(42) தமிழர்களைச் சீட்டும் கட்சிகள்!
இந்தியன் ஓவர்ஸீஸ் பேங்க்கோட சென்னை -விருகம்பாக்கம் கிளைல பேங்க் லாக்கரை உடைச்சு துணிகரமான கொள்ளை நடந்திருக்கு. தொடர்ந்து ரெண்டுநாள் பேங்க் லீவுங்கிறதால அந்த சந்தர்ப்பத்த பயன்படுத்தி... பேங்க்குள்ள நுழைஞ்ச... அந்த பேங்க்கோட செக்யூரிட்டி தன் மகனோட சேர்ந்து,.. கேஸ்வெல்டிங் மூலமா லாக்கரை உடைச்சு நகை, பணத்தை கொள்ளையடிச்சிட்டு, தங்களோட நாடான நேபாளத்துக்கு தப்பிச்சிப் போயிட்டான்.
கொள்ளை நடந்த பேங்க்ல எனக்கும் அக்கவுண்ட் இருக்கு.
பேங்க் மேனேஜர்கிட்ட... ""என்ன மேடம்... "வீட்டுல நகைகளை வைக்கிறதவிட பேங்க் லாக்கர்ல வைக்கிறது ஸேப்டி'னு நினைச்சு மக்கள் வைக்கிறாங்க. இப்படியெல்லாம் பறிகொடுக்க வேண்டியிருந்தா எப்படி?''னு கேட்டேன்.
""இல்லல்ல... கஸ்டமர் லாக்கர்லாம் உடைக்கப்படல. நகைக்கடனுக்காக வைக்கப்படுற நகைகள் இருந்த லாக்கரையும், பேங்க் கையிருப்பு பணத்தை வைக்கிற லாக்கரையும்தான் உடைச்சிருக்காங்க. அது என்ன... லட்சங்கள்லதான போயிருக்குது''னு சொன்னாங்க.
""என்னது... லட்சத்துலதான் போயிருக்குதா? என்ன இவ்வளவு ஈஸியா சொல்றீங்க?''னு கேட்டேன்.
அதுக்கு மேனேஜர் சொன்னதுதான் ஹைலைட்...
""இந்த திருட்டச் செஞ்சவன் சாதாரண ஆளு. அவனுக்கு பாஸ்போர்ட்கூட கிடையாது. கன்னம் வச்சு... கேஸ்வெல்டிங் மூலமா... பழையமுறையில திருடியிருக்கான். அதுவும்... லட்சத்துல திருடிக்கிட்டு... மேக்ஸிமம்... நேபாள் வரைக்கும் ஓடிப்போயிட்டான். ஆனா... ஹை-டெக்கா பேப்பர்ல திருடுறவங்க... கண்ணெதிர்ல 12 ஆயிரம் கோடிய திருடிக்கிட்டு... ரைட்ராயலா லண்டனுக்கு போயிருக்காங்க. சின்ன திருட்டுக்கெல்லாம் இன்ஷூரன்ஸ் இருக்கு. அந்த அமௌண்ட் திரும்ப வந்துரும். மக்களுக்கு நஷ்டம் இருக்காது. ஆனா... கோடி கோடியா காணாம போனதெல்லாம் எங்கிருந்து வரும்?''னு’’ சொல்லிச் சலிச்சுக்கிட்டாங்க.
விஜயமல்லையா, நீரவ்மோடி... இப்ப கனிஷ்க் ஜுவல்லரி... இப்படி பெரிய பெரிய பண முதலைகள்லாம்... பொதுமக்களோட பணத்தை அதிகாரிகள், அரசியல்வாதிகள் உதவியோட சூற
(42) தமிழர்களைச் சீட்டும் கட்சிகள்!
இந்தியன் ஓவர்ஸீஸ் பேங்க்கோட சென்னை -விருகம்பாக்கம் கிளைல பேங்க் லாக்கரை உடைச்சு துணிகரமான கொள்ளை நடந்திருக்கு. தொடர்ந்து ரெண்டுநாள் பேங்க் லீவுங்கிறதால அந்த சந்தர்ப்பத்த பயன்படுத்தி... பேங்க்குள்ள நுழைஞ்ச... அந்த பேங்க்கோட செக்யூரிட்டி தன் மகனோட சேர்ந்து,.. கேஸ்வெல்டிங் மூலமா லாக்கரை உடைச்சு நகை, பணத்தை கொள்ளையடிச்சிட்டு, தங்களோட நாடான நேபாளத்துக்கு தப்பிச்சிப் போயிட்டான்.
கொள்ளை நடந்த பேங்க்ல எனக்கும் அக்கவுண்ட் இருக்கு.
பேங்க் மேனேஜர்கிட்ட... ""என்ன மேடம்... "வீட்டுல நகைகளை வைக்கிறதவிட பேங்க் லாக்கர்ல வைக்கிறது ஸேப்டி'னு நினைச்சு மக்கள் வைக்கிறாங்க. இப்படியெல்லாம் பறிகொடுக்க வேண்டியிருந்தா எப்படி?''னு கேட்டேன்.
""இல்லல்ல... கஸ்டமர் லாக்கர்லாம் உடைக்கப்படல. நகைக்கடனுக்காக வைக்கப்படுற நகைகள் இருந்த லாக்கரையும், பேங்க் கையிருப்பு பணத்தை வைக்கிற லாக்கரையும்தான் உடைச்சிருக்காங்க. அது என்ன... லட்சங்கள்லதான போயிருக்குது''னு சொன்னாங்க.
""என்னது... லட்சத்துலதான் போயிருக்குதா? என்ன இவ்வளவு ஈஸியா சொல்றீங்க?''னு கேட்டேன்.
அதுக்கு மேனேஜர் சொன்னதுதான் ஹைலைட்...
""இந்த திருட்டச் செஞ்சவன் சாதாரண ஆளு. அவனுக்கு பாஸ்போர்ட்கூட கிடையாது. கன்னம் வச்சு... கேஸ்வெல்டிங் மூலமா... பழையமுறையில திருடியிருக்கான். அதுவும்... லட்சத்துல திருடிக்கிட்டு... மேக்ஸிமம்... நேபாள் வரைக்கும் ஓடிப்போயிட்டான். ஆனா... ஹை-டெக்கா பேப்பர்ல திருடுறவங்க... கண்ணெதிர்ல 12 ஆயிரம் கோடிய திருடிக்கிட்டு... ரைட்ராயலா லண்டனுக்கு போயிருக்காங்க. சின்ன திருட்டுக்கெல்லாம் இன்ஷூரன்ஸ் இருக்கு. அந்த அமௌண்ட் திரும்ப வந்துரும். மக்களுக்கு நஷ்டம் இருக்காது. ஆனா... கோடி கோடியா காணாம போனதெல்லாம் எங்கிருந்து வரும்?''னு’’ சொல்லிச் சலிச்சுக்கிட்டாங்க.
விஜயமல்லையா, நீரவ்மோடி... இப்ப கனிஷ்க் ஜுவல்லரி... இப்படி பெரிய பெரிய பண முதலைகள்லாம்... பொதுமக்களோட பணத்தை அதிகாரிகள், அரசியல்வாதிகள் உதவியோட சூறையாடிட்டு... ரொம்ப கூலா... ஃபாரீன்ல போய் உட்கார்ந்துக்கிட்டு, கிரிக்கெட் மேட்ச் பார்த்துக்கிட்டிருக்காங்க. இப்படி ஆயிரமாயிரம் கோடியா பொருளாதாரத்துல விழுந்திருக்க துண்டை எப்படி சரிக்கட்டுறது?
எனக்கென்ன தோணுது தெரியுமா?
அடுத்த வருஷம்... கூடுதலா அரை சதவிகிதம் வரி போட்டு... இப்ப வரி கட்ற எல்லார் தலையிலேயும் சுமத்திடுவாங்க. அதுக்குப் பேரு national monetary cessனு சொல்லிருவாங்க.... சுருக்கமா N.M.cess. அந்த NM-க்கு உள்ளர்த்தம் ஒருவேளை Nirav Modi இல்லை Narendra Modi-யா கூட இருக்கலாம்!
இன்னிக்கி ஒரு சராசரி இந்தியனோட மதிப்பு என்ன?
உலக வங்கி ஆய்வுப்படி... இந்தியாவுல ஏறக்குறைய 58 சதவிகிதம் பேர்கள் தினசரி 200 ரூபாய்க்குள்ள வாழ்க்கை நடத்துறாங்க. இதுல ஜீரோ பர்ஸண்டேஜ் வருமானம் உள்ளவனும் அடங்குவான். கிட்டத்தட்ட... நம்ம நாட்டோட மக்கள் தொகைல பாதிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்ந்துக்கிட்டிருக்கதா கடைசியா 2014-ல் எடுத்த அந்தப் புள்ளிவிவரம் சொல்லுது.
ஒரு நாட்டுல இருக்க ஒவ்வொரு குடிமகன் பேர்லயும் எவ்வளவு பணம் இருக்குங்கிறத வச்சுப் பார்த்தா... இன்னைக்கி உலகத்துலயே சுபிட்சமாக இருக்க... பணக்கார நாடுகள்ல முதலிடம் பிடிச்சிருக்கு சுவிட்ஸர்லாந்து.
ஏன்னா... உலகத்துல இருக்க எல்லாப் பணக்காரனும் சுவிட்ஸர்லாந்து நாட்டு வங்கிகள்ல... தங்களோட பணத்தை பதுக்கி வச்சிருக்காங்க. ஆனா சுவிட்ஸர்லாந்தோட மக்கள் தொகை ரொம்பக் கம்மி. அந்நியப்பணம் மூலமா வர்ற வருமானத்த டிவைட் பண்ணினா... அந்த நாட்டோட ஒவ்வொரு குடிமகனுக்கும் 60 ஆயிரம் டாலர் ஆண்டு வருமானமா இருக்கு.
அமெரிக்காவுல ஒரு தனிநபரோட ஆண்டு வருமானம் 53 ஆயிரம் டாலர். நம்ம நாட்டுல தனிநபர் ஆண்டு வருமானம் 1800 டாலர்கள் மட்டுமே. அதாவது... ஒரு லட்ச ரூபாய்.
60 சதவிகிதம் மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ இருக்க இந்த நாட்டுல.... GROSS DOMESTIC PRODUCT... அதாவது... இந்தியாவோட தேசிய உற்பத்தி வரும்படியைச் செய்றவங்க. ஒட்டுமொத்த மக்கள் தொகையில் ஒரே ஒரு சதவிகிதத்தினர் மட்டும்தான்.
"அதுதான் தெரியுமே... அந்த ஒரு சதவிகிதத்துல சிலரும் லண்டனுக்கு ஓடிட்டாங்க'னு நீங்க சொல்றது கேட்குது.
இந்தக் கணக்க விடுங்க... ஒவ்வொரு குடிமகனோட மதிப்பையும் வேற மாதிரி பார்க்கலாம்.
ஒரு இந்திய பிரஜைக்கு இந்திய அரசாங்கம் எவ்வளவு செலவளிக்கத் தயாரா இருக்கு?
ஒரு மனுஷன் பிறக்குறதுலருந்து... உயிர் காக்கும் மருத்துவம், கல்வி, பள்ளிக்கூட குழந்தைகளுக்கு உணவு, பராமரிப்பு... இதெல்லாம் அரசாங்கத்தோட பொறுப்பு அப்படீங்கிறது பேப்பர்ல இருக்கு. இந்தக் கணக்குப்படி பார்த்தா... ஒவ்வொரு குடிமகனுக்கும் அவனோட வாழ்நாள்ல அரசாங்கம் சிலபல லட்சங்களை செலவு பண்ணணும். பேப்பர்ல இப்படி ஒரு பிரஜைக்கு சில பல லட்ச மதிப்பு இருந்தாலும்... நடைமுறைல என்ன மதிப்பு?
ஒரு இருபது ரூபா நோட்டுத்தாள்ல அடங்கீருதுங்கிறதுதான் இன்றைய கசப்பான உண்மை.
இன்னிக்கி... இந்திய குடிமகனோட வாழ்க்கைக்கு விலை சொல்றதவிட... அவனோட மரணத்துக்கு விலை சொல்றதைத்தான் நடைமுறைல பார்க்கிறோம்.
ஓகி புயல்ல சிக்குனா... அதுவும் பாடி கிடைச்சா... ரெண்டு லட்சம், பாடி கிடைக்கலேன்னா... தற்காலிக உதவித் தொகையோட போயிடுது. இறந்தது மீனவனா இருந்தா மூணு லட்சம், விவசாயியா இருந்தா ரெண்டரை லட்சம். பொதுவா வேற வகைல உயிர் போனா... ஒரு லட்சம்னு மெனு காடு போட்டு, உயிர்களுக்கு விலை வச்சிருக்கு அரசாங்கம்.
உயிரோட இருக்கிறவங்களுக்கு... என்ன விலை?
இப்ப தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிரா போராட்டம் வெடிச்சிருக்கு. இந்த தொழிற்சாலை தொடங்கப்பட்டபோதிலிருந்தே... சுமார் 20 வருஷமா அந்த மக்கள் போராடிக்கிட்டுத்தான் இருக்காங்க.
ஒரு தொழிற்சாலை அமைக்கிறபோது... அதிலிருந்து வெளிப்படுற கழிவுகள், நச்சுவாயு, மக்களை பாதிக்காதபடி எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சிட்டுத்தான் ஆரம்பிக்கணும். ஆனா... முன்னேற்பாடுகள் செய்யாம... பிரச்சினை வந்தா கோர்ட்டுல பார்த்துக்கலாம்னு அலட்சிய மனோபாவத்தோட செயல்படுறாங்க.
போபால் விஷவாயு கசிவு சம்பவத்தால... ரெண்டு தலைமுறை உடல் ஊனமாவும், உபாதைகளோடவும் கஷ்டப்பட்டுக்கிட்டிருக்காங்க. இந்த வழக்குல 25 வருஷ சட்டப் போராட்டத்துக்குப் பிறகு... அந்த மக்களுக்குக் கிடைச்ச நிவாரணம் என்ன?
ஏதோ பாக்கெட்மணி தர்ற மாதிரி... பாதிக்கப்பட்டவங்களுக்கு தலா ரெண்டாயிரத்து ஐநூறு ரூபா கிடைச்சது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரா மக்கள் வீதியில இறங்கிப் போராடுறாங்க. இந்த விஷயத்துலயும் சட்டப்படி கோர்ட்டுலதான் முடிவாகும்.
(ஸ்டெர்லைட் சம்பந்தமா முழு விவரங்களை சேகரிச்சுக்கிட்டிருக்கேன். அதை அடுத்த கட்டுரைல எழுதுறேன்)
கோர்ட்டு மக்களுக்கு சாதகமான தீர்ப்பச் சொன்னாலும்... அதை செயல்படுத்துவாங்களா? அதுலயும் அரசியல் பண்ணுவாங்களாங்கிறதுக்கு சமீபத்திய உதாரணம்... காவிரி மேலாண்மை வாரியம்.
"காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கணும்'னு உச்ச நீதிமன்றம் சொல்லியும், அதுக்கு மரியாதை கொடுக்கமாட்டேங்குறாங்க.
கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கு. தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி... காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கிறத தள்ளிப் போட்டுரலாம்னு சாக்கு தேடிக்கிட்டுருந்த அரசியல் கட்சிகளுக்கு ஆப்பு வச்சமாதிரி... "தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தாலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தடையில்லை'னு தேர்தல் கமிஷன் சொல்லிருச்சு. "எங்க மேல பழியை போட்டு மக்களை ஏமாத்தாதீங்க'னு இதைவிட தெளிவா எப்படிச் சொல்ல முடியும்? இருந்தாலும் அதுக்காக உடனே நம்மஆட்கள் எதையும் செஞ்சுருவாங்கன்னு நினைக்காதீங்க.
இங்க பி.ஜே.பி.க்கும், காங்கிரஸுக்கும் பெரிசா செல்வாக்கும் இல்ல... வாக்கும் இல்ல. கழகங்களை கெஞ்சிக் கூத்தாடினாத்தான் ஒண்ணு, ரெண்டு ஸீட்டு கிடைக்கப்போகுது. இத நம்பி கர்நாடகத்த விட்டுட முடியுமா? கர்நாடகத்த தன்வசப்படுத்திடணும்னு பி.ஜே.பி.யும், கைல இருக்க ஆட்சி அதிகாரத்த தக்க வச்சுக்கணும்னு காங்கிரஸும் போராடிக்கிட்டிருக்கு.
லிங்காயத்துகளை ஒரு புது மதமாகவே அங்கீகரிச்சு... மதவாத அரசியல் பண்ணிக்கிட்டிருக்கு காங்கிரஸ். இன்னொரு பக்கம் கர்நாடகத்தோட தோழனா தன்னை பிரகடனப்படுத்திக்கிட்டிருக்கு பி.ஜே.பி... (இந்த பதட்டத்துல, கர்நாடகாவின் ஊழல் மிகுந்த ஆட்சி siddharaamiah ஆட்சின்னு சொல்ல வந்த அமித்ஷா வாய் குழறி... "பி.ஜே.பி.யின் பழைய முதலமைச்சர் எடியூரப்பா ஆட்சிதான்'னு வாக்குமூலம் குடுத்த காமெடி வேற அரங்கேறியிருக்கு. செயல் தலைவர்னா எங்கேயுமே tongue slippuதான் போல).
தமிழ்நாட்டுல தேசிய கட்சி ஆட்சி இல்லாததால நாம சந்திக்கிற பிரச்சினைகள் நிறைய. தமிழனுக்கு வலிச்சா... காங்கிரஸுக்கோ, பி.ஜே.பி.க்கோ வலிக்காது. ஆனா... கன்னடனுக்கு பிரச்சினைன்னா... ரெண்டு பேருமே அழுதுடுவாங்க.
இப்படித்தான், இவங்க இவங்க ரெண்டு பேரோட கட்டுப்பாட்டுல இல்லேங்கிறதுனால, ஆந்திராவ ரெண்டு பேருமே கைகழுவிட்டாங்க. சந்திரபாபு நாயுடு... கத்துறாரு... குரல் கொடுக்குறாரு.
ஆனா... இங்க இருக்கவங்க எப்படி குரல் கொடுப்பாங்க. அவங்க குனிஞ்சு கொடுக்கவே நேரம் சரியா இருக்குங்கிறதத்தான் நாம பார்க்குறோமே? எப்பவாவது காவிரியில வர்ற தண்ணி மாதிரி... ‘"வாரியம் அமைங்க'னு தீனமா குரல் கொடுக்குறாங்க. ஒரு முக்கிய அமைச்சர்... ‘"கெடு முடியிற வரைக்கும் காவிரி விஷயத்துல வெய்ட் பண்ணுவோம்'னு வெட்கமே இல்லாம பேட்டி கொடுக்குறார். இப்போ கெடு முடிஞ்சே போச்சு. அடுத்து என்ன சாக்கு சொல்லப் போறீங்க?
ஏன்? இப்ப "காவிரி... காவிரி'னு கத்துற எதிர்க்கட்சிகள் ஆட்சியில இருந்தப்ப என்ன செஞ்சாங்களாம்?
"எங்களால பிரச்சினை வராது'னு சொன்ன தேர்தல் கமிஷனுக்கு இருக்க அக்கறை இவங்களுக்கு இல்ல.
இப்ப ஸ்டெர்லைட்டை எதிர்த்து தூத்துக்குடி மக்களும், ஹைட்ரோ கார்பன் விஷயத்துல நெடுவாசல் மக்களும், நியூட்ரினோ விஷயத்துல தேனி மக்களும், தமிழகம் முழுக்க விவசாய மக்களும் போராடிக்கிட்டிருக்காங்க. ஒட்டுமொத்த தமிழகமும் வீதியில இறங்கி போராடுற அளவுக்கு கொண்டு வராதீங்க. அதுக்கு முன்னாடி... சட்டப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைச்சிடுங்க. இல்லேன்னா... வரப்போற வெய்யில் காலத்தின் உக்கிரத்தவிட... தமிழனின் கோபம் உக்கிரமா இருக்கும்ங்கிறத காமிக்கிற நாள் வெகு தொலைவில் இல்லை.