க. அறிவித்த மகளிர் உரிமைத் தொகை திட்டம். தி.மு.க. அறிவித்த இந்தத் திட்டத்தை நகல்செய்து கர்நாடகம், மத்தியப் பிரதேசம் என பல்வேறு மாநிலங்கள் தங்கள் தேர்தல் வாக்குறுதியாக அறிவித் தன. காங்கிரஸ், பா.ஜ.க. போன்ற தேசியக் கட்சிகள் முதல் மாநிலக் கட்சிகள் வரை பின்பற்ற ஆரம்பித்துள்ளன.
இந்த முன்னோடித் திட்டத்தை அறிஞர் அண்ணாவின் பிறந்த தினமான செப்டம்பர் 15-ஆம் தேதி, தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இத்திட்டத்தில் 1,06,50,000 பெண்களின் வங்கிக் கணக்கில் தலா ரூ.1000 முந்தைய நாளே போடப் பட்டது.
ஆனால் பலருக்கு இந்தத் தொகை முழுமையாகச் சென்று சேரவில்லை. சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச தொகையை பரா மரிக்காததற்காக, எஸ்.எம்.எஸ். சேவைக்காக என பல்வேறு காரணங்களைச் சொல்லி பலரின் கணக்கில் போடப்பட்ட தொகை யில் ரூ.100 முதல் விதவிதமான தொகைகள் பிடிக்கப்பட்டிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
மதுரை பகுதிகளில் மாநில அரசு கொடுத்த 1000 ரூபாயில் பிடித்தம் போக மீதித் தொகையே இருக்கிறது என்று வங்கிகள் சொல்ல, கோபத்தின் உச்சிக்கே போன பெண்கள் “"முதல்வர் கொடுத்த பணத்தை நீங்க எப்படி வழிப்பறி மாதிரி பிடுங்கலாம்? அநியாயமா இருக்கு''’என்று வங்கி வாசலில், வங்கி அதிகாரிகளிடம் சண்டைக்குப் போயிருக்கின்றனர்.
"எல்லாம் சரிதான். முறைப் படி ஒன்றிய அரசின் நிதி அமைச்ச கத்திற்கு முறையாகத் தெரிவித்து, அவர்கள் ஆர்.பி.ஐ. இயக்குனகத்திற்கு தகவலனுப்பி எங்க ளுக்கு சுற்றறிக்கை வரவேண்டும். அப் போதுதான் அது நடை முறைக்கு வரும். அதில்லாமல் பெண்கள் இங்குவந்து சண்டை போடுவதால் எந்த பலனும் இல்லை''’என கூறியிருக்கிறார்கள்.
மூதாட்டி சரஸ்வதி அம்மாள், "’பிச்சை எடுத்தானாம் பெருமாளு. அதைப் பிடுங்கித் தின்பானா அனுமாரு. முதல்வர் என்னை மாதிரி பொம்பளைகளுக்கு கைச் செலவுக்கு கொடுத்ததை இந்த பேங்க் காரய்ங்க புடுங்குறது என்ன நியாயம்?… நல் லாவே இருக்கமாட்டாய்ங்க இவய்ங்க'' என்று சாபமிட்டுச் சென்றார்.
தெய்வானையோ, “"எஸ்.எம்.எஸ் வந்திருச்சு, போய் வாங்கிக்கலாம்னு வந்தா என்னமோ நாங்க எப்போதும் கணக்குல பணத்தை வச்சிருக்கணும்னு சொல்றாங்க.… எங்களுக்கு இதுக்கு வக்கு இல்லாமல்தான் கலைஞர் மகன் பணத்தைப் போட்டு விடுறார். அதைப் பிடுங்குறது என்ன நியாயம்?'' என்றார் பரிதாபமாக இது இப்படியென்றால் தென்காசி மாவட் டம் சங்கரன்கோவிலில், "ஒரு வருஷமா எஸ்.பி.ஐ சேமிப்பு கணக்குதான். 1000 ரூபா 15-ஆம் தேதி ஏறுனதுல 140.06 ஆபங டஊசஉஒசஏ ஆஙஈ போக 859.94 ஏறிருக்கு. இப்படி என் ஒருத்திக்கு இவ்ளோ புடிச்சுருக்கு. மகளிர் உதவி தொகைக்கு தகுதியுள்ளவர்கள் எத்தனை லட்சம் பேர் இருக்காங்க. அப்போ எவ்ளோ பேர்க்கு புடிச்சிருப்பாங்க. பேங்க்ல போய் கேட்டா அது கம்ப்யூட் டரைஸ்டு. அதுவே எடுத்துரும். எங்க ளால எதுவும் செய்ய முடியாதுனு சொல் றாங்க. இதுதான் நெலம''’என்றார் பரிதாப மாக சங்கரன்கோவிலைச் சேர்ந்த இசக்கி.
நெடுங்குளத்தைச் சேர்ந்த முனி சாமியோ, "எங்க கிராமத்துல 60 பயனாளிகள். எங்களுக்கு வரல. எங்க ஏரியால பணக்காரங்களுக்கு வந்திருக்கு, ஏழைக்கு வரலனு சண்டை. தாலுகா ஆபீஸ்ல முகாம் போட்டிருக்கதா சொன்னாங்க. மறுபடி விண்ணப்பிச்சிருக்கேன். இவ்ளோ பேருக்கு குடுக்கிறப்ப விதவிதமா பிரச்சினை வரும். அத சமாளிச்சுதான்யா குடுப்பாங்க'' என்றார் நம்பிக்கையாக.
சிவகாசியில் பட்டாசுப் பெட்டி ஒட்டிக் கொண்டிருந்த மாரியம்மாள் குமுறலாகச் சொன்னார். “"அந்தக் கொடுமைய ஏன் கேட்கிறீங்க? முன்னால பேங்க் கணக்கு எதுக்கோ ஆரம்பிச்சது. அப்புறம் அந்த பேங்க் பக்கமே போகல. பேங்க்ல எனக்கும் கணக்கு இருக்குன்னு சொல்லிக்கிறதுக்கு டிரங்க் பெட்டில ஏ.டி.எம். கார்டு எப்பவும் ஒரு மூலைல கிடக்கும். அந்தக் கார்டு வேலை செய்ய ணும்னா.. அப்பப்ப பணம் எடுக்கணுமாம்; போடணுமாம். ஒருவாட்டி கார்டு வேலை செய்யாம போச்சு. பக்கத்து வீட்ல இருக்கிற படிச்ச தம்பி ஒருத்தர் என்னை பேங்க்குக்கு கூட்டிட்டுப் போயி.. எழுதிக் கொடுத்து அந்த கார்ட வேலை செய்ய வச்சாரு. அதுல இருந்து எப்பவுமே பேங்க்ல கொறஞ்சது 1000 ரூபாய் இருக்கிற மாதிரி வச்சிக்குவேன். போன மாசம் திடுதிப்னு உடம்புக்கு முடியாம போச்சு. செலவுக்காக மூவாயிரத்த ஏ.டி.எம்.ல எடுத்துட்டேன். கஷ்டத்தோட கஷ்டமா கவர்மென்ட் கொடுக்கிற ஆயிரத்துக்கு எழுதிப்போட்டு, பணமும் கணக்குல வந்திருச்சு. ஆனா.. புண்ணியவான் கொடுத்த ஆயிரத்துல பேங்க்காரங்க ஒரு பகுதியை முழுங்கிட்டாங்க. ஆமாம் தம்பி.. கணக்குல குறைச்சலா பணம் இருக்குன்னு சொல்லி.. அந்த பணத்துல இருந்து பிடிச்சிட்டாங்க.. கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டலைங்கிற மாதிரி ஆயிருச்சு. அடுத்தவாட்டி முழுப்பணமும் கிடைச்சிரும்கிறாங்க. ஒருபக்கம் கொடுக்கிறாங்க; இன்னொருபக்கம் எடுக்கிறாங்க. ஏழைங்க வாழ்க்கைல எப்ப என்ன நடக்கும்கிறதே தெரியல''’என்றார் பரிதாபமாக.
2018-ஆம் ஆண்டு குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்காததற்காக பொதுத்துறை வங்கிகளும், தனியார் வங்கிகளும் வசூலித்த அபராதத் தொகை மட்டும் 21,000 கோடி. மோடி அரசு ஆட்சிக்கு வந்தபின் 11 லட்சம் கோடி கார்ப்பரேட்டுகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
பணக்காரர்களிடம் பிடுங்கி ஏழைகளிடம் கொடுத்தால் ராபின்ஹூட். மக்களிடம் பிடுங்கி, கார்ப்பரேட்டுகளிடம் கொடுத்தால் அது பா.ஜ.க. அரசு!
-ராம்கி, அண்ணல், ப.இராம்குமார்