(43) தினசரி போராட்டம்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க போராட்டம், நியூட்ரினோ ஆராய்ச்சிக்கு எதிரான போராட்டம், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிராக போராட்டம், கெயில் எதிர்ப்பு போராட்டம், விவசாயிகள் போராட்டம், நதிகளை இணைக்க போராட்டம், சட்டக் கல்லூரியை இடமாற்றம் செய்யக்கூடாதுனு போராட்டம், நெடுவாசல் போராட்டம்... இப்படி தமிழகம் முழுக்க பல விஷயங்களுக்காக போராட்டம்.
கூடவே...
’பட்டியல் இனத்தவர்மீது கொடுமை என்று தரப்படும் புகார்கள் மீதும், அரசு ஊழியர் மற்றும் தனிநபர் மீதும் உடனடி கைது நடவடிக்கை கூடாது என்கிற சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக சாதி அமைப்பினர் இந்தியா முழுக்க வன்முறை போராட்டம்... அதற்காக தமிழகத்திலும் போராட்டம்...
எதிர்ப்பைத் தெரிவிக்க போராடுறதுங்கிறது... ஜனநாயகம் அனுமதிச்சிருக்கிற ஒரு வழிமுறைதான். போராடுற கட்சிகளும், அமைப்புகளும் யார சாக்கா வச்சிப் போராடுறாங்க?
மக்களுக்காக போராடுறாங்க. ஆனா... அந்தப் போராட்டம் மக்களை எரிச்சல்படுத்துதுன்னா... மக்களோட அன்றாட வாழ்க்கைக்கு தொல்லை உண்டாக்குதுன்னா... அது எப்படி மக்கள் நலனுக்கான போராட்டமா இருக்க முடியும்?
மெரீனாவுல ஜல்லிக்கட்டு உரிமைக்காக பல லட்சம் மாணவர்கள், சாதாரண மக்கள், கூடி நடத்தின பல நாள் போராட்டம் உலகத்தை வியக்க வச்சது.
அதுதான் உண்மையான மக்கள் போராட்டம். அரசியல்வாதிகளை உள்ளவிடாம மக்களே நடத்தின போராட்டம்.
இப்ப மீண்டும் மக்கள் போராட்டம் வரக்கூடாதுங்கிறதுக்காக மெரீனாவை மூடிட்டாங்க.
ராணுவத்தையும், ஆயுதங்களையும் காட்டி வெள்ளையர் அரசு மிரட்டியபோது... அஹிம்சை போராட்டம் மூல
(43) தினசரி போராட்டம்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க போராட்டம், நியூட்ரினோ ஆராய்ச்சிக்கு எதிரான போராட்டம், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிராக போராட்டம், கெயில் எதிர்ப்பு போராட்டம், விவசாயிகள் போராட்டம், நதிகளை இணைக்க போராட்டம், சட்டக் கல்லூரியை இடமாற்றம் செய்யக்கூடாதுனு போராட்டம், நெடுவாசல் போராட்டம்... இப்படி தமிழகம் முழுக்க பல விஷயங்களுக்காக போராட்டம்.
கூடவே...
’பட்டியல் இனத்தவர்மீது கொடுமை என்று தரப்படும் புகார்கள் மீதும், அரசு ஊழியர் மற்றும் தனிநபர் மீதும் உடனடி கைது நடவடிக்கை கூடாது என்கிற சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக சாதி அமைப்பினர் இந்தியா முழுக்க வன்முறை போராட்டம்... அதற்காக தமிழகத்திலும் போராட்டம்...
எதிர்ப்பைத் தெரிவிக்க போராடுறதுங்கிறது... ஜனநாயகம் அனுமதிச்சிருக்கிற ஒரு வழிமுறைதான். போராடுற கட்சிகளும், அமைப்புகளும் யார சாக்கா வச்சிப் போராடுறாங்க?
மக்களுக்காக போராடுறாங்க. ஆனா... அந்தப் போராட்டம் மக்களை எரிச்சல்படுத்துதுன்னா... மக்களோட அன்றாட வாழ்க்கைக்கு தொல்லை உண்டாக்குதுன்னா... அது எப்படி மக்கள் நலனுக்கான போராட்டமா இருக்க முடியும்?
மெரீனாவுல ஜல்லிக்கட்டு உரிமைக்காக பல லட்சம் மாணவர்கள், சாதாரண மக்கள், கூடி நடத்தின பல நாள் போராட்டம் உலகத்தை வியக்க வச்சது.
அதுதான் உண்மையான மக்கள் போராட்டம். அரசியல்வாதிகளை உள்ளவிடாம மக்களே நடத்தின போராட்டம்.
இப்ப மீண்டும் மக்கள் போராட்டம் வரக்கூடாதுங்கிறதுக்காக மெரீனாவை மூடிட்டாங்க.
ராணுவத்தையும், ஆயுதங்களையும் காட்டி வெள்ளையர் அரசு மிரட்டியபோது... அஹிம்சை போராட்டம் மூலமா அதை ஜெயிச்சுக்காட்டினார் காந்தி.
அமெரிக்காவுல கருப்பர் இன உரிமைப் போராட்டத்தை சத்தியாகிரஹ வழியில முன்னெடுத்துத்தான் சாதிச்சுக் காண்பிச்சார் மார்டின் லூதர் கிங்.
தென்னாப்பிரிக்க உரிமையை அமைதி வழிப் போராட்டம் மூலமாத்தானே மீட்டெடுத்தார் நெல்சன் மண்டேலா. அவருக்கு முன்னாடியும் பலர் போராட்டம் நடத்தினாங்க. ஆனாலும் மண்டேலா நடத்திய அஹிம்சை போராட்டம்தான் வரலாற்றுல இடம் பிடிச்சிருக்கு. அமைதி வழி போராட்டத்தோட வலிமை உணர்ந்துதான் அவருக்கு நோபல் பரிசு தரப்பட்டுச்சு.
அமைதிப் போராட்டத்துக்கு இருக்கக்கூடிய வலிமை... அடிதடி, தள்ளுமுள்ளு அரசியல் போராட்டங்களுக்கு என்னைக்குமே இருந்ததில்லை.
மக்களோட அன்றாட வாழ்க்கைய ஸ்தம்பிக்க வச்சு... ஏதாவது விபரீதமாகுமோ?னு பதற வச்சு... மக்கள்ட்ட பெரிய தாக்கத்த ஏற்படுத்துற போராட்டங்கள் மூலமா... அமைப்புகளுக்கு கிடைக்கிற வெற்றியில... மக்களோட சாபமும் கலந்துதான இருக்கும்.
இன்னைக்கி தமிழ்நாட்டுல ஒவ்வொரு பகுதியிலயும் ஒவ்வொரு பிரச்சினை தலைவிரிச்சு ஆடிக்கிட்டிருக்கு.
அரசாங்கத்தோட... பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய அதிகார மையத்தோட (மய்யம் இல்லைங்கோ...) கவனத்தை ஈர்க்க... போராட்டங்கள் அவசியம்தான்.
நான் சார்ந்திருக்கிற சினிமாத்துறையே இன்னிக்கி வாழ்வா? சாவா?ங்கிற நிலமைக்கி வந்திருச்சு. CRISIS POINT-ல வந்து நிக்குது. அதனால... ‘புதுப்படங்கள ரிலீஸ் பண்ணமாட்டோம்னு நாங்களும் strike பண்ணிக்கிட்டுத்தான் இருக்கோம்.
எங்க தொழிலாளிங்க வீட்டுல இன்னைக்கி அடுப்பு எரியல. எங்களோட பசியையும், வேதனையையும் பொறுத்துக்கிட்டு... நியாயம் கிடைக்கணும்னு போராடிக்கிட்டிருக்கோம்.
இந்தப் போராட்டம் எந்த வகையிலயும் பொதுமக்களை நேரடியா பாதிக்கல.
இதுவே... உயிர் காக்கும் மருத்துவத்துறை ஊழியர்களோ, மக்களை பாதுகாக்குற காவல்துறை ஊழியர்களோ... போராட்டத்தில் ஈடுபட்டா... கண்டிப்பா அதை ஆதரிக்க முடியாது. தங்களோட எதிர்ப்பைக் காட்டிக்கிட்டே அவங்க தங்களோட வேலையைச் செஞ்சுதான் ஆகணும். ஆனா அப்படி எந்த பொறுப்பும் அரசியல்வாதிகள் எடுத்துக்கறதில்லை.
மக்களை பாதிக்கிற மாதிரி போராட்டங்களை நடத்திக்கிட்டு,‘"மக்களுக்கான போராட்டம்'னு விளம்பரம் தேடிக்கற .அரசியல் கட்சிகளுக்கு அந்த அவசியம் இல்லை (அட போப்பா, அரசியல் கட்சிகளுக்கே அவசியம் இல்லைன்னு சிலர் சொல்லுறதும் உண்டு!)
பெட்ரோல் விற்பனை நிலையங்கள் "போராட்டத்தில் பங்குபெற மாட்டோம்'னு அறிவிச்சதுக்காக... நான் வேண்டாத சாமிக்கெல்லாம் நன்றி சொல்லிக்கிட்டிருக்கேன்.
ஏன்னா... பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டா... வாகனங்கள் முடங்கும். நாட்டோட சக்கரமே முடங்கும். ஏற்கனவே இழப்பு மேல இழப்பால சுருண்டுக்கிட்டிருக்க விவசாயிகளும், வியாபாரிகளும் ரொம்ப பாதிக்கப்படுவாங்க.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அதிகாரம் படைச்சது மத்திய அரசு. வலியை அவங்களுக்கு உணர்த்துற மாதிரி இருக்கணும்... நம்ம போராட்டம். அதவிட்டுட்டு... ‘நியாயம் கிடைக்கிற வரை... நானே என்னோட விரல்கள ஒவ்வொண்ணா வெட்டிக்குவேன்ங்கிற மாதிரி இருக்கு தமிழ்நாட்டுல நடக்குற போராட்டம்.
"மக்களுக்கு இடைஞ்சல் பண்ணாம போராட்டம் நடத்தணும்'னு உயர்நீதிமன்றம் பல தீர்ப்புகள்ல சொல்லியும்... அதைக்கூட தெரிஞ்சுக்காம இருக்காங்க தமிழக அரசியல்கட்சி தலைவர்கள்... பாவம். இவ்வளவு ஏன்... சட்டம் படிச்ச வக்கீல்களுக்கே அது தெரியிறதில்ல. பாதி நாளு நீதிமன்றம் இயங்காது. வக்கீல்கள் வேலை நிறுத்தம். என்னோட சொந்த சட்டக் கல்லூரி அனுபவத்துல சொல்றேன்... மாணவர்கள் கல்லூரிக்குள்ள வகுப்பறையில இருந்த நாட்களைவிட... போராட்டம்கிற பேர்ல வெளியில இருந்த நாட்கள்தான் அதிகம். அதுவும் தேர்வு சமயத்துலதான் ஸ்டிரைக்கெல்லாம் வரும்!
உண்ணாவிரத போராட்டம், நடைபயண போராட்டம், உப்பு சத்தியாகிரஹ போராட்டம், வரிகொடா இயக்க போராட்டம்... இந்தி எதிர்ப்புப் போராட்டம்... இப்படி பல புகழ்பெற்ற போராட்டங்கள் உண்டு.
காந்தியோட உண்ணாவிரத போராட்டம் சுதந்திரத்தையே வாங்கித் தந்துச்சு.
பொட்டி ஸ்ரீராமுலு உண்ணா நோன்பிருந்து உயிரையே விட்டாரு. அதனாலதான் ஆந்திர மாநிலம் உருவாச்சு.
மணிப்பூர் மாநிலத்துல ஆயுதப்படை சட்டத்தை எதிர்த்து 16 ஆண்டுகள் தொடர் உண்ணாவிரதம் இருந்த இரும்புப்பெண் ஐரோன் சர்மிளா. அவருக்கு வலுக்கட்டாயமா டியூப் மூலம் ஆகாரம் செலுத்தியது அரசு. அவரோட உண்ணாவிரதப் போராட்டம் பெரிய அளவில் பேசப்பட்டுச்சு.
இதுதான் உண்மையான உண்ணாவிரத போராட்டம்.
தமிழகத்துக்கே உரித்தான இன்னொரு வகை உண்ணாவிரதப் போராட்டம் இருக்கு.
விரதம் இருந்தா புண்ணியம் கிடைக்கிற நாளா பார்த்து உண்ணாவிரதம் இருக்கிறது... அரைநாள் பள்ளிக்கூடம் நடக்குற மாதிரி... காலை ஒன்பது மணி முதல் மதியம் ரெண்டு மணி வரை உண்ணாவிரதம் இருக்கிறது, லஞ்ச் பிரேக், டான்ஸ் ப்ரோக்ராம் எல்லாம் வச்சு ஒரு ஜாலி மாநாடு நடத்துறது... இப்படி டைம்பாஸ் உண்ணாவிரதம் நடத்துறாங்க.
அப்புறம்... "மிரட்டி பின் மனம் மாறும்' போராட்டம், ராஜினாமானு சொல்லுறது, அப்புறம் பேச்சை மாத்திக்கறது . தற்கொலைன்னு அறைகூவல் விடுக்கறது, அப்புறம் அறைக்குள்ள ரிலாக்ஸ் பண்ணுறது. இது ஒரு வகை போராட்டம். தற்கொலை செஞ்சுக்கிட்டாலும் பதவிய மட்டும் ராஜினாமா பண்ணமாட்டோம்னு சொல்ற போராட்டம். செத்தாலும் பதவியோட சாகணும்!
இன்னொரு விதமான போராளி இருக்காங்க. "ஆலையை மூடும்வரை போராடுவோம்'னு பெருங்குரலெடுத்து ஆவேசமா போராடுவாங்க. அப்புறம் என்ன காரணமோ... அப்படியே சைலண்ட்டா ஆகிருவாங்க. யார் யாரைச் சொல்றேன்?னு கேட்காதீங்க. எல்லாரையும்தான் சொல்றேன். இந்த மாதிரியான ஒரு வகையான போராட்டமும் இங்க நடக்குது.
அப்புறம், கீரிக்கும் பாம்புக்கும் சண்டைவிட போறேன்னு சொல்லி ஏமாத்துற மோடி விளையாட்டு போராட்டம்.‘நாங்க மிரட்ற மாதிரி போராட்டம் பண்றோம்... நீங்க பயந்த மாதிரி ஆக்ட் பண்ணுங்க’னு ஒரு நாடகம் பல நாளா நடக்குது.
"பிரச்சினைக்கு காரணம் நாங்க இல்ல, அவங்கதான்'னு... ஆளுங்கட்சிய எதிர்க்கட்சியும், முன்னாடி ஆண்ட கட்சிய இப்போதைய ஆளுங்கட்சியும் போட்டுக்கொடுக்குற அக்கப்போர் போராட்டமும் இங்க நடக்குது.
"என்னை அந்த மக்கள் கூப்பிட்டா போய் கலந்துக்கிட்டு போராடுவேன்'னு அழைப்பெல்லாம் கேட்குறது வெத்தலை பாக்கு போராட்டம்.
"போர் வரும்போது பார்த்துக்கலாம். அதுவரை போராட வேணாம்'கிறது ஒத்திவைப்பு ஆட்டம்!
இந்தப் போராட்டத்தையெல்லாம் தாங்கிக்கிட்டு, அன்றாடம் பிரச்சினைகளை சமாளித்து, வாழ்க்கைல ஒவ்வொரு நாளையும் எண்ணி எண்ணி கடந்துக்கிட்டிருக்கிற மக்களுடையதுதான் தினசரி போராட்டம்.
(அடுத்த விஷயத்தை ஒரு இதழ் விட்டு மறு இதழில் எழுதுகிறேன்!)