சோத்துக்கட்சி! -கஸ்தூரி(40)

kasthuri

(40) சமூகநீதி - சமத்துவம்!

மிழக அரசோட 2018-19-ஆம் ஆண்டு நிதி அறிக்கைய சட்டசபைல தாக்கல் பண்ணீட்டாங்க.

ரொம்ப நாளா எனக்கு சந்தேகம். "ஏன் ‘நிதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதுங்கிற மாதிரியெல்லாம் சொல்லாம... ‘நிதிநிலை அறிக்கை தாக்கல் பண்ணப்பட்டது'னு சொல்றாங்க? "நிதி நிலை யாரைத் தாக்குற மாதிரி இருக்கு?னு தெரிஞ்சே... அந்தக் காலத்துலருந்து... "தாக்கல்'னு சொல்றாங்க?'

அதுல பரபரப்பா விமர்சிக்கப்படுற விஷயம்... ஒரு பெண்மணிக்கு கட்டப்போற.... அவங்க வீட்டை நினைவு இல்லமா மாத்துறதுக்கு 20 கோடி ஒதுக்கினதையும், அவங்களோட நினைவு மண்டபம் கட்ட 50 கோடி ஒதுக்கினதையும்தான். இதை பெரிசா விவாதிச்சிக்கிட்டிருக்காங்க.

மகளிருக்கான பல திட்டங்களும், அதற்கான நிதியும் அறிவிக்கப்பட்டிருக்கு.

இந்த பட்ஜெட்ல "வேலைக்குச் செல்லும் இஸ்லாமியப் பெண்களுக்கு சென்னையில் விடுதி கட்டப்படும்'னு அறிவிச்சிருக்காங்க.

வீட்டைவிட்டு வெளியே வர்ற எந்தப் பெண்ணுக்குமே அரசாங்கத்தோட பாதுகாப்பு தேவைப்படுது.

எந்த ஒரு பெண்ணையும் தனிமனித தாக்குதல் விமர்சனத்தால நிலைகுலைய வைக்கிற போக்கு சமூகத்துல பரவலாவே இருக்கு.

மார்ச் 13-ந் தேதி உடுமலைப்பேட்டையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட சங்கரின் (சங்கர்- கௌசல்யா) நினைவு தினம். அதையொட்டி எமூக வலைத்தளத்துல ‘"கௌசல்யா என்னுடைய சகோதரி'னு நான் ஒரு பதிவு போட்டிருந்தேன். இதுக்கு நிறைய எதிர்வினைகள். கௌசல்யாவையும், என்னையும் ரொம்ப ரைமிங்கா வசை பாடியிருந்தாங்க. "சங்கர் சாவுக்கு கௌசல்யாதான் காரணம்'னும் சொல்லியிருந்தாங்க.

குரங்கணியில மலையேற்றத்துல ஈடுபட்டு... காட்டுத்தீயில சிக்கி பலியானவங்க மேலயே... பழியத் தூக்கிப்போட்டிருக்கு அரச

(40) சமூகநீதி - சமத்துவம்!

மிழக அரசோட 2018-19-ஆம் ஆண்டு நிதி அறிக்கைய சட்டசபைல தாக்கல் பண்ணீட்டாங்க.

ரொம்ப நாளா எனக்கு சந்தேகம். "ஏன் ‘நிதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதுங்கிற மாதிரியெல்லாம் சொல்லாம... ‘நிதிநிலை அறிக்கை தாக்கல் பண்ணப்பட்டது'னு சொல்றாங்க? "நிதி நிலை யாரைத் தாக்குற மாதிரி இருக்கு?னு தெரிஞ்சே... அந்தக் காலத்துலருந்து... "தாக்கல்'னு சொல்றாங்க?'

அதுல பரபரப்பா விமர்சிக்கப்படுற விஷயம்... ஒரு பெண்மணிக்கு கட்டப்போற.... அவங்க வீட்டை நினைவு இல்லமா மாத்துறதுக்கு 20 கோடி ஒதுக்கினதையும், அவங்களோட நினைவு மண்டபம் கட்ட 50 கோடி ஒதுக்கினதையும்தான். இதை பெரிசா விவாதிச்சிக்கிட்டிருக்காங்க.

மகளிருக்கான பல திட்டங்களும், அதற்கான நிதியும் அறிவிக்கப்பட்டிருக்கு.

இந்த பட்ஜெட்ல "வேலைக்குச் செல்லும் இஸ்லாமியப் பெண்களுக்கு சென்னையில் விடுதி கட்டப்படும்'னு அறிவிச்சிருக்காங்க.

வீட்டைவிட்டு வெளியே வர்ற எந்தப் பெண்ணுக்குமே அரசாங்கத்தோட பாதுகாப்பு தேவைப்படுது.

எந்த ஒரு பெண்ணையும் தனிமனித தாக்குதல் விமர்சனத்தால நிலைகுலைய வைக்கிற போக்கு சமூகத்துல பரவலாவே இருக்கு.

மார்ச் 13-ந் தேதி உடுமலைப்பேட்டையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட சங்கரின் (சங்கர்- கௌசல்யா) நினைவு தினம். அதையொட்டி எமூக வலைத்தளத்துல ‘"கௌசல்யா என்னுடைய சகோதரி'னு நான் ஒரு பதிவு போட்டிருந்தேன். இதுக்கு நிறைய எதிர்வினைகள். கௌசல்யாவையும், என்னையும் ரொம்ப ரைமிங்கா வசை பாடியிருந்தாங்க. "சங்கர் சாவுக்கு கௌசல்யாதான் காரணம்'னும் சொல்லியிருந்தாங்க.

குரங்கணியில மலையேற்றத்துல ஈடுபட்டு... காட்டுத்தீயில சிக்கி பலியானவங்க மேலயே... பழியத் தூக்கிப்போட்டிருக்கு அரசாங்கம்.

சென்னை ட்ரெக்கிங் கிளப்ப பார்த்தீங்கன்னா... பத்தாண்டு காலமா... பெண்கள் வெளியில சுதந்திரமா வரணும், சாகஸங்கள்ல ஈடுபடணும்...னு செயல்படுது.

மலையேற்றத்துக்கு போனவங்கள்ல... இதுவரைக்கும் பதினைஞ்சு பேர்கள் இறந்திருக்காங்க. இதுல அதிகஅளவில் பெண்கள் இறந்திருக்காங்க. இதுக்குக் காரணம்... தங்களோட உயிர காப்பாத்திக்கிட்ட பெண்கள்... மத்தவங்கள காப்பாத்தணும்னு போய்... தீயில மாட்டிக்கிட்டு... சிகிச்சை பலனளிக்காம இறந்திருக்காங்க.

kasthuri

இந்தப் பெண்கள் மேலதான் எவ்வளவு விமர்சனம்? தாக்குதல்கள்?

"பொம்பளயா அடக்க ஒழுக்கமா வீட்டுல இருக்க வேணாமா? கல்யாணம் பண்ணிக்கிட்டு ஜாலியா ஹனிமூன் போறத விட்டுட்டு... ட்ரெக்கிங் போகணுமா?. பொம்பளைங்க தீட்டுலதான் இப்படி உயிர் போச்சு...'’

-இப்படியான ஈவு, இரக்கமே இல்லாத விமர்சனங்கள பார்த்துக்கிட்டுத்தான் இருக்கோம்.

ஆண்களைப் பார்த்து இந்தக் கேள்வியே எழுறதில்ல.

இதையெல்லாம் பார்க்கிறப்போ... "நம்ம தமிழ்நாட்டுல எத்தனை சமூக சீர்திருத்தம் வந்தாலும் என்ன... பெண்களோட நிலமை எப்பத்தான் முன்னேறுமோ?'னு பயமாக்கூட இருக்கு.

இப்படிப்பட்ட சூழல்ல...

"அது ஏன் இஸ்லாமியப் பெண்களுக்கு தனிப்பட்ட முறைல விடுதி கட்றாங்க? எந்த வேலை பார்க்கிற பெண்ணா இருந்தாலும், எந்த சமூகத்துப் பெண்ணா இருந்தாலும்... அந்தப் பெண்களுக்கு அரசாங்க விடுதிங்கிறது நல்ல விஷயமாத்தான இருக்கும். அப்படி இருக்கும்போது ஏன்... ஒரு சமூகத்து பெண்களை குறிப்பிட்டு இந்த பட்ஜெட்ல சொல்லீருக்காங்க?'னு யோசிச்சேன்.

"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்'னு எவ்வளவுதான் பேசினாலும்... நடைமுறை வாழ்க்கைல, பெண்களுக்கான அடிப்படை உரிமைகள், அடிப்படை சுதந்திரம்... எல்லாப் பெண்களுக்கும் கிடைச்சிடுறதில்ல.

நகர்ப்புற... மேல்தட்டு பெண்களுக்கு இது கிடைச்சிருக்கலாம். ஆனா கிராமப்புற... படிப்பு, பொருளாதார வசதி இல்லாதப் பெண்களுக்கு இது கிடைக்கல. தமிழகப் பெண்களுக்கான முன்னேற்றத்துக்கு இன்னும் நிறைய தூரம் போகணும்கிற நிலமைதான் இருக்கு. ஒடுக்கப்பட்ட சமூகத்துலயும்கூட பெண்ணினம் ஒடுக்கப்பட்டதாத்தான் இருக்கு.

"ரொம்ப பிரமாதமா படிச்சு முன்னுக்கு வந்துட்டாங்க. இவங்களுக்கு எந்தச் சலுகையும் தேவையில்ல'னு சொல்லப்படுற சமூகத்துலகூட... பெண்ணுக்கான எல்லா உரிமையும் கிடைச்சிடுறதில்ல. அப்படி இருக்கும்போது... இஸ்லாமியப் பணிப்பெண்களுக்காக மட்டும் அரசு விடுதி ஏன்?

இதைப்பத்தி... அரசியல்ல பிரபலமா இருக்க... பெண்ணியத்துக்கு குரல் கொடுக்குற... என்னோட இஸ்லாமிய சகோதரிகிட்ட விவாதிச்சேன்.

அவங்க சொன்னாங்க... ""எல்லா சமூகப் பெண்களுமே தங்களோட உரிமைகளுக்கு போராட வேண்டியிருக்கு. முஸ்லிம் சமுதாயத்தப் பொறுத்தவரைக்கும்... வெளியுலகம் தெரியாமத்தான் பெரும்பாலான பெண்களை வச்சிருக்காங்க. நானே ஒரு கல்வி அமைப்பு வச்சு நடத்திட்டு வர்றேன். அங்க வந்து படிக்கிறதுக்குக்கூட யாரும் தைரியமா வர்றதில்ல. கிராமத்துல... ஒரு ஊர்லருந்து பக்கத்து ஊருக்கு படிக்க அனுப்பவே யோசிப்பாங்க. வீட்டவிட்டு வெளிய அனுப்புறதுலயே கட்டுப்பாடு இருக்கும்போது...‘"ஒரு பொண்ணு ஒரு ஊர்லருந்து இன்னொரு ஊருக்குப் போறதா?'ங்கிறதுலருந்து இந்தப் பிரச்சினை ஆரம்பிக்குது. மற்ற சமூகத்து பெண்களோட ஒப்பிடும்போது... முஸ்லிம் சமுதாயத்துப் பெண்களை, பல உரிமைகள் இன்னும் வந்து அடையாம இருக்கு. அதனால... அரசாங்கம் வந்து இந்த மாதிரி ஒரு திட்டத்த செய்யும்போது... ஒரு நம்பிக்கை ஏற்படும்''னு சொன்னாங்க.

அந்த சகோதரியோட கருத்தை நான் ஆமோதிக்கிறேன்.

அதேசமயம்... பெண்ணுரிமைக்காக போராடிய பெரியார் உதிச்ச மண்ணுல... முத்துலட்சுமி ரெட்டியும், ருக்மணிதேவி அருண்டேலும், மதர் மீரா அல்ஃபஸாவும் வாழ்ந்த தமிழ்நாட்டுல... இன்னும் பெண்களுக்கான அடிப்படை சக்தியைத் தர மறுக்கப்படுதே?னு என் மனசு அழுதுச்சு.

"இஸ்லாம், பெண்களுக்கு எதிரானதா?'ன்னும் அந்த சகோதரிகிட்ட கேட்டேன்.

""இஸ்லாத் பெண்களை மதிக்குது. இஸ்லாத் பேரில் உரிமை மறுக்கப்படுது''னு சொன்னார்.

நகர்ப்புறங்கள்ல பெரும்பாலும் இந்தப் பிரச்சினை இல்ல. கிராமப்புறங்கள்ல எல்லா சமூகத்துலயும்... ‘"குடும்ப கௌரவம்'னு சொல்லி, பெண்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுது. இதையும் அந்த சகோதரியிடம் கேட்டேன்.

"முஸ்லிம் சமூகத்தில் இந்தக் கட்டுப்பாடு அதிகம்'னு சொன்னார்.

"ஆச்சாரமான இந்து குடும்பத்துலயும் முதல்தலைமுறையா வேலைக்கோ, மேற்படிப்புக்கோ வீட்டைவிட்டு வெளியேற அனுமதிக்காத நிலமை இருக்கே?'

(மகாகவி பாரதியுமே... முதல்ல தன்னோட மனைவிக்கு முக்கியத்துவம் கொடுக்கல. கல்கத்தாவில் காங்கிரஸ் மாநாட்டுக்குப் போன பாரதி, நிவேதிதா தேவியைச் சந்திச்சப்போ... "உங்க மனைவியை அழைச்சிட்டு வரலியா?'னு அந்தம்மா கேட்டப்போ... "அவளுக்கு என்ன தெரியும்? அவளையெல்லாம் வீட்டைவிட்டு வெளிய கூட்டி வரமாட்டோம்'னு பாரதி இறுமாப்பா சொன்னப்ப... "நீங்க நாட்டோட சுதந்திரத்திற்கு போராடுறது இருக்கட்டும். முதல்ல உங்க வீட்டுல இருக்க எல்லாரும் சுதந்திரம் அடைஞ்சிட்டாங்களானு பாருங்க'னு மூஞ்சில அறைஞ்ச மாதிரி சொன்னாராம். அதுக்குப் பிறகுதான்... பாரதி, எங்க போனாலும் தன் மனைவி செல்லம்மாவையும் கூட்டிட்டுப் போனாராம். சிலசமயம் அந்தம்மா கூச்சப்பட்டாலும் வலுக்கட்டாயமா கூட்டிட்டுப் போயிருக்கார். போட்டோக்கள்ல பார்த்தாலே தெரியும்... செல்லம்மாவ இழுத்துக்கிட்டு... தோள்ல கையப் போட்டுக்கிட்டு நிற்பார்.)

சமத்துவம்... பெண்ணுரிமை பேசுறவங்களுமே... "என் வீட்டுப் பெண்கள் வீட்டோடதான் இருக்கணும்'னு நினைக்கிற போக்குதான் எல்லா மத சமூகத்துலயும் இருக்குது.

ஏன்... பெண்களை வேலைக்கு அனுப்ப... வெளியூருக்கு அனுப்ப... பொதுவாவே தயங்குறாங்க?

பெண்களோட மானத்துக்கு... ஒழுக்கத்துக்கு இழுக்குவருமோங்கிற பயம்தான்.

அப்படியான பயத்தைப் போக்கும் உளவியல்ரீதியான முயற்சிதான்‘இஸ்லாமிய பணிப்பெண்களுக்கான அரசு விடுதி.

இது ஒரு நல்ல முயற்சிதான். இத நான் குறை சொல்லல. ஆனா... இது தீர்வா?

ஒரு பெண் வெளிய வந்தா பாதுகாப்பில்லாம இருப்பாங்கிறது ஒட்டுமொத்த இந்த சமூகத்து மேலயும் வைக்கப்படுற அவநம்பிக்கையில்லையா?

ஒரு அம்மாவா சொல்றேன்...

பெண்களைப் பொறுத்தவரைக்கும் சாதி, மத பாகுபாட்ட பெரும்பாலும் பார்க்கமாட்டாங்க. எந்தக் குழந்தையைப் பார்த்தாலும்... தாய் மனம், தாய் மனசோடதான் பார்க்கும். தல மேல இருக்க குல்லாவையோ, நெத்திமேல இருக்க திருநீறையோ, நெஞ்சுமேல இருக்க சிலுவையையோ... பார்க்கமாட்டா. பெண்கள் மட்டுமே நடத்துற அரசாங்கம் இருந்தா... "எல்லாப் பெண்களும் கூடி வாழணும்'னுதான் நினைப்பாங்க.

சமூகநீதி அவசியம்தான். சமத்துவம் அதைவிட அவசியம்.

ஒரு கற்பனைக் கோட்டுக்குப் பின்னால் நிற்கிற, நிற்க வைக்கப்பட்டிருக்க பெண்களை.... அந்த கோட்ட அழிச்சு... தமிழச்சியா பாருங்க.

(அடுத்த விஷயத்தை ஒரு இதழ் விட்டு மறு இதழில் எழுதுகிறேன்!)

kasthuri
இதையும் படியுங்கள்
Subscribe