சோத்துக்கட்சி! -கஸ்தூரி(35)

kasturi

(39) இதுதான் காதலா?

கிருஷ்ணகிரியில அதியமான் மகளிர் கல்லூரி மகளிர்தின விழாவுக்கு தலைமை விருந்தினரா பங்கேற்கப்போற வழியில... வேலூர் மாவட்டம் திருப்பத்தூர்ல சேதப்படுத்தப்பட்ட பெரியார் சிலையைப் பார்க்க என்னோட கறுப்புச் சட்டையப் போட்டுக்கிட்டுப் போயிருந்தேன். "பெரியார் சிலையைப் பாதுகாக்குறோம்'னு சொல்லி... அந்தச் சிலையை முழுக்க படுதா போட்டு கட்டி மூடி வச்சிருந்தாங்க. இதுதான் காலங்காலமா சட்டம்-ஒழுங்கு நடைமுறையா இருக்கு.

பெரியார் சிலைக்கு ஆபத்துன்னா... அந்தச் சிலைய சேதப்படுத்த வந்தவனை பிடிக்கிறதில்ல. சிலையை படுதா போட்டு மூடிடுறது. பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லேன்னா... பெண்களை தொந்தரவு பண்ற விஷமிகளைப் பிடிக்கிறதில்ல. பெண்ண வீட்டுல பூட்டி வச்சிடுறது. பெரியாருக்கே படுதா போடுறவங்க, பொண்ணுக்கு போடமாட்டாங்களா... என்ன?

"பெரியார் சிலையையே இப்படி மூடி, கட்டி வச்சிருக்காங்களே?'னு யோசிச்சாலும்... பெண்கள் உரிமைக்காக பாடுபட்ட பெரியார்... இப்ப பெண்களுக்கு எதிரா நடக்குற செயல்களால வேதனைப்பட்டு... தானே... கண்களை மூடிக்கத்தான் செய்வார்.

மகளிர் தினத்துக்கு முன்னாடியும், பின்னாடியும் மனம் வெதும்பிப்போகக் கூடிய சம்பவங்கள் நடந்திருக்கு.

பெண்களுக்கு எதிரான இப்படியான தொடர் வன்முறைகளுக்கு என்ன காரணம்?

"சாதிதான் காரணம்', ‘"சினிமாதான் காரணம்...' இப்படி ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு இடத்தை நோக்கி பழியப் போட்டுட்டு... அவங்களோட வேலயப் பார்க்கப் போயிருவாங்க.

ஆனா... போன உயிர் திரும்ப வருமா?

இது... ஏதோ ஒண்ணுமேல பழியப் போடுற பிரச்சினை இல்ல. ஒட்டுமொத்த சமூகத்தோட பிரச்சினை.

"ஒரு பெண் நடுராத்திரியிலயும்... என்னைக்கி பாதுகாப்பா நடமாட முடியுதோ... அன்னிக்குத்தான் உண்மையான சுதந்திரம்'னு காந்தி சொல்லீட்டுப் போய்ட்டா

(39) இதுதான் காதலா?

கிருஷ்ணகிரியில அதியமான் மகளிர் கல்லூரி மகளிர்தின விழாவுக்கு தலைமை விருந்தினரா பங்கேற்கப்போற வழியில... வேலூர் மாவட்டம் திருப்பத்தூர்ல சேதப்படுத்தப்பட்ட பெரியார் சிலையைப் பார்க்க என்னோட கறுப்புச் சட்டையப் போட்டுக்கிட்டுப் போயிருந்தேன். "பெரியார் சிலையைப் பாதுகாக்குறோம்'னு சொல்லி... அந்தச் சிலையை முழுக்க படுதா போட்டு கட்டி மூடி வச்சிருந்தாங்க. இதுதான் காலங்காலமா சட்டம்-ஒழுங்கு நடைமுறையா இருக்கு.

பெரியார் சிலைக்கு ஆபத்துன்னா... அந்தச் சிலைய சேதப்படுத்த வந்தவனை பிடிக்கிறதில்ல. சிலையை படுதா போட்டு மூடிடுறது. பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லேன்னா... பெண்களை தொந்தரவு பண்ற விஷமிகளைப் பிடிக்கிறதில்ல. பெண்ண வீட்டுல பூட்டி வச்சிடுறது. பெரியாருக்கே படுதா போடுறவங்க, பொண்ணுக்கு போடமாட்டாங்களா... என்ன?

"பெரியார் சிலையையே இப்படி மூடி, கட்டி வச்சிருக்காங்களே?'னு யோசிச்சாலும்... பெண்கள் உரிமைக்காக பாடுபட்ட பெரியார்... இப்ப பெண்களுக்கு எதிரா நடக்குற செயல்களால வேதனைப்பட்டு... தானே... கண்களை மூடிக்கத்தான் செய்வார்.

மகளிர் தினத்துக்கு முன்னாடியும், பின்னாடியும் மனம் வெதும்பிப்போகக் கூடிய சம்பவங்கள் நடந்திருக்கு.

பெண்களுக்கு எதிரான இப்படியான தொடர் வன்முறைகளுக்கு என்ன காரணம்?

"சாதிதான் காரணம்', ‘"சினிமாதான் காரணம்...' இப்படி ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு இடத்தை நோக்கி பழியப் போட்டுட்டு... அவங்களோட வேலயப் பார்க்கப் போயிருவாங்க.

ஆனா... போன உயிர் திரும்ப வருமா?

இது... ஏதோ ஒண்ணுமேல பழியப் போடுற பிரச்சினை இல்ல. ஒட்டுமொத்த சமூகத்தோட பிரச்சினை.

"ஒரு பெண் நடுராத்திரியிலயும்... என்னைக்கி பாதுகாப்பா நடமாட முடியுதோ... அன்னிக்குத்தான் உண்மையான சுதந்திரம்'னு காந்தி சொல்லீட்டுப் போய்ட்டாரு. ஆனா... இன்னைக்கி வரைக்கும்... பட்டப்பகல்லகூட ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லாத... உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலமைலதான் இருக்கிறோம். இதச் சொன்னா... அறிவு ஜீவிகள் என்ன கேட்குறாங்க... ‘"பெண்கள் மட்டும்தான் கொலையாகுறாங்க... அவங்க தப்பு பண்ணாமலா இப்படி நடக்குது?'னு கேட்குறாங்க.

பெண்கள் மேல தப்பாவே இருக்கட்டும்.

"தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன்'ங்கிற மாதிரி... மரண தண்டனை கொடுக்க இவங்க யாரு? ஆணவக் கொலைகள்ல பலவகை உண்டு. அதுல தனிமனித ஈகோ கொலைகளும் ஒரு வகை.

‘பெண்ணுங்கிற ஒரு பொருள். அது நமக்கு கிடைக்கலேன்னா... வேற யாருக்கும் கிடைக்கக்கூடாதுங்கிற மனப் பிறழ்வுனால இந்த அநியாயம் நடக்குது.

ஒரு பெண் தன்னை நிராகரிக்கிற யதார்த்தமான விஷயம்... நிராகரிக்கப்படுறவனோட மனசுல... ஒப்புக்கொள்ள முடியாத குற்றமா படுதுன்னா... இது மனப் பிறழ்வு இல்லாம வேற என்ன?

தன்னை நிராகரிச்சவளுக்கு எதிரா... மொட்டக்கடுதாசி போடுறது... கல்யாணத்துல வந்து கலாட்டா பண்றது... ஆசிட் வீசுறது... கொல பண்றது... இது எவ்வளவு பெரிய அவலம்?

எங்கோ ஒரு சம்பவம் இப்படி நடந்தா... அதை தனி மனித அவலமா பார்க்கலாம். ஆனா... ஏழு வயசு சிறுமியிலருந்து ஆரம்பிச்சு... பெண்ணா பிறந்தாலே... உயிருக்கும், மானத்துக்கும் உத்தரவாதம் இல்லேன்னா... இத ஒட்டுமொத்த சமூகத்தோட அவலமாத்தானே பார்க்க முடியும்?

மகளிர் தினத்தன்னைக்கி... விலையக் குறைச்சு... புடவையும், தங்கமும் விற்பனை பண்றது ஒரு சாதனை கிடையாது. ஒவ்வொருநாளும் மகளிரோட கௌரவத்துக்கு குறைவு ஏற்படாம பார்த்துக்கிறதுதான் சாதனை.

சென்னை கல்லூரி மாணவி அஸ்வினி கொலை செய்யப்பட்ட சம்பவத்துல... "அஸ்வினியும், அழகேசனும் அஞ்சு வருஷமா காதலிச்சாங்க. அதனால எல்லா தப்பும் இவன்மேல மட்டும் இல்ல'னு.... அவன் தரப்புல ஒரு பெண்ணே... பாசம் கண்ண மறைக்கிறதுனால... இப்படிச் சொல்லீருக்காங்க.

kasturiஉசுருக்கு உசுரா அஞ்சு வருஷமா நீங்க நேசிச்ச ஒருத்திய.... அவ ஏமாத்திட்டானு நீங்க கொலைதான் பண்ணுவீங்களா? அந்தப் பெண் ஏமாத்திட்டதாவே வச்சுக்குவோமே... அந்தப் பெண் துரோகம் செஞ்சிட்டதாவே வச்சுக்குவோமே... அந்தத் துரோகத்துக்கு கொலைதான் செய்வீங்களா? பழிவாங்குறதுதான் ஆண்மையா? ஏமாற்றத்த தாங்கிக்கிற மனவளர்ச்சி இல்லாதவனுக்கு காதல் ஒரு கேடா? அன்றாடம் நமக்கு ஏற்படுற அநீதிகள... அரிவாளாலதான் தட்டிக் கேட்போம்னு ஆரம்பிச்சா... தமிழ்நாட்டுல தண்ணியே இல்லாத ஆறுகள ரத்தத்தால ரொப்பிடுவோமே...

"இதனாலதான் அவன் கொலை செய்ய உந்தப்பட்டான்'ங்கிற வாதமே தப்பா இருக்கே?

தற்காப்புக்காகவும், போர்க்களத்துலயும் கொலை செய்றதுக்கு உந்தப்படலாம்.

(உயிர் வாழ்றதுக்காக... பசிக்காக... பிற உயிரினங்களைக் கொல்லலாம்.’"கொன்றால் பாவம் தின்றால் போச்சு'னு சமூகம் இத ஏத்துக்கிச்சு. இறைச்சிக்காக கொல்றதையும் "பாவம்... உயிர் வதை'னு நினைச்சதாலதான்... சைவ சித்தாந்தம் உருவாச்சு. இறைச்சிக்காக ஒரு ஆட்டை கொல்றப்ப கூட... இறைவனிடம் வருத்தம் தெரிவிக்காம... உரிய முறைப்படி வெட்டக்கூடாதுங்கிறதுனாலதான் "ஹலால்' செய்யணும்னு இஸ்லாம் மார்க்கம் சொல்லுது. ஒவ்வொரு மதமுமே உயிர்கள மதிக்கத்தான் கத்துக் கொடுத்திருக்கு.)

இதைத் தவிர... தனிமனிதனுக்கு கொலை செய்ய எந்த உரிமையும், நியாயமும் கிடையாது.

இந்த உலகத்துல உருவாகுற எல்லா உயிரினங்களுக்குமே முதல் உரிமை... உயிர் வாழ்ற உரிமைதான்.

அந்தப் பெண் வாழ்றதுக்கு தகுதியற்றவளாகூட இருக்கட்டுமே... "அவ ஒரு துரோகக்காரி... அவங்க அம்மா ஒரு ஏமாற்றுக்காரி'னு அவன் சொல்ற மாதிரியே இருக்கட்டுமே... தண்டனை கொடுக்க இவன் யாரு? தான் காதலிச்சவ, தன்னை நிராகரிச்சாலும் "அவ எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும்'னு நினைக்கிறதுதான் உண்மையான காதல். ‘"எனக்குக் கிடைக்காதவ யாருக்கும் கிடைக்கக்கூடாது'னு நினைக்கிறது வக்ரம். அத எப்படி காதல்னு ஒத்துக்க முடியும்?

விக்ரமன் டைரக்ட் பண்ணின "உன்னை நினைத்து'’படத்துல... சூர்யா, லைலா தன்னை காதலிப்பதா நினைச்சு லைலாவோட படிப்புக்கு பண உதவி செய்வார். லைலா டாக்டரானதும்... அந்தஸ்தான மாப்பிள்ளையை திருமணம் செய்துவைக்க முடிவு செய்வாங்க லைலாவோட வீட்டார். லைலாவும் சம்மதிச்சு... சூர்யாவை கழட்டி விட்டுடுவார். அதுக்காக சூர்யா ஆசிட் அடிக்கல. அரிவாள எடுக்கல. தன் விதியை நொந்துக்கிட்டு விலகிப்போவார். அதுக்கப்புறம்... சூர்யாவ, சிநேகா காதலிப்பாங்க. சூர்யாவோட அருமை தெரிஞ்ச லைலா, சூர்யாவையே திருமணம் செஞ்சுக்க விரும்பி வருவார். ‘"உனக்கு ஒரு நல்ல நிலமை கிடைச்சதும் நீ என்னை வேணாம்னு சொன்னப்போ... என்னை விரும்பி ஒருத்தி வந்தா. இப்ப எனக்கு ஒரு நல்ல நிலமையா... நீ கிடைக்கிறேங்கிறதுக்காக நான் அந்தப் பொண்ண கைவிட முடியாது. நீ எனக்கு துரோகம் பண்ணினது பெரிய விஷயமில்ல. ஆனா... நான் அந்தப் பொண்ணுக்கு துரோகம் செய்யமாட்டேன்'னு சொல்வார் சூர்யா.

அழகேசனும் அஸ்வினி விஷயத்துல அப்படி ஒரு கதைதான் (படிக்க வச்சதா) சொல்றார்.

சினிமாதான் எல்லா பிரச்சினைக்கும் காரணம்னு சொல்றாங்க. இந்தப் படம் நல்ல விஷயத்தத்தான சொல்லுச்சு. இந்தப் படத்துல சூர்யா நடந்துக்கிட்ட மாதிரி ஏன் அவன் நடந்துக்கல?

"பொம்பளைங்க காதலத்தான் நம்பிவிடாதே'னு அதுல ஒரு பாட்டு வரும். அப்ப சிநேகா கேரக்டர் வந்து, "ஏன் எல்லாப் பெண்களும் அப்படித்தான் இருப்பாங்களா?'னு கத்தும். இது ரொம்ப பாஸிடிவ்வான படம். எனக்கு ரொம்பப் பிடிச்ச படம்.

யாருக்குங்க காதல் தோல்வி இல்ல.

சைக்கோத்தனத்த எந்த நியாயத்தைச் சொல்லியும் நியாயப்படுத்த முடியாது.

இங்க மாற வேண்டியது பெண்கள் இல்ல. ஆண்கள்தான்.

வீட்டுல பெண்கள வளர்க்கிறதுல காட்டும் கவனத்துல, பத்து சதவிகிதம் ஆண்குழந்தைகளை வளர்க்கிறதிலயும் காட்டணும். ‘"அதோ அந்தப் பெண்களும் உன் தாய் மாதிரி... சகோதரி மாதிரி'னு சொல்லி வளர்க்கணும். சேல கட்டீருந்தாலும், சல்வார் அணிஞ்சிருந்தாலும், ஷார்ட்ஸ் போட்டிருந்தாலும் ஒரு பெண் என்பவள் தாய்தான்... சகோதரிதான்னு பார்க்க கத்துக் குடுங்க.

எந்தப் பொண்ணயுமே சொந்தமாக்கிக்கப் பார்க்காம... சொந்தக்காரங்களா பார்க்க கத்துக் குடுங்க.

கர்மவீரர்’ காமராஜர் பேரை வச்சதுனாலயோ என்னவோ... திருச்சியில அந்த டிராஃபிக் போலீஸ் இன்ஸ்பெக்டர்... அப்படியே கடமைவீரரா மாறி... ஹெல்மெட் அணியாம போனவர பிடிச்சு... சட்டத்த நிலைநாட்டுறதுக்காக உஷாவும், அவரோட கணவரும் போன பைக்க துரத்தினாரா?

எதுக்காக துரத்தினார்னு நம்ம எல்லாருக்கும் தெரியாதா என்ன?

"நாம நிறுத்தச் சொல்லியும் நிறுத்தாம போறானே...'ங்கிற அந்த செகண்ட்ல இன்ஸ்பெக்டருக்கு வந்த வேகம்தான் இந்த விபரீதத்துக்கு காரணம். பைக்க துரத்திப்போய் எட்டி உதைச்சதுல... தம்பதி கீழ விழுந்ததுல... கர்ப்பிணிப் பெண் உஷா இறந்துவிட்டார்.

"இப்படி நடக்கும்'னு அந்த அதிகாரி எதிர்பார்த்திருக்கமாட்டார். எதிர்பாராத விபத்தா அது நடந்துபோச்சு. உயிரை எடுக்கணும்கிறது அவரோட நோக்கமில்ல. ‘பிடிக்கணும்னு நினைச்ச அவரோட கோபம்... எதிர்பாராம... உயிர்ப்பலியில முடிஞ்சுபோச்சு.

போக்குவரத்து போலீஸோட வழக்கமான ஒரு செயல் வழக்கத்துக்கு மாறா நடந்துபோச்சு.

அந்த கர்ப்பிணிப்பெண் எத்தனை... எத்தனை கனவுகளுடன் இருந்தாரோ... நான் என்னோட ஆழ்ந்த இரங்கலை தெரிவிச்சுக்கிறேன்.

(அடுத்த விஷயத்தை ஒரு இதழ் விட்டு மறு இதழில் எழுதுகிறேன்!)

kasthuri
இதையும் படியுங்கள்
Subscribe