சோத்துக்கட்சி-கஸ்தூரி (44)

kasthuri

(44) கண்மூடித்தனம்!

காபாரதத்துல, பாண்டவர்களோட தகப்பன் பாண்டு, ஒரு நாள் காட்டுல வேட்டையாடப் போனவன்... சந்தோஷமா பிணைஞ்சுக்கிட்டுருந்த ஒரு ஜோடி மானை, ஏதோ புதிய விலங்குன்னு நினைச்சு அம்பு எஞ்சுட்டான். அந்த மான்கள் உண்மையில, ஒரு ரிஷியும் அவர் பத்தினியும். ""தாம்பத்தியத்துல சந்தோஷமா இருந்தப்போ எங்களை கொன்ன உனக்கு, தாம்பத்யமே கூடாது. மனைவியை தொட்ட உடனே செத்துருவே'' அப்பிடின்னு சபிச்சாரு அந்த ரிஷி.

மான கொன்னவனுக்கு தண்டனை எப்பிடி இருக்கு பார்த்தீங்களா மகாபாரதத்துல?

ஆனா இன்னிக்கு பாரதநாட்டுல மான கொன்ன சூப்பர் நடிகருக்கு என்ன தண்டனை? பெரிசா ஒண்ணுமில்லை. அவரு ஜாலியா வெறும் அம்பதாயிரம் கட்டிட்டு அடுத்த டூயட்டை பாடப் போயிட்டாரு.

இருபது வருஷத்துக்கு முன்னால ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு படப்பிடிப்புக்கு போன சல்மான்கான் கைய சும்மா வச்சுக்காம... மான் வேட்டையாடினார்.

kasthuri

ஆங்கிலேயர் காலத்துல, பரங்கிக்கு அடிபணிஞ்சு போர் எதுவும் இல்லாம காலம் கடத்துன மன்னர்கள் "வாயில்லா பிராணிகளை வேட்டையாடுறதை' அவங்க வீர தீர ப்ரதாபத்துக்கு தீனியா கருதினாங்க.. அவங்க புண்ணியத்துல, இந்தியா முழுக்க பல வனவிலங்குகள் கூண்டோட அழிஞ்சு போற நிலைமைக்கு வந்துட்டு.

நாடு முழுக்க ஒரு காலத்துல கோலோச்சின எத்தனையோ மிருகங்கள்- பெங்கால் டைகர்ஸ் ஆகட்டும், கீர் ஃபாரஸ்ட் சிங்கங்களாகட்டும், அசாம் காண்டாமிருகமாகட்டும், எண்ணிக்கையில் பகீர்னு குறைஞ்சிருச்சு.. இயற்கை வளத்தை அழிச்சிக்கிட்டிருக்க மாதிரியே... நம்மளோட வன விலங்குகள் வளத்தையும் அழிச்சுக்கிட்டே இருக்கோம். சைலன்ட் வேலி... எனப்படுற அமைதிப் பள்ளத்தாக்கில் ஆயிரக்கணக்கிலான அரிய விலங்குகள், பூச்சிகள், தாவரங்கள் அபாய கட்டத்துல இருக்கு.

இந்தியாவுல விலங்குகள் வேட்டையாட இந்திராகாந்தி அம்மையார் 1972-ல தடை செஞ்சாங்க. இந்தியாவில் வேட்டையாடுறது குற்றம். அதிலயும்... அழிவுநிலைல இருக்க விலங்குகளை வேட்டையாடுறது பெரிய குற்றம்.

இப்பதான் விலங்குகள் பாதுகாப்புல ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கு.

(44) கண்மூடித்தனம்!

காபாரதத்துல, பாண்டவர்களோட தகப்பன் பாண்டு, ஒரு நாள் காட்டுல வேட்டையாடப் போனவன்... சந்தோஷமா பிணைஞ்சுக்கிட்டுருந்த ஒரு ஜோடி மானை, ஏதோ புதிய விலங்குன்னு நினைச்சு அம்பு எஞ்சுட்டான். அந்த மான்கள் உண்மையில, ஒரு ரிஷியும் அவர் பத்தினியும். ""தாம்பத்தியத்துல சந்தோஷமா இருந்தப்போ எங்களை கொன்ன உனக்கு, தாம்பத்யமே கூடாது. மனைவியை தொட்ட உடனே செத்துருவே'' அப்பிடின்னு சபிச்சாரு அந்த ரிஷி.

மான கொன்னவனுக்கு தண்டனை எப்பிடி இருக்கு பார்த்தீங்களா மகாபாரதத்துல?

ஆனா இன்னிக்கு பாரதநாட்டுல மான கொன்ன சூப்பர் நடிகருக்கு என்ன தண்டனை? பெரிசா ஒண்ணுமில்லை. அவரு ஜாலியா வெறும் அம்பதாயிரம் கட்டிட்டு அடுத்த டூயட்டை பாடப் போயிட்டாரு.

இருபது வருஷத்துக்கு முன்னால ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு படப்பிடிப்புக்கு போன சல்மான்கான் கைய சும்மா வச்சுக்காம... மான் வேட்டையாடினார்.

kasthuri

ஆங்கிலேயர் காலத்துல, பரங்கிக்கு அடிபணிஞ்சு போர் எதுவும் இல்லாம காலம் கடத்துன மன்னர்கள் "வாயில்லா பிராணிகளை வேட்டையாடுறதை' அவங்க வீர தீர ப்ரதாபத்துக்கு தீனியா கருதினாங்க.. அவங்க புண்ணியத்துல, இந்தியா முழுக்க பல வனவிலங்குகள் கூண்டோட அழிஞ்சு போற நிலைமைக்கு வந்துட்டு.

நாடு முழுக்க ஒரு காலத்துல கோலோச்சின எத்தனையோ மிருகங்கள்- பெங்கால் டைகர்ஸ் ஆகட்டும், கீர் ஃபாரஸ்ட் சிங்கங்களாகட்டும், அசாம் காண்டாமிருகமாகட்டும், எண்ணிக்கையில் பகீர்னு குறைஞ்சிருச்சு.. இயற்கை வளத்தை அழிச்சிக்கிட்டிருக்க மாதிரியே... நம்மளோட வன விலங்குகள் வளத்தையும் அழிச்சுக்கிட்டே இருக்கோம். சைலன்ட் வேலி... எனப்படுற அமைதிப் பள்ளத்தாக்கில் ஆயிரக்கணக்கிலான அரிய விலங்குகள், பூச்சிகள், தாவரங்கள் அபாய கட்டத்துல இருக்கு.

இந்தியாவுல விலங்குகள் வேட்டையாட இந்திராகாந்தி அம்மையார் 1972-ல தடை செஞ்சாங்க. இந்தியாவில் வேட்டையாடுறது குற்றம். அதிலயும்... அழிவுநிலைல இருக்க விலங்குகளை வேட்டையாடுறது பெரிய குற்றம்.

இப்பதான் விலங்குகள் பாதுகாப்புல ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கு. விலங்குகளை கண்காணிக்க... விலங்குகளோட கால்லயும், காதுலயும் காப்பு மாட்டிவிட்டிருக்காங்க. (இன்னமும்கூட உலகம் முழுக்க மொத்தமே 2500 பெங்கால் டைகர்ஸ்தான் இருக்கு. ஏசியன் எலிபென்ட்ஸ் உலகம் முழுக்க ஐம்பதாயிரம்தான் இருக்கு... யானைகளுக்கு பேர்போன இந்தியாவுலயும், இலங்கையிலயும் யானைகள் இனம் மிக மோசமான அழிவை நோக்கி போய்க்கிட்டிருக்குனு அதிர்ச்சிகரமான ஓர் ஆய்வறிக்கை சொல்லுது.)

இப்படி ஓர் இனஅழிவு விளிம்பு நிலைலதான் சிங்காரா -பிளாக்பக் மான் வகைகள் இருக்கு.

போன கட்டுரைல "இந்தியாவுல மனித உயிர்களுக்கு என்ன விலை?'னு எழுதியிருந்தேன்.

இந்தியாவுல 120 கோடி மனித உயிர்கள்ல ஓர் உயிர் போனாலும் அதுக்கு நாம எப்படி ரியாக்ட் பண்றோம்? அப்படி இருக்கும்போது... சுமார் ஆறாயிரம் எண்ணிக்கை மட்டுமே இருக்க அந்த அபூர்வ மான் இனத்துல ஓர் உயிர்போனா... ஒரு தலைமுறையே அழிஞ்சதுக்கு சமம்.

ரெண்டு மான்களை கொன்னுருக்கார் சல்மான்... என்பது குற்றச்சாட்டு.

இது ஒரு படுகொலைக்குச் சமம்தான். "முதல்ல... மான்களைக் கொல்லல'னு சாதிச்சாரு. ஆனா... அங்கிருந்த பிஷ்னோய் பழங்குடி இன மக்கள்... அங்கிருக்க விலங்குகளை... குறிப்பா மான்களை தெய்வம் மாதிரி வணங்குறாங்க. வழி தவறி வர்ற மான் குட்டிகளுக்கு அந்தஇனப் பெண்கள் தங்களோட மார்பில் பால் புகட்றாங்கன்னா... அவங்க எந்த அளவுக்கு, அந்த மான்களை நேசிக்கிறாங்கனு தெரியும். சல்மான் மீது அந்த மக்கள் கொடுத்த புகாரை முதல்ல போலீஸார் வாங்க மறுத்திட்டாங்க. ஆனா அந்த மக்கள்... "புகாரை பதிவு செய்யாதவரை இங்கேயே தர்ணா பண்ணுவோம்'னு சொன்ன பிறகுதான் புகாரை பதிவு செஞ்சாங்க.

வழக்கு கோர்ட்டுக்குப் போச்சு.

கோர்ட்டுக்குப் போனாத்தான் தெரியுமே... ஆற அமர இருபது வருஷம் விசாரிச்சாங்க. (இந்த கேப்ல... பிளாட்ஃபார்ம்ல படுத்திருந்தவங்கமேல காரை ஏத்தி... டச் விட்டுப்போகாம இருந்தார் சல்மான்.) இந்த நீண்டகால விசாரணைல... போலீஸ்தரப்பு, அரசு வக்கீல் தரப்பு, சாட்சிகள் தரப்பு, வனத்துறை தரப்பு... எல்லாருமே கிட்டத்தட்ட பல்டி அடிச்சபோதும்... புகார் கொடுத்த பிஷ்னோய் மக்கள் மூன்று பேர்கள் மட்டும்... மிரட்டலுக்கும், ஆசை வார்த்தைக்கும் அடிபணியாம... ஸ்ட்ராங்கா இருந்தாங்க. அந்த உறுதியிலதான் ஜோத்பூர் நீதிமன்றம் சல்மானுக்கு அஞ்சு வருஷம் தண்டனை விதிச்சது.

(தீர்ப்பு கொடுத்த நீதிபதிய எந்த காரணமும் சொல்லாம இடமாற்றம் செஞ்சுட்டாங்க. ஜாமீன் வழக்குலயும் ஜுட்ஜ்க மாத்திட்டாங்க. இதுக்கெல்லாம் மாட்டும் நம்ப நீதிமன்றம் வேகமா வேலை செய்யும்.)

சல்மான் எவ்வள்வு நல்லவரு? வல்லவரு? அறக்கட்டளை வச்சு மக்களுக்கு பல நல்ல காரியம் செய்றாரு... மருத்துவ உதவி மூலம் பலரை காப்பாத்தியிருக்காரு. அப்பேர்ப்பட்டவர தண்டிக்கலாமா?னு எதிர்ப்புகள்.

ஐம்பதாயிரம் பணம் கட்டியதும்... உடனே சல்மானுக்கு பெயில் கிடைச்சிருச்சு. இருந்தாலும்... ‘அவருக்கு எப்படி தண்டனை தரலாம்?’னு அவரோட லட்சக்கணக்கான ரசிகர்கள் கொந்தளிக்கிறாங்க.

லட்சக்கணக்கான கோடிகளை அடிச்சிட்டு லண்டன்ல போய் உட்கார்ந்திருக்கவனை புடிக்க துப்பில்ல... மானுக்காக சல்மானை பிடிச்சு உள்ள போடுவீங்களா? அப்படினும் கொந்தளிக்கிறாங்க. பெரிய திருடனை பிடிக்க முடியலேங்கிறதுக்காக... சின்னத்திருடனை பிடிக்கக்கூடாதுங்கிற ஓர் அபத்தமான லாஜிக்கும் பேசுறாங்க.

இதவிட உச்சகட்டமா... ‘"அவரு முஸ்லீம்கிறதுனாலதான் அவரைத் தூக்கி உள்ள போடுறீங்க?'ன்னும் கேட்டாங்க.

இதுக்கெல்லாம் காரணம்... சல்மான் மேல இருக்கக்கூடிய கண்மூடித்தனமான அபிமானம்.

கொலைகாரனைக்கூட கொண்டாடுற கூட்டத்தை என்ன சொல்லுறது? பிரபலம், பணம் இருந்தா தண்டனைக்கு அப்பாற்பட்டவர் என்கிற நெனப்பு நமக்குள்ள எப்போ புகுந்துச்சு?

தமிழ்நாட்டுலயும் இதே கதைதானே?

நீதிமன்றத்தால ஏ-1ன்னா அறிவிக்கப்பட்டவரை தியானத் தலைவியாவும், ஏ-2வ தியாகத் தலைவியாவும் கொண்டாடுறவங்கதானே. அவங்க துணிச்சல், மனஉறுதி படைத்த தலைவியாக இருந்தாங்க. ஆனா... அவங்க செஞ்ச தவறை தண்டிக்கக்கூடாதுங்கிற மனோபாவம் எந்தவிதத்துல நியாயம்?

காவிரி மேலாண்மை வாரியம் அறிவிக்கக்கோரி சினிமாத்துறை சார்புல நடந்த போராட்டத்துக்கு சினிமாவுல எல்லா யூனியன்ல இருந்தும் நடிகர்கள், இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள், டெக்னீஷியன்ஸ்... இப்படி எல்லோரும் வந்தாங்க. மதியம் தாண்டியும் கலக்கம் தெளியாத ஒருவரும், எதுக்குமே வராத ஒரு நடிகரும் மட்டும் வரல.

வந்தா அவங்களுக்கு என்ன நஷ்டம்?

"அந்த நடிகர் கலந்துக்கிற அளவுக்கு போராட்டம் இல்ல'னு அவரோட ரசிகர்கள் முட்டுக் குடுக்குறாங்க. ஒரு நடிகர் ஒரு போராட்டத்துக்கு ஏன் வரலை?னு கேட்டா... ‘"இதெல்லாம் ஒரு போராட்டமா?'னு போராட்டத்த இழிவுபடுத்துறாங்க. ரஜினி, கமல், விஜய், விஜய்சேதுபதி, சிவகார்திகேயன், தனுஷ் இவங்களோட... சினிமாவின் கடைநிலை ஊழியர் வரைக்கும் வந்தாங்க. சொல்லப்போனா, தமிழ்மொழி பேசாத நிறைய பேரு, தமிழுணர்வோட வந்திருந்தாங்க.

ஒரு போராட்டத்துல எல்லா விஷயங்களும் ஏற்புடையதா இருக்கணும்னு அவசியம் இல்ல. ஆனா... ஊர் கூடி தேர் இழுக்கும்போது, அதுக்கு துணை நிக்கணும்னு நாம நினைக்கமாட்டமா... உணர்வை மதிச்சாவது வந்திருக்கலாமே? குறைந்தபட்சம், சோறு போடற சினிமாவுக்கு நன்றியை தெரிவிக்கிற மாதிரியாவது வந்திருக்கலாம்.

"நிறையப்பேர் வரலையே? அவங்களையெல்லாம் கேட்டீங்களா?'னு சொல்றாங்க. துண்டு துக்கடா வரலேன்னா... அவங்களையெல்லாம் யாரும் கேட்கமாட்டாங்க. பெரிய ஆட்கள் வரலைங்கும்போது... கேட்கத்தான் செய்வாங்க.

எல்லாருக்குமே ரசிகர்களும், ஃபாலோயர்ஸும் இருக்க வேண்டியதுதான். ஆனா... கண்மூடித்தனமான ஃபாலோயர்ஸா இருக்கக்கூடாது. பகுத்தறிகிற விஷயத்தோட இருந்தாத்தான்... ஃபாலோயர்ஸ்ஸோட தலைவர்களுக்குக்கூட மரியாதை. இன்னைக்கி தமிழ்நாட்டுல யாரையாவது விமர்சனம் செஞ்சா... விமர்சனம் செய்றவங்கள கொச்சைப்படுத்துற நிலமை. கருத்த கருத்தால வெல்ல முடியாதவங்க... இப்படி வெறுப்பை உமிழ்வாங்க. ’வெல்ல முடியலேன்னா வெறுப்பை உமிழ்'ங்கிறது பழக்கமா இருக்கு.

அதுனாலதான் சொல்றேன் -கண்மூடித்தனமான அபிமானம், உண்மையில் அவமானம்.

"இது போராட்டமா? அது போராட்டமா?'னு கேட்கிறவங்களுக்கு நான் சொல்றேங்க...

"விளையாட்டுப் போட்டியை நடத்தக்கூடாது'னு சொல்றதைவிட... அந்த விளையாட்டை நடத்துறவங்களோட ஆதரவையும் வாங்கி நம்மோட எதிர்ப்பைத் தெரிவிச்சா நல்லாருக்கும். இதுதான் என்னோட கருத்து.

ஐ.பி.எல். போட்டிய பெரிய அளவில் பணம் கொழிக்கும் வர்த்தகமாத்தான் எல்லாரும் பார்க்குறாங்க. காவிரிக்காக போராடுற கட்சி சம்பந்தப்பட்டவங்க தரப்புல கூட ஐ.பி.எல். டீம் இருக்கு. தமிழகத்துல தொழில் செய்றவங்களுக்கு ஐ.பி.எல்.டீம் இருக்கு. இவங்கல்லாம் நம்மோட நியாயமான கோரிக்கைக்கு ஆதரவு குடுக்கணும். இதனால அவங்க்ளுக்கு எந்த நஷ்டமும் வந்திடாது.

தமிழ்நாட தாண்டி வடக்குப் பக்கம் போனா... "ஏதோ ஆத்துல தண்ணி வரலையாம்ப்பா'’என்கிற அளவுலதான் காவிரி பிரச்சினையைத் தெரிஞ்சிருக்கு. ஐ.பி.எல். மூலமா நம்மோட போராட்டம் நாடு முழுக்க பேசப்படும்னா... ஐ.பி.எல். டீம்களை வச்சிருக்க இந்தியா சிமெண்ட்ஸும், சன் டி.வி.யும் குரல் கொடுக்கலாம். அவங்க கர்நாடகத்துக்கு எதிரா பேசணும்கிற அவசியமில்லை. "சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அமல்படுத்தணும்'னு சொன்னாலே... நீதியின் பக்கம் நிற்கிறாங்கனு ஆயிடும்.

"இது விளையாட்டு. இதுல அரசியலை புகுத்தக்கூடாது'னு சொல்றவங்க... ஐ.பி.எல்.ல பாகிஸ்தான் வீரர்களைச் சேர்க்கக்கூடாதுனு சொன்னவங்கதான்.

விளையாட்டுல அரசியல்ங்கிறது... உலகம் முழுக்க இருக்கு. ரஷ்யாவுல ஒலிம்பிக் நடந்தபோது அமெரிக்காவும், அமெரிக்காவுல ஒலிம்பிக் நடந்தபோது ரஷ்யாவும் கலந்துக்கல. விளையாட்டு களத்தில் அரசியல விஷயங்களை முன்வைக்கிறது தொன்றுதொட்டு நடக்கிற விஷயம்தான். தென்னாப்பிரிக்காவுல தீண்டாமைச் சட்டம் இருந்தப்ப... கிரிக்கெட்ல தென்னாப்பிரிக்கா விளையாட தடை விதிக்கப்பட்டிருந்துச்சு. தீண்டாமை ஒழிப்பு சட்டத்துக்குப் பிறகுதான் அவங்களை ஆட அனுமதிச்சாங்க.

"நியாயமான கோரிக்கையை விளையாட்டு மூலமா சரி செஞ்சுக்கலாம்'னு இருக்கும்போது... தமிழ்நாட்டு பிரச்சினைக்கு மட்டும்... ‘விளையாட்டு தனி, அரசியல் தனின்னு சொன்னா என்ன, அர்த்தம்? இப்படிச் சொல்றவங்களோட இரட்டை வேஷத்தை மக்கள் புரிஞ்சுக்காமலா இருந்திருவாங்க?

(அடுத்த விஷயத்தை ஒரு இதழ் விட்டு மறு இதழில் எழுதுகிறேன்!)

kasthuri
இதையும் படியுங்கள்
Subscribe